Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வேயின் முன்னணி வெளிநாட்டவர்களில் ஒருவராக தமிழர் தெரிவு

Featured Replies

நோர்வே நாட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான "முன்னணியில் 10" (Top 10) பட்டியலில் தமிழரான ஊடகவியலாளர் இராஜன் செல்லையா தெரிவாகியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

நோர்வேயின் முன்னணி வெளிநாட்டவர்களில் ஒருவராக தமிழர் தெரிவு

[ஞாயிற்றுக்கிழமை, 06 சனவரி 2008, 05:14 பி.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

நோர்வே நாட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான "முன்னணியில் 10" (Top 10) பட்டியலில் தமிழரான ஊடகவியலாளர் இராஜன் செல்லையா தெரிவாகியுள்ளார்.

நோர்வேயில் சமூக- தொழில்- மற்றும் பண்பாட்டுத் தளங்களில் தடம் பதித்த 10 வெளிநாட்டவர்களைத் தெரிவு செய்து அடையாளப்படுத்துகின்ற செயற்பாடு கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது (Top 10) என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகின்றது.

கல்விப் பின்னணி

இராஜன் செல்லையா, 1983 ஆம் ஆண்டு தனது 21 ஆவது வயதில் தாயகத்திலிருந்து நோர்வேக்கு புலம்பெயர்ந்தவர்.

ஆரம்ப காலத்தில் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானிடவியல் மற்றும் பல்லின கலாச்சார புரிதல் தொடர்பான துறைகளில் பயின்றவர். அத்தோடு ஊடகத்துறையில் இளநிலைப் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து, தற்போது முதுநிலைப் பட்டப்படிப்பிற்குரிய ஆய்வினை முன்னெடுத்து வருகின்றார்.

நோர்வே தேசிய தொலைக்காட்சியில் பணி

கடந்த 10 ஆண்டுகளாக நோர்வேயின் தேசிய தொலைக்காட்சியில் (NRK-என்ஆர்கோ) ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் இவர், ஊடகத்துறையில் நீண்டகாலப் பட்டறிவு மிக்கவர் என்பது பதிவு செய்யத்தக்கதாகும்.

வெளிநாட்டுப் பின்னணியுடைய இனக்குழுமங்களின் சமூக வாழ்வியல் பிரதிபலிப்பாக வடிவமைக்கப்பட்டு வாரா வாரம் ஒளிபரப்பப்படும் மீக்ராபொலீஸ் (Migrapolis) நிகழ்ச்சியின் படைப்பாளிகளில் ஒருவர் நோர்வேஜிய பெருஞ்சமூகத்தில் வெளிநாட்டவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், இணைவாக்கம் தொடர்பான சிக்கல்கள்-புரிதல்கள், கலாச்சார முரண்பாடு, சமூகத் தளங்களில் அவர்களின் பங்கேற்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்நிகழ்ச்சியின் பேசு பொருட்களாகும்.

2001 ஆம் ஆண்டு நோர்வேயின் சுதந்திர நாள் (17.05.2001) நிகழ்வுகளை என்ஆர்கோ தொலைக்காட்சிக்காக ஒஸ்லோவிலிருந்து நேரடியாக தொகுத்து வழங்கிய வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட முதலாவது ஊடகவியலாளர் என்ற பெருமை இவரைச் சாரும்.

நோர்வே தேசத்தின் சுதந்திர நாள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பு இவரது ஆளுமைத்திறனுக்கு சான்று பகர்கின்றது.

தாயகம், தமிழ்ச் சமூகம் நோக்கிய செயற்பாடுகள்

இராஜன் செல்லையா, புலம்பெயர்ந்து வந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் நோர்வே தமிழ்ச் சமூகத்தை நோக்கிய செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

நோர்வே தமிழர் வள ஆலோசனை மையத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராக சமூகத்தளத்தில் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.

தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் (ரிரிஎன்) வளர்ச்சிக்குரிய காத்திரமான பங்கினை ஆற்றியவர். அத்தோடு நோர்வே ஒஸ்லோவிலிருந்து ஒலிபரப்பப்படும் "தமிழ் முரசம்" வானொலியின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்தவர் என்பதோடு "ஈழமுரசு" வார ஏட்டிலும் இவரது கட்டுரைகள் பதிவாகியுள்ளன.

"Top 10" இன் நோக்கம்

வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களில் தகமையும் ஈடுபாடுமுடையவர்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்துவது இத்தெரிவின் தலையாய நோக்கமாகும். அத்தோடு சிறுபான்மை இனக்குழுமங்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியானவர்களை (role models) அறிமுகப்படுத்தி, அவர்களின் மேம்பாட்டுக்குரிய உந்துதலை வழங்குவதும் இத்தெரிவின் மற்றுமோர் நோக்கம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வெளிநாட்டுப் பின்னணியுடைய இளையோர்களுக்கு இராஜன் செல்லையா முன்மாதிரியான எடுத்துக்காட்டு என்று "Top 10" தெரிவுக்கான நடுவர் குழு தெரிவித்துள்ளது.

60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் "Top 10" தெரிவுக்காக பரிந்துரைக்கப்பட்டனர். நடுவர்களின் நுணுக்கமான ஆய்வுக்குப் பின்னர் ஐந்து பெண்களும் ஐந்து ஆண்களுமாக 10 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்குப் பெருமை

முன்னணி வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டமை குறித்து இராஜன் செல்லையா "புதினம்" இணையத்தளத்திற்கு தெரிவிக்கையில்,

தனக்கான இந்த அங்கீகாரம் நோர்வேயில் உள்ள இளைய தலைமுறைத் தமிழர்களுக்கு உந்துதலைக் கொடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

நோர்வேயில் தமிழர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டவர்கள் மத்தியில் ஆளுமையும் திறமையுமுடைய பலர் உள்ளனர். குறிப்பாக இளைய சமூகத்தினர் கல்வியிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனபோதும் எமது சமூகத்தின் கல்வித்தெரிவில் ஊடகத்துறை முக்கியத்துவம் பெற்றிராத துறையாக உள்ளது.

எனவே அவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வழமைக்குப் புறம்பான கல்வித்துறையாக பார்க்கப்படுகின்ற ஊடகத்துறையை, எனது வளர்ந்த வயதில் தெரிவுசெய்து பயின்றமையும் அத்துறையில் பணியாற்றுகின்றமையும் மன நிறைவைத் தருகின்றது.

2007 ஆம் ஆண்டின் பத்து முன்னணி வெளிநாட்டவர்களில் ஒருவனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளமை தமிழ் இளையோர்களின் கல்வித் தெரிவுக்கு தூண்டுதலாக அமையும் என்பதையிட்டு மகிழ்வடைகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நோர்வே பெருஞ்சமூகத்தில் தடம் பதித்த தமிழராக ஊடகவியலாளர் இராஜன் செல்லையா அடையாளப்படுத்தப்பட்டிருக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.