Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணைக் கடவுளாய் தொழும் தேசத்தில் பெண்ணுக்கு என்ன மதிப்பு..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் கேலி செய்ததால் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்

கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.

மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டம், சகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சீமா சோய். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ஹெளரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் வளாகத்தில் உள்ள குளத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் (ஒரு குழந்தைக்கு 4 வயது, இன்னொன்றுக்கு 7 மாதம்) உடல்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவை இரண்டும் சீமா சோயின் குழந்தைகள் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து ஹெளரா மாவட்ட எஸ்.பி. நீரஜ் குமார் சிங் கூறுகையில், அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் பிறந்ததால், சீமா சோயின் கணவரும், மற்ற உறவினர்களும் அவரைக் கேலி செய்துள்ளனர், திட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சீமா சோய் இரு குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். செவ்வாய்க்கிழமை காலை அவரது கணவர் காஞ்சன் மூத்த மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவளை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சீமாவிடம் கூறியுள்ளார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சீமா இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு லிலுவா நகருக்கு ரயில் ஏறினார். அங்கு இறங்கியதும் ஒரு ரிக்ஷாவைப் பிடித்து ராமகிருஷ்ணா மடத்துக்கு வந்தார்.

மாலையில் வந்து சேர்ந்த அவர் அங்கு மாலை நேர பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. குளத்தின் அருகே யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, இரு குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக குளத்தில் மூழ்கடித்தார். சிறிது நேரத்தில் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

இதையடுத்து பர்த்வான் திரும்பிய அவர் அங்கிருந்து சகரம் கிராமத்துக்கு பேருந்தில் பயணித்தார். பேருந்திலிருந்து இறங்கியதும் அவர் மயக்கமடைந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் இரு குழந்தைகளின் உடல்களும் நாளிதழ்களில் வந்ததைப் பார்த்த சீமாவின் சகோதரர் ரஞ்சித் மண்டல், பல்லி காவல் நிலையத்தை அணுகி அவை தனது சகோதரியின் குழந்தைகள் எனத் தெரிவித்தார். மேலும் தனது சகோதரியையும் காணவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து சீமாவை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன் பிறகுதான் நடந்தது தெரிய வந்தது.

இரு குழந்தைகளையும் கொன்று விட்டு திரும்பிய அவர் ஹூக்ளி நதியில் குதித்துத் தற்கொலை செய்ய தீர்மானித்தார். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் நிறைய பேர் இருந்ததால் அந்த முயற்சியை விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்றார்.

கணவர் கேலி செய்ததால் இரு பெண் குழந்தைகளையும் கொன்ற தாயின் செயல் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/03...-ridiculed.html

Edited by nedukkalapoovan

என்ன நெடுக்கு மகளிர் தினம் அண்டு என்ன சேட்டையா? தலைப்புக்கும், தலைப்பின் கீழ் இருக்கும் கருத்துக்கும் என்ன சம்மந்தம்?

பெண்ணைக் கடவுளாய் தொழும் தேசத்தில் பெண்ணுக்கு என்ன மதிப்பு..?! எண்டு தலைப்பில கேட்டு இருக்கிறீங்கள். உள்ளுக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கிது..

நீங்கள் பெண்களிற்கு மதிப்பு குடுக்க இல்லை எண்டுறதுக்காக இப்பிடியோ எழுதுறது?

எல்லாமே சும்மா செய்திகள். உண்மை பொய் தெரியாது. இப்பிடி என்னாலையும் ஆண்களை சீண்டும் விதமான செய்திகளை இணையத்தில் தேடல் செய்து இணைக்க முடியும்.

உங்கட தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பை வெளிக்காட்ட உங்கள் தனித்திறமையை வெளிக்காட்ட முயற்சிக்கிறது தவறானது.

[இது ஒண்டையும் நீங்கள் கேட்கப்போவதில்லை. ஏதோ சும்மா மற்ற ஆக்கள் வாசிக்கிறதுக்கு பதில் எழுதி இருக்கிறன். எண்ட பதிலைப் பாத்துபோட்டு டென்சன் ஆகி மகளிர் தினம் அன்று பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டாதிங்கோ. திட்டினாலும் அவர்களது நல்லதுக்கே செய்வதாய் சொல்லுவீங்கள். வேற என்ன.]

ம்ம்ம்....நெடுக்ஸ் தாத்தா... :D (எல்லாமே அந்த தேசத்தில பேச்சளவிள தான் இருக்கு பாருங்கோ :D )... ஆனா பெண்குழந்தை பிறந்ததிற்கு கிண்டலா..(என்ன லோகம் இது :D )...ஆனாலு மற்றவை கேலி செய்கீனம் என்பதிற்காக ஒரு தாய் பிள்ளையை கொல்கிறது என்றா அது எல்லாத்தையும் விட ஓவரா இருக்கு... :D (தாய் பிள்ளையை காப்பாற்ற நினைப்பா என்று தான் கேள்விபட்டிருக்கிறேன் இன்னைக்கு தான்)...என்னால முடியல... :D

ஜம்மு பேபி பஞ்-

"மற்றவனிற்காக வாழ்வது வாழ்க்கையில்லை நமக்காக வாழ்வது தான் வாழ்க்கை" :D

அப்ப நான் வரட்டா!!

அட கடவுளே இப்படியும் ஒரு அம்மாவா?

விளையாட்டு வினையில் முடிஞ்சிடிச்சு போல.

கணவன் கேலி செய்திருக்க மாட்டார் பா. அவன் கொடுமைப்படுத்தி இருப்பான் நீ பெத்தது இரண்டும் பொண்ணுகள் என்று. அதனால் தான் இப்படி செய்திச்சுதோ யாருக்கு தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பார்த்தாவது சமூகம் திருந்துமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு மகளிர் தினம் அண்டு என்ன சேட்டையா? தலைப்புக்கும், தலைப்பின் கீழ் இருக்கும் கருத்துக்கும் என்ன சம்மந்தம்?

பெண்ணைக் கடவுளாய் தொழும் தேசத்தில் பெண்ணுக்கு என்ன மதிப்பு..?! எண்டு தலைப்பில கேட்டு இருக்கிறீங்கள். உள்ளுக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கிது..

நீங்கள் பெண்களிற்கு மதிப்பு குடுக்க இல்லை எண்டுறதுக்காக இப்பிடியோ எழுதுறது?

எல்லாமே சும்மா செய்திகள். உண்மை பொய் தெரியாது. இப்பிடி என்னாலையும் ஆண்களை சீண்டும் விதமான செய்திகளை இணையத்தில் தேடல் செய்து இணைக்க முடியும்.

உங்கட தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பை வெளிக்காட்ட உங்கள் தனித்திறமையை வெளிக்காட்ட முயற்சிக்கிறது தவறானது.

[இது ஒண்டையும் நீங்கள் கேட்கப்போவதில்லை. ஏதோ சும்மா மற்ற ஆக்கள் வாசிக்கிறதுக்கு பதில் எழுதி இருக்கிறன். எண்ட பதிலைப் பாத்துபோட்டு டென்சன் ஆகி மகளிர் தினம் அன்று பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டாதிங்கோ. திட்டினாலும் அவர்களது நல்லதுக்கே செய்வதாய் சொல்லுவீங்கள். வேற என்ன.]

என்னைப் பொறுத்தவரை நான் என்னைப் போலவே பெண்களை மனிசராப் பார்க்கிறன். பெண்களை அனுதாபத்தோட விசேட சலுகைக்கு.. அல்லது ஏதோ பாவட்ட ஜென்மங்களா அல்லது.. பரிதாபத்துக்குரியவையாக.. பார்க்கிற ஆள் நானில்லை. ஆணிடமோ பெண்ணிடமோ குறையைக் குறை என்று சுட்டிக்காட்டிறது என்ர பாணி. நிறையை நிறை என்று சொல்லுவன். சும்மா புளுகி வைச்சிட்டு.. எனக்கு சப்போட் தேடனும் என்று நினைக்கிறதில்ல..!

உங்களிடம் இருந்து நான் பல விடயங்களில் வேறுபடுறன். இந்த விசயத்தில..! அதால என்ர தலைப்பு செய்திக்கு முரணானதா உங்களால் பார்க்கப்படுவது ஆச்சரியமல்ல..! :D

அருமையான கண்டுபிடிப்பு நெடுக்காலபோவான்..

நான் பெண்களுக்கு ஆதரவு குடுக்கிறதால எனக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?

பார்லிமன்டில உறுப்புரிமை கிடைக்குமோ? இல்லாட்டி பணம் சம்பாதிக்க முடியுமோ?

விஷேட சலுகைகள் எண்டு என்ன, எதை நினைக்கிறீங்கள்? எத சொல்லுறீங்கள்?

விளங்க இல்ல..

இப்ப யாழில பெண்களிடம் இருந்து எனக்கு சப்போர்ட் கிடைக்கிது எண்டு ஒரு கதைக்கு வையுங்கோ. இத வச்சு நான் என்ன செய்யமுடியும்? பணம் சம்பாதிக்க முடியுமா? இல்லாட்டி இத வச்சு வேறேதும் செய்து வாழ்க்கையில முன்னுக்கு வர ஏலுமா?

என்னவோ சொல்லுறீங்கள். சரி ஆசைக்கு என்னை இன்னும் ஒருக்கால் நக்கல் அடிச்சுப்போட்டு போங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கண்டுபிடிப்பு நெடுக்காலபோவான்..

கண்டுபிடிப்பல்ல. இங்கு அதுதான் வெளிப்படை உண்மை. :lol::lol:

  • 3 weeks later...

.......

இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து ஹெளரா மாவட்ட எஸ்.பி. நீரஜ் குமார் சிங் கூறுகையில், அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் பிறந்ததால், சீமா சோயின் கணவரும், மற்ற உறவினர்களும் அவரைக் கேலி செய்துள்ளனர், திட்டியுள்ளனர்.

........

குழந்்தை ஒன்று பிறக்கும் போது அது ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்்பது ஆணின் விந்துவே தவிர பெண்ணின் முட்டையல்ல. இதுமருத்துவத்தின் கண்டுபிடிப்பு.

பெண்ணின் முட்டையில் இருப்்பவை xx மூர்த்ததங்களே.. ஆணின் விந்திலேயே xy எனப்படும் மூர்த்தங்கள் காவப்படும். ஒரு பெண்குழந்தை உருவாவது ஆணின் விந்திலிருக்கும் x மூர்த்தத்தாலும் ஓர் ஆண் குழந்்தை உருவாவது ஆணின் விந்திலிருக்கும் y மூர்த்தத்்தினாலுமாகும்.

இது பற்றிய அறிவை ஊட்டுவதன் மூலம் இவ்வாறான சம்பவம் மேலும் இடம்்பெறாது தவிர்க்கலாம்.......

...

எல்லாமே சும்மா செய்திகள். உண்மை பொய் தெரியாது. இப்பிடி என்னாலையும் ஆண்களை சீண்டும் விதமான செய்திகளை இணையத்தில் தேடல் செய்து இணைக்க முடியும்.

........

அதிக வாசகர் வட்டத்்தைக்கொண்ட தமிழக முன்னணி இணையச் செய்தித்தளத்தில் இருந்து செய்தி இணைக்கப்பட்டுள்ளது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்்தை ஒன்று பிறக்கும் போது அது ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்்பது ஆணின் விந்துவே தவிர பெண்ணின் முட்டையல்ல. இதுமருத்துவத்தின் கண்டுபிடிப்பு.

பெண்ணின் முட்டையில் இருப்்பவை xx மூர்த்ததங்களே.. ஆணின் விந்திலேயே xy எனப்படும் மூர்த்தங்கள் காவப்படும். ஒரு பெண்குழந்தை உருவாவது ஆணின் விந்திலிருக்கும் x மூர்த்தத்தாலும் ஓர் ஆண் குழந்்தை உருவாவது ஆணின் விந்திலிருக்கும் y மூர்த்தத்்தினாலுமாகும்.

இது பற்றிய அறிவை ஊட்டுவதன் மூலம் இவ்வாறான சம்பவம் மேலும் இடம்்பெறாது தவிர்க்கலாம்.......

வணக்கம் சுடர் அக்கா..

ஆண்கள் பால் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது புரிகிறதல்லவா..! அதுவும் வஞ்சகமில்லாமல் 50-50 கொடுக்கிறார்கள். உங்க வாதப்படி வந்தாக்கா ஆண்கள் வை நிறமூர்த்தத்தைக் கொடுக்காட்டி.. பெண்கள் தானுங்கோ உலகத்தில இருப்பினம். அந்த ஒரு வையைக் கொடுக்கிறதிலும் பொறாமைப் படுறீங்களே..! அதிலும் அந்த வை, எக்ஸ் போல உருப்படியான ஒன்றில்ல...! :mellow::mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள தீண்டினால்? சீ சீண்டினால் கலைஞணனக்கு ஏன் கோபம் வருது..?

அதானே....அங்க இங்க கைவைச்சிங்க ஒகே..பட் இப்ப வையிலயும் கை வைக்க கிளம்பிட்டிஙகளா?

பெண்கள தீண்டினால்? சீ சீண்டினால் கலைஞணனக்கு ஏன் கோபம் வருது..?

அதானே....அங்க இங்க கைவைச்சிங்க ஒகே..பட் இப்ப வையிலயும் கை வைக்க கிளம்பிட்டிஙகளா?

பின்னே எப்பவுமே கீரோவிற்கு தான் கோபம் வரும் பாருங்கோ சுண்டல் அண்ணா... :mellow: (ஆனா எனக்கு கோபம் வராது பிகோஸ் நான் தான் கீரோ இல்லையே :mellow: )..அப்ப சுண்டல் அண்ண என்னவாக்கும்.. :mellow:

அது என்ன "வை" சுண்டல் அண்ணா நேக்கு விளங்கல்ல.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் சுடர் அக்கா..

ஆண்கள் பால் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது புரிகிறதல்லவா..! அதுவும் வஞ்சகமில்லாமல் 50-50 கொடுக்கிறார்கள். உங்க வாதப்படி வந்தாக்கா ஆண்கள் வை நிறமூர்த்தத்தைக் கொடுக்காட்டி.. பெண்கள் தானுங்கோ உலகத்தில இருப்பினம். அந்த ஒரு வையைக் கொடுக்கிறதிலும் பொறாமைப் படுறீங்களே..! அதிலும் அந்த வை, எக்ஸ் போல உருப்படியான ஒன்றில்ல...! :(:wub:

இங்கே பொறாமைப்பட்டு ஒரு விடயமும் சொல்லப்படவில்லை.. ஒரு சமூகத்தில் இருக்கும் மடமையினால்அநியாய உயிரிழப்புக்கள், குடும்பங்களிடையே மனக்கசப்புகள் ஏற்படுவதையே குறிப்பிட்ட முனைந்திருந்தேன்.

உலகத்தில y நிறமூர்த்தம் கொடுக்காட்டி பெண்கள்தான் இருப்பார்கள் என்று என்ன கூறவருகிறீர்கள் என்பது புரியவில்லை. இயற்கையில் பெண்களின் முட்டையினால் மட்டும் ஒரு கரு உருவாகிவிடுவதில்லை.. ஆக ஆண் மட்டுமல்ல பெண் உருவாவதற்கும் ஆணின் விந்தே காரணம்!

*சுடர் அக்கா இல்லை:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பொறாமைப்பட்டு ஒரு விடயமும் சொல்லப்படவில்லை.. ஒரு சமூகத்தில் இருக்கும் மடமையினால்அநியாய உயிரிழப்புக்கள், குடும்பங்களிடையே மனக்கசப்புகள் ஏற்படுவதையே குறிப்பிட்ட முனைந்திருந்தேன்.

உலகத்தில y நிறமூர்த்தம் கொடுக்காட்டி பெண்கள்தான் இருப்பார்கள் என்று என்ன கூறவருகிறீர்கள் என்பது புரியவில்லை. இயற்கையில் பெண்களின் முட்டையினால் மட்டும் ஒரு கரு உருவாகிவிடுவதில்லை.. ஆக ஆண் மட்டுமல்ல பெண் உருவாவதற்கும் ஆணின் விந்தே காரணம்!

*சுடர் அக்கா இல்லை:(

இது கூடப் புரியவில்லையா. ஆண்கள் வை யைக் கொடுக்காட்டி.. ஆண்களும் எக்ஸ் கொடுத்தா பெண்கள் மட்டும் தானே உலகில் இருப்பார்கள். பிறகென்ன.

நீங்களே சொல்கிறீர்கள் முட்டையும் விந்தும் சேர்ந்துதான் கரு உருவாகிறது என்று. பின்னர் குறிப்பிடுகிறீர்கள்.. ஆண்கள் மட்டும் தான் பாலைத் தீர்மானிக்கிறார்கள் என்று. சப்போஸ் பெண்கள் ஒரு வையைக் கொடுத்து ஆண்களை உருவாக்கலாமே.

அடிப்படையில் XX பெண்ணாக இருக்கிறது. இதில் ஒன்று தாயிடம் இருந்தும் ஒன்று தந்தையிடம் இருந்தும் வருகிறது. XY இது ஆண் (வெறுமனவே Y இருந்தால் அது ஆணாக மாட்டாது.. அதேபோல் வெறுமனவே X இருந்தால் அது பெண்ணாக மாட்டாது) இதிலும் ஒன்று தாயிடமிருந்து வருகிறது Y தந்தையிட இருந்து வருகிறது.

பால் தேர்வில் இருவருக்கும் சம பங்குண்டு. என்பதைக் கூட புரிஞ்சுக்காம.. ஆண்களை குற்றம் சுமத்திறது.. பொறாமை இன்றி என்ன..???! :(:wub:

நீங்கள் இணைத்திருந்த செய்தியில் இருந்த சமூகத்தின் அறியாமையே இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டு பெண்குழந்தையைப் பெற்றதனால் ஒரு பெண் தன் துணைவன் மற்றும் அவன்் சார்நந்த உறவினர்களினால் கேலி செய்யப்பட்டதனாலேயே அவரால் அப்படியான முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதைத் தடுக்கவே ஒரு சமூகத்திற்கு இது பற்றிய சரியான தெளிவு கல்வியூட்டலின் மூலம் வழங்கப்்படவேண்டும் எனும் கருத்தினை முன்வைத்திருந்தோம்.

பால்த்தேர்வில் ஆண்களிற்கும் சம பங்கில்லை, அவர்களிற்கே அதிக பங்குண்டு. இதை இவ்வாறு பெண்குழந்தை பெற்றுக்கொடுத்துவிட்டதாக கேலி செய்யும் ஆண்கள் அறிந்துகொள்ளவேண்டும். அவர்கள் இதனை அறிந்து கொள்வார்களேயானால் இவ்வாறான கேலியினைச் செய்யமாட்டார்கள். :(:wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.