Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசியலில் பெருங்குழப்பம்- அனைத்து அரசியல் கட்சிகளும் உடைகின்றன!

Featured Replies

சிறிலங்காவின் அரசியலில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

க(கா)ட்சி ஜனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவின் ஆதரவாளர்கள் பலர் அரசிலிருந்து அணி மாறும் அறிகுறி

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை ஒட்டிய பலப்பரீட்சைக்கு நேரம் நெருங்கும் பின்னணியில் அதற் காக அணி தாவும் குத்துக்கரணங்களும் சூடுபிடிக்கும் நிலையை எட்டி இருக்கின் றன.

முதலாவது பலப்பரீட்சைக்கான வாக் கெடுப்பு திங்களன்று நாடாளுமன்றில் இடம்பெற இருக்கையில் அதற்கு முன்னர் கணிசமான எண்ணிக்கையான எம்.பிக்கள் ஆளும் தரப்பிலிருந்து எதிரணிக்குப் பாய் வார்கள் என நம்பகமான செய்திகள் தெரி வித்தன. அதேசமயம், எதிர்த்தரப்பிலிருந்தும் ஓரிரு எம்.பிக்கள் ஆளும் தரப்புக்குப் பாயக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் பலரே கட்சியின் தற்போதைய தலைமைக்குத் தமது அதிருப்தியைக் காட்டும் விதத்தில் அணி மாறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டா வது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திங் களன்று இடம்பெறுகின்றது. அதில் பெரும் நெருக்கடியை அரசுத் தரப்பு எதிர்கொள் கின்றது.

வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம் என அறிவித்துள்ள பின்னணியில் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனாவது அதை நிறைவேற்றுவதில் அரசுத் தரப்பு மிகுந்த இக்கட்டை சந்தித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

அரசுப் பக்கத்திலிருக்கும் அதிருப்தியாளர்களான எம்.பிக்களை தம்பக்கம் இழுப்பதன் மூலம் திங்களன்று வாக்கெடுப்பில் அரசைத் தோற்கடிக்க பிரதான எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றன.

அதை முறியடித்து, எதிர்த்தரப்பிலிருந்து கணிசமானோரை அரசுப் பக்கம் கவர்ந்திழுக்க அரசுத் தலைமையும் மும்முரமாக முயற்சிப்பதாகத் தெரிகின்றது.

இப்படி எம்.பிக்களைக் கவர்ந்திழுக்கும் குதிரையோட்டம் சூடு பிடித்திருக்கும் சூழ்நிலையில் அரசுப் பக்கத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமது அதிருப்தியை சூடாக வெளிப்படுத்தத் தயாராகி வருகின்றார்கள் என்று கூறப்படுகின்றது.

தமது ஆதரவாளர்களான எம்.பிக்களை பின்னணியில் நின்று இயக்கும் முயற்சியில் சந்திரிகா குமாரதுங்க முழு ஈடுபாட்டுடன் பங்குபற்றுகின்றார் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

அணி மாறக்கூடிய எம்.பிக்கள் எனத் தெரிவித்து சுமார் ஒரு டசின் உறுப்பினர்களின் பெயர்கள் நேற்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடிபட்டன.

-உதயன்

கந்தப்பு தாத்தா அரசியலில இது எல்லாம் சகஜம்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால் கேட்கிறேன், அரசின் வரவு-செலவு திட்டம் , ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தால், அடுத்து என்ன நடக்கும்? மகிந்தா வின் அரசு கவிழுமா? மகிந்தா பதவி இழப்பாரா?

அரசு தோல்வியுற்றால், நமக்கு ( தமி்ழர்க்கு) ஏதும் நன்மை உண்டா? தயவு செய்து யாரேனும் விளக்கம் தாருங்கள்.

இலங்கை அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால் கேட்கிறேன், அரசின் வரவு-செலவு திட்டம் , ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தால், அடுத்து என்ன நடக்கும்? மகிந்தா வின் அரசு கவிழுமா? மகிந்தா பதவி இழப்பாரா?

அரசு தோல்வியுற்றால், நமக்கு ( தமி்ழர்க்கு) ஏதும் நன்மை உண்டா? தயவு செய்து யாரேனும் விளக்கம் தாருங்கள்.

எந்தச்சிங்களவனின் ஆட்சி கவிழ்ந்தாலும் நிமிர்ந்தாலும் தமிழருக்க நன்னை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நிறைவேற்ற முடியாத நிலை வரின், பாராளுமன்றம் தன்னிலையுணர்ந்து தோல்வியடைந்த ஆட்சியாளர்களாகக் கணிக்கப்படுவர். தொடர்ந்து பாராளுமன்றத்தில் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாததினால் அது கலைக்கப்படுவதே முறையானது. ஆனால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்படும் முறையைப் பார்த்தால் வரவுசெலவுத்திட்டமும் அதே வழியில் நிறைவேற்றப்படலாம் என்பது எண்ணம்.

ஜ.தே.க மாற்று அணியினர் மகிந்தவின் 2008ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவு

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணி மீண்டும் உறுதி செய்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்வை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணித் தலைவர் - அமைச்சர் கரு ஜெயசூரியவின் தலைமையிலான பதினேழு நாடாளுமனற் உறுப்பினர்களும் அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டிற்கான பாதீட்டிற்கு நிபந்தனையற்ற ஆதரவை தமது அணி வழங்குவதோடு,

தாம் எவரும் கட்சி தாவப் போவதில்லை என உறுதியளித்துள்ளனர். 2008ஆம் ஆண்டிற்கான பாதீட்டை, ஜே.வி.பியின் ஆதரவின்றி நிறைவேற்றுவதற்கு தேவையான நூற்றுப் பதினேழுக்கும் அதிகமான வாக்குகளை, நாடாளுமன்றத்தில் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கொண்டிருப்பாதாக சிறீலங்கா கல்வித்துறை அமைச்சர் சுசில் பிறேமஜயந்த ஏற்கனவே கூறியிருநத் மை குறிப்பிடத்தக்கது

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.