Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கின் அதிகாரம் கருணா கையில் - நீதிமன்று செல்கின்றது தமிழர் கூட்டணி

Featured Replies

கிழக்கு மாகாணத்தை தன்னுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவுக்கு தாரை வார்க்கத் திட்டமிட்டுச் செயற்படும் மஹிந்த அரசு, அதன் முதற்கட்டமாக உள்ளுராட்சித் தேர்தலை அவசர அவசரமாக அங்கு நடத்தத் திட்டமிட்டடுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளது த.தே.கூட்டமைப்பு.

அரசின் இந்தச் சதித்திட்டத்திற்கு எதிராக விரைவில் நீதிமன்றம் செல்லத் மதீர்மானித்திருக்கும் கூட்டமைப்பு, அது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசகைனைகளை நடத்தி வருகின்றது என தெரிய வருகின்றது.

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் ஒத்திவைக்கப்ட்டுவந்த 9 உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை அரசு கோரியுள்ளது.

'கிழக்கில் அரச துணையுடன் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் கேட்பாரற்று அரங்கேறிவரும் நிலையில் நீதியான - நியாயாமான - தேர்தலொன்றை அங்கு எதிர்பார்க்க முடியாது.' என்று த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் எம்.பி கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் 'சுடர் ஒளி"க்கு தகவல் தருகையில்

'புலிகளிடமிருந்து கிழக்குமாகாணத்தை முற்று முழுதாக மீட்டிருப்பதாக அறிவித்திருக்கம் அரசு, தனக்குத் துணையாக இருந்த இருக்கும் ஒட்டுக் குழுக்களின் கைகளில் அதன் அதிகாரத்தைக் கொடுக்கத் தீர்மானித்துள்ளது.

'மட்டக்களப்பின் 12 சபைகளில் மூன்று சபைகளுக்கு ஏற்கனவே உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது. மிகுதி 9 சபைகளுக்கும் தேர்தலை நடத்த இப்போது அரசு ஆசைப்படுகிறன்றது.

"ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக மட்க்களப்பில் கொலைகள், கொள்ளைகள், கப்பம் அறவிடுதல் என்பன கேட்பாராற்றுத் தொரும் நிலையில் அரசு தேர்தலை நடத்துவதற்கு காரணம் உண்டு.

'த.தே.கூட்மைப்பையும் மக்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி கூட்டமைப்பை கிழக்கிலிருந்து ஓரம் கட்ட நினைக்கிறது அரசு. அங்கு கருணா குழுவை அதிகாரத்துக்கு விட அரசு விரும்புகிறது.

'அரசுக்கு தலையாட்ட மறுக்கும் த.தே.கூட்டமைப்பை இல்லாதொழிக்க முயற்சிக்கும் அரசுக்கு எதிராக கூட்டமைப்பு நீதிமன்று செல்லவுள்ளது'.

'நீதியான தேர்தலொன்று இடம்பெற முடியாத மட்டில் தேர்தலை ஒத்திவைக்கும தீர்ப்புக்காக நீதிமன்று செல்லவுள்ள கூட்டமைப்பு, அதற்கான சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றது.

'வெளிநாடுகளில் தங்கியிருக்கும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வார இறுதிக்குள் நாடு திரும்பியதும் இது குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என்றார் எம்.பி.

நன்றி சுடர் ஒளீ

கருணாவின் கைகள் பிரிட்டனில் கட்டப்பட்டிருக்கும்போது, கிழக்கின் அதிகாரம் எப்படி கருணா கையில் இருக்கும். பிரிட்டன் கையில் கருணா, கருணா கையில் கிழக்கு. அதெல்லாம் நடக்காது கூட்டமைப்பினர் தேவையானால் தேர்தலில் பங்கு கொள்ளட்டும். அங்குள்ள மக்கள் ஒன்றும் மோசமானவர்களல்ல. அவர்கள் வாக்கினை சரியானவர்களுக்கே இடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
carton-l.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.