Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவத்தின் பலமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவத்தின் பலமும்

-விதுரன்-

நாட்டில் முழு அளவில் பெரும் போர் வெடிக்கப்போகிறது. தைப்பொங்கலுக்கு மறுநாளுடன் போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வருகிறது. சமாதான முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் பலத்தில் உருவான போர்நிறுத்த உடன்பாடு இன்று இராணுவத்தினரின் பலத்தால் முடிவுக்கு வருகிறது. போர்நிறுத்த உடன்பாட்டை தொடரவும் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகளைத் தொடரவும் விடுதலைப் புலிகள் இறுதியாக விடுத்த கோரிக்கையையும் அரசு நிராகரித்துவிட்டது.

இதனால், இலங்கை அரசு முழு அளவில் போருக்குத் தயாராகிவிட்டது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்தி போருக்கான வரவு - செலவுத் திட்டத்தை அரசு பாராளுமன்றில் நிறைவேற்றிய போதே, அரசு போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகப்போவது உறுதியானது. அந்த எதிர்பார்ப்பை புதுவருடப் பிறப்புடன் அரசு நிறைவேற்றியது.

போர்நிறுத்த உடன்பாட்டில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் கையெழுத்திட்டதன் மூலம் அது அமுலுக்கு வந்தது. ஆனால், அதில் கையெழுத்திட்ட ஒரு தரப்பு அதிலிருந்து விலகினாலும் உடன்பாடு முடிவுக்கு வந்துவிடும் என்பது உடன்பாட்டின் பிரதான அம்சமாகும்.

உடன்பாட்டிலிருந்து விலகும் தரப்பு மற்றத் தரப்புக்கு இருவார (14 நாள்) கால அவகாம் வழங்க வேண்டும். அந்தக் கால அவகாசம் தைப்பொங்கலுக்கு மறுநாள் 16 ஆம் திகதியுடன் முடிவடைவதால் போர்நிறுத்த உடன்பாடு அன்றுடன் முடிவுக்கு வர போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினது பணியும் அன்றுடன் முடிவுக்கு வருகிறது.

போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து ஒருதலைப்பட்சமாக அரசு விலகியமையானது போருக்கான அழைப்பு மட்டுமல்லாது சமாதான முயற்சிகளுக்கும் தாங்கள் முற்றுப்புள்ளி வைப்பதை அரசு உணர்த்தியுள்ளது. எனினும், போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலக வேண்டாமெனவும் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகளைத் தொடருமாறும் விடுதலைப்புலிகள் விடுத்த அழைப்பை அரசு நிராகரித்துவிட்டது. இதனால், போர்நிறுத்த உடன்பாடு எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதும் அன்றுடன் சமாதான முயற்சிக்கு சாவுமணி அடிப்பதும் உறுதியாகிவிட்டது.

எனினும், உடையப்போகும் உடன்பாட்டை தொடர்ந்தும் பேண விடுதலைப்புலிகள் முற்படுகின்றனரென்றால், அவர்கள் சமாதான முயற்சியிலும் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்விலும் அக்கறை காட்டுவதை உணர்த்துகிறது. மாறாக புலிகள் உண்மையிலேயே பயங்கரவாதிகள் தானென்றால் போர்நிறுத்தத்தையோ சமாதான முயற்சிகளையோ அவர்கள் விரும்பமாட்டார்கள். புலிகளைப் பலவீனப்படுத்தவே இந்தப் போர்நிறுத்த உடன்பாடு கொண்டுவரப்பட்டது. உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வைக் காண கொண்டுவரப்பட்டதல்ல என்பதை அனைவரும் அறிவர்.

தற்போது தாங்கள் மிகவும் பலமாயிருப்பதாகக் கருதும் அரசும் படைத்தரப்பும் கிழக்கைப் போல் வடக்கிலும் பாரிய வெற்றியைப் பெற்றுவிட வேண்டுமென்பதற்காக, சமாதான முயற்சிகளையெல்லாம் கைவிட்டு முழு அளவில் போரைத் தொடர்வதற்காக போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகியுள்ளது.

ஆனால், 1997 முதல் 2001 வரை பல வெற்றிகளைப் பெற்ற விடுதலைப்புலிகளால் மேலும் பல வெற்றிகளை பெற்றிருக்க முடியும், மேலும் பல பிரதேசங்களை மீட்டிருக்கவும் முடியும். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்து சமாதான முயற்சிகளை முன்னெடுக்க சந்தர்ப்பமொன்று கேட்டபோது புலிகள் உடனடியாக அதற்கு இணங்கி போர்நிறுத்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

இன்றைய அரசு போல் புலிகள் அன்று நினைத்திருந்தால் அவர்கள் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு முன்வராது தொடர்ந்தும் தங்கள் பலத்தை நிரூபித்திருக்க முடியும். அது அவர்களுக்கு மேலும் பல வெற்றிகளை ஈட்டித் தந்திருக்கும். அவர்களுக்குள் பிளவுகூட வந்திருக்கமாட்டாது. ஆனாலும், அன்று அவர்கள் இராணுவ வெற்றிகளை விட சமாதான முயற்சிக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முற்பட்டனர்.

எனினும், சமாதான முயற்சிகளை முன்னெடுத்து இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வொன்றைக் காண முற்படாது சர்வதேச வலைப்பின்னலொன்றை அமைத்து புலிகளை முடக்கவும் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி, பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலத்தைக் கடத்தி புலிகளைப் பெரிதும் பலவீனமாக்கவும் ஐ.தே.க.வினர் முயன்றார்களே தவிர இனப்பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமானதொரு தீர்வைக் காண ஐ.தே.க. முன்வரவில்லை.

போர்நிறுத்த உடன்பாடு தங்களுக்கு எவ்வாறான பாதிப்பையெல்லாம் ஏற்படுத்தியதென்பதை உணர்ந்தும் புலிகள், போர்நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிக்கவும் நோர்வேயின் அனுசரணையூடாக பேச்சுக்களை தொடரவும் விருப்பம் தெரிவித்துள்ளதன் மூலம் சர்வதேச சமூகம் ஈழத் தமிழரின் போராட்ட நிலையை உணர்ந்து கொள்ளவேண்டும்.

புலிகள் பெரும் பலத்தோடு இருந்தபோது போர்நிறுத்த உடன்பாட்டுக்கு முன்வந்ததும், தாங்கள் பெரும் பலத்தோடு இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு உணரும் போது அவர்கள் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகுவதும் எவ்வாறான நிலைமைகளைத் தோற்றுவிக்குமென்பதையும், உண்மையான சமாதானத்திற்கு விரும்புபவர்கள் யார், இராணுவ ரீதியில் பிரச்சினைக்கு தீர்வைக் காண முற்படுபவர்கள் யாரென்பதையும் சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளதா என்பதே தமிழ் மக்களின் கேள்வியாகும்.

உண்மையிலேயே புலிகள் பயங்கரவாத அமைப்பென்றால் அவர்கள் போர்நிறுத்தத்தையோ சமாதான முயற்சிகளையோ விரும்பமாட்டார்கள். யுத்தத்தையே விரும்புவார்கள். ஆனால், ஜனநாயக அரசெனக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசோ, சமாதான முயற்சிக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறது. சமாதானச் சூழலை நிராகரித்து பெரும் யுத்தச் சூழலைத் தோற்றுவித்தது. இன்று போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகி யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறது.

இந்த வருடத்துடன் தான் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளதால் அதற்கு முன் புலிகளை முற்றாக அழித்து அவர்கள் வசமிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்றப்போவதாகவும் இந்தப் போரை அடுத்த தளபதிக்கு விட்டுவைக்கப்போவதில்லையென்

"போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் இராணுவத்தின் பலமும்"

ஒரு சின்ன மாற்றம்.

"போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்கு கொண்டுவந்த புலிகளது இராஜதந்திரமும்."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"

ஒரு சின்ன மாற்றம்.

"போர் நிறுத்தத்தை உருவாக்கிய புலிகளின் பலமும் அதனை முடிவுக்கு கொண்டுவந்த புலிகளது இராஜதந்திரமும்."

:lol::D:)

:lol::D:)

இதில் விழிபிதுங்குவதற்கு என்ன இருக்கிறது? தமிழர்தரப்பின் இராஜதந்திர நகர்வுகள், அதுவும் உள்நாட்டு நகர்வு, இதில் முக்கிய பங்காற்றியுள்ளது. பின்வாங்குதல், மேலும் பின்வாங்குதல், வெற்றியென்ற பிரமையை உண்டுபண்ணுதல், இவைகளால் ஏமாற்றமடைந்த அரசு வலைக்குள் சிக்குண்டு, சர்வதேசத்தின் கண்டனங்களுக்கும்,எச்சரிக்கை

அப்ப சிறீலங்கா உடன்படிக்கையால் வெளியேறினதுக்கும் புலிகள் தான் காரணம் என்றியள். எல்லாரும் சேர்ந்து புலிகளை அழிக்கிறது தான் சரி போல கிடக்கு.

சின்ன மாற்றத்துக்காலை பெரிய செய்திகள் எல்லாம் சொல்லுறார் கேளுங்கோ :lol:

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதில் விழிபிதுங்குவதற்கு என்ன இருக்கிறது? தமிழர்தரப்பின் இராஜதந்திர நகர்வுகள், அதுவும் உள்நாட்டு நகர்வு, இதில் முக்கிய பங்காற்றியுள்ளது. பின்வாங்குதல், மேலும் பின்வாங்குதல், வெற்றியென்ற பிரமையை உண்டுபண்ணுதல், இவைகளால் ஏமாற்றமடைந்த அரசு வலைக்குள் சிக்குண்டு, சர்வதேசத்தின் கண்டனங்களுக்கும்,எச்சரிக்கை

அப்ப சிறீலங்கா உடன்படிக்கையால் வெளியேறினதுக்கும் புலிகள் தான் காரணம் என்றியள். எல்லாரும் சேர்ந்து புலிகளை அழிக்கிறது தான் சரி போல கிடக்கு.

சின்ன மாற்றத்துக்காலை பெரிய செய்திகள் எல்லாம் சொல்லுறார் கேளுங்கோ :(

:D:(:(

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(

:(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.