Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாகரன் சிகிச்சைக்கு வரலாம் என்ற தகவலால் பெரும் பரபரப்பு

Featured Replies

வீரகேசரி இணையம் - புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு வரலாம் என்று தகவல் வெளியானமையினால் இந்தியப்பொலிசார் உஷார்படுத்தப்பட்டனர். காயத்துடன் யாராவது சிகிச்சைக்காக வந்தால் அறிவிக்குமாறும் கியூ பிரிவு பொலிசார் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற்ற இலங்கை அரசு புலிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாகவும், அவசரசிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் காட்டிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு தப்பி வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்கள் போலிசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவையையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக அதி நவீன மருத்துவ வசதிகள் கோவையில் உள்ளன. இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள், கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இதனால் புலிகளின் தலைவர் பிரபாகரன் கோவைக்கு இரகசியமாக அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வாய்ப்பு இருப்பதாக, கியூ பிரிவு பொலிசுக்கு தவகல் கிடைத்துள்ளது. புலி ஆதரவாளர்கள் கோவை, திருப்பூரில் அதிகம் இருப்பதால் உளவுத் தகவலை உதாசீனப்படுத்தாமல் பொலிசார் உஷார் அடைந்துள்ளனர்.

பொலிசார் கோவையில் அதி நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனைகள் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. டாக்டர்களை நேரில் சந்தித்த பொலிஸ் அதிகாரிகள், துப்பாக்கி குண்டு அல்லது வெடி குண்டு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்கு வருவோர் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். சந்தேகத்துக்கு உரிய நபர் சிகிச்சை பெற வந்தால் முகவரி சான்றுக்கான ஆதாரம் பெற்று, அதை எங்களிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் மொபைல் போன் எண்களும் மருத்துவமனை நிர்வாகங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொலிசார் அதிகாரி ஒருவர் கூறியதாவது : புலித்தலைவர் பிரபகாரனோ அல்லது அவரை சார்ந்தவர்களோ சிகிச்சைக்காக கோவை வர வாய்ப்பே இல்லை என முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது . வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் செயல்படும் யு.என்.எல்.எப் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் டாங்கோ இரு ஆண்டுகளுக்கு முன் கோவையில் தனியார் மருத்துவமனையில் இரகசிய சிசிச்சை பெற்ற போது கைது செய்யப்பட்டார். கைதாகும் வரை இவர் யார் என்றே பலருக்கும் தெரியாது மிலிட்டரி இன்டலிஜென்ஸ் அளித்த உளவுத்தகவல் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறான சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனைகளை உஷார்படுத்தியிருக்கின்றோம் என்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடித்தான் இப்பிடி புத்திசாலித் தனமாய் சிந்திக்கிறங்களோ?

நான் நினைக்கிறன் தமிழ் சினிமா பாத்துப் பாத்து இவங்களுக்கு அறிவு கடுமையா வளந்திற்றுது போல.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றுமில்லை, இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமைச் சீவியம் செய்து வாழவேண்டும் என்ற தமிழ்நாட்டுத் தமிழனின் அடங்காத அவாதான் அவர்களை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுது..

அப்பிடி எண்டாலும் இப்ப கண்ணி வெடிகள் வேற புதைச்சிருக்கே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: உங்களுக்கு ரொம்பவும்தான் அக்கறை !

கடலுக்கை கண்ணி வெடிகள் புதைச்சைவையோ...??:unsure: இது செமகடியாக இல்லையா இருக்கு... :o:icon_mrgreen:

புதைச்ச கண்ணி வெடி புலிகளும் தமிழரும் போனால் மட்டும்தான் வெடிக்குமோ இல்லை கடற்படை போனாலும் வெடிக்குமோ...??

இல்லை ஏன் கேக்கிறன் எண்டா. யாராவது அந்த பக்கமாய் போனால் கறுமம் துரத்தி கொண்டு போய் பிடிக்கவும் ஏலாது..

Edited by தயா

புதைச்ச கண்ணி வெடி எமது மக்களுக்காக எண்டு நினைக்கிறன்

அடிக்கடி இந்தியாவிற்கு இடம்பெயர்வதால் செய்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்கை கண்ணி வெடிகள் புதைச்சைவையோ...?? இது செமகடியாக இல்லையா இருக்கு...

புதைச்ச கண்ணி வெடி புலிகளும் தமிழரும் போனால் மட்டும்தான் வெடிக்குமோ இல்லை கடற்படை போனாலும் வெடிக்குமோ...??

இல்லை ஏன் கேக்கிறன் எண்டா. யாராவது அந்த பக்கமாய் போனால் கறுமம் துரத்தி கொண்டு போய் பிடிக்கவும் ஏலாது..

புதைச்ச கண்ணி வெடி எமது மக்களுக்காக எண்டு நினைக்கிறன்

அடிக்கடி இந்தியாவிற்கு இடம்பெயர்வதால் செய்திருக்கலாம்

அல்லது இதில் எதுவுமேயில்லாது

மக்களையும்

போராளிகளையும் பயப்படுத்துவற்காகவும் இருக்கலாம்???

அல்லது இதில் எதுவுமேயில்லாது

மக்களையும்

போராளிகளையும் பயப்படுத்துவற்காகவும் இருக்கலாம்???

அப்பிடி எண்டாலும் கண்ணி வெடியை கடலுக்கை புதைக்க ஏலாது.. வேணும் எண்டா மிதக்க விடலாம்.. :lol:

அப்பிடி மிதக்க விட்டாலும் அது காத்து வளத்துக்கும் நீர் ஓட்டத்துக்கும் தக்கவாறு வட இந்தியாவுக்கு கூட பயணம் செய்யலாம்...

ஆளம் குறைந்த இடத்திலை கடல்கண்ணி வெடியை மிதக்க விட்டு நங்கூரம் வேணும் எண்டா போட்டு விடலாம்... எதுக்கும் இலங்கை படை கடலிலை மீன் பிடிக்கிற இந்திய மீனவர்களை பயமுறுத்த சொன்ன கதைகளை எல்லாம் எதுக்கு சும்மா பெருசா எடுக்கிறீயள்...??

Edited by தயா

நல்லாத்தான் உளவுறாங்கள். அப்படியில்ல எண்டு வந்தாப்போல சிகிச்ச கொடுக்க மாட்டினமோ? ஒரு வேள பாதுகாப்பா கூட்டிக்கொண்டு போய் சிகிச்ச கொடுக்கலாமெண்டுதான் நிக்கிறாங்களோ தெரியாது. ஒண்டுமட்டும் உண்ம இந்திய அரசாங்கம் செய்யிறத தமிழ்நாட்டு பொலிசு செய்யிறதில்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.