Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் - ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்

bbc.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிதிலமடைந்து போன எமது உறவுகள் ஒருவழியாக மீள்சீரமைக்கப்பட இது உதவும் என எதிர்பார்க்கலாம். இப்படியான சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பு வலுவாக பயன்படுத்தி முசுலீம்களையும் எம்முடன் இணைக்க வேன்டும்.

சிங்களவன் எம்மை எப்படி நடத்துரானோ அப்படி நாம் முசுலீம்களை நடத்தக்கூடாது.

இரு பக்க தவறுகளும் மறக்கப்பட்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை கட்டி எழுப்ப பட வேன்டும்.

இரு பக்க தவறுகளும் மறக்கப்பட்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை கட்டி எழுப்ப பட வேன்டும்.

சொல்லுவது இலகு, செய்வது கடினம்!

தவறுகள் மறக்கப்படுவதோ அல்லது மறைக்கப்படுவதோ பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்பாது.

தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

நோர்வே போல ஒருதரப்பு தவறிழைக்கும் போது இருதரப்பையும் கண்டிப்பது ஈற்றில் பிளவை மேலும் வளர்க்கவே உதவும்.

யார் யார் என்ன என்ன தப்பு செய்தார்களோ அவை உடனுக்குடன் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட வேண்டும்.

உதாரணமாக முஸ்லீம்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அப்படி ஏற்றுக் கொண்டால் தானே எதிர்காலத்தில் திருத்த முடியும்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியல் மூலம்ல் ஒரு இஸ்லாமியரை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்துள்ளது நல்ல ஒரு விடயம்.

இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் நிலவும் பகையுணர்வை தணிப்பதற்கு இது பயன்படட்டும்.

ஆனால் முஸ்லீம்களை மீண்டும் யாழ் குடாவில் குடியேற்றுகின்ற விடயம் தற்பொழுது உள்ள நிலையில் சாத்தியம் இல்லை.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை யாழ் குடாவை விட்டு வெளியேறும்படி கேட்கின்ற பொழுது, முஸ்லீம் மக்களை அங்கே சென்று குடியமருங்கள் என்று சொல்ல முடியாது.

யாழ் குடா மீட்கப்பட்ட பின்பே யாழ் குடாவை விட்டு வெளியேறிய அனைவரும் அங்கு மீண்டும் குடியமர்வதற்கு சாதகமான நிலை தோன்றும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முஸ்லிம் மக்களும் யாழில் போயிருக்கட்டுமே? எது நடந்தாலும் தமிழ்மக்களுடன் ஒத்தது தானே.அதெப்படி முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம். தமிழர்களுக்கு ஒரு நியாயம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் முஸ்லிம் மக்களும் யாழில் போயிருக்கட்டுமே? எது நடந்தாலும் தமிழ்மக்களுடன் ஒத்தது தானே.அதெப்படி முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம். தமிழர்களுக்கு ஒரு நியாயம்?

அப்படியென்றால் புலிகள் செய்தது தவறு என்று சொல்கின்றீர்களா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(tamillinux @ Jan 29 2008, 05:29 AM)

அப்படியென்றால் புலிகள் செய்தது தவறு என்று சொல்கின்றீர்களா??

இல்லையே. எதோ ஒரு காரணத்துக்காக முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து அனுப்பப்பட்டார்கள்.அம்மக்கள?? பூர்வீகமாக வாழ்ந்த இடத்துக்கு திருப்பி அழைப்பதில் என்ன பிழை?.பேச்சுவார்த்தையின் போது தலைவர் அம்மக்களை திருப்பி அழைப்பதாக தானே உறுதி கூறியிருந்தார்.

Edited by nunavilan

அப்படியென்றால் புலிகள் செய்தது தவறு என்று சொல்கின்றீர்களா??

புலிகளே அதை தப்பு என்று கூறி மன்னிப்பு கேட்டதாககத்தானே இந்த முஸ்லீம் பா.ஊ கூறுகின்றார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேச்சுவார்த்தையின் போது தலைவர் அம்மக்களை திருப்பி அழைப்பதாக தானே உறுதி கூறியிருந்தார்.

அப்படியா. ஆனால் இப்போ சிறிலங்கா செய்வது ஈழத் தமிழருக்கு சார்பாக இருக்கும் என்று கருதுவது தப்பு.

கருணா விடயமே இதற்குதாரணம்.

புலிகளே அதை தப்பு என்று கூறி மன்னிப்பு கேட்டதாககத்தானே இந்த முஸ்லீம் பா.ஊ கூறுகின்றார்!

மன்னிப்பு புலிகள் கேட்டதாக புலிகள் சொல்லவில்லை என்று கருதுகிறேன்.

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.