Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. அதிகாரி லுயிஸ் ஆபரின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்னும் சில மணி நேரத்தில் வெளியிடப்படவுள்ளது

Featured Replies

luviarber.jpg

கடந்த ஒக்டோபர் 9ம் திகதி இலங்கைக்கு உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் லுயிஸ் ஆபரின் அறிக்கை வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இதற்கமைய, இந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பதற்காக அலுவலகம் ஒன்றை அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகளின் ஆணையாளர் ஐந்த நாள் விஜயமொன்iறை மேற்கொண்டு கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி இலங்கைக்கு வந்தார்.

இதன்போது அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். எனினும், அவருக்கு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், கிளிநொச்சிக்கு செல்லவிருந்த போதிலும், அதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.

காணாமல் போனவர்களின் உறவினர்களை கொழும்பிலும், யாழ்ப்பாணத்தில் சந்திப்பதற்கு அரசாங்கம் ஒழுங்குகளை செய்யவில்லை.

எனினும், அவர்கள் பலவந்தமாக கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கூடியதால் லூயிஸ் ஆபர் அவர்களைச் சந்தித்தார். அத்துடன், யாழ்ப்பாணத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்களை அவர் சந்தித்தார்.

எவ்வாறாயினும், இலங்கை விஜயத்தின் இறுதியில், இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் ஒருங்கிணைந்த ஊடகவியலாளர் மாநாட்டிலும் லுயிஸ் ஆபர் பங்கேற்றார்.

இதன்போது, இருவரும் பரஸ்பர தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த லுயிஸ் ஆபர், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக கண்காணிக்க இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எனினும், மனித உரிமைகள் அதனை முற்றாக நிராகரித்தார்.

லுயிஸ் ஆபரின் கருத்துக்களை அரசாங்கத்தின் அநேக அமைச்சர்கள் உட்பட ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் வன்மையாக கண்டித்திருந்தன.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான உத்தியோகப+ர்வ அறிக்கை இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படவுள்ளது.

இவ்வாறு அறிக்கை வெளியிடப்படுவதைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இராஜாங்க ரீதியிலான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://lankadissent.com/index.php?option=c...39&Itemid=1

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை திறந்த மனதுடன் எழுதப்பட்டதாக இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே அறிக்கை எதையும் காணவில்லை? :D

மனித உரிமைகளை பாதுகாக்க தவறியிருப்பதாக ஐநா குற்றச்சாட்டு.

ஐக்கிய நாடுகள் சiபின் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அவர்கள் உரையாற்றியபோது சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் சுயாதிபத்தியம் விட்டுக்கொடுப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும் இதனால் அதன் நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இருவருடங்களாக ஈழத்தீவில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள், காணாமல்போதல்கள் கவலையை ஏற்படுத்துவதாகவும் மனித உரிமையை பாதுகாக்கக்கூடியவை எனக் கருதக்கூடிய சிறீலங்கா அரசாங்க கட்டமைப்புகள் இதனை பாதுகாக்க தவறியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாட்களுக்கு பிறகு அறிக்கை ? தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

நேரமல்ல, என்ன சொல்கிறார் என்பது தான் முக்கியம். அறிக்கையை வராமல் தடுப்பதில் அரசும், அவரது குழாமும் பகீரதபிராயத்தனம் எடுக்கிறார்கள். என்ன தான் சொல்லபோகிறார் என பார்த்துவிடுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.