Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக வன்முறை. ரஜனியை எச்சரித்தார் சத்தியராஜ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட அமைப்புகளுக்கு எதிராக 4ம் தேதி தமிழ் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

சென்னை: கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வன்முறையில் ஈடுபட்ட கன்னட அமைப்பினருக்கு தமிழ்த் திரையுலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து வரும் 4ம் தேதி சென்னையில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் நேற்று கன்னட அமைப்பினர் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதுதவிர மைசூர் உள்ளிட்ட சில இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.

கன்னட அமைப்பினரின் இந்தச் செயலால் தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து இன்று அவரசமாக கூடி ஆலோசனை நடத்தப்பட்டது.

அண்ணா சாலையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி, தயாரிப்பாளர்கள் கோவை தம்பி, காஜா மைதீன், கே.ஆர்.ஜி, அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன், சிவா, அழகன் தமிழ்மணி, கே.சீனிவாசன், சேகர் பெப்சி உமா சங்கர், குணா உள்பட நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர், பெப்சி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கன்னட அமைப்பினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர்களை கண்டித்து பெங்களூர்-ஒசூர் எல்லையில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என சிலர் யோசனை தெரிவித்தனர்.

ஆனால், இது இரு மாநிலங்களிடையே பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் எல்லைப் பகுதியை தவி்ர்த்துவிட்டு சென்னையிலேயே உண்ணாவிரதம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் வரும் 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) சரத்குமார் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடக்கவுள்ளது.

இந்த உண்ணாவிரதம் தவிர பல அடுக்கு தொடர் போராட்டங்களை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திரைப்படங்களும் ரத்து-சரத்குமார்:

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஏப்ரல் 4ம் தேதி நடக்கும் இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். போராட்டம் நடைபெறும் இடம் காவல்துறையினருடன் விவாதித்து விட்டு அறிவிக்கப்படும்.

போராட்டம் நடைபெறும் நாளின்போது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெறாது. டப்பிங் பணிகள் ரத்து செய்யப்படும் தியேட்டர்களில் படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்படும்.

உண்ணாவிரத்தில் பங்கேற்காவிட்டால்...:

அனைத்து நடிகர், நடிகைகளும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கும் கலைஞர்களுக்கு திரைத் துறையின் எந்த சங்கமும் ஒத்துழைப்பு தராது. இது திரையுலகின் ஒருமித்த முடிவு என்றார்.

இது ரஜினிக்கும் பொருந்தும்.. சத்யராஜ் ஆவேசம்:

அப்போது செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்த்துக்கும் இந்த போராட்டம் பொருந்துமா என்று கேட்டபோது குறுக்கிட்ட நடிகர் சத்யராஜ், தமிழ்நாட்ல இருந்துக்கிட்டு, தமிழனோட சோத்தை திங்கிறவன் அத்தனை பேரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். இல்லைன்னா அவர்கள் இங்கே இருக்கவே முடியாதுங்க என்றார் ஆவேசமாக.

ஏற்கனவே நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரிப் பிரச்சினையில், பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் மாபெரும் போராட்டத்தை நடிகர் சங்கம் நடத்தியது நினைவிருக்கலாம்.

அந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் திரண்டு வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அதில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

ஆனால், அர்ஜூன் உள்ளிட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்திலோ அல்லது ரஜினியின் உண்ணாவிரதத்திலோ பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/04...st-kannada.html

(தவறுதலாக இங்கு பதிவாகிவிட்டது. உரியவர்கள் இதை சினிமா அல்லது உலகம் பகுதிக்கு நகர்த்தி உதவவும்.)

Edited by nedukkalapoovan

காலையில நான் ரஜனி பற்றி எழுதினன் என்டுதான்

எனது கருத்தை வெட்டினவை..

இப்ப என்ன பண்ணுவீங்களாம்? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலையில நான் ரஜனி பற்றி எழுதினன் என்டுதான்

எனது கருத்தை வெட்டினவை..

இப்ப என்ன பண்ணுவீங்களாம்? :wub:

இது என்ர கருத்தில்லையே. அவை என்ன பண்ணுவீனமாம்..! :wub::wub:

கடைசியாக அந்த மனுசன் இமய மலையில் தான் போய் செட்டில் ஆகனும் போல்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒதுங்கி போனாலும் விட மாட்டேங்கிறாங்களே...

ரஜினிக்கு செக்.....

ரஜனிக்கு ஆபத்தென்றால் காப்பாத்த தமிழகத்தை ஆளுற கிழடு விடுட்டுவிடுமா?

அதுதானே காவேரி பிணக்கின்போதும் ரஜனிக்கு கைகொடுத்து உண்ணாநோன்பு நாடகத்தை அரங்கேற்ற உதவினது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் ரஜினிகாந்த் இதில் கலந்து கொள்வாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் கலந்து கொள்வார்கள். கலந்து கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று தெளிவாக அறிவித்தார் சரத். சிலர் வெளிநாடு சென்று விட்டால்? என்று கேட்கப்பட்ட அடுத்த கேள்விக்கு, அவர்கள் திரும்பி வராமல் அங்கேயே இருக்கட்டும் என்று சத்யராஜ் பதிலளித்தார். இதன் மூலம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது நடிகர்கள் ரஜினி, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான்.

இந்த அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக ரஜினிக்கு தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சற்று அதிர்ச்சிக்குள்ளான அவர், நேற்று இரவே ஒரு அறிக்கையை பத்திரிகைகளுக்கு வழங்கப் போகிறார் என்ற வதந்தியும் பரவியது. இதையடுத்து தின இதழ் நிருபர்களிடம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, அறிக்கை வந்ததா? என்று கேள்வியெழுப்பி கொண்டிருந்தார்கள் பிற நிருபர்கள். நள்ளிரவு வரை காத்திருந்த நிருபர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த முறை, கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட கண்டன பேரணியில் கலந்து கொள்ளாத ரஜினி, தனியாக ஒரு உண்ணாவிரதத்தை நடத்தி, எல்லா நடிகர்களின் டெபாசிட்டையும் காலி செய்தார். இந்த முறை அந்த தந்திரம் பலிக்காது என்று முணுமுணுக்கிறார்கள் திரையுலகத்தில்.

ஆனாலும், 4-ந் தேதி ரஜினி வருவார். மின்னல் வேகத்தில் வந்து சில முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அதே வேகத்தில் திரும்பி விடுவார் என்று ஹேஷ்யம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 48 மணி நேரமே இருக்கிறது உண்ணாவிரதத்திற்கு.

ரஜினி கவுன்டவுன் ஸ்டார்ட்...

tamilcinema.com

இனியாவது தமிழக மக்களுக்கு ரோசம் வருமா என்றால்? ...ம்ம்.. பழைய பல்லவிதான்!!

தமிழகத்தில் பெயருக்குத்தான் தமிழ் அரசு! மற்றும்படி சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது கர்நாடக்காரனும், மலையாளீயும், வடக்கனும்தான்!!!

நாளைக்கு ரசனியும் புதுப்படம் வர எல்லாம் சரி!! கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை தலைகீழாக நின்று வாழ்த்தத்தான் போகிறார்கள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்குத்தான் தமிழ் சினிமா.

நடிக்கிறவங்க.. ஆண்கள் சரி பெண்கள் சரி.. பாடுறவங்க எல்லாரும் அண்டை மாநிலத்து ஆக்களா இருக்கே. இப்படி ஏதாச்சும் சம்பவங்கள் நடந்தாத்தான் தமிழன்ர நிலையை அறிய முடிகிறது.

பிரகாஷ் ராஜ்.. அர்ஜுன்.. முரளி.. பிரவுதேவா.. என்று எல்லாரும் கன்னடா இருக்கினமே. பாலசுப்பரமணியம் தொடங்கி எல்லாரும் வெளி மாநிலத்தவரா இருக்கினம்.

அப்பாவி தமிழ் ஏழை மக்களிடம் சினிமா பசியைத் தூண்டி அதுகள் சம்பாதிக்கிற ஐஞ்சு பத்தையும் சுருட்டி அதில யாரு வளர்ந்திருக்காங்க... என்று பார்த்தாக்கா... பிரமிப்பா இருக்குது. இதுதான் தமிழனின் நிலையா..??! :D:wub::D

தமிழ் நாட்டை ஆள ஒரு அண்டை மாநில நடிகை ஜெயலலிதா.. தெலுங்குப்(?) பூர்வீக கருணாநிதி.. இப்படி... தமிழன் என்ன தரக்குறைவானவனா..??! தமிழனை தமிழன் ஆண்டிருந்தா ஈழத்தில் தமிழன் துன்பப்பட விட்டிருப்பானா..??! :D:)

Edited by nedukkalapoovan

உங்கள் பலரது ஆதங்கங்கள் நியாயமே....! அதுக்கா யார் யார் இன்ன இனம் என்று குத்தி காட்டாதீர்கள்...! இந்தப் போராட்டத்தில் அனைத்து தமிழ் திரையுலகமும் கலந்து கொள்வது கடமை...பார்ப்போம் என்ன நடக்கப்போகின்றது என்ட்ரு..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.