Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புனிதத்தலத்தை போர்க்களமாக்கும் சிங்கள அரசு: பா.நடேசன் குற்றச்சாட்டு

Featured Replies

கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மடு திருப்பதியை போர்க்களமாக மாற்றுவதாக விடுதலைப் புலிகள் கண்டனம்

மடு திருப்பதியை, சிறீலங்கா அரசாங்கம் போர்க்களமாக மாற்றுவதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து, இன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது:-

“கிறிஸ்துவ மக்களின் புனிதத்தலமான மடுத்தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது, சிங்களப் படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு ஒரு யுத்த பூமியாக மாற்றி வருகின்றன.

போர் மரபுகளின்படியும், ஐ.நா சாசனங்களுக்கு அமைவாகவும், போர் செய்யாது தவிர்க்கப்பட வேண்டிய இந்தப் பகுதி மீது, எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி, தனது இராணுவத்தை ஏவிவிட்டிருக்கும் சிறீலங்கா அரசின் இச்செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பிடமாக இருந்துவரும் மடு புனித ஆலயப் பகுதியை, போர்க்களமாக மாற்றியுள்ள சிங்கள அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமானது.

1998இல் மடு ஆலயப்பகுதிக்குள் நுழைந்த சிங்களப் படைகள், தமது யுத்த டாங்கிகள் மூலம் நடத்திய குண்டுத்தாக்குதலில், ஆலய மண்டபத்துள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள் - முதியோர் - பெண்கள் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோன்று கடந்த 29.02.2008 அன்று, மடு புனித வளாகப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளிச்சிறார்களின் பேருந்து மீது, சிறீலங்கா படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில், பள்ளிச் சிறுவர்களும், பொதுமக்களுமாக பதினெட்டுப் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்து வரும் சிங்களப் படைகள், அந்த மக்கள் மீது மீண்டும் ஒரு அவலத்தை சுமத்தி உள்ளன. முன்னரைப் போன்று இப்பொழுதும், மடு புனித தலப்பகுதியை ஒரு இராணுவ வலயமாக்க சிறீலங்கா அரசு முனைகின்றது.

பௌத்த மக்களின் மன அமைதி குறித்தும், பௌத்த மதத் தலங்களின் புனிதம் குறித்தும் அக்கறை செலுத்தி வரும் சிறீலங்கா அரசு, ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களின் அமைதியையும், புனிதத்தையும் புறந்தள்ளிவிட்டு, தனது இராணுவ நலனை முன்னிறுத்திச் செயற்படுவதை கண்டிக்க, சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் முன்வர வேண்டும் என, புலிகள் இயக்கம் கேட்டுக் கொள்கின்றது."

இவ்வாறு, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விடும் அறிக்கைகளும் செய்திகளும் இப்போது சிறிலங்கா அரசுக்கு கேட்காது. அதை நிறுத்திவைத்துவிட்டு மேலும் மேலும் தமிழர் தாயகத்தின் நிலங்களை சிங்கள இராணுவத்திடம் பறிகொடுக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் உத்திகளையும் தேடுங்கள், செயலில் காட்டுங்கள்.

நாங்கள் விடும் அறிக்கைகளும் செய்திகளும் இப்போது சிறிலங்கா அரசுக்கு கேட்காது. அதை நிறுத்திவைத்துவிட்டு மேலும் மேலும் தமிழர் தாயகத்தின் நிலங்களை சிங்கள இராணுவத்திடம் பறிகொடுக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் உத்திகளையும் தேடுங்கள், செயலில் காட்டுங்கள்.

மன்னா..!! புற்றம் புடை சூழ வந்து யாருக்கு ஆணை இடுகிறீர்கள்...???

தங்கள் ஆணையை எதிர்பார்த்து காத்திருக்கும் தங்களின் சேவகர்கள் அவ்வளவு முட்டாள்களாகவா இருக்கிறார்கள்....???

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றுமில்லை தயா

கட்டளை வழங்குகினம்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் மரபுகளின் படியும் ஜ.நா சாசனங்களுக்கு அமைவாகவும் போர் செய்யாது தவிர்க்கப்பட வேண்டிய இந்தப் பகுதி மீது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தனது இராணுவத்தை ஏவி விட்டிருக்கும் சிறிலங்கா அரசின் இச்செயலை புலிகள் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பிடமாக இருந்து வரும் மடு புனித ஆலயப்பகுதியை போர்க்களமாக மாற்றியுள்ள சிங்கள அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமானது.

1999 இல் மடு ஆலயப் பகுதிக்குள் நுழைந்த சிங்களப்படைகள் தனது போர்த் தாங்கிகள் மூலம் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆலய மண்டபத்துக்குள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் உட்பட 30-க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோன்று கடந்த 29.02.2008 அன்று மடு புனித வளாகப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பள்ளிச் சிறார்களின் பேருந்து மீது சிறிலங்கா படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பள்ளிச்சிறார்களும், பொதுமக்களுமாக 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்து வரும் சிங்களப்படைகள் அந்த மக்கள் மீது மீண்டும் ஒரு அவலத்தை சுமத்தியுள்ளது. முன்னரைப்போன்று இப்போதும் மடு புனித தலப்பகுதியை ஒரு இராணுவ வலயமாக்க சிங்கள அரசு முனைகின்றது.

பௌத்த மக்களின் மன அமைதி குறித்தும் பௌத்த மத தலங்களின் புனிதம் குறித்தும் அக்கறை செலுத்தும் சிறிலங்கா அரசு, ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களின் அமைதியையும் புனிதத்தையும் புறந்தள்ளி விட்டு தனது இராணுவ நலனை முன்னிறுத்தி செயற்படுவதனைக் கண்டிக்க அனைத்துலக நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் முன்வர வேண்மும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது ஒன்றுமில்லை தயா

கட்டளை வழங்குகினம்.......

என்ன அறக்கட்டளைக்கு நிதி வழங்கினமோ? இதுவெல்லாம் ஒரு ஆதங்க வெளிப்பாடுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.