Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின்(ராஜீவ்காந்தியின்) மறுபக்கம் - 1

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன்

ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது.

1) உரும்பிராய் 1987 Oct

16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வீட்டு ஒழுங்கை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆவர்கள் கண்ணில் கண்டதை எல்லாம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். பின் அவர்கள் அவருடைய வீட்டு வளவுக்குள் நுழைந்து முன்வாசல் கதவின் பூட்டைப் பார்த்துச் சுட்டிருக்கிறார்கள். கதவு உட்பக்கத்திலும் பூட்டப்பட்டிருந்ததால் அது அசைந்து கொடுக்கவில்லை. பின் அந்த இராணுவவீரர்கள் இரண்டு மாடிகளின் ஜன்னல் கண்ணாடிகளை நோக்கிச் சுட்டனர். பின் அவர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு அதற்கு எதிரில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஆந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர். ஆவர்களில் மூத்தவருக்கு 93 வயதிருக்கும். இளைய பெண்ணுக்கு ஏறத்தாழ 25 வயது இருக்கலாம். 93 வயது டூதாட்டி படுத்த படுக்கையாயிருந்தார். இந்திய இராணுவம் முதலில் அவளைச் சுட்டது. மற்ற சடலங்கள் வீட்டுப் பின் தோட்டத்தில் காணப்பட்டன. ஆவர்கள் தப்பித்து வெளியே ஓடிச் செல்ல முயலும்போது சுடப்பட்டிருக்க வேண்டும். மறுநாள் 19ம் திகதி திங்கட்கிழமை இந்தச் சடலங்கைளப் புதைத்தவர்தான் இந்தக் கதையை எங்களுக்குச் சொல்கிறார். ஆத்தினத்தன்று உரும்பிராயில் மீண்டும் பயங்கர சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.

உரும்பிராய்ச் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கைத் திருச்சபைக்கு எதிரே உள்ள ஒழுங்கையில் இருந்த வீடொன்றிற்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. அந்த வீட்டுக்காரர்களும் அந்த வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்தவர்களுமாய் அந்த வீட்டில் பதினொரு பேர் தங்கியிருந்தனர். இது நடந்தது அக்டோபர் 19ம் திகதி. இந்தியப்படை வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியில் வருமாறு அழைத்தது. வீட்டுச்சொந்தக்காரரான பொன்னம்பலம் வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டு முன்னே வர, வீட்டிற்குள் இருந்தவர்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். உயிர்பிழைத்த பொன்னம்பலம் மட்டுந்தான் இந்தக்கதையை எமக்கு விபரிக்கிறார். மற்றறவர்களைவிடச் சற்று முன்னால் நின்றுகொண்டிருந்த பொன்னம்பலம் "சுடுங்கள்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறார். அவருக்குட் பின்னால் நின்றுகொண்டிருந்த சிலர் தரையில் சரிந்தனர். அவர்களில் பஞ்சரத்னம் என்ற பள்ளியாசிரியரும் ஒருவர். அதைப்பார்த்துக் கொண்டு நின்ற அவரது மனைவி ‘ஐயோ’ என்று கதற, அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மூவர் பஞ்சரத்னம் தம்பதிகளும் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாடசாலை மாணவியர் தலைவியாக இருந்த பதினாறு வயதான பிரேமா சின்னத்துரையுமாவார். பிரேமாவின் தாய் திருமதி சின்னத்துரையை ஒருவாறும் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அந்தத் தாயின் எதிரிலேயே பூத்துக்குலங்கிக் கொண்டிருந்த அவரின் அன்பு மகள் கொல்லப்பட்டாள். அவர்களின் வீடு உரும்பிராய் சந்திக்கு மிக அண்மையில் இருந்ததால் அது அவ்வளவும் பாதுகாப்பானதல்ல என்று கருதித்தான் சின்னத்துரை, தனது மனைவியையும் மகளையும் பாதுகாப்பாய் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டுத் தான் மட்டும் அந்த வீட்டில் தங்கி நின்றார். அவரை அவருடைய மனைவி கடைசியாகப் பார்த்தது அவர் சைக்கிளைத் துடைத்துக்கொண்டிருந்த போதுதான். ஆவர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள், ‘கவலைப்படாதேயும், அவங்கள் சண்டை பிடிக்க வந்தவங்கள் இல்லை, அவங்கள் அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவங்கள். நான் அவையளுக்கு விளங்கப்படுத்துவன்.” மூன்று மாதங்கள் கழித்து அவருடைய எஞ்சிய எலும்புக் கூட்டைத்தான் திருமதி சின்னத்துரை காணமுடிந்தது. திருமதி சின்னத்துரை தனது பேச்சின் நடுவே அடிக்கடி நிறுத்தி மூச்சுத்திணறக் கூறுவார்: அவையள் சண்டை பிடிக்க வந்த இராணுவம் இல்லை எண்டு அவர் சொன்னாரே.”

அக்டோபர் 19ம் திகதி வியூ ஒழுங்கையிலிருந்த திருமதி நேசரட்னம் வீட்டில் இருந்தவர்கள் தம் வீட்டைவிட்டு வெளியேறுவதெனத் தீர்மானித்தனர். தனது கணவரைப் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வெளியேறிப் போகுமாறு திருமதி நேசரட்னம் தனது கணவரைக் கேட்டிருக்கிறார். வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியாகிவிட்ட தனது தாயாருக்காகவும், மூளை வளர்ச்சி குன்றிய தனது 42 வயதுச் சகோதரருக்காகவும் தான் வீட்டிலேயே தங்கிவிடப் போவதாக திருமதி நேசரட்னம் தீர்மானித்திருந்தார். மூளை வளர்ச்சி குன்றிய தனது 42 வயதுச் சகோதரனை வேறெங்காவது அழைத்துச் சென்றால் அவர் புது இடத்தில் பொருந்தி இருக்கமாட்டார் என்றும் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருபு;பார் என்றும் அவர் கருதினார். கடைசி நேரத்தில் அவருடைய எட்டு வயது மகளும் தாயுடனேயே நிற்கப் போவதாக அடம்பிடித்ததில், இறுதியில் அவர்களில் நான்கு பேர் வீட்டிலேயே தங்கி நிற்க நேர்ந்தது. தங்களைப் பிரிந்து சென்றவர்களிடம் இந்த அவலமான வார்த்தைகளைக் கூறித்தான் அவர்களை ஆறதல்படுத்தியிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.