Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம்

வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. நிர்வாக சபைக்கு ஈடாக சிறப்பு செயலணிக் குழு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இந்த சிறப்பு செயலணிக் குழு ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பத்தியூன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

வடக்கு மாகாணத்தின் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்பு செயலணிக் குழுவினர் அபிவிருத்தி தொடர்ப்பில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முடிவை சிறீலங்கா அதிபர் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்த போது, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் இடைக்கால நிர்வாக சபை:

வடமாகாண நிர்வாகத்தை முழுமையான கட்டுப்பாட்டுள் கொண்டுவரும் இடைக்கால நிர்வாக சபையினை அரசாங்கம் அமைத்துள்ளது.

வடமாகாண செயலணிக் குழு என்ற பெயரிலான இந்த இடைக்கால சபைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு உட்பட வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக விசேட செயற்பாட்டுக் குழுவினை அமைக்கும் முகமாக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட விஷேட அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியள்ளது.

இதனபடி வடக்கு மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்தல், அதற்காக் தற்போது ஆரம்பிக்கபபட்டுள்ள மனிதாபிமான நடவடிக்கைகளை விரிவாக்குதல் என்பன இந்தக் குழுவின் பிரதான பணிகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு வட மாகாண சபையினை உருவாக்கும் வரை, இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளின்; ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கான விசேட செயற்பாட்டுக் குழுவாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைவராகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ ஆகியோரை உறுப்பினர்களாக உள்ளடக்கிய நிர்வாகக் குழுவினால் வழிநடத்தப்படவுள்ளது.

இந்த செயலணி வடமாகாணத்தின், யாழ்ப்பாணம், முல்லைத்தீவுடு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை நிலமையினை கட்டியெழுப்புவதற்காக சுகாதார சேவைகள,; குடிநீர் நீர்ப்பாசனம், மின்சாரம், தொலைத்தொடர்புகள் பெருந்தெருக்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, பாடசாலைக் கல்வியினை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது, விவசாயம், கால்நடைகள், மற்றும் மீன்பிடி தொழில் துறைகளை அபிவிருத்தி செய்வது போன்ற மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை இம்மாவட்டங்களில் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிர்வாகக் குழவானது அனைத்து அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் மூலம் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும். பொதுமக்களை மீள்குடியேற்றுதல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை சிறந்த ஒருங்கிணைப்புடன் மேற்கொள்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும். சர்வகட்சி பிரதிநிதிகளது குழுவின் மூலம் பரிந்துரைக்கப்படுகின்ற ஆலோசனைச, நிறைவேற்றாளர் சபை போன்ற நிறுவனங்களுக்கிடையே தகுந்த ஒருங்கிணைப்பினை உருவாக்குவதுடன் தேவையான சந்தர்ப்பங்களின் போது வடமாகாண ஆளுநருக்கு திட்டங்களையும் கருத்துக்களையும் இந்நிர்வாகக்குழு முன்வைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://isoorya.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

டக்கு பாடு பறவாயில்லை. இதிலும் தாராளாமாக காசு அடிக்கலாம் அபிவிருத்தி என்ற போர்வையில். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

enjoy....

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்...

காற்று மாறினால்...

மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் டக்ளசு

மஹிந்தவால் முன் மொழியப்பட்டுள்ள வடக்கு மாகாணத்திற்கா சிறப்;பு செய்றபாட்டுக் குழுவை, அமைத்துக் கட்சிக் குழுவினால் சிபார்சு செய்யபட்ட வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால சபைக்கான முன்னோடி நடவடிக்கையாகக் கருதலாம். என டக்ளசு கூறியுள்ளனா..

வட மாகாணத்தில் புனர்வாழ்வு மற்றும அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவதற்கென அமைச்சர்கள் அடங்கிய விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை அமைக்க மஹிந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இக் குழுவில் டக்ளசு, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான பஸில் ஆகியேரார் இந்தச் செயற்பாட்டுக்குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.

இந்த விசேட செயற்பாட்டுக் குழு குறித்து அதில் அங்கம் வகிக்கவுள்ள டக்ளசு பி.பி.ஸி க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. :

அனைத்துக் கட்சிக் குழுவினால் சிபார்சு செய்யபட்ட வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால சபைக்கான முன்னோடி நடவடிக்கையாக இந்த விசேட செயற்பாட்டுக் குழு அமைகின்றது. முன்னோடியான நடவடிக்கையாகத் தான் நாங்கள் இதனை ஏற்றுக்கொள் வேண்டும்.

மற்றைய தமிழ்க் கட்சிகளையும் இந்த குழுவில் இனையுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களுடனான பேச்சில் நாங்கள் நல்லதோரு முடிவுக்கு வரலாம்.

ஏற்கனவே வடக்கில் வகுக்கபட்ட முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை நெறிப்படுத்துகின்ற வேலையை இந்தக் குழு செய்யும். உத்தியோத்தர் மட்டத்தில் இந்த வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்தலாக இந்தக் குழு மூலம் முன்னெடுக்கப்படும். மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

உயர் பாதுகாப்பு வலயங்கள் தெடர்பான சிக்கலான விடயங்களைத் தீர்ப்பதற்கான அதிகாரங்கள் இந்தக் குழுவுக்கு உள்ளது. எனினும், யுத்தம் என்ற பிரச்சினைக்கு முடிவு காணாமல் உயர் பாதுகாப்பு வலயங்களை உடனடியாக அப்புறப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை உயர் பாதுகாப்புப் பகுதி மக்களுக்கு தற்காலிக மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொடுப்போம்.

மனித உரிமைகள் மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு ஈ.பி.டி.பி மீது சுமத்தப்படுவது வெறும் அரசியல் குற்றச்சாட்டு என வடபகுதி மக்கள் நன்குணர்வார்கள். ஈ.பி.டி.பி தங்ளைப் பாதுகாப்பதற்கான கூடிய முழு முயற்சியையும் எடுக்கும் என அவர்கள நம்பிக்கை கொண்டுள்ளார்கள். :unsure:

மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என்பது போல் யுத்தத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வரை மனித உரிமை மீறல் பிரச்சினை இருக்கும். யுத்தத்திற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டால் இந்தப் பிரச்சிணையைத் தீர்த்து விடலாம் என்று நான் நம்புகிறேன். மாகாணத்திற்குரிய பொலிஸ் சேவையை அப்பகுதிகளில் அமைப்பதன் மூலமும் மனித உரிமைப் பிரச்சினைக்கு நடைமுறைகச் சாத்தியமான தீர்வு காணலாம் என்றும் நான் நம்புகின்றேன்.

நன்றி சுடர் ஒளி

ஆமாம் பயமில்லாமல் பொலிஸ் யூனிபோமிலே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சேர்ந்திருப்பவர்களைப் பாருங்கள்,

ஒருவன் இனத்துரோகி, மற்றயவன் புணர்வாழ்வுக்கென்று உலக நாடுகள் கொடுக்கும் பணத்தையெல்லாம் ஒன்றில் தனியே முச்லீம்களுக்காகவோ அல்லது தனது சட்டைப்பையை நிரப்பவோ பாவிப்பவன், மூன்றாவது ஆள் பத்து ரூபா கப்பம் கேட்டுத் திரிந்தவர்.

எப்படிக் கூட்டு ?! சனத்தின்ர தலையில உறைக்க உறைக்க மிளகாய் அரைக்கப் போறாங்கள் !!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.