Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்?

Featured Replies

அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்?

இலங்கையிலே சிங்களவன் வீசும் குண்டுகளில் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எங்கள் காயங்களின் மீது அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் அருமருந்திட்ட காலங்கள் மாறிவருகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன அண்மைய செய்திகள்...

- நவம்பர் 28ஆம் நாளன்று ஒரு குண்டு வீச்சு நடந்ததாம் அதிலே தேசியத் தலைவருக்கு சிறு காயமாம். அவர் குணமடைந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவெழுச்சி நிகழ்விலே கலந்து கொண்டாராம்- இப்படிச் சொன்னது சிங்களவன் அல்ல- இந்தியனும் அல்ல- ஈழத் தமிழனுக்குப் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் டி.பி.எஸ். ஜெயராசுதான். ஜெயராசு, தனது இணையதளத்திலே போட்டதை தி நேசன் என்ற சிங்கள ஊடகம் வாந்தியெடுக்க இந்திய- தமிழக ஊடகங்களும் அப்படியே அதனைத் தின்று மலம் கழித்தன.

- "குறிபார்த்து" தாக்குதல் நடத்துவதில் "வல்லமை" கொண்ட "சிங்கள" தேசமோ எதுவும் பேசாமல் இருந்து திடீரென ஒரு அறிக்கை விட்டது. நவம்பர் 26ஆம் நாளன்றே குண்டு வீசி தேசியத் தலைவரை காயப்படுத்தி விட்டதாம்-

அறிவு ஒரு விழுக்காடு கூட இல்லாமல் மோட்டுச் சிங்களம் இப்படிச் செய்தி வெளியிட்டது.

நவம்பர் 27ஆம் நாளன்று தேசிய மாவீரர் நாள் நிகழ்விலே தேசியத் தலைவர் பங்கேற்று உரையாற்றி முதன்மைச் சுடரேற்றி தமிழீழத்துக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தியதை படம்பிடித்து நவம்பர் 27ஆம் நாளன்று வெளியிட்ட அதே சிங்கள- இந்திய- தமிழ்நாட்டு ஊடகங்கள் சிங்களம் இப்போது வாந்தி எடுத்ததை மீண்டும் தின்று மலம் கழித்தன.

26ஆம் நாளன்று தாக்குதல் நடந்தது எனில் 27ஆம் நாளன்று மாவீரர் நாள் நிகழ்விலே தேசியத் தலைவர் பங்கேற்றதை நாம் படமாக வெளியிட்டிருந்தோமே?

28ஆம் நாளன்று தாக்குதல் நடந்தது எனில் டிசம்பர் 14ஆம் நாளன்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்றதை படமாக வெளியிட்டிருந்தார்களே?

என்றெல்லாம் மருந்துக்கும் யோசிக்க வக்கில்லாத மட மூடங்களாக சிங்கள ஊடகங்கள் இருக்கலாம்- இந்திய ஊடகங்கள் இருக்கலாம்-

எங்கள் அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் இருக்கலாமா?

இதிலே உச்சபட்சமாக தமிழ்நாட்டு ஊடகங்கள், தேசியத் தலைவருக்கு பெருங்காயம் என்றும் வெளிநாட்டிலே சிகிச்சை பெறுகிறார் என்றும் மோட்டுச் சிங்களவன எழுதியதை இன்று மீண்டும் வெளியிட்டிருக்கின்றன.

ஈழத் தமிழர்களை வென்றெடுக்க முடியாத சக்திகள், அத்தமிழர்களின் ஒரே நம்பிக்கையான தேசியத் தலைவர் தொடர்பில் காலம் காலமாக கட்டுக்கதைகள் புனைந்து அவரை இல்லாது போகச் செய்ய மேற்கொள்ளும் பகீரத்தனங்கள் எத்தனை எத்தனையோ?

மருந்துக்கும் கூட சிந்திக்காமல் செய்திகளை வெளியிடும் மரத்துப் போன மூளைகளை மூலையிலே வீசிவிட்டு முன்னைவிட உரமோடு உயர்ந்து எழுவோம் உறவுகளே....

(இங்கு இணைத்து விடும்படி மின்னஞ்சலில் வந்திருந்த மடல் இது)

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகங்கள் இருக்கலாம்-

எங்கள் அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் இருக்கலாமா?

இதிலே உச்சபட்சமாக தமிழ்நாட்டு ஊடகங்கள், தேசியத் தலைவருக்கு பெருங்காயம் என்றும் வெளிநாட்டிலே சிகிச்சை பெறுகிறார் என்றும் மோட்டுச் சிங்களவன எழுதியதை இன்று மீண்டும் வெளியிட்டிருக்கின்றன.

அய்யா மோகன்இதை எழுதிய மோட்டு தமிழன் யாரெண்டு தெரிந்து கொள்ளலாமா?? இதுக்குள்ளை தனிவிழக்கம்வேறை இந்திய ஊடகம் தமிழ் நாட்்டு ஊடகம் எண்டு இதை வெட்டாமல்் வெளியிடவும்

அய்யோ அய்யோ... :lol: :lol:

இந்த கடுகதி சுனாமிசெய்திகளுக்கும்... வதந்திகளுக்கும்... முக்கியகாரணம். யார்... யார்... :o:D

இன்றைய நவீன... தமிழ் இணையங்களும்.... இணையபோட்டிகளுமே... முக்கிய 100 க்கு 100 வீதகாரணம் :( இதை யாவரும் யாதார்த்தத்துடன் உணரவேண்டும். :D நிரந்தர இணயவாசகரைகேட்டுப்பாருங்கள். :D:lol:

இதை எழுதினவர் உண்மையில், புத்திசுவாதினமற்றவர் என நினைக்கிறன் எத்ற்க்கும் ஒரு வைத்தியரை நாடுவது நல்லது <_<

<_< அய்யா முதலில் ஒன்றை ப்புரிந்து கொள்ளுங்கள் தமிழக ஊடகங்கள் அனைத்துமே லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவை....... அவற்றிற்கு பரபரப்புச்செய்தி மட்டுமே முக்கியம் அதன் உண்மைத்த்னமை இரண்டாம் பட்சம் தான்....

தமிழகத்திலும் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் தலைவர் பிரபாகரன் முக்கியமாகத்திகழ்வதால் அவரைப்பற்றிய அனைத்துச் செய்திகளுக்கும் தமிழக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கத்தான் செய்யும் அவை வெறும் புரளியாக இருந்தாலும் கூட.....

ஈழம் பற்றிய செய்திகள் செய்திகள் வெளியாகும் போதெல்லாம் தமிழக பத்திரிக்கைகளின் விற்பனைகள் எகிறுகின்றனவாம் பிறகு வேறென்ன செய்வார்கள்

\\மருந்துக்கும் கூட சிந்திக்காமல் செய்திகளை வெளியிடும் மரத்துப் போன மூளைகளை மூலையிலே வீசிவிட்டு முன்னைவிட உரமோடு உயர்ந்து எழுவோம் உறவுகளே....\\

இது இனத் துரோகிகளுக்கல்ல தமிழ் உணர்வாளாகளுக்கு மட்டுமே. இணைப்பிற்கு நன்றி மோகன் அவாகளே

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கான திருஸ்டி கழிவாக இத் தமிழகத்து வதந்தியை எடுத்துக் கொள்கின்றோம். இதை;த தவிர, இப்படியான செய்திகளுக்கு வேறு ஒன்றுமே செய்ய முடியாது.

மற்றய ஊடகங்கள் என்றாலும் பரவாயில்லை. பேசாமல் விடலாம். ஆனால் நம்மவர்கள் பலர் விரும்பிப்படிக்கும் தற்றிஸ்தமிழில் இப்படி கற்பனை மிகுச் செய்தி வருவது தான் வருத்தமாக இருக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.