Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாக்கு பையில் தொங்கிய எய்ட்ஸ் பாதித்த குழந்தை!

புதன்கிழமை, நவம்பர் 14, 2007

தர்மபுரி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்கவிட்ட குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தர்மபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தென்பெண்ணையாறு அருகேயுள்ள மரத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு-மாடு கன்று ஈன்ற பின்னர் அதனுடைய சினைப்பை கழிவுகளை நாய்கள் கடித்து குதறிவிடாமல் இருப்பதற்காக அதனை சாக்கு பைகளில் கட்டி இந்த மரங்களில் தொங்க விடுவர்.

இதேபோன்று தொங்கவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சாக்கு பையிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் அந்த சாக்கு பையை இறக்கி பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பையினுள் ஒரு ஆண் குழந்தை உடல்நிலை மிகவும் பலவீனமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே அப்பகுதி மக்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த குழந்தைக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ஓசூர் பகுதியில் உள்ள தத்து நிறுவன ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 2 வயதிருக்கும் அந்த குழந்தை 6 மாத குழந்தை போல வளர்ச்சியின்றி இருந்தது.

பின்னர் ஓசூர் ஆசிரம நிறுவனத்தினர் அந்த குழந்தையை வளர்ப்பது கடினம் என்று கருதி மீண்டும் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை டாக்டரிடமே ஒப்படைத்துவிட்டனர்.

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட இந்த குழந்தை குறித்து தர்மபுரியில் உள்ள பாசிட்டிவ் நலச்சங்கத்திற்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தபின்னர், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை எடுத்து வந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரிந்து தான் இந்த குழந்தையை பெற்ற தாய்-தந்தையினர் சாக்கு பையில் கட்டி மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இது குறித்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று குழந்தைகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.!!!

http://thatstamil.oneindia.in/news/2007/11...nging-tree.html

  • கருத்துக்கள உறவுகள்

எய்ட்ஸின் கொடூரம் இந்தளவுக்கு கொடுரமான செயலை தூண்டியுள்ளது.

என்ன கொடுமை.............இதனை பேபிகள் சார்பாக நான் வன்மையாக கண்டிக்கிறேன்!! :(

இன்று குழந்தைகள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.!!!

அது சரி இன்றைக்கு குழந்தைகள் தினமா குழந்தையான ஜம்முவை ஒருவரும் வாழ்தவே இல்லை :lol: ஒன்றும் வாங்கி தரகூட இல்லை நேக்கு அழுகை அழுகையா வருது :lol: !!கறுப்பி அக்கா கூட குழந்தைகள் தினம் என்று போட்டுவிட்டு ஜம்மு பேபியை வாழ்த்தவில்லை!! :(

அப்ப நான் வரட்டா!!

பிறந்த குழந்தைக்கு எயிட்ஸ் பெற்றோரிடமிருந்தே வந்துள்ளது.

பெற்றோரில் ஒருவர் பாலியல் தொழிலாளியாகவோ அல்லது முறைதவறிய உறவு ஊடாகவே இது ஏற்பட்டிருக்க சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.

சரி இப்போது முதலாவது கேள்வி

1) கர்ப்பமான போதே பெற்றோரில் ஒருவருக்கு எயிட்ஸ் இருப்பது உணரப்பட்டால் கருவை அழித்து இந்த அவலம் இடம்பெறாமல் தடுக்க சட்டம் அனுமதிக்குமா?

2) கருக்கலைப்பை தடைசெய்த அரசாங்கம் ஏன் பிள்ளையை தொண்டு நிறுவனத்திடம் கொண்டு ஓடுகிறது? தனது சட்டத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு தானல்லவா பரிகாரம் வழங்கவேண்டும்!

3) பெற்றோரை தீவிரமாக தேடும் பொலிசார் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கி மேலதிகமாக பிள்ளையையும் அவர்களிடமே கொடுப்பார்களா?

4) கருவை கொல்லக்கூடாது என்று சட்டமியற்றியற்றிய அரசும், மதஅடிப்படை வாதிகளும், அவ்வாறே பெறப்பட்டு கைவிடப்பட்ட குழந்தைகள், சிறுவர்களை பாதுகாக்கவென கிராமம் தோறும் ஆச்சிரமங்கள் அமைத்து இலவசமாக பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை மகிழ்வுடன் பொறுப்பேற்று பராமரிக்குமா?

சாணக்கியன் அண்ணா நேக்கு ஒரு சந்தேகம் இந்த கேள்வியை எல்லாம் யாழில கேட்டா பிரச்சினை தீர்ந்திடுமா :( அப்படி என்றா எனி நானும் பல கேள்விகளை கேட்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

சாணக்கியன் அண்ணா நேக்கு ஒரு சந்தேகம் இந்த கேள்வியை எல்லாம் யாழில கேட்டா பிரச்சினை தீர்ந்திடுமா :lol: அப்படி என்றா எனி நானும் பல கேள்விகளை கேட்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றாக கேளுங்கள்!

கேள்வியை உரியவரிடம் கேட்க முன்னர் முதலில் நம்மிடம் கேட்க வேண்டும்!

பின்னர் அருகில் உள்ள நம்பிக்கையானவரிடம் கேட்க வேண்டும்!

பிறகு மக்களிடம் கேட்க வேண்டும்!

அதைத்தான் நான் இங்கே செய்கிறேன். எனக்கு தெரிந்த வழியில் மக்களிடம் கேட்கிறேன்!

நன்றாக கேளுங்கள்!

கேள்வியை உரியவரிடம் கேட்க முன்னர் முதலில் நம்மிடம் கேட்க வேண்டும்!

பின்னர் அருகில் உள்ள நம்பிக்கையானவரிடம் கேட்க வேண்டும்!

பிறகு மக்களிடம் கேட்க வேண்டும்!

அதைத்தான் நான் இங்கே செய்கிறேன். எனக்கு தெரிந்த வழியில் மக்களிடம் கேட்கிறேன்!

அட நல்லா இருக்கே எனி நானும் இதை வலோ பண்ணுறேன் சாணக்கியன் அண்ணா :wub: அது சரி மக்களிட்ட கேள்வியை கேட்டா அடுத்த லெக்சனில நாம நிற்கலாமோ!! :(

அப்ப நான் வரட்டா!!

வருங்கால கங்காருத்தீவின் பிரதமர் இப்படிக் கேட்கலாமோ?

வருங்கால கங்காருத்தீவின் பிரதமர் இப்படிக் கேட்கலாமோ?

அட நல்லா இருக்கே அது சரி கங்காரு கண்டம் என்று அல்லோ நினைத்து கொண்டிருகிறேன் :) எப்ப இருந்து தீவானது நேக்கு தெரியாம :lol: !!ஆனாலும் நான் பிரதமர் ஆனவுடன் நிதி அமைச்சராக சாணக்கியன் அண்ணாவை தான் நியமிக்கிறதா உத்தேசித்துள்ளேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.