Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க இராமாயணத்தை பயன்படுத்தும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க இராமாயணத்தை பயன்படுத்தும் இலங்கை

[20 - December - 2007]

இந்திய உல்லாசப் பயணிகளை பாரியளவில் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்தை அதிக அளவில் பயன்படுத்தவுள்ளது.

இதனடிப்படையில் இராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இலங்கையிலுள்ள 34 இற்கும் அதிகமான இடங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை நேற்று புதன்கிழமை குறிப்பிட்டுள்ளது.

`விரைவில் இத்திட்டத்தை ஆரம்பிக்க விரும்புகிறோம்' என்று கலைச்செல்வம் கூறியுள்ளார்.

இராமாயணத்தின் பிரகாரம் புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு இராவணன் சீதாப்பிராட்டியாரை கவர்ந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் புஷ்பக விமானம் என்று அழைப்பதை சிங்கள பௌத்தர்கள் `தண்டு மொனாராயந்திரய' என்று குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியாவிற்கு கிழக்கே இருக்கும் மகியங்கனையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வெரங்க தோட்ட எனுமிடத்திலேயே புஷ்பக விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் சீதையை குருளுப்பொத்த எனுமிடத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போது அந்த இடம் சீதா கொட்டுவ என அழைக்கப்படுகிறது. இந்த இடத்திலேயே இராவணனின் மனைவி மண்டோதரி வசித்தார். கண்டி வீதியில் மகியங்கனையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் சீதாகொட்டுவ உள்ளது.

கொழும்பையும் நுவரெலியாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் சீதாஎலிய எனுமிடத்திலுள்ள குகையிலேயே சீதையை தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இப்பொழுது அந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயத்திற்கு பக்கமாக உள்ள மலையிலிருந்து வரும் அருவியிலேயே சீதை நீராடியதாக நம்பப்படுகிறது.

இவைமட்டும் இராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இடங்களல்ல. நுவரெலியாவுக்கு வடக்கே மாத்தளை மாவட்டத்திலுள்ள யுதகனப்பிட்டிய எனுமிடத்திலேயே இராமனுக்கும் இராவணனுக்கும் யுத்தம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சிங்கள வரலாற்றுக்காவியத்தின் பிரகாரம் துனுவில எனுமிடத்திலேயே பிரமாஸ்திரத்தை ஏவி இராமன் இராவணனை வீழ்த்தியதாக கூறப்பட்டுள்ளது.

லக்கல எனுமிடத்திலேயே இராவணன் இராமனுடன் யுத்தம் புரிய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

லக்கல மலை உச்சியிலுள்ள இடமாகும். அங்கிருந்து வட பிராந்தியத்தை இராவணனால் தெளிவாக பார்க்க முடியும். தனது மனைவியை மீட்பதற்காக இராமன் படையெடுத்து வருவதை கண்காணிக்கும் இடமாக இந்த லக்கலப்பகுதியை கண்காணிப்பு கோபுரமாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இராவணனின் சடலம் குடிமக்கள் இறுதிமரியாதை செலுத்துவதற்காக யக்கன்கல எனுமிடத்திலேயே வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இராவணன் பிராமணனாக இருந்ததால் அவனைக் கொல்வது பாவம் என்று கருதப்பட்டது. யுத்தத்தில் கூட அவனைக் கொல்வது பாவம் என்று கருதப்பட்டதால் பாவத்தைப் போக்க இராமர் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக கூறப்படுகின்றது. சிலாபத்துக்கு வடக்கேயுள்ள மானாவேரியில் இராமருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

ருமாசாலா மற்றும் இரம்பொடை பகுதிகள் அனுமானுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இமயமலையிலிருந்து துரோணகிரி குன்றை எடுத்துவந்து அனுமான் ருமாசாலாவில் போட்டதாக கூறப்படுகின்றது. பாரிய நீர்வீழ்ச்சிகள் உள்ள இறம்பொடையில் அனுமானுக்கு பெரிய ஆலயமொன்று நிர்மாணிக்கப்படுகிறது.

இராவணன் சிறந்த சிவ பக்தனாகையால் சிவ பெருமானால் கோணேஸ்வரம் ஆலயம் இராவணனுக்கு வெகுமதியாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் களனியிலுள்ள பௌத்த விகாரையில் இராவணனிடமிருந்து கைப்பற்றிய இலங்கையை அவனின் தம்பியாகிய விபீஷனனிடம் இராமபிரான் கையளிப்பது போன்ற பிரதிமையும் காணப்படுகிறது.

இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்களை பயன்படுத்துவது பற்றிய எண்ணப்பாட்டை 1990 களின் பிற்பகுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே வெளியிட்டார். ஆனால், இலங்கையில் பத்திரிகைகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

நாடு இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் என்றும் நுவரெலியா மலைப்பகுதி சுற்றாடல் பாதிக்கப்பட்டுவிடுமென்று அவை தெரிவித்திருந்தன.

யுத்தம் அதிகரித்ததால் பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், இந்திய உல்லாசப் பயணிகளின் வருகையில் பாதிப்பு ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது பல விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. 2006 ஏப்ரலுக்கும் 2007 மார்ச்சிற்கும் இடையில் இலங்கை விமானங்கள் இருநாடுகளுக்குமிடையில் 11 இலட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. சர்வதேச பயணத்தில் இது 32 சதவீதமாகும்.

http://www.thinakkural.com/news/2007/12/20...s_page42690.htm

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் ஞானம் பெற்ற இடமென்று இந்தியா பெளத்த மக்களைக் கவர முடியும் என்றால் ஏன் சிறீலங்கா கவர முடியாது..???!

தினக்குரலுக்கு என்னாச்சுது..???! :wub:

அநுமார் வந்து திரும்பவும் அந்த இடங்களை எரிச்சுடப்போறார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.