Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்தம்: ஒரு பொறியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தம்: ஒரு பொறியா?

[27 - January - 2008] [Font Size - A - A - A]

-விதுரன்-

இலங்கைப் பிரச்சினைக்கு புதுவடிவம் கொடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ முனைகிறார். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட யோசனையொன்றை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வர முயல்கிறார். தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் ஏமாற்ற முயலும் அவரது நாடகத்திற்கு சில தமிழ் அமைப்புகளை துணைக்கிழுத்துள்ளார்.

போர்நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த மறுநாளே அரசு தீர்வு யோசனை குறித்து பெரும் ஆரவாரம் செய்தது. போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து அரசு விலகியதால் நாட்டில் பெரும் இரத்தக்களரி ஏற்படப்போவதாக உலக நாடுகள் கடுமையாக எச்சரித்த நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து விட்டதாகவும் இதனைத் தமிழ்த்தரப்பு நிராகரித்தால் அதனால் ஏற்படப்போகும் இரத்தக் களரிக்கு அவர்களே காரணமெனவும் கூற அரசு முற்படுகிறது.

போர்நிறுத்தத்திலிருந்து அரசு விலகியது அரசியல் தீர்வுக்காக அல்ல என்பது உலகமறிந்த விடயம். ஆனால், போர் நிறுத்தத்திலிருந்து விலகியதன் மூலம் விடுதலைப்புலிகளையும் அவர்களது ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஒதுக்கிவிட்டு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மூலம், உருப்படாத திட்டமொன்றை தீர்வு யோசனையாக அமுல்படுத்த அரசு முனைகிறது.

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பதற்காக மிதவாதத் தமிழ் தலைவர்கள் முன் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதாக அரசு கூறுகின்ற போதும், பயங்கரவாதிகளெனக் கூறுவோரையே தமிழ் மக்கள் முற்று முழுதாக ஆதரிப்பதும் அரசு கூறும் மாற்றுக் கருத்துள்ள மிதவாதத் தலைவர்கள் தமிழ் மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளதும், அரசின் இந்தத் தீர்வு யோசனையை தமிழ் மக்கள் முழுமையாக நிராகரித்து விடுவரென்பதையே வெளிப்படுத்துகிறது.

போர்நிறுத்த உடன்பாடு விடுதலைப்புலிகளுக்கு ஒரு பொறியாகவேயிருந்தது.ஆனாலும், போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகக் கூடாதென்பதில் புலிகள் உறுதியாயிருந்தனர். இந்த உடன்பாடு மூலம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியாவிட்டாலும் ஈழத் தமிழரின் போராட்டத்திற்கு போர்நிறுத்த உடன்பாடூடாக சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டுமென்பதில் புலிகள் உறுதியாகவிருந்தனர்.

இலங்கையில் யுத்தத்தை விரும்பாத சர்வதேச சமூகம் போர்நிறுத்த உடன்பாட்டை விரும்பியது. போர்நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் அனுசரணையை புலிகள் விரும்பினர். ஆனால், சர்வதேச சமூகத்தின் தலையீடு, இப்பிரச்சினை மூலம் இப்பிராந்தியத்திற்குள் அதிகரிப்பதை இலங்கையை விட இந்தியா விரும்பவில்லை.

போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கும் வரை இப்பிரச்சினையில் தூர விலகியிருக்க வேண்டுமென்பதுடன் மேற்குலக நாடுகளின் தலையீடு இப்பிராந்தியத்திற்குள் தீவிரமடைந்து விடுமென்பதையும் இந்தியா உணர்ந்தது. இதனால் தான் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலகுவதற்கு இந்தியா பின்னணியிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

போர்நிறுத்த உடன்பாடு இல்லாது போனால் நோர்வேயின் அனுசரணையும் இல்லாதுபோகும். சர்வதேச சமூகத்தின் தலையீடும் தவிர்க்கப்பட்டுவிடும். நோர்வேயின் அனுசரணையிருந்தால் இரு தரப்பும் நேரடியாகப் பேசவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வாக அரசினால் முன்வைக்கப்படும் யோசனை பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும். போர்நிறுத்த உடன்பாட்டின் மறுதரப்பான விடுதலைப்புலிகளுடன் இது குறித்து பேசவேண்டும். ஆனால், உருப்படாத எந்த யோசனையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென்ப

பொறிகளை உடைப்பதும் தடைகளைக் கடப்பதும் ஈழப்போராட்டத்தின் வரலாற்றுப்பதிவுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.