Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்ச சகோதரர்கள்- சரத் பொன்சேகாவுக்கு எதிராக "மிலோசவிக்" பாணி குற்றப்பத்திரிகை

Featured Replies

யூகோஸ்லோவியாவின் முன்னாள் அரச தலைவர் ஸ்லோபோடன் மிலோசவிக்குக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டு அறிக்கையைப் போல் சிறிலங்காவின் அரச தலைவர் ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள், சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை அமெரிக்க சட்டத்தரணி ப்ரூஸ் பெய்ன் தயாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் இரு சகோதரர்கள் மீது

சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு

மிலோசெவிக் பாணியில் அமையும் எனத் தகவல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய மூவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

யூகோஸ்லோவியாவின் முன்னாள் அரச தலைவர் ஸ்லோபோடன் மிலோசெவிக்குக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டு அறிக்கையைப் போன்று இவர்கள் நால்வருக்கும் எதிரான குற்றப்பத்திரிகையை அமெரிக்க சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தயாரித்து வருகிறார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் றொனால்ட் றீகனின் ஆட்சிக் காலத்தில் பிதி சட்டமா அதிபராக பணியாற்றியவர் புரூஸ் பெய்ன்.

தமக்குக் கீழே உள்ளோர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தெரிந்தும் அவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காதமை குறித்து குற்றப் பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் இடம்பெறவுள்ளன.

அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவின் பச்சை அட்டை பெற்றவர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படவுள்ளது.

http://www.sudaroli.com/pages/news/today/12.htm

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புத் தலைமைக்கு

எதிரான புதிய வியூக வலை

21.04.2008

இலங்கை அரசின் யுத்த வெறிப் போக்கும், அதற்காக உள்நாட்டிலும் சர்வதேச விவகாரங்களிலும் அது நடந்துகொள்ளும் விதமும் பெரும் சர்ச்சைகளையும் சிக்கல்களையும் உருவாக்கி நிற்கின்றன.

மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை சர்வதேச கண்டனங்களுக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளது.

* இலங்கையில் மிகப் பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து சர்வதேசப் பிரமுகர்கள் குழு விலகிவிட்டது. இலங்கை நிலைமை தொடர்பான அதன் கடைசி அறிக்கையில் இலங்கை அரசையும் அதன் செயற்பாட்டையும் அந்தப் பிரமுகர்கள் குழு வாங்குவாங்கு என வாங்கித் தள்ளியுள்ளது.

* சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் எல்லாம் இலங்கையின் போக்குக்கு எதிராகக் கிளர்ந்து நிற்கின்றன. இலங்கையில் கொடூரமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தில் ஐ.நா. நேரடியாகத் தலையிட வேண்டும் என்று அவை அனைத்தும் சேர்ந்து வலியுறுத்தும் நிலைமைக்கு சூழ்நிலை முற்றிவிட்டது.

* மனித உரிமைகளைப் பேணி நிலைநாட்டும் விவகாரத்தில் இலங்கை அரசின் பொறுப்பற்ற போக்குக் காரணமாக, இலங்கைக்குத் தான் விசேடமாக வழங்கிவந்த ஏற்றுமதிச் சலுகைகளை ஒரேயடியாக வெட்டும் கட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வந்துவிட்டது. ஆனால் மேற்குலகு எதிர்பார்க்கும் வகையில் மேற்குலகைத் திருப்திப்படுத்தும் விதத்தில் தனது நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதற்கு வக்கற்ற இலங்கை அரச நிர்வாகம், "எட்டாப்பழம் புளிக்கும்' என்பது போல ""எங்களுக்கு இந்த விசேட ஏற்றுமதிச் சலுகை அவசியமானதல்ல'' என்று இப்போது கூறியிருக்கிறது. ஆக, தமிழர் விரோத நோக்கோடு தான் முன்னெடுக்கும் கொடூர யுத்தத்தைக் கைவிட இணங்காத இலங்கை, அதற்காக மேற்குலகு வழங்கிய விசேட ஏற்றுமதிச் சலுகையையும், அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான ஏற்றுமதி வருமானத்தையும் துறக்கத் தயாராகிவிட்டது.

* ""இலங்கைப் பிணக்கினால் இங்கு ஜனநாயகக் கட்டமைப்புகளும், சிவில் சமூகமும் பலவீனமடைந்து விட்டன; மனித உரிமை மீறல் துஷ்பிரயோகம் அதிகரித்து விட்டது'' எனத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சு, இதன் காரணமாக இலங்கைக்கான அமெரிக்க உதவித்திட்டம் 2008 ஐப் போல 2009 ஆம் ஆண்டிலும் கணிசமாக வெட்டிக் குறைக்கப்படுவதாக அறிவித்திருக்கின்றது.

* தமிழர்களுக்கு எதிரான அராஜகப் போரை தீவிர வெறித்தனத்துடன் முன்னெடுப்பதற்காகத் துடிக்கும் கொழும்பு, அதற்கான ஆயுதத் தளபாட உதவிகளைப் பெறுவதற்கு சேராத இடமெல்லாம் சேருகின்றது. இதனாலும் இலங்கைக்கு எதிரான கருத்து நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் வலுமிக்க நாடுகள் மத்தியில் கடும் விசனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. இலங்கையின், பாகிஸ்தானுடனான நெருக்கம் இந்தியாவைச் சீற்றமுற வைத்துள்ளது. சீனாவுடனான ஒத்துழைப்பு அமெரிக்காவை எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. ஈரானுடனான அணைவு இஸ்ரேலுக்கு வெறுப்பை ஊட்டியுள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கான உதவித் தொகையைக் குறைக்கின்றது என்றால், மறுபக்கத்தில் இலங்கை பாகிஸ்தான் உறவு குறித்து இந்தியா சாடுகின்றது. ஈரானுடன் நெருங்கிச் செல்லும் கொழும்புக்கு உதவ முடியாது என இஸ்ரேல் கைவிரித்து விட்டதாகவும் தகவல்.

இவை எல்லாம் மனித உரிமைகளை மோசமாக மீறி, தீவிர யுத்த வெறியில் அலையும் கொழும்பின் போக்கை ஒட்டி எழுந்துள்ள மோசமான களநிலைமை பற்றிய சில தகவல்கள் மட்டுமே.

இவற்றுக்கும் அப்பால் கொழும்பு நிர்வாகத்துக்குத் தலையிடி கொடுக்கத்தக்க புதிய விவகாரங்களும் சர்வதேச மட்டத்தில் இப்போது உருவாகி வருகின்றன.

இலங்கையில் அரசுத் தலைமையின் வழிகாட்டுதல், நெறிப்படுத்தலுடன் அல்லது இசைவுடன் முன்னெடுக்கப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசுக் கட்டமைப்பைக் கண்டிக்கும் நிலைமையைத் தாண்டி, அரசில் பொறுப்பானவர்களுக்கு எதிராக தனி ஆட்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்கும் எத்தனங்கள் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று அறிய வருகின்றது.

முதலில், கொழும்பு அரசுத் தலைமையில் யுத்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உயர்மட்டத்தினருக்கு அமெரிக்கப் பிரஜா உரிமை பெற்றுள்ள யுத்தத் தீவிரப் போக்காளருக்கு எதிராக சட்ட முஸ்தீபுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் போர் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றவர். ஜனாதிபதியின் மற்றொரு சகோதரரும், அரசியல் நரித் தந்திரசாலியுமான பஸில் ராஜபக்ஷ எம்.பி., இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதற்கான பச்சை அட்டை அனுமதி கொண்டவர்கள். இவர்கள் மூவருக்கும் எதிராகவே ஆரம்ப கட்டமாக சர்வதேச நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் ரொனால்ட் றேகன் ஜனாதிபதியாக இருந்தபோது அந்த நிர்வாகத்தின் கீழ் பிரதி சட்டமா அதிபராக இருந்த பிரபல சட்டத்தரணி புரூஸ் பெயினே மேற்படி மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுப் பத்திரங்களைத் தயாரித்து வருகின்றார். முன்னாள் சேர்பியத் தலைவர் ஸ்லோபோடன் மிலோஸ்விச்சுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை மாதிரியாக வைத்தே இவர்களுக்கு எதிரான குற்றப் பத்திரத்தையும் தயார் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

யுத்தத்தில் சம்பந்தப்படாத நேரடியாகத் தொடர்புபடாத அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றொழித்தமை உட்பட பல மோசமான மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மிலோஸ்விச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் காலமானார்.

இந்த மோசமான மனித உரிமை மீறல்களை மிலோஸ்விச் நேரடியாகப் புரியாவிட்டாலும், அவருக்குக் கீழ் இருந்த கட்டளைப் படையணிகள் புரிந்த குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன் அவர் குற்றப் பொறுப்பாளராக நிறுத்தப்பட்டார்.

அதேபோல, இலங்கைப் படைகள் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள் உட்பட அப்பாவிச் சிவிலியன்களின் படுகொலைக்குக் காரணமான கொடூரங்களை இழைத்து வருகையில், அதற்கான தொடர் கட்டளைப் பொறுப்பின் அடிப்படையில் (doctrine of command responsibility) மேற்படி மூவருக்கும் எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணியும் முன்னாள் பிரதி சட்டமா அதிபருமான புரூஸ் பெயின் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று தெரிகின்றது.

ஏற்கனவே, தனது மோசமான மனித உரிமைமீறல் போக்குக் குறித்து சர்வதேச மட்டத்தில் எழுந்துவரும் அதிருப்தியைக் கவனத்தில் எடுக்காமல் புறக்கணித்து, உதாசீனத்துடன் செயற்பட்டு, திமிர்த்தனத்துடன் நடந்து வரும் கொழும்பு அரசுத் தலைமை, இப்போது அரசுத் தலைமையில் தனி நபர்களைக் குறிப்பாக இலக்குவைத்து சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படும் காய் நகர்த்தல்களை தந்திரோபாய நகர்வுகளை எப்படி எதிர்கொள்ளப் போகின்றது?

விரைவில் விளைவுகள் வெளிப்பட விபரீத நிலைமை கொழும்புக்குப் புரியவரும்.

http://www.sudaroli.com/editorial.htm

ஆகா போட்டு தாக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.