Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவின் வலியுறுத்தல் பயங்கரவாதத்திற்கு ஒப்பானது - ஜாதிக கெல உறுமய

Featured Replies

13வது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் மஹிந்தவும் எதிர்கட்சி தலைவர் ரணிலும் இணக்கம் கண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இருதரப்பும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமையவின் தலைவனும எம்.பியுமான எல்லாவெல மேத்தானந்த தேரோ தெரிவித்தார். இந்தியாவின் தீர்வு திட்டத்துக்கு அமைய இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்துவது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. எமது பிரச்சினையை நாமே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

13வது திருத்த்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க ரணில் இணங்கியுள்ளார். மஹிந்வுடனான சந்திப்பில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே எல்லாவெல தேரோ இவ்வாறு கூறினார்.

மேலும் : எமது நாட்டுப் பிரச்சினைக்கு எமக்கேற்ற வகையில் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர இந்தியாவின் தேவைக்கேற்ற தீர்வை காண முடியாது. அவ்வாறு வலியுத்துவதென்பது பயங்கரவாதத்திற்கு ஒப்பான செயலாகும். இந்தியா எமது அயல் நாடு. வரலாற்றுக்கால தொடர்புகள், நட்புறவு தொடர்கிறது. பௌத்தமும் அங்கிருந்தே வந்தது. எனவே இலங்கைக்கு உதவலாம். அதேநேரம் இறைமை சுயாதிபத்தியம் கொண்ட நாடே இலங்கை என்பதை மறந்து செயற்படலாகாது.

மாகாணசபை முறையை ஜாதிக கெல உறுமைய எதிர்க்கிறது. இம் முறையை ஏற்படுத்துவதற்காக அன்று 9 பேர் அடங்கிய குழு நியமிக்கபட்டது. அதில் 5பேர் இதனை எதிர்த்தனர். ஒரே ஒரு வாக்கினாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அரசாங்கம் வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதை தற்காலிகமாக ஆதரிக்கின்றது.

மாகாண சபை முறையால் எதிர்காலத்தில் நாடு பிளவுபடும் அபாயமும் உண்டு. தத்தமது மாகாணங்கள் சுயமாகச் செயற்பட வேண்டுமென தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென தீர்மானங்கள் எடுக்கபட்டால் நாட்டுக்கு ஆபத்தாகவே அது அமையும். மத்திய அரசாங்கம் வழங்கிய அதிகாரங்களை மீளப் பெற முடியும். ஆனால், இலங்கை வரலாற்றில் வழங்கிய அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டதாக சரித்திரம் கிடையாது.

எனவே இது விடயத்தல் சிந்தித்து செயல்பட வேண்டும். நாட்டின தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமும், எதிர்க்ட்சியும் இணைந்து செயல்படுவதை வரவேற்கிறோம். ஆனால், அதிகாரங்களை பரவலாக்கும் விடயத்தில் இருதரப்பும் கவனமாக செயல்பட வேண்டும்.

மாகாண சபை முறைமையை ஹெல உறுமய எதிர்க்கிறது. கிராம இராஜ்ஜீய முறையை ஆதரிக்கின்றது.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்
:D கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதிதான் இது. மாகாணசபை என்றார்கள், மாவட்ட சபை என்றார்கள், இப்போது கிராம சபை என்கிறார்கள். இன்னும் என்னென்னவெல்லம் சொல்வார்களோ தெரியாது ?
  • கருத்துக்கள உறவுகள்

உவை சொல்லி நமக்கென்ன வரப்போகுது. நாம நம்மட வேலையைப் பார்க்கவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.