Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா அரசு வேறு தரப்பிடமிருந்து ஆயுதங்கள் பெறுவது எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம்: எம்.கே.நாராயணன்

Featured Replies

சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாராயணா! அது என்ன வலிந்ததாக்குதல் ஆயுதங்கள் மனிதர்கள் இல்லாமல் தாமே வலிந்து தாக்குவனவா?

நாமம் போடப் பார்க்கிறார். :huh::)

இந்தியா முழு ஒத்தாசையும்செய்யும் போதே சீனவிடம் இருந்தும் பாக்கிஸ்த்தானிடம் சிறிலங்கா ஆயுத உதவிகளைப் பெறுகிறது. நிலமை அப்படி இருக்கும் போது உந்த நாரயாணன் சொல்லும் காரணக்கங்கள் முழுப்பொய்களாக இருக்கின்றது.இந்தியா ஏன் உதவுகிறது என்பதற்கான உண்மையான காரணத்தை சிறிலங்காப் பிரதமர் இசுரேலில் வச்சுச் சொல்லி இருக்கிறார்.

//

இலங் கைத் தமிழர்களுக்கென தனியான நாடொன்று உருவாவதற்கு இந்தியா ஒரு போதும் அனுமதிக்கா’தென தற்போது இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஜெரூஸலத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு என தனிநாடொன்று அமைவது இந்தியாவில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் புதுடில்லி அதற்கு அனுமதிக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். //

தமிழ் மக்களை கௌரவமாக இலங்கை நடத்த வேண்டுமென இந்தியா விரும்புவதாக தெரிவித்திருக்கும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், கொழும்பின் ஆயுதக்கொள்வனவு தொடர்பாகவும் கவலை தெரிவித்திருக்கிறார்.

யுத்த நிறுத்தம் சீர்குலைந்ததால் ஏற்படும் நிலைமையை நாம் எதிர் கொண்டுள்ளளோம். இதுவொரு முக்கியமான கட்டத்துக்கு இட்டுச்செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறுபான்மையினரை கௌரவத்துடன் இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

ஆனால், இலங்கை அரசு எந்தவொரு அதிகாரப்பகிர்வுமின்றி இராணுவ வெற்றியென்ற ஒNரு நோக்கத்தை கொண்டதாகவே தென்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்தில் இந்தியா கொண்டிருக்கும் முன்னணியான நிலைமையை நாம் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இலங்கை வேறெங்கும் ஆயுதக் கொள்வனவு மேற்கொள்வதற்காக செல்வதை விட்டுக் கொடுக்க முடியாது, எவ்வளவுக்கு நாம் இராணுவ உதவியை வழங்க வேண்டும் என்றும் எவ்வளவு தூரம் நாம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் தேசிய கருத்தொருமைப்பாடு எமக்குத் தேவையானதாகும் என்றும் நாராயணன் கூறியுள்ளார்.

அதே சமயம் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இந்தியா பயிற்சி அளித்து வருகின்றது. ஆயினும் நாசகார ஆயுதங்களை வழங்குவதற்கு மறுத்திருக்கிறது.

நன்றி தினக் குரல்

இவருக்கு கவலை தமிழ் மக்கள் கொல்ல படுவது பற்றி இல்லை கொல்லும் ஆயுதத்தை தன்னிடம் வாங்கவில்லை என்று தான் :mellow::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் தோற்கடிக்கும்

இராணுவ முனைப்பில் மட்டுமே தீவிரம்

அதிகாரத்தைப் பகிருகின்ற சிந்தனை

இலங்கைக்குக் கிஞ்சித்தும் கிடையாது

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு

ஆலோசகர் நாராயணன் விசனம்

""இலங்கை அரசுக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சிந்தனையேயில்லை. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்குடன் மாத்திரமே செயற்படுகிறது.''

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் எம்.கே. நாராயணன் இப்படிக் குறைகூறியிருக்கின்றார்.

புதுடில்லியில் நினைவுப் பேருரை ஒன்றை ஆற்றுகையிலேயே எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்தார் என இந்திய செய்தி ஸ்தாபனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கை அரசு சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களை கௌரவத்துடன் நடத்தவேண்டுமென இந்தியா விரும்புகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதிகாரங்களைப் பகிராமல் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமென்ற ஒரேயொரு நோக்கமே இலங்கை அரசிடம் உள்ளது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வேறு நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதால், பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலைக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் எம்.கே. நாராயணன் அங்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எவ்வளவு இராணுவ உதவிகளை வழங்கலாம், அதற்கு எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுக்கலாம் என்பவை தொடர்பாக இந்தியாவில் கருத்தொருமைப்பாடு ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வைக் காணும் முயற்சிகளை இந்தியா எதிர்ப்பதுடன், கொழும்பு சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று வேண்டுகோளும் விடுத்து வருகின்றது.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சிகளை அளித்துவரும் அதேவேளை, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை வழங்குவதையும் தவிர்த்துள்ளது.

http://www.sudaroli.com/pages/news/today/01.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.