Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு

Featured Replies

சோ ஈழப்போராட்டத்தை மட்டுமல்ல எந்தவொரு பிரிவனையையும் ஏற்றுக் கொள்ளாதவர். தன்னுடைய சுயநலத்திற்காக, றோவிற்குக் கட்டுப்பட்டு எதனையும் செய்யக் கூடியவர். அவரின் பத்திரிகையில் வெளிவந்தவொரு சிறிய கட்டுரையால் எமது போராட்டம் நிற்கப் போவதுமில்லை. பின்னடையப் போவதுமில்லை. அதேபோல், சோவின் எமது போராட்டத்தைப் பற்றிய நிலைப்பாட்டை மாற்றுவதால் எமக்கு எந்தவொரு நன்மையும் வரப்போவதில்லை.

தூயவனின் கருத்து மிகவும் உண்மையானது. ஓரிருவரின் செயல்களுக்காக மொத்த இனத்தையும் சுட்டிக்காட்டுவது தவறு. தமிழகத்தைப் பற்றிக் கதைக்கும் இவர்களின் சொந்தங்கள், நண்பர்கள் எல்லோரும் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் என இவர்களால் சொல்ல முடியுமா? தங்களைச் சுற்றியிருப்பவர்களையே இவர்களால் மாற்ற முடியாதபோது, பலமைல்களுக்கப்பால் இருக்கும் தமிழகத்தில் உள்ளவர்களின் கருத்துக்களைப் பற்றி கதைப்பது வீண்விரயம் என்றே தோன்றுகிறது.

யாழில் எமது போராட்டத்திற்கு எதிர்ப்பவர்களை சாதிபிரித்துப் பார்ப்பதுதான் இங்கு நடக்கிறது. எந்தவொரு விவாதத்தின்போதும், சாதி என்ற விடயம் இல்லாமல் இருப்பதில்லை. இப்படியான விவாதங்கள் மறைமுகமாக சாதியத்தை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு உத்தி.

எமது இப்போதைய தேவை, எமக்கு ஆதரவு தருபவர்களை ஒன்று சேர்ப்பதுதான். எதிர்ப்பவர்கள் ஓரங்கட்டிவிட்டு, ஆதரவு தருபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுதான். சோவின் எழுத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருத்து எழுதுபவர்கள், மற்றைய தமிழகத்துப் பத்திரிகைகளில் எமக்கு ஆதரவாக எழுதுபவர்களைப் பாராட்டியிருக்கிறார்களா? முன்னைய காலங்களில் எப்போதாவது ஒருதரம் தான் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் எம்மைப் பற்றி வருவதுண்டு. அப்போதும் பல தடவைகள், எமக்கெதிராகவும் வந்திருக்கின்றன. ஆனால் சமீபகாலங்களில், அவற்றில் எமது போராட்டம் பற்றிய ஆக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதோடு, ஆதரவாகவும் எழுதி வருகிறார்கள். இப்பத்திரிகைகள் துக்ளக் போலன்றி அதிக மக்களைச் சென்றடைகின்றன. இவர்களை நாம் ஊக்கப்படுத்தினால், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் வரும் செய்திகள் வலுவிழந்துவிடும்.

  • Replies 55
  • Views 9.3k
  • Created
  • Last Reply

போராட்டத்தை கொச்சைப்படுத்துபவர்கள் தனி மனிதன் என்ற வகையில் தாக்க வேண்டும் தவிர ஒட்டு மொத்த சமூக அமைப்பை சேர்த்து சொல்வது தவறு. எல்லா இடங்களிலும் காளான் இருக்கிறது.

தவறான கருத்தோட்டத்தை பரவ முயற்சிக்காதீர்கள்..........

அத்தியடியான் ஒருத்தன் எட்டப்பன் என்பதற்காக அத்தியடியார் எல்லாம் அப்படி இல்லை. அது போல் தான் சோவும் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்த்தமில்லாமல் இருக்கிறது சிலரது கருத்துக்கள். இது எப்படி முடியும் என்றால், சிங்களவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள், மகிந்த போன்ற தனிமனிதர்கள் தான் பேரின வாதிகள் என்றும் சொல்லப் படும் போல் இருக்கிறது. அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள் நம்மவர்கள்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக கட்சி தமிழீழ ஆதரவுக் கட்சி என்று நம்புவது தவறானது.

யார் ஆதரவு, யார் ஆதரவு மாதிரி நடிக்கிறார்கள் என்பதை தமிழ்செல்வனின் வீரச் சாவில் பலர் உணர்ந்திருப்பார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததால், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரை எடுத்த பாஜக அதை மாற்றுவதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உணவு சேகரிப்பதாக போக்கு காட்டியது.

ஒரு நாள் மட்டும் சில இடங்களில் போக்கு காட்டி விட்டு, அதை அப்படியே விட்டு விட்டது. தமிழ்செல்வன் வீரச்சாவிற்கு ஒரு இரங்கல் கூட அக் கட்சியால் தெரிவிக்க முடியவில்லை.

ஈழத் தமிழர் வேறு, புலிகள் வேறு என்று சொல்கின்ற சோவின் நிலைப்பாட்டிற்கும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

இந்தியாவில் உள்ள பார்ப்பனியர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள்தான். ஒரிருவர் விதிவிலக்காக இருக்கலாம்.

காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பதற்கு அரசியல் காரணமாக இருக்கிறது. அரசியல் நிலவரம் மாறும் போது அவர்களின் எதிர்ப்பு மாறும்.

கோடு விழுந்த இறுவட்டுப் போல ஒரே கருத்தைத் தான் திரும்பத் திரும்பச் சபேசன் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இன்றைக்கு ஈழப்பிரச்சனைக்கு பிஜேபி ஆட்சியில் இருந்தபோது இருந்த நிலமைக்கும், காங்கிரஸ் ஆட்சிக்கு இருந்த நிலமைகளின் போதும் உள்ள நிலவரங்களைப் பார்த்தாலே வடிவாகத் தெரியும். பிஜேபி காலத்தில் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை அது வழங்கியதில்லை. தமிழருக்கு எதிராக பாவிப்பதற்கு ரேடர் தொடங்கி எதுவுமே கொடுக்கவும் இல்லை.

ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் தான் ஈழத்தமிழருக்கு இன்னோரன்ன துன்பங்கள் நிகழ்ந்தன. நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. இன்றைக்குக் கூடச் சிங்கள அரசு கூட கூட்டுச் சேர்ந்து அழிக்கவும் பார்க்கின்றது.

அப்படிப்பட்ட காங்கிரஸ் அரசியல் நிலமைக்கு ஏற்ற விதத்தில் மாறும் எனக் சப்பை கொட்டுவதைச் சகிக்க முடியவில்லை. இதை விடத் சோவிற்கு விளங்கப்படுத்தினால் மாறுவார் என்ற நெடுங்காலபோவனின் வாதத்தை நம்பித் தொலைக்கலாம்.

பிஜேபி இப்படித் தான் என்று வெறும் வார்த்தைகளால் நிருபிக்கப் பார்க்கின்றீர்கள். உங்களின் சாதி, மத தேடுதலின் பின்னர் விவாதிக்க முனையும் விவாதமாகவே அது படுகின்றது. பிஜேபியில் இருந்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருக்கின்ற பலரைக் காட்டமுடியும். அது உங்களுக்கும் நிச்சயம் தெரியும். ஆனால் நீங்கள் சப்பை கொட்டுகின்ற காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருத்தரையாவது உங்களால் ஈழத்தமிழருக்கு ஆதரவானவராகக் காட்டிட முடியுமா?

தமிழ்செல்வனின் மரணத்தின் போது பிஜேபி கண்டனம் தெரிவிக்கவில்லை என்றீர்கள். உண்மை தான். மாநிலம் பரந்துபட்ட ஒரு கட்சியால் பகிரங்கமாகச் சில வேலைகளைச் செய்யமுடியாது. (தமிழக ஆட்சியில் இருந்து கொண்டு சட்டத்திற்கு பணிவாக நெடுமாறனையும், வைகோவையும் கலைஞர் உள்ளுக்குத் தூக்கிப் போட்டாரே. அவ்வாறன ஒரு நிலமை போன்று)

ஆனால் குறித்துக் கொள்ளுங்கள். தமிழ்செல்வனின் வீரமரணத்தைக் காங்கிரஸ் கட்சிக்காரர் போல ஈனத்தனமாக இனிப்புக் கொடுத்துக் கொண்டாடியதா? அல்லது தற்போது கூச்சல் போடும் காங்கிரஸ் போல ஈழத்தமிழருக்கு எதிராக அது நடந்து கொண்டிருக்கின்றதா?

நீங்கள் ஈழத்தமிழரைக் கேவலப்படுத்தும் காங்கிரசுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டு, அதைப் போன்ற ஈனத்தனமான செயற்பாட்டில் ஈடுபடாத பாஜக பற்றிச் சொல்வதில் எவ்வித உண்மையுமில்லை.

------------------------------

மாலன், சுஜாதாவின் குறிப்புக்களைக் கொஞ்சமாவது படித்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அவர்கள் மதங்களை நம்புவார்களா இல்லையா என்றாவது தெரிந்திருக்கும். படிக்காமல் உலகம் தட்டையானது தான் என்று இப்போதும் தர்க்கித்தால் நாம் என்ன செய்வது.

தூயவன் இயக்குனர் சீமானின் பேட்டியை கேளுங்கள் பிராணரை பற்றி சொல்கின்றார்

http://www.tamilnaatham.com/audio/2007/nov...an20071125.smil

பிஜேபியின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்பது உண்மை அல்ல. அப்பொழுதும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து கொண்டுதான் இருந்தது.

இப்பொழுது போல் அன்றைக்கு தீவிரமான உதவிகள் வழங்கப்படவில்லை என்றால், அதற்கு ஈழ ஆதரவாளரான ஜோர்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்ததும் ஒரு காரணம். அரசில் மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இணைந்திருந்தது ஒரு காரணம். ஆனால் இவைகளையும் மீறி உதவிகள் வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை.

அத்துடன் போர் தீவிரமடையும் நேரங்களில் இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கைக்கு முன்னரை விட அதிக உதவிகளை வழங்கத்தான் செய்யும்.

வெளிப்படையாக எமக்குத் தெரியவில்லை என்றாலும், தற்பொழுது போர் முன்னரை விட தீவிரமடைந்து உள்ளது என்பதுதான் உண்மை. ஆகவே சிறிலங்காவிற்கு அதிகமான உதவிகளும் வழங்கப்படுகிறது. அமெரிக்காவும் வழங்குகிறது. இந்தியாவும் வழங்குகிறது. இதற்கும் இந்தியாவின் ஆட்சி மாற்றங்களிற்கும் சம்பந்தமில்லை.

பிஜேபி தமிழ்செல்வனிற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது மட்டும் அல்ல, இரங்கல் தெரிவித்த கலைஞரை கண்டித்தும் இருந்தது.

ஈழத் தமிழர் விடயத்தில் பிஜேபியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றுதான்.

சுப்பிரமண்யசுவாமி என்ற பார்ப்பனர் அதிமுவும் பிஜேபியும் கூட்டணி அமைப்பதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் பிஜேபி எம்மை ஆதரித்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும் என்று யாராவது நம்பினால், அவர்களை எண்ணி பரிதாபப்படத்தான் முடியும்.

நிலைமைகள் மாறும் போது காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு மாறும் என்று சொன்னேன். இது சற்று அதிகப்படியானதுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு நிலை அரசியல் சார்ந்து இருப்பதை சுட்டிக் காட்டுவதற்கே அப்படிச் சொன்னேன்.

ஈழ விடுதலையை எதிர்த்தால், தமிழ்நாட்டில் வாக்குகள் கிடைக்காது என்ற நிலை வரும் போது, காங்கிரஸ் வாயை மூடிக் கொண்டு இருக்கத்தான் வேண்டும்.

ஆனால் அப்படியான நிலை வருவதை தடுப்பதற்கு பார்ப்பனியம் தன்னிடம் உள்ள அனைத்த வளங்களையும் பயன்படுத்தி செயற்படுகிறது.

ஆகவே நாம் எம்முடைய உண்மையான எதிரிகளை இனங்காண வேண்டும். சுபவீ அவர்கள் தமிழ்செல்வன் இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து சொல்வார் "இது உங்களின் வேலை அல்ல, அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்"

அந்த "வேறு ஆட்கள்" வகையைச் சேர்ந்த சோ, சுப்ரமண்யசுவாமி, மணிசங்கரஐய்யர், இந்து ராம் என்று பலர் இருக்கிறார்கள். இவர்களை இனம் காண வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.