Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பிரணாப் முகர்ஜீ கருத்து

Featured Replies

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாவும் அதே சமயம் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்திருக்கும் அதே வேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாதிருக்கும் நிலையில் இலங்கை தொடாபாக ஊறுவிளைவிக்கும் அறிக்ககையை முகர்ஜீ வெளியிட்டுள்ளதாக உலக சமாதான அமைப்பான தேசிய ஒருங்கிணைப்பு சபை ( National Integration Assembly) கடுமையாக சாடியுள்ளது.

சி.என்.என்., ஐ.பி.என். ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முகர்ஜீ அளித்த பேட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது.

'டெவில் அட்வோகேற்' என்ற இந்த நிகழ்ச்சியை கரன் தாபர் தயாரித்து வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் விலகியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது அது தொடர்பாக விமர்சிக்க முகர்ஜீ மறுத்துவிட்டார். அந்த உடன்படிக்கையில் இந்தியா சம்பந்தப்பட்ட தரப்பு அல்ல என்று முகர்ஜீ கூறியுள்ளர். இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் அதிகரித்துள்ளன. பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை இந்தியா எந்தவொரு சகிப்புத்தன்மையையும் காட்டாது. ஆதலால் எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தமது சட்ட வரையறைக்குள் நடவடிக்கையை எடுக்கமுடியும் என்று முகர்ஜீ தெரிவித்திருக்கிறார்.

சிறுபான்மையினங்களின் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த முகர்ஜீ, தமிழர்கள் உட்பட சிறுபான்மையினங்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பது அக்கறைப்படுவதற்குரிய விடயமாகும். இலங்கையின் முறைமைக்குட்பட்டவாறு அவர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த விடயத்தில் தொய்வு இருக்கக்கூடாது. தீர்வொன்றை காண்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் முகர்ஜீ கூறியுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, இதுவரை அது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், அவ்வாறு தீர்மானம் எடுக்கப்படும் போது அது தொடர்பாக அறிவிப்போம். ஆனால் இதுவரை தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்ல என்று கூறிப்பிட்டார்.

அதேசமயம், இந்த வருட இறுதியில் கொழும்பில் இடம் பெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வாரென முகர்ஜீ கூறியுள்ளார்.

இதே வேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாக முகர்ஜீ தெரிவித்திருப்பது ஊறுவிளைவிக்கும் அறிக்கையென தேசிய ஒருங்கினைப்பு சபை சாடியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீது இலங்கை தாக்குதல் நடத்துவதை முகர்ஜீ உற்சாகப்படுத்தியுள்ளார் என்றும், அவர் விடுத்திருக்கும் அறிக்கை பொறுப்பற்றதென்றும் அந்த அமைப்பு விமர்சித்திருக்கிறது.

பழைய யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுகள் இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இதற்கு அப்பால் சமாதானப் பேச்சுக்கான கதவுகள் திறந்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது. அதேசமயம் இலங்கைப்படையினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதெல்லாம் என்ன? என்று தேசிய ஒருங்கிணைப்பு சபையின் தலைவர் டாக்டர்ட ராஜ்பால்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்த நிறுத்த உடனபடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து விமர்சிக்க முகர்ஜீ மறுத்து விட்டது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசிய ஒருங்கிணைப்புச் சபைத் தலைவர் ராஜ்பால்தேவ் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இந்தியா சம்பந்தப்பட்ட தரப்பாக இல்லாத பட்சத்தில் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் புலிகளுக்கு எதிராகவும் முகர்ஜீ ஏன் ஊறுவிளைவிக்கும் அறிக்கையை விடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர்களின் பிரச்சினையை பயங்கரவாதம் என்று முகர்ஜீ எவ்வாறு முத்திரை குத்த முடியும். தமிழர்ளைப் பொறுத்தவரை அவர்களின் மூதாதையரின் தொடர்புகளின் பிரகாரம் அவர்கள் இந்தியர்கள்.

யாவற்றுக்கும் மேலாக சகல இலங்கைப் பிரஜைகளுக்கும் அடிப்படை உரிமைகள் உண்டு. விடுதலைப்புலிகள் மீது தாக்குல் நடத்திக் கொண்டு உலகுக்கு யாவற்றையும் மறைத்துக் கொண்டு இருக்கையில் முகர்ஜீ ஏதாவது தீர்வு கிட்டுமென எதிர்பார்க்கிறாரா என்றும் டாக்டர் பால்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி : தினக்குரல்

முகர்ஜியின் உற்சாக பானத்தால் வீறுகொண்டெழும் இலங்கைப் படையினர் எழுப்பப்போகும் அவலக் குரல் கேட்டும், முகர்ஜி மௌனம் சாதிக்கப்போகிறார். ஏனென்றால், அதிலும் இந்தியுh சம்பந்தப்பட்டிருக்கவில்லை. :lol::lol:

தமிழரின் காவலர்கள் என்று சொல்லி கொள்ளும் கிழடுகள் முகர்ஜின் கூற்றுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

தமிழக தமிழரும் பயங்கரவாதிகள் தானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் காவலர்கள் என்று சொல்லி கொள்ளும் கிழடுகள் முகர்ஜின் கூற்றுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

தமிழக தமிழரும் பயங்கரவாதிகள் தானா?

அவர்கள் இப்போ ரோவின் தங்குமடத்தில் வைத்து பராமரிக்க படுகின்றனர். ரோ இனி தான் எப்படி அறிக்கை விட வேணும் என்று எழுதிக் கொடுக்கும் :lol:

நாங்களும் உடனே அதுக்கு நன்றி தெரிவிக்கனும் மறந்திடாமல் :lol:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். அமரிக்கா என்ன சொன்னாலும், செ;தாலும் சப்பை கொட்டுவது போலவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாப்பாணரை விட அமெரிக்கா மேலானது தான். இந்திய பாப்பாணர் வர்க்கம் அது தான் சிறிலங்கா விமானப்படைக்கு இப்போ இரவு பகலா பயிற்சி கொடுக்கினம்.

வருகின்ற 16ம்் திகதிக்கு பின் தொடர்சியா தாக்க இராணுவ வியூகமும் இந்திய வழிநடத்தலில் தான் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

.

ஆமாம். அமரிக்கா என்ன சொன்னாலும், செ;தாலும் சப்பை கொட்டுவது போலவா?

பாப்பாணரை விட அமெரிக்கா மேலானது தான். இந்திய பாப்பாணர் வர்க்கம் அது தான் சிறிலங்கா விமானப்படைக்கு இப்போ இரவு பகலா பயிற்சி கொடுக்கினம்.

வருகின்ற 16ம்் திகதிக்கு பின் தொடர்சியா தாக்க இராணுவ வியூகமும் இந்திய வழிநடத்தலில் தான் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

.

இப்போதே சலிப்படைந்த நிலையில் இலங்கை இராணுவத்தினர் உள்ளனர். வடபோர் முனையில் எந்தவொரு வெற்றியையும் ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தால் அவர்களிடம் ஒரு வகைச் சோர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதிலே தொடர்ச்சியாகத் தாக்குதல் என்பது சாத்தியமாகாது. அதிலும் தற்போதைய நிலையில் இந்தியாவின் தொனி மாறும் என்றுதான் நான் நினைக்கின்றேன். இந்திய உதவிகள் புலிகளை எதிர்ப்பதற்கு பெரிதாக உதவாது என்பதை இலங்கை அறியும். அதனால் இந்திய உதவிகளை அசட்டையுடன்தான் இலங்கை ஏற்கும். கடந்த காலமும் இதுவே நடைபெற்றுள்ளது. அமெரிக்கத் தலையீடும் இத்தகையதுதான். இலங்கைக்கு கைகொடுக்கும் அந்த தற்போதைய உற்ற நண்பன் யார்? இதுதான் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விமானப்படைக்கு பயிற்சியும், வழிகாட்டலும் கொடுக்கிறது, அமெரிக்கா கடற்படைக்கு போர்ப் படகுகளும் உளவுத் தகவல்களும் கொடுக்கிறது. இதில் எது பெரியது, எது சிறியது என்று கணிப்பிடுவது கடிணம். இருவருக்குமே பொதுவான நோக்கம், தமது பிராந்திய விஷ்தரிப்பு நோக்கங்களுக்கு புலிகள் எதிரானபடியால் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதே. இவர்கள் இருவராலும் ஏற்படும் பாதிப்பு சமமானதே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.