Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமரர் தி. மகேஸ்வரனின் இறுதி ஊர்வலம்

Featured Replies

பயங்கரவாத அரசின் ஏவல் நாய்களினால் கொன்றொழிக்கப்பட்ட அமரர் தி. மகேஸ்வரனின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மூவின மக்களுடன் அவரது வெள்ளவத்தை இல்லத்திலிருந்து கொழும்பு கனத்தை பொது மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.. இவ்வூர்வலத்தில் பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பல மதத்தைச் சார்ந்த மதத் தலைவர்களும் அவரது உடலம் தாங்கிய பேழையுடன ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் கொலைக் கலாச்சாரத்தை நிறுத்து. வெட்கம் போன்ற பாதாதைகளைத் தாங்கியவண்ணமும். இன்னும் சிலர் தமது வாய்களைக் கருப்புத் துணியால் கட்டியபடியும் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் ஊர்வலம் அமரர் ரவிராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தை நினைவிற்குக் கொண்டுவருவதாயுள்ளது. கனத்தை பொது மயனத்திலும் பெரும் சனக் கூட்டம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கூடியவண்ணம் உள்ளார்கள். இன்று காலை முதல் கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் தமது வியாபார ஸ்தலங்களை பொலிஸாரின் பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் மூடி வெள்ளைக் கொடியை பறக்கவிட்டு அன்னாரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் கொலையை கண்டித்து புறக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளன

[Thursday January 03 2008 01:32:03 PM GMT] [யாழ் வாணன்]

பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டமையை கண்டித்து புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையங்கள் பல இன்று காலை மூடப்பட்டன. புறக்கோட்டையில் பல இடங்களிலும் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டுள்ளமையையும் காணக் கூடியதாக இருந்தது.

இப்பகுதியிலுள்ள வர்த்தகள் அனைவரும் இன்று மகேஸ்வரனின் இறுதி கிரியைகளில் கலந்துக்கொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilwin.com

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் பூதவுடல் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இறுதி அஞ்சலியுடன் இன்று வியாழக்கிழமை 6:30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம் (வீடியோ இணைப்பு)

[Thursday January 03 2008 08:08:52 PM GMT] [யாழினி]

ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது.

http://tamilwin.net/article.php?artiId=605...;token=dispNews

ஜந்து வயது மகன் சிதைக்கு தீ மூட்ட மகேஸ்வரனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

[Thursday January 03 2008 04:28:18 PM GMT] [யாழினி]

புதுவருடதினத்தன்று கோவிலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது.

மகேஸ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது பெரும் எண்ணிக்கையான மக்கள், அரசியல்வாதிகள்,வர்த்தகப் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களும் தங்களது அஞ்சலியை அங்கு சென்று செலுத்திவந்தனர். அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் இறுதிகிரிகைகள் நடத்தப்பட்டதன் பின்னர் பூதவுடல் கால்நடையாக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது.

மகேஸ்வரனின் இழப்பை தாங்காத குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அரசியல் வாதிகள் கண்ணீர் மல்கியவாறு அன்னாரது இறுதி ஊர்வலத்தில் அணி அணியாக சென்றனர் பூதவுடல் எடுத்துவரப்பட்ட வீதிகளில் இருமறுங்கிலும் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்கள் பூதவுடலுக்கு மலர் தூவி தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

அன்னாரது இறுதி ஊர்வலம் வெள்ளவத்தையிலுள்ள அவரது வீட்டிலிருந்து பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.40 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தை வந்தடைந்தது. பூதவுடல் காலி வீதி, டபிள்யூ.ஆர்.டி. சில்வா மாவத்தை, ஹெவலொக் வீதி வழியாக கனத்தை இந்து மயானத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் பூதவுடல் எடுத்துவரப்பட்ட சுமார் 6 கிலோமீற்றர் தூரத்திலான வீதிகளின் இருமருங்கிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதிய பதாதைகள் தொங்கவிடப்பட்டிருந்ததுடன் கொழும்பிலுள்ள வீதிகளின் இருமறுங்கிலுமுள்ள மதில்களில் கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

முன்னதாக நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இறுதிக்கிரிகைகளை 5 வயதான மகன் பிரணவன் நடத்தினார் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இறுதிகிரிகைகள் இடம்பெற்றதன் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்மல்க சோகம் தளராதவாறு பூதவுடலுடன் பின்தொடர்ந்தனர்.

பூதவுடலை அன்னார் கல்விபயின்ற கல்லூரியின் பழைய மாணவர்கள் , ஐக்கியதேசியக்கட்சியினர், நண்பர்கள், ஆகியோர் பூதவுடலை மாறி மாறி ஏந்தி கனத்தை மாயானத்திற்கு அருகில் வைத்து குடும்ப உறவினர்களிடம் கையளித்தனர்.

பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு பூதவுடல் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அங்கு விசேட அஞ்சலி கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது. அதற்குப் பின்னர் உறவினர்கள் பூதவுடலை விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு எடுத்துச்சென்று வைத்ததன் பின்னர் அவரது ஐந்து வயதான மகனான பிரணவன் சிதைக்கு தீ மூட்ட பூதவுடல் இன்று மாலை 5.45 மணியளவில் அக்கினியுடன் சங்கமமானது.

http://tamilwin.net/article.php?artiId=604...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்
for--l.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.