Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து இரத்தக்காசு வழங்காதீர் -பிரித்தானிய தமிழர் பேரவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 24-01-2008 15:59 மணி தமிழீழம் [மதுசன்]

சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து இரத்தக்காசு வழங்காதீர் -பிரித்தானிய தமிழர் பேரவை.சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு இரத்தக்காசு வழங்காதீர் என பிரித்தானியாவாழ் மற்றும் ஐரோப்பா வாழ் மக்களிற்கு பிரித்தானியா தமிழர் பேரவை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிறிலங்கா விமானசேவையில் கொழும்புக்கும் மற்றைய இடங்களுக்கும் பயணம் செய்வதைப் புறக்கணிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்களிடை பரப்புரை ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. பிரித்தானியத் தமிழர் பேரவை 85 தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். பிரித்தானியாவில் 300,000 இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 30,000 பேர் அளவில் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்குத் தங்களின் உறவிளர்கiளைச் சந்திக்கச் சென்று வருகிறார்களென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இலண்டனில் இருந்து பணயம் செய்பவர்களால் மட்டும் சிறிலங்காவுக்கு சுமார் 12 மில்லியன் பவுண்ஸ் வெளிநாட்டுப் நாணய வருமானமாக கிடைக்க அது சிறிலங்காவின் யுத்த நிதியில் சேர்கிறது.

சிறிலங்கா அரசு அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கிறது. வேறுபட்ட வரலாற்றைக் கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் மேல் மேலாண்மை செய்வதற்காக கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக இராணுவ யுத்தத்தை தமிழர்கள் மேல் நடாத்திக் கொண்டிருக்கிறது. இந்த மனச்சாட்சியில்லாத யுத்தத்தால் 70,000 தமிழர்கள் சாட்சியங்களற்ற நிலையில் கொன்றழிக்கப்பட்டுள்ளதுமல்ல

ஒவ்வொருவரும் கடைமை உணர்வுடனும்,சிங்கள அரசின் கோரப்பிடியில் அகப்பட்டு பரிதவிக்கும் எங்கள் தாய் தந்தை,அப்பாவி சகோதர சகோதரிகளின் நினைப்புடனும்,மண் மீது கொண்ட பாசத்துடனும் இருந்தால் ,

எந்த விதத்திலாவது இப்போது நடைபெறும் யுத்தத்தில் பங்கேற்க்க வேண்டும்.ஆயுதம் ஏந்தி தான் நாங்கள் போராட்டத்தில் பங்கு பற்றவேண்டும் என்று இல்லை.மாறாக இது போன்ற செய்கைகளால் எங்களை அறியாமல் ஸ்ரீலங்கா அரசுக்கு கொடுக்கும் பணங்களை முற்றாக நிறுத்த முயல வேண்டும்.இப்படி ஒவ்வொருவரும் சிந்தித்து பொருளாதார ரீதியில் ஸ்ரீலங்காவை எந்த எந்த வழியில் முடக்க முடியுமோ அந்த வழியில் எல்லாம் முடக்க வேண்டும்.

"இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்"

  • கருத்துக்கள உறவுகள்

பா. நடேசன் சொன்னது போல யுத்தம் வெளிநாட்டு கடனிலைதான் நடத்தப்படுகுது.

தாயக உறவுகளின் செலவீனம் தான் 200% அதிகரித்திருக்கிறது. ஒரு காஸ் சிலிண்டரின் விலை ஏறத்தாழ 1400/=

ஒரு இறாத்தல் பாண் 70/=

தினக்கூலி 250/= தொடக்கம் 400/= வரை. அப்ப எப்படி மக்கள் சீவிப்பினம்.

சிங்களவர்களுக்கு தொழில் இழப்பு என்றில்லை. ஆனால் யுத்தம் நடக்கும் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தொழிலை இழந்து அகதி முகாம்களில வருவாய் இன்றி வாழினம். அரச படைகள் ஆக்கிரமிச்ச பகுதிகளில் கூட மக்கள் தொழில் இன்றி வாழினம். இப்படி இருக்குது தாயகத்தில நிலை..!

லண்டனில பிரிட்டிஷ் அரசாங்க வரிப்பணத்தில வங்கிக் கடனில குடித்தனம் நடத்திற தமிழர்களுக்கு உழைப்பின் சுமை பொருள் விலையேற்றத்தின் பாதிப்புத் தெரியாது...! சாதாரண வறிய பொதுமக்களின் நிலையை எண்ணிப் பாருங்கோ..???!

தாயக மக்களின் அதிகரித்த செலவை ஈடு செய்யப் பணம் எங்க இருந்து போகுது. வெளிநாட்டில இருந்துதான் போகுது. அரசுக்கு கணிசமான அளவு அந்நியச் செலவாணி அதில கிடைக்கிறது. அதற்காக காசு அனுப்புறதையும்... லண்டனில அரச வரிப்பணத்தில வாழுறவை நிப்பாட்டச் சொன்னா... தாயகத்தில மக்கள் எப்படியாம் வாழ்வினம்..????! :(:lol:

சிறீலங்காவின் பொருளாதாரத்தில தமிழர்களும் தங்கி இருக்கேக்க.. அதன் பாதிப்பு தமிழர்களையும் பாதிக்கும். இங்க ஒரு சிக்கல் தன்மை இருக்கிறது. இதை உணருற மாதிரித் தெரியேல்ல.

யுத்தத்தைத் தொடர சிறீலங்காவுக்கு உதவிறவை உதுகளையும் கவனத்தில கொண்டுதான் உதவுகினம்..! சிறீலங்கா சொந்தப் பொருளாதாரத்தை மட்டும் நம்பி யுத்தம் நடத்தல்ல...!

புறக்கணிக்கச் சொல்லுறது சுலபம். அதன் பாதிப்புக்களை சந்திக்கிற அப்பாவி தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன் வைச்சுப் போட்டு.. உதுகளைச் சொல்லுறியள்.. என்பதையும் சிந்தியுங்கோ...???! :lol::):)

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவோன் கருத்தில் இது ஒரு முக்கியமான விடயந்தான்.

தாயக மக்களின் அதிகரித்த செலவை ஈடு செய்யப் பணம் எங்க இருந்து போகுது. வெளிநாட்டில இருந்துதான் போகுது. அரசுக்கு கணிசமான அளவு அந்நியச் செலவாணி அதில கிடைக்கிறது. அதற்காக காசு அனுப்புறதையும்... லண்டனில அரச வரிப்பணத்தில வாழுறவை நிப்பாட்டச் சொன்னா... தாயகத்தில மக்கள் எப்படியாம் வாழ்வினம்..????!

வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு அந்நியச் செலாவணி இந்தவகையில் கிடைக்கிறது. இது அங்குள்ள தமிழ் உறவுகளுக்கு இன்றியமையாத பொருளாதார வழி. இதற்கான மாற்று வழியை ஒவ்வொரு உறவுகளும் சிந்தித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.