Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு

இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது.

இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்சு, மகிந்திரா, பிர்லா, வர்த்தமான், அரவிந்த், இந்திய எண்ணெய் நிறுவனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் செல்ல இருக்கிறார்கள்.

இந்தியா-இலங்கைக்கு இடையே சுங்கத்தீர்வையற்ற வணிக உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கை முதலீட்டு வாரியம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கறுப்புக் கார்பன் ஆலையை ரூபாய்.480 கோடி செலவில் அமைக்க ஆதித்தியா பிர்லா குழுமம் முன்வந்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசு இந்தியப் பெருமுதலாளிகளுக்கு விரித்துள்ள இந்த வலைப்பின்னலுக்குப் பின்னே ஆழமான நோக்கம் உள்ளது. இந்திய தொழில்-வணிக நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்பட்ட பிறகு தங்கள் தொழிலையும், வணிகத்தையும் பாதுகாக்கவும் பெருக்கிக்கொள்ளவும், இந்தியப் பெருமுதலாளிகள் விரும்புவார்கள. அப்போது அவர்கள் மூலம் இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துத் தனக்கு ஆதரவாகத் திருப்பிக்கொள்ள முடியும் என சிங்கள அரசு கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய முதலாளித்துவக் கும்பலுக்கு சிங்கள அரசு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க முற்பட்டுள்ளது.

இந்துத்துவா கும்பலுக்கு வலைவீச்சு

இந்தியாவில் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்துத்துவா ஆதரவு கட்சிகளுக்கும் சிங்கள அரசு வலைவிரித்துள்ளது. இலங்கையில் இராமாயணச் சுற்றுலாத் தலங்களாக அய்ம்பது இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தில்லியில் இதற்காக சிங்கள அரசு இந்த சுற்றுலாத் திட்ட அறிமுக விழாவையும் நடத்தியது.

இராமர், சீதை, இராவணன் சம்பந்தப்பட்ட புனித தலங்களை பார்ப்பதற்கு இலங்கைக்கு வருமாறு இந்திய மக்களுக்கு சிங்கள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற விழாவில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சர்வரூபா என்பவர் பேசும்போது "இராமர் சேது பாலம் கற்பனையல்ல, அதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இராமாயணத்தில் எதையெல்லாம் படித்தோமோ அதை நாங்கள் நேரில் பார்த்துள்ளோம். சேது பாலத்தைக் கட்ட கற்கள் அனுமான் வந்திறங்கிய பகுதி இராவணன் இருந்த பகுதி, சீதை, கங்கை ஆறு ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் இன்னமும் அழியாமல் உள்ளன" என்று கூறினார்.

இந்துத்துவா கும்பலை தன்பக்கம் ஈர்ப்பதற்கு இராமாயணத் தலங்கள் திட்டத்தை சிங்கள அரசு அறிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகள் சரணடைந்த பிறகும் சுட்டார்கள்

உண்மையறியும் குழு குற்றச்சாற்று

கடந்த 19-12-08 தேதியன்று தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையினரின் நக்சல் தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்தவர்களாகக் கூறப்படும் மகாலிங்கம், பாலமுருகன், முருகானந்தம், மருது (எ) லெனின் மற்றும் யோகேஷ் என்ற 5 நபர்களை மேற்படி சிறப்பு அதிரடிப்படையினர் சுட்டுப் பிடித்ததாகச் சொல்லி தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியுள்ளனர்.

இது குறித்தான செய்தி உண்மையா?... உண்மையில் நடந்தது என்ன?... என்பது குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளை ஒன்றிணைத்து கீழ்க்கண்டவர்களைக் கொண்ட ஒரு உண்மையறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேராசிரியை சரசுவதி, 2. தமிழ்முகிலன், 3. வழக்கறிஞர்கள் பொற்கொடி

4. பெ. தமயந்தி, 5. சுதாகர், 6. இனியன், 7. ராஜ்மோகன், 8. நாகேந்திரன்.

மேற்படி உண்மையறியும் குழுவானது, சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டு பள்ளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேல்பூசணியூத்து, புதுக்கோட்டை, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கீழ்பூசணியூத்து கன்னியம்மாள்புரம் மற்றும் வருசநாடு உள்ளிட்ட பல கிராமங்களில் நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டது.

அதன்பிறகு தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்களையும், அதிரடிப்படையின் கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்களையும் சந்தித்தது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகாலிங்கம், பாலமுருகன், முருகானந்தம், மருது (எ) லெனின் ஆகியோரையும் சந்தித்தது.

அதன்பின் குழுவினர் கீழ்கண்ட பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

1. 19-12-07 அன்று இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் உண்மை நிலையின்படி, சரணடைய வந்த மாவோயிஸ்ட் தரப்பைச் சேர்ந்தவர்களை வேண்டுமென்றே சுட்டுக் கடுமையாகக் காயமடையச் செய்த காவல்துறையினர், அதிரடிப்படையினர் மீது தமிழக அரசானது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தரப்பைச் சேர்ந்தவர்களை மனிதாபிமானற்ற முறையில் இழிவாக நடத்திய, தாக்குதல் நடத்திய காவல்துறை, அதிரடிப்படை, உளவுத்துறைத் தரப்பினர் மீதும் தமிழக அரசானது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

3. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

4. சிறையில் அவர்களுக்கு உரிய உரிமைகளை நிலைநாட்டவும், போதிய வசதிகளை செய்து தரவும் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படவேண்டும்.

5. தேனி மாவட்ட காவல் துறையின் சர்ச்சைக்குரிய பத்திரிகைச் செய்தியை பகிரங்கமாகத் திரும்பப்பெற்று, அதற்குக் காரணமான காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

6. நக்சலைட் பிரச்சனையை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாகப் பார்க்காமல், சமூக-பொருளாதார-அரசியல் பிரச்சனையாகப் பார்த்து அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் கடமையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

-தென் செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு

இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது.

இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்சு, மகிந்திரா, பிர்லா, வர்த்தமான், அரவிந்த், இந்திய எண்ணெய் நிறுவனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் செல்ல இருக்கிறார்கள்.

இந்தியா-இலங்கைக்கு இடையே சுங்கத்தீர்வையற்ற வணிக உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கை முதலீட்டு வாரியம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கறுப்புக் கார்பன் ஆலையை ரூபாய்.480 கோடி செலவில் அமைக்க ஆதித்தியா பிர்லா குழுமம் முன்வந்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசு இந்தியப் பெருமுதலாளிகளுக்கு விரித்துள்ள இந்த வலைப்பின்னலுக்குப் பின்னே ஆழமான நோக்கம் உள்ளது. இந்திய தொழில்-வணிக நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்பட்ட பிறகு தங்கள் தொழிலையும், வணிகத்தையும் பாதுகாக்கவும் பெருக்கிக்கொள்ளவும், இந்தியப் பெருமுதலாளிகள் விரும்புவார்கள. அப்போது அவர்கள் மூலம் இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துத் தனக்கு ஆதரவாகத் திருப்பிக்கொள்ள முடியும் என சிங்கள அரசு கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய முதலாளித்துவக் கும்பலுக்கு சிங்கள அரசு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க முற்பட்டுள்ளது.

இந்துத்துவா கும்பலுக்கு வலைவீச்சு

இந்தியாவில் உள்ள பா.ஜ.க. மற்றும் இந்துத்துவா ஆதரவு கட்சிகளுக்கும் சிங்கள அரசு வலைவிரித்துள்ளது. இலங்கையில் இராமாயணச் சுற்றுலாத் தலங்களாக அய்ம்பது இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தில்லியில் இதற்காக சிங்கள அரசு இந்த சுற்றுலாத் திட்ட அறிமுக விழாவையும் நடத்தியது.

இராமர், சீதை, இராவணன் சம்பந்தப்பட்ட புனித தலங்களை பார்ப்பதற்கு இலங்கைக்கு வருமாறு இந்திய மக்களுக்கு சிங்கள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற விழாவில் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சர்வரூபா என்பவர் பேசும்போது "இராமர் சேது பாலம் கற்பனையல்ல, அதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இராமாயணத்தில் எதையெல்லாம் படித்தோமோ அதை நாங்கள் நேரில் பார்த்துள்ளோம். சேது பாலத்தைக் கட்ட கற்கள் அனுமான் வந்திறங்கிய பகுதி இராவணன் இருந்த பகுதி, சீதை, கங்கை ஆறு ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் இன்னமும் அழியாமல் உள்ளன" என்று கூறினார்.

இந்துத்துவா கும்பலை தன்பக்கம் ஈர்ப்பதற்கு இராமாயணத் தலங்கள் திட்டத்தை சிங்கள அரசு அறிவித்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.