Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியமை சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் இப்படிக் கூறுகிறார் ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகியமை சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் இப்படிக் கூறுகிறார் ரவூப் ஹக்கீம்

[saturday January 05 2008 05:52:27 AM GMT] [யாழினி]

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் விலகிக் கொள்வது என்பது சர்வதேச சமூகத்தின் மத்தியில் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துகின்ற விடயமாக மாறிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படிக் கூறியுள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகிக் கொள்வது தொடர்பாக "பி.பி.ஸி" செய்திச் சேவைக்குப் பல முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்திருந்தனர். அதன்போதே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.அந்தப் பேட்டியின் சாராம்சம் வருமாறு:

எதிர்காலத்தில் புதிய ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையை செய்ய முயற்சிக்கின்ற வேளைகளில், ஏற்பாட்டாளர் தரப்பை மத்தியஸ்தர் தரப்பாக மாற்ற வேண்டும் என்று புலிகள் கோரிக்கை விடுத்து சர்வதேச சமூகத்தின் நேரடியான தலையீட்டை நாட்டில் ஏற்படுத்திவிடக்கூடிய விடயமாகவும் இது மாறிவிடலாம். இதனை நாட்டின் இறை மையைப் பற்றியும் ஒருமைப்பாட்டைப் பற்றியும் பெரிதாகப் பீற்றிக் கொள்கின்ற சிங்கள தேசியவாத சக்திகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஹக்கீம் மேலும் கூறினார்.

இரா.சம்பந்தன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம். பி.கூறியதாவது:

அரசின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய விடயம் அல்ல. ஏனெனில் இலங்கை அரசே கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக யுத்த நிறுத்த உடன்பாட்டை மிகவும் பகிரங்கமாக மீறிச் செயற்பட்டிருக்கின்றது.

யுத்த நிறுத்த உடன்பாட்டைப் பொறுத்த வரையில் இரண்டு விடயங்கள் உள்ளடக் கப்பட்டிருக்கின்றன. ஒன்று இராணுவ ரீதியான விடயங்கள். அந்த விடயங்களைப் பற்றி நாங்கள் பேசவில்லை. அதை இரண்டு தரப்பும் மீறியிருக்கலாம். நாங்கள் பேசுவது சிவிலியன் விடயங்கள் பற்றியது.

யுத்தநிறுத்த உடன்படிக்கையின் முக்கிய நோக்கம் என்னவெனில், வட கிழக்கில் வாழ்கின்ற சிவிலியன்கள் பாதுகாப்பாக, இயல்பு வாழ்க்கை வாழவேண்டும். அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அவர்க ளுக்குப் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்ய இலங்கை அரசு தவறியது மட்டுமன்றி, மேலும் இலட்சக் கணக்கான மக்கள் தமது கிராமங்களைவிட்டு, மாவட்டங்களை விட்டு இடம்பெயரவும் வழிசெய்தது. எங்களைப் பொறுத்தவரையில் இவை இலங்கை அரசின் பாரிய யுத்த நிறுத்த மீறல்கள்.

ஆனால், இந்த அறிவிப்பு ஒரு வகையில் பின்னடைவே. ஏனெனில் யுத்தம், எவ்வளவு காலம் இடம்பெற்றாலும் ஒரு கால கட்டத்தில் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு பேச்சுகள் இடம்பெற்றே ஆகவேண்டும். பேச்சுக்கள் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணக்கூடிய நிலைமை பிறக்கும். அதை வைத்துப் பார்க்கும்போது இந்த அறிவிப்பு பின்னடைவு என்று கூறலாம்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் கொடியை ஏற்றுவதும் ஒரு யுத்த நிறுத்த மீறலாகப் பதிவு செய்யப்படும். அதேவேளை, இலட்சக் கணக்கான மக் களை இடம்பெயரச் செய்யும் படையினரின் நடவடிக்கையில் ஒவ்வொரு குடும்பத் தினுடைய நிலைமையும் ஒவ்வொரு யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறலாகக் கருதப்பட வேண்டும். அவ்விதமாகக் கருதம்போது அரசுடைய யுத்த நிறுத்த மீறல்கள் அதிகமாக இருக்கும் இப்படிச் சம்பந்தன் எம்.பி. கூறினார்.

டக்ளஸ் தேவானந்தா

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது; மாவிலாறு பிரச்சினை வரைக்கும் அரசு மௌனமாய் பார்த்துக் கொண்டுதானிருந்தது. ஆனால் மாவிலாற்றுப் பிரச்சினைக்குப் பின்னரே தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு எழுந்தது. யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்வதாக விடுக்கப்பட்ட அறிவிப்பின் அர்த்தம், அரசாங்கம் முழுமூச்சுடன் யுத்தத் தில் ஈடுபடப்போகிறது என்பதுதான் என்று நான் நம்பவில்லை. புலிகளில்தான் அது தங்கியுள்ளது. புலிகள் பேச்சுக்குத் தயார் என்றால் அரசும் தயார் இப்படி அவர் கூறினார்.

சித்தார்த்தன்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் த.சித்தார்த்தன் கூறியதாவது:

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக இப்போது அறி வித்திருக்கின்றது. ஆனால், இந்த உடன் பாட்டிலிருந்து எப்போதோ இரண்டு தரப்புகளுமே விலகிவிட்டன. இதனால் கள நிலவரங்களில் பெருமளவில் மாற்றம் ஏதும் வருமென்று நான் நினைக்கவில்லை இப்படி சித்தார்த்தன் கூறினார்.

ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியதாவது:

ஆரம்பத்திலிருந்தே நான் இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டை ஆதரிக்கவில்லை. காரணம், விடுதலைப்புலிகள், அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து தமது இஷ்டம்போல் எதனையும் செய்து விட்டுப்போக அது அனுமதியளித்தது. ஆனால் இதே போன்று புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குச் சென்றுவர மற்றவர்களுக்கு எந்த ஏற்பாடும் அதில் இருக்கவில்லை. இதனுடைய விளைவாக யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு முன்னர் இருந்த தைவிட மோசமான நிலைக்குப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் தள்ளப்பட்டார்கள். அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கூட இந்த யுத்தநிறுத்த உடன் பாட்டின் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, மொத்தத்தில் சகல தமிழர்களும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்வதாகவே இவ்வளவு காலமும் நிலைமை இருந்தது. ஆகவே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகுவது கவலை தரும் விடயம் அல்ல. என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு மகிழ்ச்சியான விடயம் தான் என்று ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஸ்ரீதரன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ன ணியின் (பத்மநாபா அணி) பொதுச் செய லாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:இந்தப் போர் நிறுத்த உடன்படிக்øயில் அர்த்தம் இருந்ததாக எமக்குத் தெரிய வில்லை. ஏனெனில் இந்த ஒப்பந்த காலத்தில்தான் மாற்றுக் கருத்துடையவர்கள் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ச் சமூகத்தில் இருக்கின்ற வெவ்வேறு அரசியல்த் தலைவர்களின் பாத்திரம் குறித்து எதுவும் கூறப்பட்டிருக்க வில்லை. இதற்கப்பால் மோசமான யுத்த மொன்று ஏற்கனவே நடந்து கொண்டிருக் கின்றது. ஆக, யுத்த நிறுத்த –உடன்பாடு என்பது அர்த்தமிழந்த விடயமாகவே உள்ளது.

யோகராஜன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி யின் சிரேஷ்ட உப தலைவர் யோகராஜன் கூறியதாவது: போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த இரண்டு வருடங்களாகவே மதிக்கப்டாமல் இருந்தது. இப்போது சர்வதேசத்துக்கு அறிவிப்பதற்காக யுத்தநிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அரசு தெரிவித்திருக்கின்றது. அவ்வ ளவுதான் என்று நாம் நினைக்கிறோம். இதனால் போர்க்களத்தில் எந்த மாற்றமும் ஏற் படப்போவதில்லை இப்படி யோகராஜன் கூறினார்.

இராதாகிருஷ்ணன்

பிரதி அமைச்சரும் மலையக மக்கள் முன் னணியின் உறுப்பினருமான பெ.இராதாகி ருஷ்ணன் கூறியதாவது: இலங்கை அரசின் முடிவு, அதிர்ச்சி தருவதாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது என்பது ஒரு விவேகமற்ற முடிவு என்றே நான் கருதுகிறேன். இந்த ஒப் பந்தத்தை இருசாரருமே நன்கு கடைப்பிடிப் பார்களானால் சமாதானம் உருவாவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கின்றது.

அது இப்போது கை நழுவிப் போய் யுத்தமே முனைப்புடன் முன்னெடுக்கப் படப்போகின்றது என்று இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

tamilwin.com

என்ன? ஆளாளுக்கு எதையெதையோ சொல்கிறார்கள். யுத்த நிறுத்த உடன்படிக்கையால் தமிழருக்கு எதையும் வழங்கமுடியவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இருந்தென்ன? இல்லாமற் போனாலென்ன? உடன்படிக்கை இருந்தபோது அரசு போர் செய்தது. உடன்படிக்கi விலக்கிக் கொள்ளப்பட்ட பின்பு போர் தொடுக்க புலிகள் பின்நிற்கப்போவதில்லை. இராஜதந்திரப் போரும் தொடரும். தளம் அறியும் தான் எங்கு போகிறேனென்பதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.