Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கருணாவின் கரம் இன்னமும் கிழக்கில் ஓங்கியிருக்கிறது - த கார்டியன்

Featured Replies

சந்திரகாந்தி நந்தகுமார் என்ற பெண் தனது கணவரான பரசுராமன் என்பவரை ஜனவரி மாதம் பணி நிமித்தம் சென்ற போதே இறுதியாக பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேச ஆசிரியரான பரசுராமனின் உடல் மட்டக்களப்பு வாவியொன்றிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் ஆயுததாரிகளின் செயற்பாட்டின் காரணமாகவே பரசுராமன் கொல்லப்பட்டுள்ளார்.

கிழக்கு பகுதியை கடந்த வருடம் அரசாங்கம் மீட்டதன் பின்னர் அரசாங்கமும், அதற்கு ஆதரவான கருணா தரப்பினரும் கிழக்குப் பிராந்தியத்தை கட்டுப்படுத்தி வந்தனர்.

தமது பழைய சகாக்களின் கொலை அச்சுறுத்தல்கள்; காரணமாக கருணா லண்டனுக்கு சென்ற வருடம் தப்பியோடினார்.

இதற்கென இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டொன்றை கருணா பயன்படுத்தியிருந்தார்.

சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த குற்றத்தின் பேரில் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கருணா, தற்போது வொம்வூட் ஸ்கெரப்ஸ் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

தகவல்கள் இவ்வாறு இருக்கையில் மட்டக்களப்பு நகரில் ஒட்டப்பட்டுள்ள பாரிய சுவரொட்டிகளின் மூலம் கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இருக்கும் செல்வாக்கை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

பரசுராமன் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், அவரை தமது அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு கருணா அமைப்பைச் சேர்ந்தோர் அச்சுறுத்தி உள்ளனர்.

எனினும், இந்த அச்சுறுத்தலை புறக்கணித்ததன் காரணமாகவே பரசுராமன் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவிக்கின்றார்.

ஒரு தரப்பினருக்கு ஆயுதங்களுடன் சஞ்சரிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையின் கீழ் ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த முடியாது என மேற்குலகம் சுட்டிக்காட்டுகின்றது.

எனினும், விடுதலைப் புலிகளை சகல பகுதிகளிலிருந்து விரட்டியடித்ததன் பின்னர் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சுயாட்சி தொடர்பான ஒரு ஒத்திகையே இந்த கிழக்குத் தேர்தல்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்புவதில் கருணா தரப்பிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகின்றது.

கார்டியன் பத்திரிகையின் செய்தியாளர் மட்டக்களப்புக்குச் சென்ற தினத்திலேயே பிள்ளையான் குழுவைச் சேர்ந்த இருவர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர்.

தேர்தல் கண்காணிப்பின் பிரகாரம் இவ்வாறான செயல்கள் தற்போது சாதாரண விடயமாக மாறியுள்ளது.

மகள்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கருணா தரப்பினர் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக மாற்றுக் கொள்கையுடைய அரசியல்வாதியான தங்கராஜா பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைத் தலைவர் பிரதீப் மாஸ்டர் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

ஏனைய ஆயுதக் குழுக்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே தாம் ஆயுதந்தரித்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் சுமூக வாழ்க்கை திரும்பியுடன் தாம் ஆயுதங்களை களைவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் பதவி அபேட்சகராக போட்டியிடும் பிரதீப் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனைக்கு பின்னர் லண்டனிலிருந்து கருணா வருகை தந்தவுடன், அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கருணாவிற்கு எதிராக யுத்த குற்றங்கள் தொடர்பான தகவல்களை பிரித்தானிய பொலிஸார் சேகரித்து வருவதனால் அவரது விடுதலை குறித்து சந்தேகம் நிலவுவதாக பிரதீப் மாஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், கருணா பொது நீதிமன்றம் ஒன்றின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டால், தமது குற்றங்கள் குறித்து வெளிப்படுத்தப்படலாம் என்ற அச்சம் அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத மனித உரிமை ஆர்வளர்கள் தெரிவித்தனர்.

தமக்கு ராஜதந்திர கடவுச்சீட்டை அரசாங்கமே வழங்கியது என்று பிரித்தானிய நீதிமன்றில் கருணா தெரிவித்திருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

ஆட்கடத்தல், கப்பம் பெறல், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கருணா தரப்பினர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ராஜேஸ்வரன் வளர்மதியின் 14 வயது மகனை கருணா தரப்பினர் கடத்திச் சென்று ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை ஒரு உதாரணமேயாகும்.

நன்றி :www.lankadissent.com/Tamil

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் விடிவுக்கெண்டு புறப்பட்ட நாயல்லவா ? இண்டைக்கு குட்டை பிடித்து தெருவெல்லாம் இழுபட்டு, கண்டவனிடமும் அடிபட்டு மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கு, அதுக்கை அரசியல் வேற ஒரு கேடா ? இவனுக்கு வாக்களிச்சு பார்க்க விரும்புற ஆக்கள் வாக்களிச்சுப் பாக்கட்டும். ஆட்சிக்கு வந்த பிறகு தெரியும் இந்த நாய்களின்ர அடாவடித்தனமும் அக்கிரமங்களும். நல்லாத்தான் கிழக்கு விடியப் போகுது ! வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் கரம் இன்னமும் கிழக்கில் ஓங்கியிருக்கிறது

அகதி அந்தஸ்த்து கேட்கபோவதாக செய்தி அடிபடுகிறது. அது தான் கையை தூக்க போகிறார் என காடியன் சொல்லவிளைகிறது. :rolleyes:

கிழக்கு மாகாண மக்களுக்குக் கொள்ளி வைத்த கருணாவின்கை யாரோ ஒருவரால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனுக்கு விரைவில் நல்ல காலம் ஒன்று பிறக்கத்தான் போகிறது.

எல்லாம் அவன் கையில். (*/&%#!§?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.