Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்பு: 23 பேர் பலி- 40 பேர் காயம்

Featured Replies

(8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது.

பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்து நின்ற 61௪170 இலக்க பேருந்திற்கு உள்ளேயே குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட 23 பேரின் உடலங்கள் இதுவரை களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் 40 பேர் காயங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் களுபோவில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல படையினர் தடைவிதித்துள்ளனர். அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பட்ங்களை பார்க்க..............

http://isoorya.blogspot.com/2008/04/6-17-k...ombo-23-40.html

வீடியோ பார்க்க.......................

http://isooryavidz.blogspot.com/2008/04/ma...-bus-blast.html

Edited by isoorya

பேருந்தினுள் குண்டு வெடித்துள்ளதாக தெரிவருகின்றது. மேலதிக தகவல்கள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. கொழும்பு பிலியந்தலை வீதியில் அதிகளவில் நோயாளர் காவுவண்டிகள் ஓடித்திரிவதைப் பார்தால் இழப்புக் அதிகம் போல தெரிகின்றது.

Edited by Janarthanan

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இப்பேரூந்து நிலயத்தினூடாக மொரட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கொழும்பிற்குச் செல்வதுண்டு....மேலதிக விபரங்கள் தெரிந்தால் நல்லம்.

  • தொடங்கியவர்

இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் களுபோவில வத்ஹ்டியசாலைக்கு அனுமத்க்கப்பட்டுக்

கொண்டிருக்கிறார்கள்..............

http://isoorya.blogspot.com/

கடைசியாக கிடைத்த செய்திகளின் படி 16 பேர் மரணமடைந்துள்ளதுடன் 40 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்திலே இக் குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் பிலியந்தலை, களுபோவில கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜானா

  • தொடங்கியவர்

16 பேர் பலி , 42 பேர்காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது .இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்

http://isoorya.blogspot.com/

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

உயிரிழப்பு 24 ஆக உயர்ந்தள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 44. கொழும்பு தேசிய வைத்தியசாலையை நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டிகளை நோக்குமிடத்து உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கப்படலாம். பிலியந்தலை, களுபோவிலை வைத்தியசாலைகளிலிருந்து படுகாயமடைந்தவர்களை அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலை அவசரப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஜானா

பிலியன்தலயில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 24 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயம்

பிலியன்தல பஸ் தரிப்பிடத்தில் வைத்து இலக்கம் 157 ககபொல - பிலயன்தல பஸ் வண்டியினுள் இன்று மாலை 6.45 மணியளவில் வெடித்த குண்டினால் 24 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 64 பொது மக்கள் காயமடைந்துள்னர். கொல்லப்பட்டவர்களில் பெளத்த விகாராதிபதி ஒருவரும் அடங்குகிறார்.

பிலியன்தல பஸ் தரிப்பிடத்தில் வைத்து இலக்கம் 157 ககபொல - பிலயன்தல பஸ் வண்டியினுள் இன்று மாலை 6.45 மணியளவில் வெடித்த குண்டினால் 24 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 64 பொது மக்கள் காயமடைந்துள்னர். கொல்லப்பட்டவர்களில் பெளத்த விகாராதிபதி ஒருவரும் அடங்குகிறார்.

பிலியன்தல் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட 10 உடலங்களில் 5 இனம் காணப்பட்டுள்ளதாக பிலியன்தல வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் கூறுகின்றன.

பஸ் தரிப்பிடத்தை விட்டு பஸ் புறப்பட ஆயத்தமான தருணத்திலேயே குண்டு வெடித்துள்ளது. அப்போது பஸ்ஸுக்குள் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்தாக தெரிகிறது. குண்டு வெடிப்பினால் பஸ் மட்டுமல்ல சுற்றத்து பகுதிக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.ajeevan.ch/content/view/2194/1/

Edited by AJeevan

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை பேருந்திற்குள் குண்டு வெடித்ததில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

பிலியந்தலாவையில் குண்டுவெடிப்பு. - 16பேர் பலி, 40பேர் காயம்.

25.04.2008 / நிருபர் எல்லாளன்

பிலியந்தல நகரில் இன்று மாலை 6 50 அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிலியந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகமாலை இழப்பை மறைக்கவும் மடுவில் புலிகளூக்கு தோல்வி எனக்காட்டவும் சிங்களப்படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையே இதுவாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகமாலை இழப்பை மறைக்கவும் மடுவில் புலிகளூக்கு தோல்வி எனக்காட்டவும் சிங்களப்படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையே இதுவாகும்.

அதுவல்ல காரணம். கிளிநொச்சி மீது கண்முடித்தனமான தாக்குதலை சிங்கள இராணுவம் ஆரம்பிக்க போகின்றது.

மடுவில் இப்போ இராணுவம்...இனி கிளிநொச்சி தான் அடுத்த இலக்கு :rolleyes:

எதுக்கும் நாம் பந்தி பந்தியா கட்டுரை எழுதி சொருபத்தை துக்கி கொண்டாடுவோம் :rolleyes:

மதம் என்பது போதை

அதைக் கையாள்வதென்பது நெருப்பின் மேல் நடப்பது போலாகும்

இந்த போதை இந்திய ஆளும் வர்க்கத்திடம் அதிகளவு காணப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மீறுபவர்களை இவர்கள் மேலும் அழிக்கத்தான் முயல்வார்கள்.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் பெற்ற அவமானத்தை மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவுமே இவ்வாறான தாக்குதல்களை இலங்கை அரசு செய்து வருகிறது. அரசத் தலமை மீதும், ராணுவத்தின்மீதும் கொதிப்படைந்திருக்கும் சிங்கள மக்களை திசை திருப்பி அவர்களின் கோபத்தை புலிகள் மேல் பாய விடுவதற்கு அரசு செய்திருக்கும் செயல் இது. பாவம் , உண்மை தெரியாது சிங்களச்சனம் இன்னும் இன்னும் அரசின் தோல்வியுறும் போருக்கு ஆதரவு கொடுக்கப் போகுதுகள்.

அரசுக்கு ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். முகமாலை தோல்வியையும் மறைச்சாச்சு, புலிகள் மேல் மக்களின் கோபத்தையும் திருப்பியாச்சு.

இனி இவ்வாறான தாக்குதலகள் அடிக்கடி இடம்பெறும் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் விமானத் தாக்குதல் இதுவரையிலும் நடைபெறவில்லையா? அல்லது வன்னிமக்கள் தான் இதுவரை விமானத்தாக்குதல்களில் கொல்லப்படவில்லையா ? இதுவரையில் செய்யாத அழிவுகளையா விமானப்படை செய்யப் போகிறது ? அதெல்லாம் எப்போதோ செய்து பார்த்தாகி விட்டது ! ஏதோ புலிகள் சிங்களவர்களைக் கொல்வதால்த்தான் அரசும் வன்னியில் கொல்கிறது என்பது தவறு. அரசுக்கு தமிழர்களைக் கொல்வதை நியாயப்படுத்த எந்தத் தேவையுமில்லை. ஏனென்றால் யாரும் அதைத் தட்டிக் கேட்கப்போவதில்லை. அதன் விமானிகளுக்கு எப்பவெல்லாம் சோம்பல் முறிக்க வேண்டும் போலுள்ளதோ அப்போதெல்லாம் அது வன்னியில் குண்டுகளை வீசும். அதனால் கொலும்பில் தாக்குதலை முன்னோடியாக நடத்திவிட்டு வன்னியில் விமானத் தாக்குதல் நடத்தத் தயாராகிறது என்பதை ஏற்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.