Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயமானவர்களை மீட்டு தருவதாக கூறி பெண் மந்திரவாதி மோசடி: நகை- பணத்தை பறிகொடுத்தவர்கள் ஏமாற்றம்

Featured Replies

திருவான்மிïர் பாரதிதாசன் நகர் முதல் தெருவை சேர்ந் தவர் ஆறுமுகம் (38). இவரது மனைவி மீனா(29).

மீனா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது கணவர் ஆறுமுகத் தின் அண்ணன் தாமோதரன் ரிசர்வ் வங்கியில் பணி புரிந்து வந்தார்.இவர் காணாமல் போய் விட்டார்.

அவரை மந்திரம் மூலம் கண்டு பிடித்து தருவதாக கூறி என் வீட்டருகே குடி யிருக்கும் பெண் சாமி யார் நாராயணீ 5பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை வாங்கி னார். ஆனால் என் கணவரின் அண்ணனை கண்டு பிடித்து தரவில்லை. இப்போது அவர் செம்மஞ்சேரியில் இருக்கிறார். அவரிடம் இருந்து நகை பணத்தை மீட்டு தரும்படி கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாமியார்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய பெண் சாமியார் நாரயணீ. இவரை பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்ரீநாராயணீ பிரவீன்குமார் அரிசி மண்டி என்ற பெயரில் கடை நடத்தி வந்தார். அப்போது மந்திரம், சித்து வேலைகளை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டினார். இதனால் தனது பெயரை ஸ்ரீநாரயணீ என்று மாற்றிக்கொண்டார். அந்த பகுதியில் ஓரளவு பிரபலமான சாமியாராக உலா வரத் தொடங்கினார்.

தண்ணீரில் கற்பூரத்தை ஏற்றி விடுவார். அது சுற்றி நிற்கும் வரை கண்ணை மூடிக்கொள்வார். அதன்பிறகு குறி சொல்வார். இதனால் அவரை கற்பூர சாமியாரம்மா என்றும் அழைத்து வருகிறார்கள்.

தன்னை நாடி பலர் வரு வதை பார்த்ததும் அவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப் பதாக கூறி பணமோசடி வேலையில் இறங்கி உள் ளார். மீனா மட்டுமின்றி நராயணீயிடம் பாரூக் ரூ.50 ஆயிரம், கவிதா 25பவுன், மணி 20 பவுன் மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் என்று பலர் பல பிரச்சினைகளுக்காக பணத்தை கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்.

பெண் சாமியாரின் வலை யில் திருவான்மிïர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரும் சிக்கினார். மீனாவிடம் வாங்கிய நகை பணத்தை அவரிடம் கொடுத்து விட்டதாக நாரா யணீ தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரிடம் இலாகாபூர்வ விசாரணை தொடருகிறது.

சாமியாரின் கணவர் செல்வ மணியும் மனைவி சொல்லே மந்திரம் என்று அவருக்கு உதவியாக செயல்பட்டு வருகிறார்.

பணம் கேட்டு யாராவது வந்தால் நாராயணீ குட்டிச் சாத்தான் பூஜையில் இருக் கிறார். போய் விடுங்கள் என் பார் செல்வமணி. அதையும் மீறி நின்றால் மனைவியை நினைத்து கண்ணை மூடுவாராம். உடனே உள்ளங்கையில் இருந்து ரத்தம் கசியுமாம். அதை பார்த்ததும் பணம் கேட்டு வந்தவர்கள் தலைதெறிக்க ஓடி விடுவார்களாம்.

கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கேரள சாமியார் ஒருவர் குடில் அமைத்துள்ளார். அந்த குடிலில் சாமியாரின் தலைமை சிஷ்யையாக நாராயணீ தற்போது இருக் கிறார். அங்கு மேலும் பல வித்தைகளை கற்று கொண் டிருக்கிறாராம். அவரைப் பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் பல பரபரப்பான தகவல்கள் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மாயமான தாமோதரனின் தம்பி ஆறு முகம் கூறியதாவது:-

எனது அண்ணன் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சென்ற எனது அண்ணன் வீடு திரும்ப வில்லை. இதனால் நாங்கள் அவரை பல இடங்களில் தேடினோம். கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நேரத் தில் தான் நாராயணீயின் அறிமுகம் கிடைத்தது. அவர் அப்பொழுது எங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார்.

உங்களது நகையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.மேலும் ஆயிரக்கணக்கில் பணமும் செலவாகும். இவற்றையெல் லாம் செய்து விட்டால் 4 நாட் களில் உங்கள் அண்ணன் வீடு தேடி வருவார். அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்து விடும் என்று கூறினாள்.

இதனை நம்பி எனது மனைவி மீனா 5பவுன் நகையும், 40ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் அவரி டம் கொடுத்தார். எங் களை ஏமாற்றியது போல நாராயணீ மேலும் பலரை ஏமாற்றி இருக்கலாம். அவரிடம் மீண் டும்ë விசாரித்தால் அவரிடம் ஏமாந்தவர்கள் யார், யார் என்று தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக திருவான் மிïர் போலீசாரிடம் கேட்ட போது, நாராயணீ ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். தற்போது ஜாமீனில் வந்துள்ள அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே கமிஷனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பபடும் மீனாவின் புகார் மனு எங் கள் கைக்கு கிடைத்ததும் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவோம் என்றனர்.

நாராயணீ குறித்து திரு வான்மிïர் போலீஸ் குடி யிருப்பு அருகில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது, நாராயணீ இங்கு வசித்து வந்த போது அவரிடம் பலர் பணம் கேட்டு சண்டை போட்டனர். இதனை நாங்கள் நேரில் பார்த்துள்ளோம் என்று தெரி வித்தனர்.

மேலும் ஜவுளி வியாபாரம் செய்யும் ஜோதிலட்சுமி என்ற பெண் கூறும்போது, என்னிடம் ஜவுளி வாங்கி விட்டு பணம் தராமல் மோசடி செய்து விட்டார் நாராயணீ என்று கூறினார்.

அட அண்ணாவை காணவில்லை என்றா பொலிசிற்கு சொல்லுறது அதை விட்டு போட்டு நாரயணி சாமியை நம்பி வந்தது யார் குற்றம் :D ...நகையை கொடுத்தது யார் குற்றம் எல்லா குற்றத்தையுமே நீங்க செய்து போட்டு என் கட்சிகாரர் மேல் பழி சுமத்துவது எந்த விதத்தில் நியாயம் :D செக்சன் 00000 (இது ஜம்மு வைத்த செக்சன் கண்டுகாதையுங்கோ :lol: )....சட்டத்தின் படி நகையும் கொடுத்து ஏமாந்த இவர்களை தான் கண்டிக்க வேண்டும் என் கட்சிகாரர் நிரபராதி :lol: வாயால என் கட்சிகாரர் வாந்தியெடுக்க அதை சிவலிங்கம் என்று சொன்னது யார் குற்றம் :lol: (ஒரு மதிரி அவரையும் இதுகுள்ள கொண்டு வந்தாச்சு :) ) ஆகவே நாரயணி சாமி நிரபராதி நிரபராதி என்று கூறி விடைபெறுகிறேன்......... :)

அப்பாடா நாரயணி சாமியின் அருள் எனக்கு எப்பவும் இருக்கும்...........சாய் ராம்........சாய்ராம்.....சொறி சொறி........நாரயணி ராம்.....நாரயணி ராம்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் 2008-

"ஒன்று தன்னை நம்ப வேண்டும் இல்லாட்டி ஒருவரையும் நம்ப கூடாது" :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.