Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மடுவை படையினர் கைப்பற்றுவார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[06 - April - 2008]

விதுரன்

* மடுவிலிருந்து திருச்சொரூபத்தைக் கொண்டு சென்றமை அரசுக்கு கொடுத்துள்ள பெரும் ஏமாற்றம்

வடக்கே அடைமழை நின்று விட்டதால் மீண்டும் கடும் சமர் ஆரம்பமாகியுள்ளது. மடுவைக் கைப்பற்றி விடும் முயற்சியில் அரசும் படையினரும் தீவிரம் காட்டினர். ஆனால் மடுதேவாலயத்திலிருந்து திருச்சொரூபம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் அரசு மடுவைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மடுவைக் கைப்பற்றுவதென்பது இராணுவ இலக்காக இருக்கவில்லை. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவே மடுதேவாலயத்தை கைப்பற்றிவிட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டியது. இராணுவ ரீதியில் மடுவோ அல்லது தேவாலயப் பகுதியோ கேந்திர முக்கிய பகுதிகளல்ல. ஆனால் மடுத் தேவாலயத்தை கைப்பற்றுவதன் மூலம் மிகப்பெரிய அரசியலை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது.

`மடுவுக்கு இன்று தென்பகுதியிலிருந்து பக்தர்கள் செல்ல பிரபாகரனின் அனுமதியைப் பெற வேண்டும். விரைவில் அந்த நிலையை மாற்றி மடுவுக்கு பக்தர்கள் செல்ல எவரது அனுமதியையும் பெற வேண்டிய தேவையில்லை என்றதொரு நிலையை உருவாக்குவோம்' என அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். இதன் மூலம் மடுவைக் கைப்பற்றி அதன் மூலம் பெரும் அரசியல் இலாபம் தேட அரசு முனைவது வெளிப்படையாகத் தெரிந்தது.

கிழக்கில் படை நடவடிக்கைகளை முடித்த பின் வடக்கே அரசு பாரிய படை நடைவடிக்கைகளை ஆரம்பித்த போது, படையினரின் முதல் இலக்கு புலிகள் வசமிருந்து மடுப் பிரதேசத்தை கைப்பற்ற வேண்டுமென்பதேயாகும். இதற்காக 57 ஆவது படையணி மடுவை நோக்கி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாரிய படை நகர்வை ஆரம்பித்திருந்தது. மடுவைநோக்கிய படைநகர்வு ஆரம்பமானபோது, படையினர் மடுவிலிருந்து சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். கடந்த ஒரு வருடத்தில் அவர்களால் சுமார் ஆறு கி.மீ.தூரம் வரையே நகர முடிந்தது. தற்போது அவர்கள் மடுவுக்கு தெற்கே சுமார் 2 கி.மீ தூரத்தில் நிலைகொண்டு பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னைய அரசுத் தலைவர்களைப் போன்று பௌத்த சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்பதில் முனைப்புடன் செயற்படுபவர். மடுவை மீட்பதன் மூலம் தெற்கிலுள்ள கிறிஸ்தவ சிங்கள மக்களின் மதிப்பை பெற்றுவிட வேண்டுமென்பதில் தீவிரம் காட்டினார். இதனால் தான் வடக்கே பாரிய படைநகர்வு ஆரம்பமானபோது, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கைப்பற்றுவதை விட அரசியல் இலாபம் நிறைந்த பகுதியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியது.

அரசின் இந்த நோக்கத்தை புலிகளுமறிவர். அதேபோல் கத்தோலிக்க குருமார்களும் அறிந்திருந்தனர். இதனால் தான் மடுதேவாலயப் பகுதியை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துமாறு மன்னார் ஆயரும் மதகுருமார்களும் தொடர்ச்சியாக விடுத்து வந்த வேண்டுகோளை அரசோ படைத்தரப்போ ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியாவது மடு தேவாலயச் சுற்றாடலை கைப்பற்றி விடவேண்டுமென்பதே அரசினதும் படையினரதும் குறியாக இருந்தது.

அதேநேரம், மடுதேவாலயப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி விடுதலைப் புலிகள் மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றாதவாறு செய்ய வேண்டுமென்பதே அரசினதும் படையினரதும் நோக்கமாகும்.

வடக்கே அரசு ஆரம்பித்த பாரிய படை நடைவடிக்கையை அடுத்து மடுதேவாலயப் பகுதிக்கு தென்பகுதிப் பக்தர்களால் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. இது அவர்கள் மத்தியில் பெரும் குறையாக இருக்கும் அதேநேரம், மடுவைக் கைப்பற்றுவதன் மூலமே இந்தக் குறையை நீக்க முடியுமெனவும் இல்லையேல் அவர்களது கோபம் அரசின் பக்கமே திரும்புமெனவும் அரச தரப்பினர் நன்குணர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் மடுவை நோக்கி அரசும் படைத்தரப்புமே பாரிய படை நடைவடிக்கையை ஆரம்பித்தன. அரசும் படைத்தலைமையும் எதிர்பார்த்தது போல் மடுவை நோக்கிய படைநகர்வு அமையவில்லை. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பால் படையினர் பலத்த இழப்புக்களையும் பெரும் பின்னடைவுகளையும் சந்தித்தனர்.

மடுவை நோக்கி நேராக நகர்ந்து செல்ல முயல்வது பலத்த இழப்புகளை ஏற்படுத்துமென்பதை படையினர் உணர்ந்தனர். இவ்வாறானதொரு படை நகர்வை புலிகளும் அனுமதிக்கப்போவதில்லையென்பத

இதில் என்ன சந்தேகம்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ விதுரன் படையினரின் மடுவை நோக்கிய படையெடுப்பு "இலவு காத்த கிளி" என்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

விதுரன் கூறுவதுபோல், மடுவை நோக்கிய படை நடவடிக்கையை அரசு ஆரம்பித்தவுடனேயே அதன் நோக்கம் பற்றி வெளியுலகிற்கு மதகுருமார் கொணர்ந்திருக்க வேண்டும். அப்படிச் செய்ய விடாமல் அவர்களைத் தடுத்தது யார் என்று புரியவில்லை. அது நிச்சயமாகப் புலிகளாக இருக்க முடியாது. சிலவேளை அரசின் ராணுவ நடவடிக்கை பற்றிய அறிவு குருமாருக்கு தெரிந்திருக்காதோ என்னவோ !

அதேபோல் மாதா சொரூபம் இல்லாத மடுவைக் கைப்பற்றுவதில் எந்தவித பிரச்சாரப் பயனும் இல்லை என்பதை அரசும் உணர்ந்திருக்கும். தாம் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது மடுப்பிரதேசத்தை யுத்த சூணியப் பிரதேசமாக அறிவிக்க மறுத்த அரசு, சிலவேளை மடுவை கைப்பற்றிய பின் புலிகள் அதனை மீளக் கைப்பற்றுவதைத் தடுக்க அதை யுத்த சூணியப் பிரதேசமாக அறிவிப்பதென்பது முட்டாள்த்தனம். அதை ஒருபோது புலிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது அரசுக்கு எப்படி புரியாமல்ப் போனது என்பது அதிசயம் தான்.

ஆக மொத்தத்தில் அரசு ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு வந்திருக்கிறது. இப்போது மடுவைக் கைப்பற்றுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற நிலைக்குப் பிறகும், தெற்கில் அழுத்தங்களை சமாளிக்க தனது படை வீரர்களை பலிகொடுத்து மடுவைக் கைப்பற்ற அரசு முயலலாம். புலிகள் கொடுக்கும் மாத்திரையை மெல்லவும் முடியமல் விழுங்கவும் முடியாமல் அரசு இருக்கிறது.

ஒருவருஷமா ராணுவம் சேணையிழுத்துப் பிடித்த எல்லாம் வீணாப் போச்சுது. சரி வேணாம் விடுவம் எண்டு விட்டுட்டு வாறதுக்கும் புலிகள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை. ராச மரியாதையுடன் அவர்களை அனுப்பத்தான் புலிகளுக்கும் விருப்பமாக இருக்கும். ஆப்பு நல்லாத்தான் மாட்டுப்பட்டு விட்டுது போல.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிப் போச்சுது.

மடு இலங்கை அரசுக்கு பொக்கிசமாக கருதினாலும் மடுமாதாவின் இடம்பெயர்வு அதனை முக்கியமில்லாமல் செய்திருகின்றது இலங்கை அரசு பெற துடித்த அரசியல் முக்கியத்துவத்தை அல்லது உலகுக்கும் சிங்களவருக்கும் சொல்ல முனைந்த பிரச்சாரத்திற்கு மடுமாதாவின் இடம்பெயர்வினால் செக் மேட் வைக்கப்பட்டு இருப்பதே உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.