Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளிடம் சகல வசதிகளும் உண்டு பிரபாகரன் தமிழகம் வர வாய்ப்பே இல்லை கடலோர காவல்படை அதிகாரி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளிடம் சகல வசதிகளும் உண்டு பிரபாகரன் தமிழகம் வர வாய்ப்பே இல்லை கடலோர காவல்படை அதிகாரி தகவல்

[Wednesday December 26 2007 12:05:09 AM GMT] [யாழ் வாணன்]

விடுதலைப் புலிகளிடம் சகல வசதி களும் உண்டு. எனவே புலிகளின் தலைவர் தமிழகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வருகை தந்த கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:

இலங்கை போரில் சமீபத்தில் காயப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களிடம் சகல வசதிகளும் உள்ளன.

மீனவர்களுக்கும், கடலோர காவல் படையினருக்கும் கருத்து பரிமாற்றம் குறித்து இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. மீனவர்களின் உயிரிழப்பு என்பது வேதனையான விஷயம். உயிரிழப்பினால் அவர்களது குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதனால் உயிழப்பு இருக்கக் கூடாது. எனவே அவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது லைப் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டும்.

இவர்களுக்கு அரசே லைப் ஜாக்கெட் வழங்க இருக்கிறது. மீனவர்களுக்கு லைப் ஜாக்கெட் போடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் மீன்பிடிக்க செல்லும் போது மீனவ கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தாரிடமோ, கடலோர காவல் படை குழும ஒருங்கிணைப்பு கமிட்டியிடமோ அல்லது மீள் துறையிடமோ தங்கள் படகு, மீன்பிடிக்க செல்லும் ஆள் ஆகிய விபரங்களை அவசியம் அளித்து விட்டு செல்ல வேண்டும்.

http://tamilwin.net/article.php?artiId=590...;token=dispNews

ஆகா ஆகா என.ன அருமையான திட்டம். போர்க்களத்திற்குச் செல்லுமாப்போல் மீன்பிடிக்கச் செல்லவேண்டிய காலம். தெ.தனை ஆயிரம் பேருக்கு இப்படி லைவ் ஜக்கெட் அணிவிப்பது? கொஞ்சம் சிந்தித்தால் சுதந்திரமாக யாவரும் மீன் பிடிக்கலாமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சொந்த கடல் படை சாப்பிட்டு போட்டு படுக்குதுகள். அதுகளை பாதுகாப்புக்கு (இந்திய மீனவர்கட்கு) அனுப்பலாமே. லைவ் ஜாக்கட்டை பற்றி மோடன் மாதிரி சிந்திக்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் நீந்த கற்று வைத்திருந்தாலும் தீடிரென வரும் புயலில் வள்ளம் கவிண்டால் வீணாக சாகவேண்டித்தான் வரும் அவ்வாறும் பலபேர் உயிரிளந்திருக்கிறர்கள். லைவ் ஜெக்கெட் அரசாங்கம் வழங்குவது நல்ல தொரு திட்டம்தான். எமது நாட்டை இந்தியாவை பொறுத்தவரை தொழிலாளர்களின் பாதுகாப்பு மிகவும் குறைநிலையே......

ஆனாலும் தற்பொழுது தமிழக மீனவருக்கு எல்லாவற்றிலும் விட அச்சுறுத்தலாக இருப்பது சிங்கள காடையர்கள்தான். அவர்களிடமிருந்து மீனவரை லைவ் ஜக்கேட் பாதுகாக்குமா??? பல அதிகாரிகளுக்கு மனமிருந்தாலும் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையிருக்கிறது. அதலால் தமது பாதுகாப்பை உறுதிசெய்ய போராடவேண்டியவர்கள் தமிழக மீனவர்களே அடுத்தவீட்டில் சாவு நடக்கும் போது இவர்கள் அதை கவனமெடுப்பதில்லை அதுவே தமது வீட்டில் நடந்தால்தான் இவர்களுக்கு உணர்வு வரும். எத்தனை ஏமாற்று நாடகங்களை இந்தியாவின் றோ சிங்களக்காடையர்களுன் சேர்ந்து ஆடியிருக்கின்றது......... இதை கூட மற்றைய தமிழக மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு கூட தயக்கம் காட்டுகிறார்கள்....... பின் ஏன் நாம் வெறும் அம்பை நோக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சிந்தித்தால் சுதந்திரமாக எல்லோரும் வாழலாமே

வாழு வாழவிடு

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.