Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் லூய்ஸ் ஆர்பருக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்திற்கு முன்பாக இன்று ஜே.வி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்கொளுப்பு என்று இதைத்தானே சொல்வது.

வெளிநாட்டுதவி ஒரு இரண்டு நாளைக்கு படலையைச் சாத்தினாலே கோவணவன்சாக்களின் கு- - - காஞ்சுபோம்!

அப்படி இருக்கவே திமிரைப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பாதுகாக்கும் முயற்சி தொடர்ந்தால் ஐ.நா.அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் ஆர்ப்பாட்டத்தையடுத்து - விமல் வீரவன்ச எச்சரிக்கை

வீரகேசரி இணையம் - சர்வதேச சட்டங்களை முதன்மைப்படுத்தி எமது நாட்டை பிரிக்கும் செயற்பாட்டிலும் விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் முயற்சியிலும் ஐ.நா. வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் தொடர்ந்தும் ஈடுபட்டால் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்கள் பல இலட்சக்கணக்கான மக்களால் முற்றுகையிடப்படும் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான கருத்துக்களை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிடுவதாகவும், புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டி கொழும்பு பௌத்த லோக மாவத்தையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக ஜே.வி.பி. நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது.

நேற்றுக்காலை 10.15 மணி முதல் 10.45 மணிவரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜே.வி.பி. யினர் கலந்து கொண்டனர்.

ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இவர்கள் அவருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தையடுத்து கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச மேலும் கூறியதாவது: இலங்கையில் படையினர் வன்னி மீதான தாக்குதலை மேற்கொண்டால் பொதுமக்கள் பலியானவர்கள் இதற்கான பொறுப்பை தலைவர்களும், படைத்தளபதிகளுமே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் யுத்த குற்றச்சாட்டுக்களுக்கான சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தப்படுவார்களென ஆர்பர் தெரிவித்துள்ளார்.

இது எமது தலைவர்களையும் படையினரையும் அச்சுறுத்தும் வெளிப்பாடாகும், நாட்டை பாதுகாக்க படையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு புலிகளுக்கு முழுமையான தோல்வியை வழங்க தயாராகும் போதே இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தோல்வியிலிருந்து புலிகளை பாதுகாத்து இலங்கையில் பிரிவினையை உருவாக்கும் நோக்கிலேயே இச் சதித்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறான கருத்துக்களுக்கு நாம் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை. இது சர்வதேச பயங்கரவாதமாகும். எமது சடலங்கள் மீதுதான் எம் தலைவர்களையும், படைத்தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் கனவு பலிக்கும். ஐ.நா. உருவாக்கப்பட்டதற்கு காரணம் உலக நாடுகளின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகும். ஆனால், இன்று நாடுகளை பிரிக்கும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அமைப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, மாற வேண்டும்.

ஆர்பரின் இந்நடவடிக்கைகள் தொடருமானால், ஐ.நா. அலுவலகங்களை பல இலட்சக்கணக்கானோர் முற்றுகையிடுவார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி. எம்.பி.க்களான விஜித ஹேரத் சுனில் ??? ரத்னாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடியான ஆர்பரே இலங்கை மீது கை வையாதே, இலங்கை ????அல்ல நல்ல பாடம் புகட்டுவோம், புலிகளை பாதுகாக்க ஆர்பரே இலங்கை மீது கை வையாதே, என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஒரு இனத்தின் பாதுகாப்பையும் தேவையையும் கருத்திற் கொண்டு நீதியின் வழி நடத்தும் போராட்டம் வெற்றிபெற வேண்டும். அவலங்களையே தமது நாளாந்த வாழ்வினதாகக் கொண்ட ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு மனிதாபிமானத் தன்மை கொண்டவர்கள் உள்ள படியினால்தான் உலகத்தில் சிறிதளவேனும் சமாதானம் நிலவுகிறது. அவ்வாறான இடங்களில் உள்ள மக்கள் அவலங்கள் நடைபெறும் இடங்களில் வாழும் மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். அவர சொல்லித்தான் குரல் கொடுக்கின்றார்கள், இவர் சொல்லித்தான் இது நடக்கிறது, என்ற வியாக்கியானங்களுக்குள் விழ விரும்பவில்லை.

அப்படியிருந்தும் தமிழரின் பாதுகாப்பு மனிதவுரிமை பற்றிப் பேசும் ஒருவருக்கு எதிராக புலிகளைப் பாதுகாக்கிறார்கள் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துவது, தமிழருக்கு எப்போதும் அவலம் மட்டுமே அதனை யாரும் கேட்கக் கூடாது. என்பதுபோலுள்ளது.

இந்த அவலத்தின் தன்மையை எதிர்க் கூச்சல் போடுபவர்களுக்கு புரியவைத்தால் லூயிஸ. ஆர்பரை இவர்களுக்கும் தேவைப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு எதற்கு தவணை???

இதுகளை உடனே செய்யணும் திருவாளர் விமல வீர????சிங்க....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.