Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை தடை செய்ய பாதுகாப்புத் தரப்பு தீவிர ஆராய்வு

Featured Replies

விடுதலைப் புலிகளைத் தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவாதாக மஹிந்தவின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ் தெரிவித்தார்.

'தினக்குரல்' க்கு நேற்று புதன் கிழமை மாலை இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :-

விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் இலக்குகளாக பொதுமக்களும் அரசில்வாதிகளுமாக மாறியுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாகப் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆயிரக் கணக்கில் அதனை மீறினார்கள்.

எனவே தான், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் வெளியேறியது. தோல்வி காணும் புலிகள் இப்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். என்வே, அரசு புலிகளை தடைசெய்வது குறித்து தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

புலிகளை தடை செய்ய முன்னர் அரசு பல விடயங்களை ஆராய வேண்டியுள்ளது. எனினும், புலிகளை தடை செய்யும் திட்டத்தை அரசு கொண்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழ்நிலைகள் மிகுந்த அவதானத்திற்குரியவையாகும்.

புலிகளை தடை செய்வது குறித்து அரசியல் மற்றும் பாதுகாப்புதரப்புகளுடனும் கலந்துரையாடப்படவுள்ளது.

அரசாங்கம் என்ற வகையிலும், நாட்டு மக்களை பாதுகாப்பவர்கள் என்ற வகையிலும், பயங்கரவாதிகளின் எத்தகைய சவால்களையும் முறியடிக்க அரசு தயாரகவுள்ளது.

அவர்கள் இதற்கு முன்னரும் பல அரசியல் தலைவர்கள், அப்பாவி பொது மக்கள் என பலரை படுகொலை செய்துள்ளனர். இப்போது அவர்கள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் தாக்குதல்களை தீவிரப்படுத்துகின்றனர்.

இவ்வருடத்திற்குள் நாம் சமாதானத்தை நிலைநாட்டுவோம். இதற்கு முன்னதாக பயங்ரவாதத்திற்கு முடிவு கட்டுவோம். தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கும் அதேயளவு உரிமையை வடக்கு கிழக்கு மக்களும் அனுபவிப்பார்கள் என்பதை அரசு சார்பில் பொறுப்புடன் கூறுகிறேன்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது. மஹிந்த நேற்று புதன் கிழமை அவர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், உரிய பணிப்புரைகளையும் விடுத்திருக்கிறார்.

மிக விரைவில் இன நெருக்கடிக்கு தீர்வு காணும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனைகள் வெளியிடப்படும் என்றார்.

நன்றி தினக்குரல்

செய்யுங்கோ தடை செய்யுங்கோ.

- போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து வெளியேற்றம் - வந்த அறிவிப்பு

- விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பு - விரைவில் வரப்போற அறிவிப்பு

- இனப்பிரச்சனைக்கு தீர்வு தேவையில்லை - வருங்க்காலத்தில் வரப்போற அறிவிப்பு

- இலங்கைத் தீவு சிங்களவருக்கே சொந்தம் - வருங்க்காலத்தில் வரப்போற அறிவிப்பு

என்ன அண்ணாமாரே, நான் உங்கள் பதிவுகளை கடந்த 4 வருடமாக வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

ரணில் விரிச்ச வலையில எம் ஈழமக்களின் பிரதிநிதிகள் விழவைத்தது ஒரு துரதிஸ்டம் என்று தானே கதைத்தம். அதனால் தானே புலிகள் யாழ் நோக்கிய தம் கடைசி படை நடவடிக்கையினை கைவிட்டு ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தந்திற்கு வரவேண்டி வந்து இப்படி கருணாவினையும் இழக்கவேண்டி வந்தது. பின்லாடன் தான் இதுக்கெல்லாம் காரணமாக இருந்தாலும், ரணில் செய்த நரிவேலைக்குள் தமிழர் மாட்டுப்பட்டது உண்மை இல்லையோ?

நாம் இப்போது இந்த வலையினுள் இருந்து வெளியே வந்துவிட்டோம். பேந்தேன் இந்த வலையைப்பற்றி கதைப்பான். எனி வலை இருந்தா என்ன, பொறி யிருந்தா என்ன. தை 16 ஆம் நாள், லக்கி 7 ஆகவே போரிற்காக சிங்களவன் சங்கூதும் போது, நாம பார்க்கவேண்டிய வேலைகள் ஆயிரம் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும். சண்டை என்று வந்தா, பொது சனம் சாகும், புலிகளுக்கு இழப்பும் வரும் ஆகவே செலவும் வரும். இப்ப நாங்க பார்க்கவேண்டியது வேற. வலையை விரித்தவனோ அல்லது அதை எடுத்தவனைப்பற்றிக்கதைப்பது அல்ல.

தீபிகா அக்கா, நீங்கள் உப்பிடிச்சொல்லுறீங்கள் ஆனால் புலிகளின் அறிக்கை இப்படிச்சொல்லுதே.!!!!!

சிறிலங்கா அரசானது தற்போது போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து எதுவிதமான நியாயங்களுமின்றி ஒருதலைப்பட்சமாக விலகிவிட்டது.

இந்நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையினை வரிக்கு வரி அமுல்படுத்தி அதனை நூறு வீதம் கடைப்பிடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

அத்துடன், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணைப் பணியினை நோர்வே அனுசரணையாளர்களே தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். -- புதினத்திலிருந்து.

என்ட முருகா அண்ணை, முன்னம் புலிகளுக்கு உலக அரசியலில கலக்க ரைம் கிடைக்கவில்லை, சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆகவே இப்போது அவர்களுக்கு கிடைத்த கடந்த 7 வருட உலக அரசியல் அனுபவம். பொக்கிசம். எத்தனையோ உலக பொலீஸ்காரர்களின் தூதர்களைக்கண்டு கதைத்து பக்குவப்பட்ட மனுசனுக்கு தெரியும், தாம் என்ன கதைக்கிறோம், எதற்காக கதைக்கிறோம் என்று. இதைச் சிம்பிளா சொல்லப்போனால் உலக பொலிடிக்ஸ். புலி என்ன புண்ணாக்குதிண்டு வளர்ந்த துகளை மாவீர்கள் சாவினை மனதில் வைத்து ஒவ்வொரு தடத்தினை பதித்து, பெரு வெற்றிகளோடு வந்தவர்கள். அணில் மூத்திரமடிக்க அண்ணாந்து பார்க்கும் பூணைகள் போல நம்மட புலிகள் இருக்கமாடார்கள். நம்புங்கள் 25 வருட அனுபவம் என் அண்ணணின் ஊடாக. அவர்கள் செய்வதை செய்தே தீருவார்கள்.

இந்த அறிக்கையெல்லாம் உலக பொலீஸ்காரன் சொல்லியவைகளின் மீள் பதிப்பு கண்டியளோ.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பதில் சரியான நெத்தியடிதான். சிங்களவன் சங்கூதட்டும், மிச்சத்தை புலிகள் நடத்தி முடிப்பார்கள்.

ஆனால் சிங்களம், இலங்கையை தனிச் சிங்கள நாடு என்று சொல்லத் தொடங்கி கன காலமாகி விட்டது என்று நினைக்கிறேன். அடுத்தது இங்கு இருப்பது வெறும் பயங்கரவாதப் பிரச்சனையே என்பது அதனது இன்னொரு மந்திரம்.

தந்திரங்கள் இப்படித்தானிருக்கும். தலைசுற்றும், விளங்கியது போல் தோன்றும் ஆனால் ஒன்றும் விளங்காது. முடிந்தது போல் தோன்றும் ஆனால் முடியாது. முன்பு ஏற்றுக் கொண்டதுபோலிருக்கும் பின்பு மறுத்துவிடும். என்ன தலைசுற்றுகிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.