Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலையில் சி.ஐ.ஏ க்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பங்கு

Featured Replies

ராஜீவ் காந்தி கொலையில் சி.ஐ.ஏ க்கும் சுப்பிரமணிய சாமிக்கும் பங்கு இருப்பதாக கூறுகிறார் ஜெயின் கமிசன் முன்பு ஆஜாராகி பரபரப்பாக சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமி

http://sinnakuddy1.blogspot.com/2008/03/blog-post_3748.html

ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளி சுப்பிரமணிய சுவாமியை விசாரிக்கக் கோரி வழக்கு: திருச்சி வேலுச்சாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் உண்மைக் குற்றவாளி சுப்பிரமணிய சுவாமியை விசாரிக்கக் கோரி இந்தியத் தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று வியாழக்கிழமை திருச்சி வேலுச்சாமி வெளியிட்ட அறிக்கை:

"வாடிய பயிரைக்கண்டு வாடும் நெஞ்சம் வேண்டும்" என்ற வள்ளலாரும், பற்றிப் படர கொழுகொம்பின்றி தவித்த முல்லைக் கொடிக்காக, தான் ஏறிவந்த தேரையே கொடிபடர நிறுத்தி விட்டுப் போன பாரிவள்ளல் போன்றோரும் பிறந்து, தவழ்ந்து, வாழ்ந்த புண்ணிய பூமிதான், நமது தமிழ் மண்.

இந்த மண்ணில் நவீன விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகத்தரத்திற்கு இந்தியாவை உயர்த்திக் காட்டிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு பதறித்துடிக்காதவர்கள் எவரும் இலர்.

தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள தாய்மார்கள் கூட, தங்களது சொந்த பிள்ளை மரணமடைந்ததைப்போல் துக்கத்தில் தவித்ததை நாடறியும்.

தமிழ் மக்களை நேசித்த இளம் தலைவர் ராஜீவ் காந்தி மறைந்து ஏறத்தாழ 17 ஆண்டுகள் கடந்தும் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படாததும், சதிகாரர்கள் கண்டறியப்படாததும் இந்த தேசத்தின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்.

இந்தியர்கள் அனைவருக்கும் மாபெரும் அவமானம்.

இந்த படுகொலையின் காரணமாக பல அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர் என்பது கசப்பான உண்மை.

ஆனால், அந்தக் கொலைச்சதியில் சம்பந்தப்பட்ட சதிகாரர்களில் சிலர் அரசின் பாதுகாப்போடு மகிழ்ச்சியாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

ராஜீவ் படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட குள்ள நரிக்கூட்டம், தங்களின் சாமர்த்தியத்தால் ஒரு சிலரை "பலிக்கடாவாக்கி விட்டு" வழக்கை முடித்துவிட நினைத்தது.

நல்லவேளையாக அப்படி நடைபெறவில்லை.

தமிழர்களின் மீது விழுந்த இந்தப்பழி இன்றளவும் நிலைக்க, தமிழினப் பகைவர்களும், ஏகாதிபத்திய சக்திகளும் காரணமாக இருந்தாலும் ஒருசில தமிழகத் தலைவர்களின் சுயநலமும் காரணம் என்பதனை மறுக்க முடியாது.

குஜ்ரால் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசில் தி.மு. கழகத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அங்கம் வகித்தபோது, தலைவர் ராஜீவின் கொலைக்குக் காரணமான தி.மு. கழக அமைச்சர்களை நீக்காவிட்டால், ஆட்சியைக் கவிழ்ப்போம், என்று எச்சரித்த காங்கிரஸ் சொன்னபடியே அந்த ஆட்சியைக் கவிழ்த்தது.

அதே காங்கிரஸ்தான் இப்போது தனது தலைமையில் நடைபெறுகின்ற மத்திய அரசில் தி.மு.கழகத்தை சேர்ந்த ஏழு பேர்களை அமைச்சர்களாக வைத்திருக்கிறது.

ராஜீவ் கொலைச் சதியில் முக்கிய பங்கு வகித்தவர், முப்பனார் என்று முன்னாள் பிரதமர் நரசிம்மராவை மேடையில் வைத்துக் கொண்டே சேலத்தில் ஆவேசமாக குற்றம் சாட்டிப் பேசியவர் ஜெயலலிதா.

அடுத்த தேர்தலில் மூப்பனாரை மேடையில் வைத்துக்கொண்டு அவரை ஜெயலலிதா பாராட்டிப் புகழாரம் சூட்டியதையும் மறக்கமுடியாது.

ராஜீவின் கொலைச் சதியில் பெரும்பங்கு ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. அவரை விசாரிக்க வேண்டும், என்று ஜெயின் ஆணையத்தில் பிரமாண வாக்குமூலம் அளித்தவர் சுப்ரமணிய சாமி.

குள்ளநரி புத்தி கொண்ட மோசடிப் பேர்வழி சுப்ரமணிய சாமி. அவரை நம்பாதீர்கள் என்று சொன்னவர் ஜெயலலிதா. ஆனால், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்க வந்த புரட்சித்தலைவி என்று ஜெயலலிதாவை சுப்ரமணிய சாமியும், உலகப்பொருளாதார மேதையாக விளங்குகின்ற அறிவுஜீவி சாமி என்று புகழாரம் சூட்டிக் கொள்வதோடு அடிக்கடி விருந்துண்டு மகிழ்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலுக்கு சில தலைவர்கள் துணைபோனதால் ராஜீவ் கொலையில் உண்மையைக் கண்டறியும் விசாரணையில் தொய்வு என்பதனை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

இந்த கடந்த காலத்தவறுகளைக் களைந்து விட்டு பொறுப்பான சில பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

இந்த கோரக்கொலையின் வாயிலாக தமிழ் இனத்தின் மீது களங்கமும், தீராப்பழியும் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை.

தமிழினத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற கறையைத் துடைக்க வேண்டுமானால், உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். அது இன்றைய தலைமுறைத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும்.

அன்மையில் தர்மபுரி காவல் நிலையத்தில் திருட்டுபோன துப்பாக்கிகள் வாழைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வந்தது.

ஆனாலும், உண்மையைக் கண்டு பிடிக்க பலரை உண்மை கண்டறியும் கருவியில் பரிசோதித்தார்கள் என்ற செய்தியும் வந்தது.

உயிரோ, உணர்ச்சியோ இல்லாத துப்பாக்கிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையை இந்திய தாயின் மதிப்பு மிக்க மைந்தன் ராஜீவின் படுகொலைக்கு காரணமானவர்களை ஏன் உட்படுத்தப்படவில்லை?

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஜெயின் ஆணையத்தில் நான் ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை சுமத்திய சுப்ரமணிய சுவாமிக்கு எதிரான பிரமாண வாக்குமூலத்தை அளித்துள்ளேன்.

ராஜீவ் கொலைக்கு பெரிய அளவில் துணை போனவர்கள் என்று அன்னை சோனியாவையும், அவரது தாயாரையுமே சொல்கிற அளவுக்கு சுப்ரமணிய சாமிக்கு திமிர் எப்படி வந்தது.

காலம் கடந்தாலும் இப்போதாவது எல்லோருடைய சந்தேகப்பார்வையின் மையப்புள்ளியாய் விளங்குகின்ற சுப்ரமணிய சாமியை உண்மை கண்டறியும் கருவியில் பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் வற்புறுத்துகிறேன்.

இதில் உள்நோக்கம் எனக்கு இருப்பதாக யாரும் நினைத்தால், முதலில் என்னை பரிசோதிக்கலாம்.

இந்த நியாயமான எனது கோரிக்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

மத்திய அரசு எனது கோரிக்கையை நிராகரிக்குமானால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேலுச்சாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.puthinam.com/

இணைப்பிற்கு நன்றிகள் சின்னக்குட்டி அண்ணன்.

இலங்கை அரசுக்கு அளவுகடந்து இந்திய ஆழும் வர்க்கம் ஏன் உதவி செய்கின்றது? குறிப்பாக சுப்பிரமணியசுவாமி ஜெயலலிதா சோ ராமசாமி இந்து ராம் போன்ற ஆரியர்கள் ஏன் இலங்கை அரசில் அதிக பாசம் கொண்டுள்ளனர் என்பதற்கும் இந்த இணைப்பின் இறுதிப்பகுதியில் விடை கிடைக்கின்றது. சிங்களவரகள் தம்மை ஆரியர்கள் என்று புனைக்கதைகள் மூலம் பரப்பினார்கள். அதையே இன்று இந்திய ஆரியம் ஏற்றுக்கொண்டு சிங்களத்துடன் ஒன்றுசேர்ந்து விட்டது. ஈழத்தில்வாழும் இந்துக்களுக்காகவும் ஏன் இந்திய இந்துத்துவம் குரல்கொடுக்காமல் அவர்களை ஒழிப்பதற்கு துணைபோகின்றது என்பதும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றது. இலங்கை அரசு நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களை இலங்கை படைகள் கொல்லும் போதும் இந்திய அரசு இலங்கையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் அடிப்படைக்காரணம் கொல்லப்படுபவர்கள் யாரும் ஆரியர் கிடையாது என்பதே. ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டாலும் ஏனையவர்கள் கொல்லப்பட்டாலும் அவர்கள் ஆரியர்கள் கிடையாது. இவ்வாறான ஒரு எண்ணப்பாடு இந்திய ஆரிய ஆழும் வர்க்கத்திடம்ஆழமாக வேருன்றி உள்ளதையே சிங்களவர்களை ஆரியர்களாக ஏற்றுக்கொண்டு கைகோர்த்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. இந்த நிலமையில் சைவத்தை துறந்து இந்துக்கள் என்று வாழும் புலம்பெயர்ந்த ஈழத்து மக்களின் நிலை என்ன? ஆரியம் பார்பனியம் பிராமணியம் என்ற உடன் இங்கே துள்ளிக்குதிப்பவர்களின் நிலை என்ன? திராவிடம் ஆரியம் என்றதை தாண்டி தமிழர்கள் என்று பூசி மொழுகும் சக்திகள் ஆரிய சக்திகளின் இந்த மோசடிகளுக்கு என்ன சொல்லப்போகின்றார்கள்? இந்தியாவின் இந்துதுவம் என்பது ஈழத்தில் தம்மை இந்துக்கள் என்னும் மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரியத்தின் அடிப்படையில் சிங்களவர்களையே தமது கூட்டாளிகளாக ஏற்று தமிழர்களை இந்துக்கள் என்பதையும் தாண்டி சிங்களத்துடன் சேர்ந்து அழிக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்புரமணியசுவாமிக்கும் வேலுச்சாமியாருக்கும் என்ன பிரச்சனயோ? ஆண்டவா எல்லாம் உன் விளையாட்டு.

அவனின்றி ஒர் அணுவும் அசையாது.

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் வேலுச்சாமி உண்மையை சொன்னார் போகட்டும் விடுங்கோ . எப்போ சூனாசாமி உண்மையைகதைப்பாராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.