Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்குக் கண்ணோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குக் கண்ணோட்டம்

கிழக்கு இலங்கை, விடிந்து விட்டதாக கருதும் கொழும்பு அரசு ,கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாக விரட்டப்பட்டுவிட்டதாக பறைசாற்றி கொண்டு ,சர்வதேசம் எங்கும் சிங்கக்கொடியோடு மார்தட்டி வலம் வருகிறது.

கிழக்கின் முக்கிய பகுதிகள், நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் தான் இருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகளின், மூத்த முக்கிய தளபதிகளில் ஒருவரான, கிழக்கிற்கு பொறுப்பாக இருந்த கருணா அம்மானுக்கும், விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உள் முரண்பாடு காரணமாகவே கிழக்கில் விடுதலைபுலிகளின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் கடும் சிக்கல்களுக்கு உள்ளாகி இருந்தன. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக கையாள துவங்கியது.அதிலிருந்து கிழக்கில் நிலமை மேலும் சிக்கலுக்குள்ளானது.இதன் பின்னணியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் நாளாந்தம் பலமிழந்தன..

இதனால் கிழக்கில் படையினரை எதிர்த்து போரிடமுடியாமல் விடுதலைப்புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக பின்வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த பின்வாங்கல் குறித்து விடுதலைப்புலிகள் தாங்கள் தந்திரோபாயமாக பின் நகர்ந்திருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள்.இது ஒரு புறம் உன்மையாக இருக்கலாம்? ஆனால் மறுப்புறத்தில் இதன் அனுமானம் எப்படியோ தெரியவில்லை..

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணா அணியின் பக்க பலத்தோடு கிழக்கின் முழுப்பகுதியையும் இலங்கை இராணுவம் பூரண கட்டுபாட்டில் இப்போது வைத்திருகிறது. இச்சந்தர்ப்பத்தில் கிழக்கில் கருணா அமைப்பு சிறுவர்களை தொடர்சியாக படையணிகளில் வல்வந்தமாக சேர்ந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் பல அந்த அமைப்பின் மீது குற்றம் சாட்டி வந்தன.

இதன் பின்னணியில் கடந்த காலங்களில் கிழகில் அந்த அமைப்பின் செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருந்தன. இதை தொடர்ந்து கருணாவுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர் கிழக்குக்கான பொறுப்பை எடுத்திருந்தார். இதேவேளை சட்டவிரோதமான வீசா மோசடி மூலம் பிரித்தானியாவுக்குள் கருணா நுளைந்துள்ளதாக அறிந்து கொண்ட பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் அவரை கைதுசெய்திருந்தனர்.

அவர் இப்போது பிரித்தானியாவில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது அந்த அணியை அதன் தலைவர் பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ன பெயரால் வழிநடத்துகிறார்.

கிழக்கு பிராந்தியத்தில் அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலும் அந்த அமைப்பு முழுமையாக செயற்பட்டுவருகிறது. இதற்கு இலங்கை அரசங்கம் தனது பூரண ஆசீர்வாத்தத்தை வழங்கி, தமிழர்களைக் கொண்டு தமிழர்களின் போராட்டத்தை நசுக்கின்ற வேலைகளில் புத்தி சாதுரியமாக செயற்படுகிறது.

இந் நிலையில் துண்டாடப்பட்ட கிழக்கு மாகணத்தில் மட்ட்க்களப்பு மவட்டத்தில் அண்மையில் உள்ளுராட்சி தேர்தலையும் அது நடத்திமுடித்து விட்டது. அரசு இப்போது மாகணசபைத் தேர்தலுக்கான திகதியையும் அறிவித்துவிட்டது. அங்கு கடமையிலிருந்த விசேட அதிரடிப்படையினரின் தொகையையும் கணிசமான அளவு குறைத்துள்ளது. கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்குரிய முஸ்தீபுகள் அனைத்தும் வேகமாக இடம்பெற்று வருகின்றன.

பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பில் கட்சிகளுக்கு உள்ளும் கட்சிகளிகளுக்கு வெளியிலும் பரிசீலணைகளில் ஈடுப்பட்டு வருகின்றன.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு நடத்த முன்வந்ததன் மூலம் வடகிழக்கு இணைப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு நிலமையை மேலும் சிக்கலுக்குள் தள்ளும் நிலையை தோற்றுவித்துள்ளது.

இதன் மூலம் கிழக்கில் விடுதலைப்புலிகளின் வன்னித் தலைமைக்கு எதிராக ஒரு பலமான தமிழர் படையணி ஒன்றை உருவாக்குவதே, இதன் மறைகுக நோக்கமாக இருக்கலாம் .

இதுவே இலங்கை அரசுக்கு எதிர்காலத்தில் பாரிய தலைவலியாக கூட மாறலாம். எந்த கோணத்தில் இதை ஆராய்ந்தாலும் தனித்த கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் தமிழர்களை பொருத்தவரையில் அர்த்தமற்றதொன்றாகவே நோக்கப்படுகிறது.

இவ்விடயத்தில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், பிரிக்கபட்ட கிழக்கு மாகணசபைக்கான தேர்தலை மனப்புர்வமாக ஏற்று கொள்வார்கள் என நம்ப முடியாது. பொதுவாக சொன்னால் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில், தேர்தல்

வீரகேசரி இணையம் 4/1/2008 11:27:59 AM -

வரும் மே 10 இல், இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகானசபைக்கான தேர்தல், பல மில்லியன் ரூபாய்களை நாசம் செய்யப்போகிறது.

இத்தேர்தலுக்கு செலவிடப்படும் தொகை ,250 மில்லியன் ரூபாய்க்கும் மேலானது என தேர்தல்கள் திணைக்களம் கணக்கிட்டுள்ளது. இந்த தொகையை பெறுவதற்கான அறிக்கையை தேர்தல்கள் திணைக்களம் திறைசேரியிடம் அண்மையில் கையளித்திருந்தது.

தேர்தல் ஒன்று வந்தால், மில்லியன் கணக்கில் பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்.இது ஒன்றும் யாருக்கும் புரியாத புதிர் அல்ல. தேர்தல் ஒன்று வந்தால் நிச்சயம் மாறுதல் ஒன்று வர வேண்டும்.

மக்கள் எதிர்பார்ப்பது அதைதான். மாறுதல் வராத ஒரு தேர்தலை மக்கள் ஒருப்போதும் வரவேற்கமாட்டர்கள். தேர்தல்களின் போது, மக்கள் தாங்கள் விருபியர்களுக்கு வாக்களிக்கும் அவர்களது அடிப்படை உரிமை மறுக்கப்படால், எந்த வகையிலும் அது ஒரு ஜனநாயக தேர்தலாக அமையாது.

ஆயுதம் என்ற பதம், உயிர் குடிக்கும் கருவியாக மாத்திரம் நோக்கப்படுவதில்லை, மாறாக மக்களின் அடிப்ப்படை உரிமைகளுக்கு விலங்கு பூட்டும் ஒரு கருவியாகவும் பார்க்கப்படுகிறது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரச்சாரசுதந்திரம் போன்றவற்றை, தனி நபர்களோ அல்லது குழுக்களோ காவிக்கொள்ளும் ஆயுதங்கள் கட்டுப்படுத்த கூடியவை .

ஒரு நாட்டில் அல்லது தேசத்தில், ஆயுதங்களை கையாளுவது தொடர்பில், சட்ட திட்டங்கள் வரையறைகள் இருக்கின்றன. இறைமையுள்ள ஒரு ஜனநாயக நாட்டில், போர் ஆயுதங்களை தரித்திருக்கும் உரிமை, அந்நாட்டு இராணுவத்துக்கு மாத்திரமே உரித்துடையது.

சட்டபூர்வமற்ற விததில், வேறு எந்த நபரோ அல்லது குழுவோ ஆயுதங்களை வைத்திருக்கலாகாது. ஆனால், தேசத்தில் ஓர் இனத்தின் விடுதலை என்ற அடிப்படையில் ஒப்பிட்டால், ஒரு போராட்ட அமைப்பு ஆயுதங்களை வைத்திருப்பதை, தவறான கோணத்தில் பார்க்க இயலாது.

நாட்டின் தேச வளமைச்சட்ட திட்டங்கள் இவற்றை நிராகரித்தாலும், யதார்த்தத்தை புறந்துள்ள முடியாத சூழ் நிலை ஒன்று உள்ளது. இலங்கை நிலைவரமும் அப்படித்தான்.

இனத்திற்கான விடுதலை என்ற கொள்கைக்குள், கருத்து ரீதியான புரள்வுகள் ஏற்பட்டால், அந்த இனத்தின் விடுதலை எனபது கானல் நீராகவே காணப்பெறும்.

கானல் நீர் காட்சிகளை கண்டு மனங்குளிராமல், ஒற்றுமையே எங்கள் பலம் என்ற கூட்டுக்குள் எல்லோரும் ஒன்றுப்படுங்கள். இலங்கை தேசத்தில், தமிழ் முஸ்லிம் உறவு என்பது, அவர்களின் தாயகப்பகுதியான வடகிழக்கில், நீண்டகால வரலாற்றுப் பிணைப்பைக் கொண்டது. இந்த வரலாற்றுப் பிணைப்பில் ஏற்கனவே ஒரு சிறு கீறல் விழுந்ததுள்ளது.

இதன் விளைவுகளை சம்பந்தப்பட்ட சிலர், இப்போது நன்கு அனுபவித்து வருகிறார்கள். இனி மேலும் இப்படியான விசும்புகளை ஏற்படுத்தாமல், தமிழ் முஸ்லிம் சமூகத்தை சரியான பாதையில் நகர்த்திச் செல்லும் பொறுப்பு தமிழ் முஸ்லிம் தலைமைகளை சார்ந்தது.

உலக்கை தேய்ந்து உழிப்பிடியானது போல், தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான தீர்வுகளும், அமைந்து வருவதை யாவரும் நன்கு அறிவீர்கள். இப்போது வட கிழக்கு துண்டாடப்பட்டுள்ளது,

நாளை மாவட்டங்கள் துண்டாக்கப்படலாம், நாளை மறுதினம் பிரதேசங்கள் துண்டாடப்படலாம்,யதார்த்த நிலைவரங்கள், இவற்றைதான் தமிழ் பேசும் மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றன.

இந்நிலையில், வரப்போகும் கிழக்குமாகாணத்திற்கான தேர்தல், தமிழ் பேசும் மக்களுக்கு எந்தவித விமோசனத்தையும் பெற்றுதரபோவதில்லை, தமிழ் பேசும் சக்திகள், ஒன்று பட்டால் மாத்திரமே உறிதியான தீர்வை வலியுறுத்தமுடியும். பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில், தேர்தல் இடம்பெறுவது இந்தியாவை அவமதிக்கும் செயல் என்பதோடு,இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் அபிலாசைகளையும் இலங்கை அரசு நிராகரித்துவிட்டதாகவே பார்க்கலாம்.

காலங்கடந்த பின்பு, இலங்கை அரசு பெறுகின்ற அரைகுறையான அரசியல் ஞானங்கள், சுத்த சூனியமானவை என்பதை, அது கால ஓட்டத்தில் விரைவில் உணர்ந்து கொள்ளும்.

திம்பு முதல் ஜெனிவா வரை தொக்கி நிற்கும் பேச்சுக்குள், அர்த்தபுஷ்டி அற்றவை என்பதை , கிழக்கில் இடம்பெறபோகும் தேர்தல் தெளிப்படுத்தி நிற்கிறது.

அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற, கடந்த கால பேச்சுக்கள் கூட வெறும் வெற்றான வெட்டிப்பேச்சுக்கள் தான் எனபதை நடக்க போகும் நாடகங்கள் நிதர்சனமாகுகின்றன.

கிழக்கில் தேர்தல் இடம்பெறுவதை பலர் எதிர்க்கின்ற போதும் எதிர்ப்புக்களையும் மீறி தேர்தல் இடம்பெற்றால் காலக் கிரமத்தில் அதனால் ஏற்பட போகும் விளைவுகளையும் இலங்கை அரசு தானே அனுபவிக்க நேரிடும்.

இவை எல்லவற்றுக்கும் மேலாக, தேர்தல் மக்கள் மீது தினிக்கப்பட்டால், அதை எதிர் கொள்வது கிழக்கு மாகாண மக்களை பொருத்தவரையில் காலத்தின் கட்டாயமாகும் .

எனவே கிழக்கு தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா பணம் கிழக்கில் களைகளை வளர்பப்தர்கே செலவாகப்போகிறது எனபது திண்ணம்.ஒரு கணம் சிந்தியுங்கள்.

ஆக்கம் வீரகேசரி இணையம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் - அரச கூட்டணியின் முதன்மை வேட்பாளராக பிள்ளையான்!

[ காந்தள் ] - [ மார்ச் 31, 2008 - 10:16 PM - GMT ]

கிழக்கு மாகாணசபைக்கு நடைபெற்றவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக ஒட்டுப்படைக் கும்பல் ஒன்றின் தலைவரான பிள்ளையான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் தலைமை வேட்பாளராக பிள்ளையான் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.eelatamil.net/index.php?option=...4&Itemid=67

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.