Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலக சொகுசு வாழ்க்கைக்காக ஆண்களிடம் ஏமாறும் பெண்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44403898_abandonedbride_body.jpg

பாதிக்கப்பட்ட பஞ்சாப் பெண்ணும் அவளின் மகனும்.

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்தை வைத்து சொந்த ஊரில் உல்லாசமாக வாழ்ப்பவர்களைப் பார்த்து தாமும் வெளிநாடு சென்றால் இப்படி உல்லாசமாக வாழலாம் என்று கருதி வெளிநாட்டு பிரஜா உரிமையுள்ள ஆண்களை (அல்லது ஆண்கள் பெண்களை) பெண்கள் திருமணம் செய்வது இந்தியா இலங்கை (குறிப்பாக தமிழர்கள்), பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் நடைமுறையாக உள்ளது.

ஒரு இந்திய பஞ்சாப் பெண்ணை அவரின் இந்திய ஆனால் பிரிட்டிஷ் பிரஜா உரிமையுள்ள கணவர் திருமணம் செய்து அவளின் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு அவளையும் அவளின் குழந்தையையும் இந்தியாவிலேயே நிற்கதியாக்கிய விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமன்றி இப்படி பாதிக்கப்பட்ட பலர் (கிட்டத்தட்ட 15,000) அங்கிருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஆண்களைத் திருமணம் செய்ய பெருமளவு சீதனமும் வழங்கப்படுகிறதாம். இத்தொகை 60,000 அமெரிக்க டொலர் வரை உயர்கிறதாம்.

அதேபோல் பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்ற ஒரு பெண்ணை இந்திய பிரஜா உரிமை பெற்ற ஆண் டாக்டர் ஒருவர் திருமணம் செய்து தனது விசாத் தேவைகள் நிறைவு பெற்றதும் அவளைச் சித்திரவதை செய்து கைவிட்டுள்ள கதையும் வெளியாகியுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்ற பெண்களால் உள்ளூர் ஆண்கள் ஏமாற்றப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.

அதுமட்டுமன்றில் பிரிட்டனில் அமெரிக்காவில் கனடாவில் வாழும் இந்திய பூர்வகமுள்ள அவ்வவ் நாடுகளில் பிறந்த தலைமுறையினர் கூட பூர்வீக நாடுகளில் திருமணம் செய்து ஆட்களை அழைத்து வர வற்புறுத்தப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக பெண் பிள்ளைகளைக் வற்புறுத்தி தாயகத்தில் உள்ள ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் அரங்கேறி வருகிறது.

ஆண்களும் உள்ளூர் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். அவர்களின் வருமானத்தில் ஊரில் உள்ள தங்கள் குடும்பத்தினர் வசதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையில்.!

இது நம்ம தமிழர்கள் மத்தியிலும் சகஜம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி தமிழாக்கம்- நெடுக்ஸ் (மகளிர் தினத்தை ஒட்டிய விழிப்புணர்வுச் செய்தி)

செய்தி அடிப்படை:- http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7227224.stm

Edited by nedukkalapoovan

நான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=35386&hl=

என்ற பகுதியில் எழுதிய கருத்தை மெய்ப்பிப்பதைப் போல இந்தப் பதிவு இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் ஏமாளிகளாக இருக்காதீர்கள். பிறகு ஆண் / பெண் வெறுப்புணர்வுடன் மன நோய் பிடித்தவர் போல அலைய வேண்டியிருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=35386&hl=

என்ற பகுதியில் எழுதிய கருத்தை மெய்ப்பிப்பதைப் போல இந்தப் பதிவு இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் ஏமாளிகளாக இருக்காதீர்கள். பிறகு ஆண் / பெண் வெறுப்புணர்வுடன் மன நோய் பிடித்தவர் போல அலைய வேண்டியிருக்கும்.

ஏமாளிகள் உருவாவதை தடுக்கனும் என்றால் ஏமாற்ற நினைப்பவர்கள் ( ஆண்/பெண்) அதை நிறுத்தனும்..! எல்லாரும் சொல்லில செய்வினம். செயலில தலைகீழாத்தான் நடப்பினம்..! :):rolleyes:

இவற்றிக்கெல்லாம் அடிப்படைக் காரணம் பேராசைதான். வெளிநாட்டு மோகம் என்ற கானல் நீராசையால் இருப்பதையும் இழந்து நிற்கின்றார்கள். பல பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை அதுவும் வதிவிட உரிமையுள்ளவர் என்றவுடன் பின் எதையும் விசாரிப்பதில்லை. பல விடயங்கள் இதுபோல் அம்பலத்திற்கு வந்த பின்னும் மேலும் மேலும் பேராசையினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனை.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உதுபரவாயில்லை, இலண்டனில் ஒருவர் ,அனுப்பும் பணத்தில் தான் தாயகத்தில் அவரது பெற்றோர்கள் சீவிக்கிறார்கள். அவருக்கு இரண்டு தங்கைகள் கல்யாணத்துக்காக இருக்கிறார்கள். இலண்டனில் உள்ளவர் அனுப்பும் பணத்தில் தான் சகோதரிகள் திருமணம் செய்ய முடியும். இலண்டனில் இருப்பவர் விடுமுறைக்காக சென்னை சென்று உயர்தர விடுதியில் தங்கினார். அங்கு விடுதியில் வேலை செய்யும் அழகிய வட இந்திய(சீக்கியர் இனப் பெண்) பெண் மீது காதல் கொண்டு, அப்பெண்ணும் இவரைக் காதலிக்க திருமணம் செய்து , பயண முகவர் மூலம் கண காசு காட்டி அந்த வட இந்தியப் பெண்ணை ஈழத்து அகதி என்று இலண்டனுக்கு கூப்பிட்டார். இலண்டனில் வசிப்பவரை நம்பி தாயகத்தில் இருப்பவர்களுக்கு அதன் பிறகு இலண்டனில் இருந்து காசு கிடைப்பது நின்றுவிட்டது.பயணமுகவருக்கு செலுத்துவதற்காக வங்கியில் அதிக வட்டியுடன் கடனை இவர் பெற்றதினாலும், வட இந்தியபெண்ணின் செலவுக்கு பணம் செலவழிப்பதினாலும் இவர் சொந்த உறவுகளுக்கு உதவ மறந்தார்.

ஆண்குழந்தை பிறந்தவுடன், அவ்வடந்திய பெண்ணுக்கு பிரித்தானியா வதிவிட உரிமையும் கிடைக்கவே, உடனே விவகாரத்து கேட்டிருக்கிறார். குடும்பத்தில் ஒரு பிரச்சனையுமில்லால் இருந்தாலும், இலண்டனுக்கு வருவதற்காகவே அந்த வட இந்தியப் பெண் திருமணம் செய்தார் என்பது அப்பொழுதுதான் அந்த இலண்டன் வாசிக்கு தெரிந்ததாம். பெற்றோர்களை, சகோதரிகளை மறந்தவருக்கு நல்லதண்டனை என்று அவரது நண்பர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.