Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டதென்கின்றன அவுஸ்திரேலிய பத்திரிகைகள்

[22 - January - 2008] [Font Size - A - A - A]

பெர்த் டெஸ்டில் வெற்றி வாகை சூடிய இளம் இந்திய அணியை அவுஸ்திரேலிய பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியுள்ளன.

இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த இமாலய வெற்றி என பாராட்டியுள்ளன. அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா வெல்ல, முக்கியமான மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இப்போட்டியில் இர்பான் பதான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் அடங்கிய `வேகக் கூட்டணி' சாதித்துக் காட்டியது. இவர்களது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டியில் தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலிய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. `கப்டன் பொண்டிங் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் மாறிவிட்டது', `பொற்கால வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி' என பல்வேறு தலைப்புகளில் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரத்தில், இந்திய வீரர்களின் துடிப்பான செயல்பாட்டையும் பாராட்டியுள்ளன.

இது தொடர்பாக பிரபல `டெய்லி ரெலிகிராப்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்; அவுஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு இந்தியா `அடி' கொடுத்துள்ளது. இனி கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணி என்று உரிமை கொண்டாட முடியாது. பொற்காலம் அநேகமாக முடிந்து விட்டது. நாம் திட்டினால், அதற்கு பதிலடி தரக்கூடிய அணிகள் இருப்பதால் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படலாம். சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய கோட்டைக் கதவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பெர்த்தில் தடுப்புகள் அனைத்தும் தகர்ந்து விட்டன. வோர்ன், மெக்ராத், ஜஸ்ரின் லாங்கர் ஓய்வால் அணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிகரான வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஹைடனும் இடம் பெறாத பட்சத்தில் நிலைமை பரிதாபமாகி விடுகிறது. எனவே, சவாலான எதிர்காலம் பொண்டிங்கிற்கு காத்திருக்கிறது.

கும்பிளே தலைமையிலான அணி அசத்தலாக விளையாடியது. அவுஸ்திரேலியாவை கண்டு துளியும் பயப்படாமல் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்பட்ட இந்திய அணியைப் பார்த்து கிரிக்கெட் உலகமே வியக்கிறது. அவுஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற மிக இளம் வயது (24 வயது) வேகப்பந்துவீச்சாளர் ஷோன் றைற்தான். இவரை விட வயதில் குறைந்த இந்திய `இளம் வேகப்படை' தூள் கிளப்பியது. இவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். குறிப்பாக இர்பான் பதான் தனிநபராக அவுஸ்திரேலிய அணியை மிரட்டியது பிரமிக்க வைத்தது.

மற்றொரு பத்திரிகையான `தி ஏஜ்' வெளியிட்ட செய்தி, அவுஸ்திரேலியா ஒன்றும் வீழ்த்த முடியாத அணி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்டன் பொண்டிங் அதிர்ந்து போயுள்ளார். இவர் தொட்டதெல்லாம் வெற்றி என்ற காலம் மாறிவிட்டது. இஷாந்த் சர்மா போன்ற இளம் வீரரிடம் தடுமாறுகிறார். இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் பெர்த்தில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். ஆனாலும், விரைவாக தங்களை பக்குவப்படுத்திக் கொண்ட இவர்கள், அவுஸ்திரேலிய வீரர்களை விட சிறப்பாக பந்துவீசினார்கள். தோல்வியால் அவுஸ்திரேலிய அணி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது அணியை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும்.

சிட்னி மோர்னிங் ஹெரால்ட் வெளியிட்ட செய்தியில், டெஸ்ட் அரங்கில் அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிநடை இரண்டாவது முறையாக இந்திய அணியால் தடுக்கப்பட்டுள்ளது. 2001 இல் கொல்கத்தா டெஸ்டில் இந்தியாவின் துடுப்பாட்டம் வினையாக அமைந்தது. இம்முறை பந்துவீச்சு சிக்கலை ஏற்படுத்தியது. இப்படி இந்திய அணி பாராட்டு மழையில் நனைந்தாலும் சில பத்திரிகைகள் வழக்கம்போல் அவுஸ்திரேலியாவின் வேலையைக் காட்டியுள்ளன. சிட்னி டெஸ்ட் சர்ச்சையில் `பணம் படைத்த' இந்திய கிரிக்கெட் சபையின் பக்கம் ஐ.சி.சி. சாய்ந்துவிட்டது. பெர்த் டெஸ்ட் வெற்றியில் இந்திய அணியின் 11 வீரர்கள் தவிர களத்திற்கு வெளியே இருந்த சிலருக்கும் பங்குண்டு. எனவே, போட்டிக்கான சம்பளத்தை ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளுடன் இந்திய வீரர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தேவையில்லாமல் குமுறியுள்ளன.

இதேநேரம், அவுஸ்திரேலியாவின் தோல்விக்கு புதுக் காரணம் சொல்லப்படுகிறது. இது பற்றி `கூரியர் மெயில்' பத்திரிகையில் பிரபல விமர்சகர் மைக் கோல்மன் கூறியிருப்பது;

சிட்னி டெஸ்ட் சர்ச்சையைத் தொடர்ந்து விமர்சனங்கள் எழ, அவுஸ்திரேலிய அணி நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. போராடும் குணம் கொண்ட வீரரை நாகரிகமாக நடந்து கொள்ளச் சொன்னால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும். ஒரு வார கால இடைவெளியில் ஆக்ரோஷம், கர்வம், போராடும் குணம், தன்னம்பிக்கையை கைவிட்டு, நாகரிகமாக நல்ல அணியாக மாறியது. இந்த மாற்றம் தோல்விப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கலாமெனத் தெரிவித்துள்ளார்.

thinakural.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெர்த் டெஸ்ட் வெற்றியில் இந்திய அணியின் 11 வீரர்கள் தவிர களத்திற்கு வெளியே இருந்த சிலருக்கும் பங்குண்டு. எனவே, போட்டிக்கான சம்பளத்தை ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளுடன் இந்திய வீரர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தேவையில்லாமல் குமுறியுள்ளன.

சிட்னி டெஸ்டில இவங்க எப்டி வாங்குன சம்பளத்தை எப்பட் ஸ்டீவ் பக்னர் மற்றும் பிற ஆட்ட நடுவர்களுடன் எப்படி பகிர்ந்து கொண்டனர் என்று சொன்னால் இந்திய வீரர்களுக்கு வசதியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.