Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இனப்பிரச்சினைக்கு தனியரசே சாத்தியம் - சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர்

Featured Replies

இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு ஐ.நாவின் மேற்பார்வையுடன் இரு அரசு தீர்வுதான் யதார்த்தமாக அமையுமென சுவீடிஸ் பேராசிரியர் பீற்றர் சோக் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இலண்டனில் இடம்பெற்ற இன நெருக்கடி தொடர்பான கலந்துறையாடலில் ‘அமெரிக்காவுடன் தொடர்புபட்டவை,ஐரோப்பிய ஒன்றியம்,தமிழ் எதிர்ப்பு இயக்கம் என்ற கருப்பொருளில் ஆய்வறிக்கையொன்றை சமர்ப்பித்து பேராசிரியர் பீற்றர் சோக் உரையாற்றினர். துன்பப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவேண்டிய என்பதோடு அவர்களின் நீண்டகால நலன்களுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்., தமிழ் எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புபட்ட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஆவணமானது சமஷ்டி புலனாய்வு பிரிவின் அறிக்கையாகும். பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஹெய்ட் மாரி வைஸ் சோரைக் கீயுல் இலங்கை மீதான பொருளாதாரத் தடைகள் பற்றி யோசனை தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் அளித்தால் இது சர்வதேச தலையீட்டின் ஆரம்பமாகவும். கிழக்குத் திமோரில் இடம்பெற்றது போன்ற மனிதாபிமான ரீதியான இராணுவத் தலையீடாகவும் அமையுமென்பது எனது கருத்தாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி அரசியல் வாதிகளின் கருத்துகள் வெளிவிவகாரங்களுக்கான ஐரோப்பிய அமைச்சுகளின் நிர்வாக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் ஒருபகுதியாகும். ஐரோப்பாவிலுள்ள இந்த நிர்வாகிகளின் செயற்பாட்டு சூழ்நிலை உகந்ததாக இல்லை. தமிழ் எதிர்ப்பு இயக்கமானது தமிழர்களை எப்போதுமே பாதிக்கப்படுபவர்களாக விபரிப்பதாக அதிர்ச்சியளிக்கும் கருத்தை இரு சுவீடிஷ் இராஜதந்திரிகள் தெரிவித்திருந்தனர். அரச அடக்குமுறையின் கீழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கு கூட இடமளிக்கப்படவில்லை என்பதே எனது கருத்தாகும். இந்த ஐரோப்பிய அரசியல் வாதிகள், இராஜதந்திரிகள் எப்போதுமே வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து அரக்கத்தனமான சிருஷ்டியாகவே சித்திரிக்கின்றனர். எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியாது. அவரது உரைகளை கேட்டிருக்கின்றேன். அவரது யதார்த்த பூர்வமான தன்மையினால் தீமையான சக்தியாக அவர் குற்றம் சாட்டப்படுவது சமத்துவப்படுத்தப்படுகிறது. இதனை ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்த வேண்டுமே தவிர புறக்கணிக்கக்கூடாது. 2006 இல் தடை செய்யப்படுவதற்கு முன்பு இருந்த நிலைமையானது தமிழ் எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து அறிந்து கொள்வதற்கும் ஜனநாயக பெறுமானங்கள் குறித்து அந்த அமைப்புக்கு போதிப்பதற்கும் உகந்ததாக காணப்பட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை எட்டும் நடவடிக்கைகளை மோசமாக குழப்புவதாக உள்ளது. வழிகாட்டுவதற்குப் பதிலாக பாடசாலை ஆசிரியர்களின் பழைய பாணியிலான தண்டனை வழங்குவதாக காணப்படுகிறது. அமெரிக்க நலன்களின் பாதையில் ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் நலன்கள் தொடர்பாக ஒத்துழைத்து செயற்படுகிறது. தனது சொந்தத்தவறை புரிந்து கொண்டு தடையை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியம் அகற்றவேண்டும். குறைந்தது ஒரு நூற்றாண்டு காலப்பகுதி வரலாற்று ரீதியான தன்மைகள், கலாசாரம் என்பவை தொடர்பாகவும் இருதரப்பினரதும் களநிலைவரங்கள் குறித்தும் இராஜதந்திரிகளும் அரசியல்வாதிகளும் அறிந்திருக்க வேண்டும். கிழக்குத்திமோரில் இடம்பெற்ற மாற்றங்கள் தொடர்பாக அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அத்துடன் 2003 யுத்த நிறுத்த உடன்படிக்கை அருகியிருந்த காலகட்டத்தில் எல்லைகளுடன் இருந்த இரு அரசுகள் தொடர்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஐ.நா.வின். இராணுவ ரீதியான தலையீட்டுக்கான நிபந்தனை இல்லையா என்பது குறித்து இந்த அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் தங்களைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இனப்படுகொலையைத் தடுப்பதற்கு இது உதவும். மனிதாபிமான இராணுவத் தலையீட்டில் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

நன்றி : முரசம்

பேராசிரியருக்கு சுவீடிஸ் அரச தலைவர் பதவியைக் கொடுத்தால் இந்த விடயத்தைச் சொல்ல மாட்டார்.

இத்தனை விபரீதமாகிவிட்ட ஒரு இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் என்பதை தவிர வேறு தீர்வு கிடையாது!

இந்த உண்மையை இந்தியா ஒப்புக்க்கொள்ளும் பட்சத்தில் ஐரோப்பிய அரசுகள் தமிழீழம் அமைய தடையாக இருக்கப்போவதில்லை. மேற்கு நாடுகளின் இன்றைய போக்கு இந்திய சந்தையை கருத்தில் கொண்டு,

பிராந்தியத்தில் இந்தியாவிற்கு எதிரான போக்கை கடைபிடிப்பதால் ஏற்படக்கூடிய இலாப நட்ட கணிப்பீடின் அடிப்படையிலானது

Edited by vettri-vel

எங்களுக்கான முடிவை யாரும் தர ஏலாது.. நாங்கள் தான் எடுக்கவேணும்.

முதலில் லண்டனில் இம்மாதிரியான கலந்து உரையாடல்களை நடத்தியவர்களுக்கு நன்றி

சொல்லி மேலும் இது மாதிரியான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்

இதன் மூலம் வெளினாட்டு மக்களின் கருத்துகள் பெறப்பட்டு எமக்கு எதிரான கருத்துகள்

அகற்றப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கான முடிவை யாரும் தர ஏலாது.. நாங்கள் தான் எடுக்கவேணும்.

சரியாச் சொன்னீர்

மனிதனால இயலாதது என்டு ஒண்டு இல்லை

  • 2 months later...

பேராசிரியருக்கு சுவீடிஸ் அரச தலைவர் பதவியைக் கொடுத்தால் இந்த விடயத்தைச் சொல்ல மாட்டார்.

அப்பு இறைவன் தெரிந்து கொண்டு கதைக்கப்பழக வேணும்.

பேராசிரியர் பெளத்தமதம் பற்றி அறிய இலங்கைக்கு சென்றிருக்கிறார். 81ல் யாழ் நூலகம் காமினிதிசாநாயக்காவினால் எரிக்கப்பட்டதினை அறிந்து சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் கொடுமைகள் பற்றி அறியத்தொடங்கினார். சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் கொடுமைகள் பற்றி கட்டுரைகள் எழுதினார். இதனால் இவர் இலங்கை, இந்தியா நாடுகளுக்கு செல்ல அந்நாடுகள் இவருக்கு விசா வழங்குவதில்லை. இவரை வெள்ளைப் புலிகள் என்கினம். புலம் பெயர்ந்த நாடுகளில் நித்திரை கொண்டிருக்கும் சில தமிழர்களை விட இவர் பலபல மடங்கு ஈழத்தமிழர்களுக்கு உதவ விரும்புபவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.