Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர் - ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர் - ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

[Tuesday February 26 2008 06:02:08 AM GMT] [யாழினி]

நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே யுத்தம் நடைபெறுவதாக சிலர் நினைக்கின்றனர். இன்று நடைபெறுவது அப்படியான யுத்தமல்ல. இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் என்றால் ஐந்து நிமிடங்கள் கூட நான் அரசாங்கத்தில் இருக்கமாட்டேன்.

ஆனால், இன்று நடை பெறும் யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாகும் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

பொலிஸாருக்கு மக்கள் யாராவது தகவல் கொடுத்தால் அதனை அவர்கள் கணக்கெடுப்பதில்லை. அலட்சியப்படுத்துகின்றனர். தகவல் கொடுத்தவர்களின் பெயர்களை சொல்லக்கூடிய பொலிஸாரும் உள்ளனர். இதனால்தான், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்க அச்சப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கான கூட்டம் நேற்று நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அமைச்சர் ஜெயராஜ் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, பொலிஸ் அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலாளர் சாந்த முஹாந்திரம், முச்சக்கரவண்டி சாரதிகள், கிராமவாசிகள், கல்வி அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது: நீர்கொழும்பில் இலகுவாக கலவரத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், ஜனாதிபதியவர்கள் இது தொடர்பாக பாதுகாப்பு பிரச்சினைக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். எங்காவது வன்செயல், கலவரம் இடம்பெறுமாக இருந்தால் அதற்கு அப்பிரிவில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும்.

ஏனென்றால், இனவன்செயலை ஏற்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களை கொலை செய்து அவர்களின் சொத்துக்களை சூரையாடி 1983 இல் கலவரம் செய்தது போல், மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த புலிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அதன் மூலம் சர்வதேசத்தின் அனுதாபத்தைத் தேட புலிகள் முயற்சி செய்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும், எந்தவொரு தமிழ் மகனும் பாதிக்கப்பட இடமளிக்கப்படமாட்டாது. இது பாதுகாப்பு தரப்பினரது பொறுப்பாகும்.

இன்று பயங்கரவாதிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை அமைக்குமாறு ஜனாதிபதியவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். பாதுகாப்பு விடயம் தொடர்பாக மக்களை அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கு முன்னதாக அவர்களுக்கு தலைமை வகிக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டியது எமது பொறுப்பாக இருக்கிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை. கல்கிசையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பஸ் வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியிருப்பதை ஊடகங்கள் மூலமாக பார்த்திருப்பீர்கள். அன்று அந்த பஸ்ஸில் பயணம் செய்த பெண்மணி பஸ் வண்டியில் இருந்த குண்டுப் பொதியை கண்டும் காணாமல் இருந்தால் என்னவாகியிருக்கும்? பஸ்ஸில் பயணம் செய்த 43 பய“ணிகளும் சுக்கு நூறாகிப் போயிருப்பார்கள்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் பெறுமதி உங்களுக்கு புரிந்திருக்கும். நுகேகொடையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். குண்டுப் பொதி தொடர்பாக சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஆயினும் பொலிஸார் உடனடியாக வரவில்லை. பொலிஸார் உடன் வந்திருந்தால் குண்டுவெடிப்பை தவிர்த்திருக்கலாம்.

நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். பொலிஸாருக்கு யாராவது தகவல் கொடுத்தால் அதை கணக்கெடுப்பதில்லை. அலட்சியப்படுத்துகிறார்கள். யார் தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தார் என்ற இரகசியத்தை வெளியில் சொல்லக் கூடிய பொலிஸாரும் இருக்கிறார்கள். இதை சில பொலிஸ் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் உண்மை இதுதான். பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப் பயப்படுகிறார்கள். காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். ஆயினும், இந்த நிலைமையை மாற்ற வேண்டும். பொதுமக்கள் தமக்கு தெரிந்த தகவல்களை உடனடியாக வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அந்த வாகனம் கிடையாது, இந்த வாகனம் கிடையாது என்று தாமதிக்க முடியாது. மக்களின் உயிரோடு பொலிஸார் விளையாட முடியாது.

இன்று வடக்கில் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதிகளுடன் மோத வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எமது ஜனாதிபதி பிரபாகரனுடன் பேசி வடக்கையும் கிழக்கையும் அவரிடமே ஒப்படைக்க முடியும். அதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். அப்போது யுத்தம் நடைபெறாது. சீனி விலை குறையும், மாவிலை குறையும், அரிசி விலை குறையும். அவர்களின் பிரதேசத்தை அவர்கள் நிர்வகிப்பார்கள். எமது பிரதேசத்தை நாங்கள் நிர்வகிப்போம். ஆனால், இதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தனி ராஜ்யத்தை வழங்குவதை 90 சதவீதமான மக்கள் விரும்பமாட்டார்கள். 7 அல்லது 8 சதவீதமான மக்கள் விரும்பலாம். ஆனால், தமிழ் மக்களில் கூட அதிகமானவர்கள் நாடு பிளவுபடுவதை விரும்பமாட்டார்கள்.

பயங்கரவாதிகளுக்கு பள்ளிவாசல், பன்சலை, கோயில், தேவாலயம் என்ற பேதமில்லை. அவர்கள் தாக்குதல் நடத்த நினைத்தால் தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாது. குறிதவறி சில வேளை அசம்பாவிதங்கள் நிகழலாம்.

tamilwin.com

மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர்

என்னெண்டு? புருசனை புலிகள் வெட்டிட்டாங்ளெண்டு சொன்னதை போலீஸ் நம்பேல்லை எண்டதை வைத்து சொல்லக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

:D மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர்

என்னெண்டு? புருசனை புலிகள் வெட்டிட்டாங்ளெண்டு சொன்னதை போலீஸ் நம்பேல்லை எண்டதை வைத்து சொல்லக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.