Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறை எண் 305ல் கடவுள்- பட விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Arai-En-305il-Kadavul-250_21042008.jpg

ஒருவேளை தாங்க முடியாத கஷ்டத்தில் எழும் மனிதக் குரல் கடவுளின் காதில் விழுந்தால்...

ஒருவேளை அந்தக் கடவுள் பூமிக்கே வந்துவிட்டால்...

ஒருவேளை அந்தக் கடவுள், தன் கடவுள் தன்மையை இழந்து மனிதனைப் போலவே திருவல்லிக்கேணி மேன்ஷனில் பத்துக்குப் பத்து இருட்டறையில் கஷ்டப்பட நேர்ந்தால்....

அடடா... 'ஒருவேளை' என்ற இந்த வார்த்தைதான் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது பாருங்கள்!

இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இயக்குநர் சிம்புதேவன் விளையாடி இருக்கும் 'சிலம்பாட்டம்தான்' அறை எண் 305-ல் கடவுள். இந்த சிலம்பத்தில் வேகம் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிற விவேகம் உள்ளது.

கடவுள், அறை எண் 305-க்கு வந்த கதை:

ராசுவும் (சந்தானம்), மொக்கையும் (கஞ்சா கருப்பு) அறை எண் 305ல் இரண்டு மாத வாடகை மற்றும் மெஸ் பாக்கியுடன் காலம் தள்ளி வரும் வேலையில்லா இளைஞர்கள். ஒருபக்கம் காதலிக்கு வாடகை ரோஜா கொடுக்க முயற்சித்தபடியே, மறுபக்கம் சீரியஸாக தனது பி.பி.ஏ. படிப்புக்கேற்ற வேலை தேடுகிறான் ராசு. மொக்கையோ திருட்டு டிவிடி விற்றுக்கொண்டே தனது பத்தாம் வகுப்பு தகுதிக்கேற்ற சின்ன வேலையைத் தேடுகிறான்.

ம்ஹூம்... பரந்து விரிந்து இந்த ஐ.டி. நகரில்.. அதாங்க சென்னை, இவர்களுக்கு ஒரு வேலையும் கிடைக்காமல் போகிறது. தப்பித் தவறி 'பீட்ஸா ஹட்'டில் கிடைத்த ஒரு வேலையையும் காதலியைப் பார்த்த ஆர்வக் கோளாறில் பறிகொடுத்துவிட்டு நிற்கிறான் ராசு.

ஒருநாள் மேன்சன் மேனேஜர் சொட்டை (எம்.எஸ்.பாஸ்கர்) வாடகை பாக்கிக்காக தாறுமாறாகப் பேசிவிட, சோகத்தில் பீர் அடித்துவிட்டு மொட்டை மாடிக்குப் போய் கடவுளைத் திட்டுகிறார்கள் ராசும் மொக்கையும்.

அதைத் தாங்க முடியாத கடவுள் (பிரகாஷ்ராஜ்) நேராக திருவல்லிக்கேணி மேன்சன் மாடிக்கே வந்து ராசு, மொக்கை எதிரில் நிற்கிறார், வெள்ளை வெளேர் உடையில்! முதலில் நம்ப முடியாமல் தடுமாறும் அவர்களுக்கு 'பாபா' ரஜினி பாணியில் அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டுகிறார், தன்னிடம் உள்ள 'கேலக்ஸி பாக்ஸ்' உதவியுடன். இதில்தான் கடவுளின் அத்தனை சக்தியும் அடங்கியுள்ளதாக விளக்குகிறார். பின்னர் அவர்களுடனே தங்கியிருந்து அவர்கள் படும் கஷ்டங்கள் எதனால் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்து, அதிலிருந்து அவர்களாகவே விடுபட உதவுவதாகக் கூறுகிறார்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார் அந்த மேன்சன்வாசியான இளவரசு. இருந்தாலும் ரகசியத்தைக் காப்பதாக உறுதி தருகிறார்.

மொக்கைக்கும் ராசுவுக்கும் கடவுள் எவ்வளவோ போதனைகளைத் தருகிறார். நேர் வழியில் முன்னேற எடுத்துக்காட்டுகளுடன் சொல்லித் தருகிறார். ஆனால் மனிதனுக்கு திருட்டு மாங்காய்தானே ருசிக்கிறது! கடவுள் தன் பணி முடிந்து தன் உலகுக்குத் திரும்பும் நாளன்று அவரது கேலக்சி பவர் பாக்ஸை களவாடி விடுகின்றனர் ராசுவும் மொக்கையும். இப்போது அவர்கள் கடவுளாகிவிட, கடவுள் சாதாரண மனிதனாக அறை எண் 305-ல் தங்கிவிட நேர்கிறது.

இருந்தாலும், இதற்காக வருத்தப்படாமல் அந்த அனுபவத்தையும் தாங்கத் தயாராகிறார் சக்தியைப் பறிகொடுத்த 'கடவுள்'.

நாயர் கடையில் டீ ஆத்தி, கடலை வண்டி தள்ளி, கக்கூஸ் கழுவி, கடைசியில் ஜோதிர்மயி மெஸ்ஸில் வேலையாளாகச் சேர்ந்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னுக்கு வருகிறார் கடவுள். இடையில் அவரைக் கடவுள் என்று அறியாத ஜோதிர்மயி, அவர்மீது காதல்வயப்பட்டு ஒரு டூயட்டும் பாடுகிறார்.

புதிய கடவுள்களான மொக்கையும் ராசுவும் தங்கள் புதிய வாழ்க்கையை நிலாவில் பீர் குடித்துக்கொண்டே பெண்களுடன் டிஸ்கொத்தே ஆடியபடி என்ஜாய் பண்ணுகிறார்கள்! நிறைய பணத்துடன் சொந்த பந்தங்களைப் பார்க்கப் போனால் அங்கே அவர்கள் எதிர்பார்த்த மரியாதையும் நிம்மதியும் கிடைக்கவில்லை.

ஆசைக் காதலியும் கூட குறுக்குவழியில் வந்த பணத்தை மறுத்துவிட, உழைப்பின் அருமை புரிகிறது. தங்களிடம் உள்ள கேலக்ஸி பவர் பாக்ஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிகிறார்கள். ஆனால் முழுசாகத் திருந்துவதற்குள் தங்கள் பழைய எதிரியிடம் மாட்டிக்கொள்ள, கடவுள் வந்து ரவுடிகளுடன் சண்டைபோட்டுக் காப்பாற்றுகிறார்.

அந்த நேரம் பார்த்து குப்பை அள்ளும் ஊழியரான இளவரசுவிடம் கேலக்சி பாக்ஸ் கிடைக்கிறது. அவரும் இரண்டு நாள் கடவுள் வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, வேண்டாம்டா சாமி என்று 'பவரை' கடவுளிடமே திரும்ப ஒப்படைத்துவிடுகிறார்.

இதையடுத்து மனிதப் பாடு போதும்பா என்று தன் உலகம் திரும்புகிறார் கடவுள்.

ஆனால் மறுபடியும் வேறு இரு வாலிபர்களின் வேதனைக் குரல் கேட்டு பூமிக்கு வருகிறார். ஆனால் இம்முறை தன் பவர் பாக்ஸை ஸேஃப்டி லாக்கர் போட்டு பத்திரமாகக் கொண்டு வருகிறார்....என முடிகிறது படம்.

சந்தேகமில்லாமல் ஒரு சுவாரஸ்மான கதையைத்தான் கையிலெடுத்திருக்கிறார் சிம்புதேவன். ஆனால் அதை இன்னும்கூட விறுவிறு சம்பவங்களுடன் கொண்டு செல்லாமல் விட்டது படத்தின் பலவீனம்.

அதேபோல நாத்திகரான ராஜேஷின் கேள்விகளுக்கு பிரகாஷ்ராஜ் தரும் பதில்கள் ஒரு புத்திசாலித்தனமான மழுப்பலாகத் தெரிகிறதே தவிர நெத்தியடியாக இல்லை.

படத்தின் பல காட்சிகளில் ஜிம் கேரியின் புரூஸ் அல்மைட்டி பாதிப்பு தெரிகிறது.

கஞ்சா கருப்பும் சந்தானமும் கதையின் நாயகர்களாக இருந்தாலும், மனதைக் கொள்ளை கொள்பவர்கள் கடவுள் பிரகாஷ்ராஜூம், அவருக்கு துணையாக நிற்கிற இளவரசுவும்தான்.

மதுமிதா, ஜோதிர்மயி இருவருக்கும் பொருத்தமான பாத்திரம் என்று சொல்ல முடியாது.

ராஜேஷ், தலைவாசல் விஜய், வி.எஸ்.ராகவன், பெரியார் தாசன், வி.எம்.சி. அனிபா என நிறைய பாத்திரங்கள். அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் நெஞ்சில் பதியத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களை அறிமுகப்படுத்த இயக்குநர் கையாண்டிருக்கும் உத்தி ஆரம்பத்தில் புதுமையாக இருந்தாலும் போகப்போக போர்.

வித்யாசாகரின் இசை இதம். ஒளிப்பதிவு மிகப் பிரமாதம்.

இம்சை அரசனில் கோலா நிறுவனங்களின் ஆதிக்கத்தை நைசாக வாரியிருந்த சிம்புதேவன், இந்தப்படத்தில் 'கொள்ளையாசிஸ்' எனும் பெயரில் ஐ.டி. நிறுவனங்களை ஒருபிடிபிடித்திருக்கிறார்.

எல்லா காட்சியிலும் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சார நெடி இருந்துகொண்டே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, இந்த கோடையில் குடும்பத்துடன் பார்த்துமகிழ விரசமில்லாத இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்ததற்காக சிம்புதேவனைப் பாராட்டலாம்!

thatstamil.com

ம்ம்...கறுப்பன் அண்ணா தாங்ஸ் வோ "அறை எண் 305ல் கடவுள்" பட விமர்சனதிற்கு..(ஜம்மு பேபியும் உந்த படம் பார்த்தது அல்லோ :D )...நன்னா இருக்கு படம் கனநாளைக்கு பிறகு வித்தியாசமான படம் பார்த்த பீலிங்..(நேக்கு எப்பவுமே காமேடியான படங்கள் தான் விருப்பம்)..

நன்ன காமேடியா போகுது படம் ம்ம்ம் நன்கு இரசித்து பார்த்தனான் அல்லோ...(மற்றவைய பற்றி நேக்கு தெரியாது பட் நேக்கு இந்த படம் பிடித்து போச்சு)..நான் வந்து ஒரு 75% மார்க்ஸ் கொடுப்பன் உந்த படதிற்கு பாருங்கோ... :D

பிரகாஷ்ராஜ் கடவுள் கரக்டரில அந்த மாதிரி நடித்திருக்கிறார் (சந்தானம்,கஞ்சா கறுப்பு) கடவுளின்ட பவர் பாக்ஸை களாவாடுறது அதற்கு பிறகு அவையள் செய்யிற சேட்டைகள் எல்லாம் நேக்கு நன்னா பிடித்திருக்கு ..(நேக்கு அந்த பவர் பொக்ஸ் கிடைத்தா எப்படி இருக்கும் என்று பீலிங் வேற வந்திட்டு என்றா பாருங்கோவன்... :(

ம்ம்..கடவுளின்ட பவர் பொக்ஸ் களவு போனா பிறகு..(கடவுளும் சாதாரண மனிதன் போல சுண்டல் விற்கிறது)..எல்லாம் கொஞ்சம் ஓவர் தான் பட் நன்னா இருக்கு வித்தியாசமான திங்கிங் பாருங்கோ..அதை விட கடவுளை ஒருவா லவ் வேற பண்ணுவா.. :lol: (என்ன கொடுமை இது)..

மொத்ததில படம் நேக்கு நன்னா பிடித்து போச்சு..(சோ எல்லாரும் கட்டாயம் பாருங்கோ)...ஆனா பிடிக்குதோ தெரியல பிறகு பேபியை ஏசுறதில்ல சொல்லிட்டன்..

இப்படி படம் காமேடியா போகுது..(கொஞ்சம் வாஸ்டா மூவியை கொண்டு போய் இருந்தா இன்னும் நன்னா இருந்திருக்கும்)..மற்றும்படி சிம்புதேவன் கலக்கிவிட்டார் :) ..பாடல்கள் பரவாயில்லை என்று சொல்லாலாம்..நேக்கு ஒரு பாட்டு கொஞ்சம் பிடித்திருக்கு மற்ற பாட்டுகள் ஒன்னும் பிடிகல..

ம்ம்..எல்லாத்தையும் விட கடவுளாக வந்த..(பிரகாஷ்ராஜ்)..ஒரு டயலக் சொல்லுவார் அது நேக்கு நன்னா பிடித்து போச்சு பாருங்கோ அவர் சொன்ன டயலக்கை சொல்லுறன் கேளுங்கோ.(உங்களுக்கு பிடிக்குதோ தெரியல :) )..

ஒரு பெரிய கோபுரத்தை கட்டுறது என்றாலும் முதல்கல் பள்ளத்திள தான் வைக்கணும் அது உங்களுக்கு தெரியல..உங்க முன்னாடி இருக்கிற பிரச்சினைகள் பெரிசு அல்ல ரொம்ப சின்னது அது உங்க மனசில தான் பெரிசா இருக்கு உங்க பயத்தால தான் பெரிசா இருக்கு.. :wub:

நாம நேற்று எல்லாரும் ஜாலியா பஸ்சில டிரிப் போனோம்..(டூர்)...என்ன நடந்தது ஒருத்தன் வாந்தி எடுத்தான்,ஒருத்தன் சாப்பாடை கொட்டினான்,ஒருத்தன் பஸ்ஸை நிற்பாட்டி நிற்பாட்டி..(யூரின் போனான்)..இன்னொருத்தன் எச்சில் சிரிக்க பாடினான்..

நீங்க என்ன பண்ணிணீங்க??

இவங்களை எல்லாம் பிரச்சினையாகவா பார்த்தீங்க..இல்லையே!!..கழுதையை விட்டு தள்ளு என்று வந்த பேர்பஸ் ஜாலியான..(டூர்)..என்று ஜன்னலிற்கு வெளியே இருக்கிற அழகை பார்த்து ஆடி,பாடி ரசித்தீங்க தானே....!! :D

வாழ்க்கையும் ஒரு (டூர்)..தானே இங்க இருக்கிற பிரச்சினைகளிள சிக்கி வாழ வந்த பேர்பஸையே மறந்து விடுறீங்க..ஜன்னலிற்கு வெளியே தான் வாழ்க்கையே இருக்கு...பாவம்..(டூர்)..முடியிற நேரம் தான் பலருக்கு ஜன்னல் இருக்கிற நினைப்பே வருது... :)

தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது...

அட நன்னா இருக்கு அல்லோ..(சோ ஜம்மு பேபி எனி எப்பவுமே ஜன்னலிற்கு வெளியாள தான் பார்க்கும் பாருங்கோ)..உந்த டயலக்கை எல்லாம் வடிவா கேட்டு போட்டு தான் சந்தானமும்,கஞ்சா கறுப்பும் கடவுளின்ட பவர் பொக்ஸையே களவெடுப்பீனம் அது தான் சூப்பர் பகிடி பாருங்கோ..

மொத்ததில் "அறை எண் 305 கடவுள்"....கடவுளை பார்த்தா திருப்தி...(அக்சுவலா இரண்டு தரம் பார்த்துட்டன் இந்த படத்தை என்றா பாருங்கோ)...

காதல் செய்..காதல் செய் கண்ணில் பட்டதை காதல் செய் உன்னில் உள்ளதை காதல் செய்..(அட இந்த பாட்டு தான் கொஞ்சம் பரவால்ல படத்தில)...

மறுபடி ஜம்மு பேபிக்கு பிடித்த படம் வரக்க சந்திபோம் அது வரை எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட வணக்கங்கள்..!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பர் படம் ரொம்h நாலைக்கப்புறமா நல்ல படம் பார்த்த திருப்தி நல்ல நல்ல கருத்துக்களுள் படம் சுப்பரப்பு

சுப்பர் படம் ரொம்h நாலைக்கப்புறமா நல்ல படம் பார்த்த திருப்தி நல்ல நல்ல கருத்துக்களுள் படம் சுப்பரப்பு

அட..நீங்களும் பார்த்தனியளோ அண்ணா :) ...எல்லாம் சரி அண்ணா அக்சுவலா உங்களுக்கு அந்த கடவுளின்ட "பவர் பொக்ஸ்" கிடைத்தா நீங்க என்ன செய்வியள் சொல்லவே இல்ல... :)

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசாகரின் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.