Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு

Featured Replies

இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு

இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணிய வை க்க முடியாது, எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகளினால் நாம் அதிருப்தியடைந் துள்ளளோம் நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள் மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர்.

அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று நாள் வியத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்கவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே சோமவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி கட்சி காரியாலயத்தில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகி சுமார் ஒரு மணித்தியாலயமாக இடம்பெற்றதுள்ளது. சந்திப்பு தொடர்பாக ஜே.வி.பி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இந்த சந்திப்பில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிகொண்டமை, அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. ஜப்பான் உள்ளுராட்சி நிறுவனங்களுக்காக அதிகாரம் பகிரப்பட்டுள்ள முறைமை, நாட்டின் இறையை பாதுகாப்பதற்காக ஜப்பான் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள முறையை, தேசிய பாதுகாப்பு நிதி மற்றும் வெளிவிவகார போன்றன மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இருப்பதை ஜப்பான் அரசாங்கத்தின் அரசியலமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஒளி நாடா மூலமாக தெளிவு படுத்தினார்.

அதற்கு மேலாக தேவையான நிதியுடன் நிர்வாக அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவதற்கு ஜே.வி.பி தயார் என்று சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் மற்றும் இதர நாடுகள் இலங்கைக்கு கூடுதலான நிதியுதவிகளை வழங்கிவருகின்றது இந்நிலையில் இலங்கையின் யதார்த்த நிலைமையினை கருத்தில் கொண்டு அந்த நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அகாசி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச, மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை பல்வேறான சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதுடன் அவற்றை அவ்வாறே நடைமுறைப்படுத்துகின்றது.

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை உயர்நீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான தீர்ப்புகளை வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணியவைக்க முடியாது எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகள் மூலமாக நாம் அதிருப்திகொண்டேயிருக்கின்ற

  • தொடங்கியவர்

"அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார்"

முன்னுக்கு மக்களை விட்டு பின்னின்று பலனடையும் அரசியல் குள்ளத்தனம். மக்கள் திரும்பி நின்று தாக்கும் காலம் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு

ஜப்பானில் இருக்கும் ஜே வி பி காரியாலயத்தை முதல் முடணும். :lol:

ஜேவிபி காசினை கொள்ளையடிச்சு ஓடி ஒளிட்த பரதேசி கதைக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்கு வீரம் பேசும் ஜே.வி.பி தனது ஆதரவாளர்களில் இருந்து ஒரு 10,000 பேரை இலங்கை ராணுவத்தில் சேர்க்கலாமே ? அதைச் செய்யமுடியாது. கேட்டாலும் யாரும் இணைய மாட்டார்கள் என்று தெரியும்.

மக்கள் சாவதற்கு துணிந்து விட்டார்களாம். யார் இவர்களுக்குச் சொன்னது ? அதுசரி, சாதாரண மக்களே நாட்டுக்காகச் சாவதற்கு துணிந்து விட்டார்கள், ஆனால் சிங்களவனின் நாட்டைக் காக்கப் புறப்பட்ட ஜே.வி.பி அந்த மக்களின் வேட்டிக்குப் பின்னாலும் பாவாடைக்குப் பின்னாலும் ஒளின்சிருக்கப் போகுது ! நல்ல வேடிக்கை, இதையெல்லாத்தையும் கேட்டுக்கொண்டு இந்ச் சிங்கள்ச் சனம் தவறாமல் தேர்தலில இதுகளுக்கு குத்துதுகள்தானே ?!!!

இறமைக்காய் மரணிக்க தமிழ் மக்கள் இருக்கிறார்கள் எண்டு சொல்லி இருக்கிறாரோ...???? அதுக்கு பின்னாலை ஜேவீபி ..! அறிக்கை நல்லா இருக்கே..

கொலை செய்ய போறம் என்பதை இதைவிட வெளிப்படையாக சொல்ல முடியுமா என்ன.???

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.