Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியை விமர்சிப்பதா ஜெயலலிதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதியை விமர்சிப்பதா? ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் கண்டனம்

அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாள் தவறினாலும் அறிக்கை மூலமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜெயலலிதா இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசிலே உள்ளவர்கள் இன்னமும் தன்னுடைய ஆலோசனையைக்கேட்டுக் கொண்டு தான் நடக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு, மத்திய அரசு கூட்டியுள்ள ஒரு கூட்டத்திற்கு தமிழக அரசின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கலைஞரை அழைத்திடக் கூடாது என்ற வகையில் கருத்தினைத் தெரி வித்திருக்கிறார்.

மத்திய அரசோ, அதிலே உள்ள அமைச்சர்களோ யாரும் இந்த அம்மையாரைத் திரும்பிப் பார்க்கத் தயாராக இல்லை. ஆனால் இன்னமும் பழைய நினைப்புடா பேராண்டி என்பதைப் போல தாண்டிக் குதித்து முதல்-அமைச்சர் கலைஞரை பற்றி யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையிலே கையெ ழுத்திட்டு பத்திரிகைகளில் அவை வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

தனது தோழமைக் கட்சிகளை இவர் மதிப்பதைப் போலத்தான் மற்ற கட்சிகளும் மதிப்பார்கள் என்று கருதிக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர், தமிழக முதல்-அமைச்சர் சொல்லித்தான் கூறியிருப்பார் என்றும் ஜெயலலிதா கதை அளந்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு தி.மு.கழக அரசு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருவதைப் போல தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்ததைப் போல கருணாநிதி செய்ய வில்லை என்றும், பங்களா தேஷ் பிரச்சினையில் இந்திய அரசு உதவி செய்ததைப் போல விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வரவேண்டுமென்றும், விடுதலைப்புலிகளின் தலை வரான பிரபாகரனுக்கு ஏதாவது ஒரு தீங்கு நேரிட்டால் அதனை தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும், ஜெயலலிதா கொடுத்த பேட்டிகள் இன்னமும் பழைய ஏடுகளில் அப்படியே உள்ளன. அதையெல்லாம் மறந்து விட்டு தற்போது ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் எதிர்ப் பாளராக மாறி, அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவது மட்டுமல்லாமல், தி.மு.கழக அரசு அவர்களை ஆதரிப் பதைப் போலவும் கூறிக் கொண்டிருக்கிறார்.

ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 1999-ல் உறுதி செய்து எட்டு ஆண்டுகள் ஆகியும் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லையே, அது ஏன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கேட்டி ருக்கிறார்.

யாரைப்பார்த்து இந்தக் கேள்வியை அவர் கேட்கிறார்ப 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெய லலிதா இருந்தார். அப்போது என்ன செய்து கொண்டி ருந்தார்ப இப்போது யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறார்.

வன்முறையைப்பற்றி ஜெயலலிதா அறிக்கையிலே கூறியிருக்கிறார். வன்முறைக்கு அகராதியை எடுத்துப்பார்த்து அர்த்தம் தேடினால் அதற்கு ஜெயலலிதா என்று போட்டிருந்தால் தானே பொருத்தமாக இருக்கும். இவரது ஆட்சியில் நடக்காத வன்முறைகளா இன்னொரு ஆட்சியிலே நடந்து விடப் போகிறது.

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் விடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தான் காரணம் என்றும் தொடர்ந்து ஜெயலலிதா புலம்பி வருகிறார். நீதிமன்றம் ஜாமீனில் ஒருவரை விடுவித் தால் கூட, அதற்கு அரசும் முதல்-அமைச்சரும் தான் பொறுப்பாப ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அப்படித் தான் நடைபெற்றதா?

தமிழக முதல்-அமைச்சர் ஏதோ தேச துரோகம் செய்து விட்டதாக ஜெயலலிதா தொடர்ந்து ஒரு கருத்தைச் சொல்லி வருகிறார். இது குறித்து நீதிமன்றத்திற்கே சென்று அவர் மீது வழக்கு தொடர வேண்டும். கலைஞர் ஆட்சிக்காலத்திலே இருந்த போது ஜெயலலிதாவைப் போல வழக்குகளைச்சந்தித்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது அரசாங்க நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி தன் பெயரிலும், தன் தோழி பெயரிலும் பட்டா போட்டுக் கொண்டாராப கொடநாடு எஸ்டேட்டை வாங்கினாரா?

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான பால சிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு கருணாநிதி இரங்கல் தெரிவிக்கலாமா என்பதைப்பற்றி ஜெயலலிதா மீண்டும் மீண்டும் பெரிய குற்றமாகக் கூறுகிறார். ஒருவர் இறந்ததற்காக இரங்கல் தெரி விப்பது என்பது மனித நேயப்பண்பாடு. அதற்கும் அம்மையாருக்கும் வெகு தூரம்.

மத்திய அரசைப் பார்த்து முதல்-அமைச்சர் கருணாநிதி எப்படி மத்திய அரசின் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு வேறு ஒன்றும் காரணமில்லை. இந்த அம்மையாருக்கு பொறாமை, வயிற்றெரிச்சல், தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக இப்படி யெல்லாம் அறிக்கை விடுகிறார்.ë

தமிழ்நாட்டில் அரசு நன்றாக நடைபெறுகிறது. உதாரணத்திற்கு இன்று கூட மிகப்பெரிய நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு தான் நுழைந்ததாக கூறப்படும் ஐந்து நக்சலைட்டுகள் தமிழக காவல் துறையினரின் திறமையான முயற்சியின் காரணமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.