Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று நாயகன் பெரியார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான்

என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன்

துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை!''

-தந்தை பெரியார்

p71d.jpg

உலகமே அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் பத்து குதிரை சாரட்டுகளில் பறந்துகொண்டு இருந்த 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம்! மார்க்சும் ஏங்கல்சும் தங்களது நெருப்புரைகளால் அறிவுலகில் பெரும் தீயை ஏற்படுத்தி, ஐரோப்பாவையே அதிர வைத்துக்கொண்டு இருந்த நேரம். இதன் எந்தச் சலனமும் இல்லாமல், உலக வரைபடத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில், தாங்கள் யாரென்றே அறியாத பெருங்கூட்டமொன்று இருந்தது. அறியாமை அவர்களின் கண்களைக் கட்டியிருந்தது. மதம் அவர்களது மூளையை அடைத்திருந்தது. சாதி முதுகில் அமர்ந்து அவர்களை முழுவதுமாகக் குனியவைத்திருந்தது. அவர்களது இந்த நிலை, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்களுக்கும் சில ஆதிக்கச் சக்திகளுக்கும் வசதியாக இருந்தது. வீதிகளில் அரசர்களைப் போலக் கை வீசி நடந்து வரும் அவர்களைக் கண்டதும், இவர்கள் தங்கள் தலையில் கட்டிய துண்டை அவசரமாக அவிழ்த்துக் கக்கத்தில் சுருட்டிவைத்துக்கொண்டு 'எசமான்' எனக் குனிந்து கும்பிடு போடுவார்கள். ஆனால் எந்தச் சூரியனும் வீதி பார்த்து உதிப்பதில்லை; எந்தக் காற்றும் சாதி பார்த்து வீசுவதில்லை. சாதியின் பெயரால் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, மனிதனை மனிதன் இழிவு செய்யும் போக்கு மட்டும் இங்கே தொடர்ந்துகொண்டு இருந்தது. அது மட்டுமா... பெண்ணடிமை, பால்ய விவாகம் மற்றும் இன்ன பிற மூட நம்பிக்கைகளும் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தன. இம்மக்களை மீட்டு சாதி, மதம் என்னும் நோய்களை விரட்டி, மானமும் அறிவும் ஊட்டி, தன்னுணர்வுமிக்க தமிழர்களாக மாற்ற யாரேனும் தோன்றிட மாட்டார்களா எனப் படித்த பண்பாளர்கள் பலர் உள்ளூரக் கொந்தளித்துக்கொண்டு இருந்தனர். சாதாரண ஒரு மனிதரால் இது சாத்தியமாகாது. துணிச்சல், அதிகாரம், செல்வாக்கு, அந்தஸ்து, பண பலம் இவற்றுடன் தன்னிகரற்ற சிந்தனை ஆற்றல், அதனை வெளிப்படுத்தும் சொல்வன்மை, வாதங்களை அடித்து நொறுக்கும் தர்க்க ஞானம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் மீதான பேரன்பு, எந்தச் சந்தர்ப்பத்திலும் எதையும் இழக்கத் துணியும் தியாக உள்ளம், தொண்டு மனப்பான்மை என இவை அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மகத்தான மாமனிதராக அவர் இருந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வைச் சீர்படுத்த இயலும் என்கிற நிலை.

இந்தச் சூழலில்தான், ஈரோடு எனும் வணிக நகரத்தில், 1879 செப்டம்பர் 17ம் தேதியன்று, தமிழர் தம் வாழ்வில் விடிவெள்ளி ஒன்று உதித்தது. அவர்தாம் 'பெரியார்' எனத் தமிழரால் அன்புடன் அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி!

பெரியாரின் தந்தையார் பெயர் வெங்கட்ட நாயக்கர். ஈரோட்டில், வெறும் வெங்கட்ட நாயக்கர் என்றால் பலருக்கு அப்போது தெரியாது. கல்தச்சு நாயக்கர் என்றால், உடனே சொல்லிவிடுவார்கள். ஏனென்றால், அவரது தொழில் அப்படி. கற்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்வதில்தான் அவருக்கு அப்போது பிழைப்பு.

வெங்கட்ட நாயக்கரின் பூர்வ கதை, கொடுமையானது. அவருக்குச் சிறு வயதிலேயே அப்பா இல்லை. யாரோ குழந்தை பாக்கியம் இல்லாத ஓர் ஏழைப் பெண்ணால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.மழைக்குக்க

ரசனி காந்தும் பெரியாரை போல அற்புதமான மனிதன்....

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யோசிப்பது உண்டு தயா. முக்கியமாக உயர்குலத்து கன்னடரான ராமசாமியைத் தூக்கிக் கொண்டாடும் இவர்கள், தாழ்நிலையில் இருந்து முன்னுக்கு வந்த ரஜனியை ஏன் ஒதுக்குகின்றார்கள் என்று. அதற்குக் காரணம், ரஜனி கொண்டிருந்த பக்தியும், அதை அவரது ரசிகர்கள் பின்பற்றுவதுமே.

எனக்கு ரஜனி மேல் முன்பு ஈடுபாடு ஏதும் இருந்ததில்லை. ஆனால் பதிலுக்கு ரஜனி ஆதரிப்பது தப்பில்லை என்றே தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யோசிப்பது உண்டு தயா. முக்கியமாக உயர்குலத்து கன்னடரான ராமசாமியைத் தூக்கிக் கொண்டாடும் இவர்கள், தாழ்நிலையில் இருந்து முன்னுக்கு வந்த ரஜனியை ஏன் ஒதுக்குகின்றார்கள் என்று. அதற்குக் காரணம், ரஜனி கொண்டிருந்த பக்தியும், அதை அவரது ரசிகர்கள் பின்பற்றுவதுமே.

எனக்கு ரஜனி மேல் முன்பு ஈடுபாடு ஏதும் இருந்ததில்லை. ஆனால் பதிலுக்கு ரஜனி ஆதரிப்பது தப்பில்லை என்றே தோன்றுகின்றது.

ங்களுக்கு எல்லாமே இப்படி அடிக்கடி மாறி மாறி தானே தோன்றுகின்றது..... ரஜனியை கன்னட பட்டியலில் இருந்து துக்கியதற்கு என்து மனமார்ந்த நன்றிகள்!

Edited by இணையவன்
ஒருமையில் எழுதப்பட்டது திருத்தப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ரசனி காந்தும் பெரியாரை போல அற்புதமான மனிதன்....

அதிர்ஸ்டத்தை மட்டுமே நம்பும் மூடனுக்கு அது புதிரல்ல.

எத்தனையோ கோடி மக்களுடன் ஒப்பிடும் போது தனக்கென ஒரு புதிய நடிப்பு திறனை உருவாக்கி வெற்றி கண்ட ரஜனிகாந் ஒரு அற்புத மனிதன்தான். எத்தனையோ கோடிகளை சுலபமாக வரவழைப்பதென்பது தவறி நடந்த ஒன்றில்லை. ஒரு விடயத்தை நம்புவன் தான் அதில் வெற்றி பெறுகிறான் என்ற கருத்தை நிருபிக்க ஒரு ஆங்கில புத்தகம் ரஜனிகாந்தை உதரணம் காட்டி இருந்தது.

எங்கே போய் முடிகிறோம் என்பதோடு எங்கே தொடங்கினோம் என்பது தொடர்பு படுகின்றதுதானே தயா...

பகுத்தறிவு அற்புதமான இணைப்பு வாசித்து பல உண்மைகளை அறிந்தேன் தெரியத சில விடயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிகள்!

அதிர்ஸ்டத்தை மட்டுமே நம்பும் மூடனுக்கு அது புதிரல்ல.

எத்தனையோ கோடி மக்களுடன் ஒப்பிடும் போது தனக்கென ஒரு புதிய நடிப்பு திறனை உருவாக்கி வெற்றி கண்ட ரஜனிகாந் ஒரு அற்புத மனிதன்தான். எத்தனையோ கோடிகளை சுலபமாக வரவழைப்பதென்பது தவறி நடந்த ஒன்றில்லை. ஒரு விடயத்தை நம்புவன் தான் அதில் வெற்றி பெறுகிறான் என்ற கருத்தை நிருபிக்க ஒரு ஆங்கில புத்தகம் ரஜனிகாந்தை உதரணம் காட்டி இருந்தது.

எங்கே போய் முடிகிறோம் என்பதோடு எங்கே தொடங்கினோம் என்பது தொடர்பு படுகின்றதுதானே தயா...

ரசனிகாந் திரைகளில் நடித்தார் முன்னுக்குவந்தார், பெரியார் வாழ்க்கையில் நடித்தார் தான் முன்னுக்கு வந்து பலரை பின்னுக்கு தள்ளினார்... ( நீங்கள் வேணும் எண்டா பார்ப்பணரை எண்டு வைத்து கொள்ளுங்கள்)

இருவரும் ஒண்றுதான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன்,

மகா அயோக்கியன்!'

-பெரியார்

'இனி, ராமசாமியைத் திருத்த முடியாது. படிப்பு கால் வீசைக்கும் ஏறாது!' எனப் பள்ளிக்கு முழுக்குப் போடவைக்க வெங்கட்ட நாயக்கரும் சின்னத் தாயம்மாளும் முடிவெடுத்தனர்.

ராமசாமியின் எடக்குமடக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.

p215d.jpg

''இந்த நாயக்கருக்கு என்ன ஆச்சு! பள்ளிக்கோடம் போய்க்கிட்டிருந்த பயலைக் கூட்டியாந்து கடையில கணக்கெழுத உட்கார வெச்சிருக்காரே! சின்ன புள்ளைக்கு என்ன விவரம் இருக்கப்போவுது!'' என்று பலரும் பலவிதமாகத் தங்களது வியாபார பேட்டைக்குள் புதிதாக முளைத்திருக்கும் சிறுவனைப் பார்த்துக் கேலி பேசியதற்கு ஒரு காரணம் இருந்தது. வெங்கட்ட நாயக்கரின் மண்டிதான் ஈரோடு பஜாரிலேயே பெரிய மண்டி. மிளகாய், தனியா, மஞ்சள், வெல்லம், கருப்பட்டி போன்ற மளிகைச் சாமான்களை மூட்டை மூட்டையாக வாங்கிச்செல்ல வியாபாரிகளும் வண்டிக்காரர்களும் எப்போதும் கூட்டம் கூட்டமாக மண்டி முன் கூடி யிருப்பர்.

காலையிலேயே ஏலம் ஆரம்பித்துவிடும். கூடியிருக்கும் வியாபாரிகள் மத்தியில், கையில் மணியை ஆட்டிக்கொண்டே உரக்கக் கூவி ஏலம் விடுவதில் தொடங்கி, மூட்டைகளில் விலாசம் எழுதி, குறிப்பிட்ட வாடிக்கை யாளர்களிடம் சாமான் சேர்ந்து விட்டதா என்பது வரை கவனித் துக்கொள்ள வேண்டும். இத்தனை பெரிய பொறுப்பை இந்தச் சிறுவன் தாங்குவானா என்ற எண்ணம் அனைவருக்கும்!

ஆனால், நடந்ததோ வேறு! மண்டியில் கால்வைத்த சில நாட்களிலேயே வியாபாரத்தில் வெளுத்து வாங்கினான் சிறுவன் ராமசாமி. கையில் மணியைப் பிடித்துக்கொண்டு வியாபாரிகள் முன் அவன் நின்றால், பஜாரே களைகட்டும். காரணம், ராமசாமி ஏலத்தினூடே அடிக்கும் கிண்டலும் கேலியுமான பேச்சுகள்தான். பேச்சோடு பேச்சாக, விலையையும் சாமர்த்தியமாகக் கூட்டிவைத்து, வியாபாரத்தில் வெங்கட்டாவையே மிஞ்சிவிட்டார் ராமசாமி. மகனது திறமைகளைப் பார்த்து, நாயக்கருக்கு எக்கச்சக்க பூரிப்பு!

p215c.jpg

வியாபாரம் இல்லாத நேரங்களிலும், கடை முன் எப்போதும் கூட்டம் இருக்கும். பெரும்பாலும் வண்டியோட்டிகளும் சுமை தூக்கும் தொழிலாளிகளும்தான். நாயக்கர் மகன் என்ற மரியாதை காரணமாக, ராமசாமி எதைச் சொன்னாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களைப் பொறுத்தவரை ராமசாமி ஒரு கதாநாயகன். அவர்களைத் தொடர்ந்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடைக்கு வரும் மதவாதிகளையும், பிராமணர்களையும், இன்ன பிற பெரிய மனிதர்களையும் வம்புக்கு இழுப்பார் ராமசாமி.

''என்ன சாமி... உங்க ராமாயணத்துல ராமர் ஒரு மகாவீரர்தானுங்களே?''

''ஆமாம்! அதுக்கென்ன இப்போ?''

''அப்புறம் எதுக்காக அவர் வாலியை மறைஞ்சிருந்து தாக்கணும்?''

''அது வந்து... வாலி ஒரு அசுரன்! அவன் யாரைப் பார்த்தாலும் அவங்க பலத்துல பாதி பலம் அவனுக்கு வந்துடும்!''

''அப்படின்னா, ராமனைவிட வாலி பலசாலின்னு ஒப்புக்கறீங்க. அப்படித்தானே?''

''அது வந்து... புராணத்துல என்ன சொல்றதுன்னா..?''

''அதெல்லாம் எனக்கு வேணாம் சாமி! ஒரு அவதாரமா இருந்தும், ராமரால வாலியை ஜெயிக்க முடியலைன்னா, அப்ப வாலிதானே உண்மையான பல சாலி? நீங்க அவரைத்தானே கும்புடணும்? அதை விட்டுட்டு எதுக்காக ஒரு பயந்தாங்குள்ளியைக் கடவுளா மாத்துறீங்க?''

இப்படியான எடக்குமடக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் எதிரே நிற்பவர் திணறுவதைப் பார்த்து, சுற்றிலும் அமர்ந்திருக்கும் வண்டியோட்டிகள் மத்தியில் பலத்த சிரிப்புச் சத்தமும் கைத்தட்டல்களும் எழும். கேள்வியால் திணறியவரும் சுதாரித்து, ''என்ன நாயக்கரே! உங்க பையன் பலே புத்திசாலியா இருப்பான் போலிருக்கே! என்னையே கேள்வி கேட்டு மடக்கிப்பிட்டான்!'' எனச் சமாளித்துச் சிரித்தபடியே அந்த இடத்திலிருந்து நழுவிச் செல்வார்.

காலங்கள் உருண்டன. இப்போது வெங்கட்ட நாயக்கர் ஈரோடு முனிசிபல் சேர்மன். இந்த நிலையில், இளைய மகன் ராமசாமி பற்றிச் சமீபகாலமாக அவர் கேள்விப்படும் தகவல் எதுவும் அவ்வளவாகச் சரியாக இல்லை. பையனுக்கு வயதோ இருபது ஆகிவிட்டது; இனியும் தாமதித்தால், நாடகக்காரிகளுக்கே மொத்தச் சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவான் ராமசாமி என்று பயந்தார் வெங்கட்ட நாயக்கர். ''சொந்தத்துல ஏதாவது பொண்ணு இருந்தா, உடனே பாரு! சட்டுபுட்டுனு ஒரு கால்கட்டு போட்டுடலாம். நம்ம ராமசாமிக்கு வயசாகுதுல்ல!'' என மனைவியிடம் அறிவுறுத்தினார்.

சேலம் தாதம்பட்டியில், உற வில் ஒரு பெண் இருப்பது நினை வுக்கு வந்தது. பெயர்கூட நாகம் மாளோ, என்னவோ. வயது பதின்மூன்று இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் அப்பா ரங்கசாமி, ஒரு ஹெட்கான்ஸ்டபிள். இப்போதிருக்கும் தங்களது மிராசு, ஜமீன் போன்ற அந்தஸ்துக்கு முன் அவர்களின் குடும்பம் ஏணி வைத்தால்கூட எட்டாது என முடிவெடுத்தனர். ஆனால், தன் மகனின் உள்ளத்தில் அந்த நாகம்மாள் ஏற்கெனவே குடியேறி, சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டாள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பிற்பாடு விஷயம் தெரிய வந்து, மகனின் எண்ணத்தை மாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை. இறுதியாக, நாகம்மாள் எனும் அந்த அற்புதப் பெண்மணி, தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அடியெடுத்து வைக்கும்விதமாக, தன் மனதுக்குப் பிடித்த ராமசாமியோடு மாலை மாற்றிக்கொண்டார்.

கல்யாணம் ஆன அடுத்த நாளே, சின்னத்தாயம்மாள் தன் மகனின் சுபாவங்களை விலாவாரியாக எடுத்துக் கூறி, ''அவனைப் பக்திமானாகவும் ஒழுக்கமான குடும்பத் தலைவனாகவும் மாற்ற வேண்டியது உன் பொறுப்பு!'' என்று கட்டளை இட்டார்.

ராமசாமியோ, தன் மனைவியை எப்படியாவது அம்மாவின் பூஜை கோஷ்டியிலிருந்து பிரித்து, தன்னைப் போல முற்போக்கான சிந்தனைகொண்டவளாக மாற்றிவிட வேண்டும் எனும் முனைப்பில் இருந்தார்.

அதன் முதல்கட்டமாக மனைவியும் அம்மாவும் என்றைக்கெல்லாம் விரதம் மேற்கொள்கிறார்களோ, அன்று பார்த்துத் தனக்கு அசைவ உணவு சமைக்க வேண்டுமென அடம்பிடிப்பார். மனைவியின் தாலியைக் கழற்றித் தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, தாலி இல்லாமல் வாழ அறிவுறுத்துவார். நாகம்மை எப்படியும் தன் மகனைத் திருத்தி வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள் என எண்ணியிருந்த சின்னத்தாயம்மாள், மெள்ள மெள்ள நாகம்மையே சீர்திருத்தப் பெண்மணியாக மாறிவருவதைக் கண்டு, ''அவளாச்சு, அவ புருஷனாச்சு!'' எனும் முடிவுக்கு வந்தார்.

இப்படியாக, புதுமையும் குதூகலமுமாக நாகம்மாளும் ராமசாமியும் சந்தோஷ மண வாழ்க்கையில் நீச்சலடித்துக்கொண்டு இருந்தபோது, அவர்கள் வாழ்வில் யாரும் எதிர்பாராத விதத்தில் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நாகம்மைக்கும் ராமசாமிக்கும் பிறந்த பெண் குழந்தை ஒன்று ஐந்தே மாதத்தில் இறந்து, குடும்பத்தினரைப் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியது!

-(சரித்திரம் தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.இவை தமிழ்ச் சொற்களும் அல்ல!

-பெரியார் (451973, விடுதலை)

எல்லாக் காலத்திலும் இழப்புகள்தான் ஞானத்தின் பிறப்பிடம். எதுபற்றியும் கவலைப்படாமல் சலங்கை பூட்டிய காளை போல் உல்லாசமாய் குதித்தோடிக்கொண்டிருந்த ராமசாமியின் வாழ்வில், பிறந்து ஐந்தே மாதத்தில் இறந்துபோன அவரது பெண் குழந்தையின் இழப்பு சொல்ல முடியாத துக்கமாக அவரது தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டது. கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி போன்ற குணங்கள் சட்டென அவரை விட்டு விலகி நின்றன. சோகம் அவரைச் சூழ்ந்து கொண்டது. துக்கம் அவரது தூக்கத்தைப் பறித்தது. பின்னாளில் தந்தை இறந்தபோதும், தாய் இறந்தபோதும் தன் இணைநிழலாக வாழ்ந்த மனைவி நாகம்மை இறந்த போதும், அதுகுறித்துக் கடுகளவும் சோர்ந்துபோகாமல் அடுத்த நிமிடமே இடுப்பில் வேட்டியை இறுக்கிக்கொண்டு தொண்டு செய்யப் புயலெனப் புறப்பட்டுச் சென்ற அதே ராமசாமிதான், தன் இளம் வயதில் எதிர்கொண்ட முதல் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் துவண்டார்.

காலங்கள் நகர்ந்தன. வழக்கம் போலக் காலையும் மாலையும் மண்டிக்கும் வீட்டுக்குமாக கால்கள் தூரத்தை அளந்துகொண்டு இருந்தாலும், மனம் என்னவோ சோகத்தில் தோய்ந்திருந்தது. மகனது இந்த மனநிலையை வெங்கட்ட நாயக்கரால் சரியானபடி புரிந்துகொள்ள முடியவில்லை. ராமசாமி முன்பு போல வேலையில் அத்தனைச் சுறுசுறுப்பாக இல்லாதது கண்டு அவருக்கு அடிக்கடி கோபம் தலைக்கேறியது. பலர் முன்னிலையில் மகனைத் திட்டினார். கல்யாணமான 25 வயது வாலிபன் என்றுகூடப் பாராமல், வெற்றிலைச் சாற்றை ராமசாமியின் முகத்தில் துப்பி அவமானப்படுத்தினார். ''தறுதலை... தறுதலை..! உன்னால எனக்கு என்ன புண்ணியம்!'' என்றுஆத்தி ரத்தோடு தன் செருப்பைக்கழற்றிப் பலர் முன்னிலையில் மகன் மீது வீசும் அளவுக்கு வெங்கட்ட நாயக்கரின் கோபம் கட்டுக் கடங்காத நிலைக்குச் சென் றது. ஏற்கெனவே குழந்தை இறந்த சோகத்தில் தடு மாறிக்கொண்டு இருந்த ராமசாமிக்குத் தந்தையால் ஏற்பட்டு வந்த இந்தத் தொடர் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு வெறுத்தது; வாழ்க்கையும் வெறுத்தது. எங்காவது கண்காணாத தேசத்துக்குப் போய் பிச்சை எடுத்தாவது வாழலாமே தவிர, இனி இந்த வெங்கட்ட நாயக்கரின் முகத்தில் விழிக்கவே கூடாது என முடிவெடுத்தார் ராமசாமி.

நாயக்கரின் வீடு அன்றைய இரவுப்பொழுதில், மறுநாளின் களேபரத்தை முன் கூட்டி அறிந்துவைத்திருந்தது போல அமைதியாக உறங்கிக்கிடந்தது. மறுநாள் காலையில் நாகம்மை அழுதுகொண்டே மாமியாரை எழுப்பி, தன் கணவனைக் காணாத விவ ரத்தைச் சொல்ல, அடுத்த நொடி நாயக்கர் வீடே அல்லோல கல்லோலப்பட்டது. வேலைக்காரார்கள் கூச்சலும் குழப்பமுமாக ஆளுக்கொரு திசையில் ஓடினர். வெங்கட்ட நாயக்கர் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தார். அதே நேரம், வடக்கு நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றின் ஒரு கூபேயில், பயணிகள் தங்களுடன் பயணிக்கும் ஒரு சாமியாரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். இத்தனை சின்ன வயதில் சாமியார் கோலமா? இதுதான் அவர்களின் ஆச்சர்யப் பார்வைக்குக் காரணம். அந்தப் பயணி களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்தச் சாமியார்தான் பின்னாளில் சாமியார் களையும் அவர்களது போலி கூடாரங்களையும் விரட்டியடிக்கும் பெரும் புரட்சியாளராகவும் தமிழ்நாட்டின் விடிவெள்ளியாகவும் மாறப் போகிறார் என்று!

காசி. எங்கு பார்த்தாலும் மடங்கள், கோபுரங்கள், மணியோசைகள், வேத உச்சாடனங்கள் என 24 மணி நேரமும் பக்தி பூசிய நகரம். தங்களது பாவங்களைப் போக்க, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்து குவியும் பக்தர்களும், அந்த அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களுமாக நிறைந்து வழியும் நகரம். கொலை, கொள்ளை செய்யும் கொடூர மனம் படைத்தவர்களும், நர மாமிச பட்சிணிகளும் கூட அங்கே மலிந்திருந்தனர். மதமும் மனிதர்களும் ஒரு சேரக் கைகோத்து சீரழித்துக்கொண்டிருந்த அந்த நகரின் வீதிகளில் சாமியார் கோலத்தில் வந்திறங்கினார் ராமசாமி. அங்கே அவருடன் இரண்டு பிராமண நண்பர்களும் வந்திறங்கினர்.

வழியில், பெஜவாடாவில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டபோது, அவர்கள் ராமசாமிக்குப் பழக்கமாகியிருந்தனர். பெஜவாடாவில் முருகேச முதலியார் என்பவர் அப்போது இவர்கள் மூவருக்கும் அடைக்கலம் தந்து உதவியிருந்தார். இப்படி மற்றவர் நிழலில் அண்டிப் பிழைப்பதைவிட, காசிக்குச் சென்றால் காலாட்டிக்கொண்டே மடங்களில் பிழைப்பு நடத்தலாம் என பிராமண நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் ராமசாமி அவர்களுடன் புறப்பட்டுக் காசிக்கு வந்திறங்கினார். ஆனால், காசியிலோ கதை வேறு மாதிரியாகத் திரும்பியது. நல்ல பசி நேரம்! ராமசாமி ஏக எதிர்பார்ப்போடு உற்சாகமாக நண்பர்களுடன் வேகமாக மடத்தினுள் நுழைந்தார். ஆனால், மடம் அவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு கை அவரை வலுக்கட்டாயமாக வெளியே பிடித்துத் தள்ளியது. ''நீ பிராமணன் இல்லை. அதனால் உன்னை அனுமதிக்க முடியாது'' என்று மடத்து நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறினர். அப்போதுதான் ராமசாமி உணர்ந்தார், தன்னைப் பிடித்து வெளியே தள்ளிய கை மனிதனுடையது அல்ல; மதத்தினுடையது என்று! இத்தனைக்கும் அது ஒரு செட்டியாரின் மடம். பிராமணர்கள் சாப்பிட்டால் மட்டும்தான் தனக்குப் புண்ணியம் என்பது அந்தச் செட்டியாரின் மூட நம்பிக்கை. ராமசாமிக்கோ வயிற்றில் பசித் தீ! கண்களிலோ நீர். ஆத்திரமும் ஆவேசமும் உள்ளுக்குள் புரண் டது. அதைவிட பசி அவரை அதிகமாகப் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. வேறு வழியில்லை. திரும்பிப் பார்த்தார். மடத்து வாசலில் குவியலாக எச்சில் இலைகள். இனி, மான அவமானம் பற்றி யோசிக்க அவகாசம் இல்லை என முடிவு செய்தார். ஆம்... இன்று எத்தனையோ தமிழர்கள் வயிறார உண்பதற்குக் காரணமான பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி, அன்று எச்சில் இலைகளின் முன் கண்ணீரோடு அமர்ந்தார். 'மனிதனை மனிதன் ஏன் வெறுக்க வேண்டும்? எது அவர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது?' என உள்ளுக்குள் ஓராயிரம் கேள்விகள் பிறந்தன. அன்று அவருடைய வயிறு நிறைந்தது. ஆனால், மனம் பள்ளத்தாக்காக வெறுமையில் உழன்றது.

காசியில் இனி பிழைப்பு ஓட வேண்டுமானால் பிராமணனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டார் ராமசாமி. மொட்டை அடித்துக்கொண்டார். தாடி, மீசையை மழித்துக்கொண்டார். நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்தார். ஏற்கெனவே செக்கச் சிவந்த மேனி. கேட்கவா வேண்டும்..! பூணூல் அணிந்ததும் அசல் பிராமணனாகவே மாறிவிட்டார் ராமசாமி. வழியில் தென்பட்ட ஆசாமிகளெல்லாம் சாமி எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். கச்சிதமான வேஷத்துக் கேற்ப ஒரு சைவ மடத்தில் வேலையும் கிடைத்தது. கருக்கலிலேயே எழுந்து குளித்து முடித்து பூ பறிக்கும் வேலை. பூ பறிப்பது சுலபமான வேலைதான்; ஆனால், விடிகாலையிலேயே குளித்தாக வேண்டுமே, அதுதான் பிரச்னை! ஒரு நாள் நம்மவர் கங்கைக் கரையில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டு, குளித்ததாகப் பேர்பண்ணிவிட்டுக் கிளம்பியபோது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். அவர் பிராமணர் இல்லை எனத் தெரிய வர, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். தொடர்ந்து பசியும் பட்டினியுமாகக் காசி வீதிகளில் தெருத்தெருவாக அலைந்தார். பிச்சை எடுத்தார். முன்னோர் கடன் கழிப்பதற்காக கங்கைக் கரையில் பிண்டம் வைக்கப்பட்ட உணவை எடுத்து உண்டார்.

'சாதாரண மனிதர்களுக்கு இங்கே மரியாதை இல்லை; வஞ்சகர்களும், பித்தலாட்டக்காரர்களும், காம வியாபாரிகளும், போதைப்பொருள் கடத்து பவர்களும் மட்டுமே இங்கு குப்பை கொட்ட முடியும்' என் பதை உணர்ந்தார் ராமசாமி. ஒருகட்டத்தில் காசியை விட்டுப் புறப்பட்டு ஆந்திரா வந்து, ஒரு நண்பரின் வீட்டில் தங்கினார். வீட்டு நினைவு ஒருபுறம், மனைவி நாகம்மையின் நினைவு ஒருபுறம் என மனதை அலைக்கழிக்க, தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த ஓர் இரவில், வாசல்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. வீட்டுக்காரரானசுப்பிரமணிய பிள்ளை எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். வந்தவரின் குரல் ராமசாமியின் காதுகளில் விழுந்து, முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. சட்டென எழுந்து கதவருகே சென்றார் ராமசாமி. வாசலில் நின்றுகொண்டு இருந்தவர் அப்பா வெங்கட்ட நாயக்கர். சட்டென அவருக்குத் தன் மகனை அடையாளம் தெரியாவிட்டாலும், அடுத்த நொடியே சுதாரித்துப் புரிந்துகொண்டு, ''ராமா, என்னை மன்னிச்சுடுடா! இனிமே உன்னைத் திட்ட மாட்டேன்டா!'' எனக் கதறியபடி தன் மகனை ஆவேசமாக இழுத்து அணைத்துக் கொண்டு குலுங்கினார் வெங்கட்ட நாயக்கர்.

-(சரித்திரம் தொடரும்)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக்கொள்பவரே ஆவார்!

-பெரியார்

இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாற்றில் நட்பு எனும் அத்தியாயத்தை எழுதப்போனால், உலகின் தலைசிறந்த நாவல்களும் தோற்றுப்போகும்! கோப் பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போல, பெரியார் ராஜாஜியின் நட்பும் ஆழமானது!

அன்று, சேலம் நகர மன்றத் தலைவராக இருந்த ராஜ கோபாலாச்சாரியார் என்றழைக்கப்பட்ட ராஜாஜி, ஈரோடு வந்து ராமசாமியாரைச் சந்தித்தது ஆரம்பம். தொடர் சந்திப்புகளில், காங்கிரஸில் சேருமாறு அழைப்பு விடுத்தார் ராஜாஜி. ராமசாமியாரும் அதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸில் சேர்ந்து தமிழக அரசியலில் அடியெடுத்துவைத்தார். தமிழ்நாட்டில் அப்போது நிலவிவந்த அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொண்டால்தான், ராமசாமியாரின் அரசியல் வருகை யில் உள்ள முக்கியத்துவத்தை நம்மால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

1914 உலக வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்திய ஆண்டு. முதல் உலகப் போர், ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோஷலி சத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக் காவிலிருந்து காந்தியின் இந்திய வருகை எனப் பல முக்கிய நிகழ் வுகள் அந்த ஆண்டில்தான் நிகழ்ந் தன. தமிழ்நாட்டிலும் அதிசயிக்கத் தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. படித்த இளைஞர்கள் சிலர் அந்த ஆண்டு சென்னை, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி யில் கூடி விவாதித்தனர். அவர் களது பேச்சில் உணர்ச்சியும் உஷ் ணமும் அதிகம் இருந்தன. அவர் களின் கோபத்துக்குக் காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமட்டு மல்ல; அதன் அரசாங்கப் பதவி களும்கூட!

சப் கலெக்டர், ஜட்ஜ், தாசில் தார், வக்கீல், ரெவென்யூ இன்ஸ் பெக்டர் போன்ற உயர் பதவிகள் பலவற்றில் பிராமண சமூகத்தினரே பரவலாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். டெபுடிகலெக் டர்கள், சப் ஜட்ஜுகள், மாவட்ட முன்சீப்கள் என அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் களே அதிக எண்ணிக்கையில் பதவியில் இருந்தனர். மற்ற சாதி களில் இருந்த படித்த இளைஞர் கள் அரசாங்கப் பதவிகளுக்கு வருவதற்கு இது பெரும் தடையாக இருந்தது. இதுதான், அன்றுகூடிப் பேசிய இளைஞர்களின் விவாதத் தின் சாராம்சம். விளைவு, 1916 நவம்பர் 20ல், சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வக்கீல் எத்திராஜ் என்பவர் வீட்டில் டாக்டர் நடேசன், சர்.பி.டி.தியா கராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோர் தலைமையில் சுமார் 30 பேர் ஒன்று கூடினர். புதிய இயக்கம் ஒன்று உதயமானது. 'தென்னிந்திய உரிமை நலச் சங்கம்' என்ற பெயரில் அன்று உருவான அந்த இயக்கம், தனது அடுத்தடுத்த மாநாடுகளால் தென்னிந்தியா முழுக்கப் பெரும் எழுச்சியையும் அலையையும் மக்கள் மத்தியில் உண்டாக்கி யது. அவர்கள் தங்களைத் 'திரா விடர்' என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் வகுப்புவாரி முறையில் பிரநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநாடுகள் தோறும் முழங்கினர். இதையட்டி தங்களது கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லும்விதமாகப் பத்திரிகைகளையும் துவக்கினர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அவை மக்களிடையே பரபரப்பாக விற்பனையாகி, கட்சிக்குப் புதிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் நடத்திய 'ஜஸ்டிஸ்' எனும் ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே நாளடைவில் மக்களிடையில் அதிகமாகப் புழங்கத் துவங்கி, பிற்பாடு அக்கட்சியின் பெயரையும் மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றே அழைத்தனர். இந்த 'ஜஸ்டிஸ்'தான் தமிழில் 'நீதி'யாகி பின்னர் 'நீதிக்கட்சி' என்ற பெயருடன் அரசியல் வரலாற்றில் தன் னைப்பதிந்துகொண்டது.

இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், முதல் உலகப் போரில் தனக்கு ஒத்துழைத்த இந்தியாவுக்குத் தனது நன்றியைக் காட்டும் விதத்தில், மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளப் பயிற்சி அளிக்கும் விதமாக மாகாணங்களில் சுய ஆட்சி வழங்கத் திட்டமிட்டது.

1919ல் சென்னையில் நடந்த முதல் மாநகராட்சித் தேர்தலில் 'நீதிக் கட்சி' பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீதிக் கட்சியின் தலைவரான சர்.பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மற்றொரு பிரிவான அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலான சுயராஜ்யக் கட்சி படுதோல்வி அடைந்தது.

இத்தனைக்கும் வட நாட்டில் காட்டுத் தீயென தேச பக்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த நேரம் அது. காந்தி மகான் மக்களிடையே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருந் தார். அங்கு காங்கிரஸ், மக்கள் போற்றும் மகத்தான கட்சியாக மாறி இருந்தது. ஆனால், தென் னாட்டில் காங்கிரசுக்கு மக்க ளிடத்தில் போதிய செல்வாக்கு இல்லை என்பதைத் தேர்தல் நிரூபித்துவிட்டது.

காந்திக்கு இந்த விஷயம் தெரிந்து, தென்னாட்டில் காங்கிரஸைப் பலப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசிக்கத் துவங்கினார். இது சம்பந்தமாக அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தென்னாட்டுத் தலைவர்களில் ஒருவரான ராஜாஜியிடம் அவர் தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். இனி, தென்னாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்க்க வேண்டுமானால், அதைப் பிராமணரல்லாத ஒருவரை வைத்துதான் செய்ய முடியும்; நல்ல பேச்சு வன்மையும் தேச பக்தியும்கொண்ட தலைவராக இருந்தால், நீதிக் கட்சியை முழுவதுமாக ஓரங்கட்டிவிடலாம் என்பதே அது!

இச்சமயத்தில்தான் ராஜாஜிக்கு ஈரோட்டில் ராமசாமி எனும் தலைவரின் சாகசங்களும் அருமை பெருமைகளும் தெரிய வந்தன. ராமசாமியாருக்கு காங்கிரஸ் மீது, எப்போதும் ஒரு அபிமானம் உண்டு. ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதுமே துடித்துப்போன ராமசாமியார், வ.உ.சி. உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் அழைத்துச்சென்று அந்த இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருக்கிறார். தன்னைத் தேடி வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பொருளுதவியும் பலமுறை செய்திருக்கிறார். என்றாலும், அப்போதெல்லாம் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட அவர் ஏற்றிருக்கவில்லை. எனினும் ராஜாஜியின் மீது கொண்டிருந்த நட்பால், அவரது அழைப்புக்கு உடனே ஒப்புக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, விதவைத் திருமணம், கதராடை இயக்கம் என இந்த நான்கு கொள்கைகளையும் கேட்ட மாத்திரத்திலேயே ராமசாமி அவர்களுக்கு காந்தியின் மேல் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது.

''இனி கண நேரமும் நாம் தாமதிக்கக் கூடாது. இந்தத் தேசத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க, காந்தியின் கரத்தை வலுப்படுத்த இதுவே சரியான தருணம். உங்களது நகராட்சி மன்றப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். நானும் சேலம் நகர மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என ராஜாஜி துரிதப்படுத்த, ராமசாமியார் முழு மனமின்றித் தயங்கினார்.

''நாயக்கரே! உங்களுக்கு என்னதயக்கம் இருந்தாலும் வெளிப்படையாகக் கேளுங்கோ!''

''இல்லை... தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சின்னாலே அது உங்க சாதிக்காரங்க கட்சியாதான் இருக்குது.''

''அதனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நீங்க வந்து அந்த அவப் பேரை மாத்திடுங்கோ!''

''அது போதாது! எனக்கு நீங்க ஓர் உத்தரவாதம் தரணும். கட்சி யிலேயும் உத்தியோகத்திலேயும் உங்க சாதிக்காரங்க இல்லாத மத்த சாதிக்காரங்களுக்கு 50 சதவிகிதம் நீங்க விட்டுக்கொடுத்து டணும். அதுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, இப்பவே காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துடறேன். அதுக் கப்புறம் வெள்ளைக்காரனுக்கு பூட்ஸ் துடைக்கிற ஜஸ்டிஸ்கார னுங்களை உண்டு இல்லைன்னு பண்ணிப்புடலாம்!''

ராஜாஜி தயங்கவும், ''யோசிக்கிறீங்க பாத்தீங்களா! உங்களால அது முடியாது!'' என்றார் ராமசாமி.

''அதில்லை நாயக்கரே! நான் மட்டும் எடுக்கிற முடிவில்லை அது. சரி, கவலையை விடுங்க. அடுத்து நடக்கப்போற திருப்பூர் மாநாட்டுல நானே இதுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேத்துறேன். கையைக் கொடுங்கோ, இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...'' நண் பர்கள் கைக் குலுக்கிக்கொண் டனர்.

அந்த வாக்குறுதியை நிறை வேற்றுவது அத்தனை எளிதல்ல என்பது ராஜாஜிக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு வேறு வழி தெரியாமல் வெறுமனே ஒப் புக்குத் தலையை ஆட்டிவிட்டார். பின்னால் பிரச்னை வரும்போது எப்படியாவது பேசி நாயக்கரைச் சமாளித்துவிடலாம் என்பது ஆச்சாரியாரின் கணக்கு.

ஆனால், அது தப்புக் கணக்கு என்பது ஆறு வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு உறைத்தது.

-சரித்திரம் தொடரும்

-நன்றி : விகடன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்து யோசித்தால், காதலின் சத்தற்ற

தன்மை, பொருளற்ற தன்மை,

உண்மையற்ற தன்மை, நித்யமற்ற தன்மை

அதைப் பிரமாதப்படுத்தும் அசட்டுத் தன்மை

ஆகியவை எளிதில் விளங்கிவிடும்!

-பெரியார்

p119b.jpg

தொண்டுள்ளம் என்பது மனிதருள் அரிதாகக் காணப்படும் ஒரு விஷயம். அப்படியே சிலரிடத்தில் அது காணப்பட்டாலும் சோறு, தண்ணீர், தூக்கம் போல் அது அவர்களது வாழ்வின் மற்றொரு காரியம். ஆனால், ராமசாமியாருக்கோ அது ரத்தமும் சதையுமாக பிறக்கும்போதே உடலோடு ஒட்டிப் பிறந்த ஒன்று. அதனால்தான் ராஜாஜி மூலமாக காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் கேள்விப்பட்ட உடனேயே அவரது உள்ளம் நெருப்பலைகளாகப் பொங்கிப் பிரவகித்தன. காந்தி அவருக்குள் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார். அதுவரை தன்னைப் பீடித்து வந்த சிகரெட், புகையிலை போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஒரே நாளில் நிரந்தர முடிவு கட்டினார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ராஜாஜி சேலம் நகர் மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், ராமசாமியாரும் தனது ஈரோடு நகர் மன்றத் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். அப்போது தீவிரமாக இருந்த காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கட்டுப்படும் வகையில் கோர்ட் நடவடிக்கை மூலம் தனக்கு வர வேண்டியிருந்த ரூபாய் 50,000 பணத்தையும் நிராகரித்தார். தான் வகித்து வந்த 29 முக்கியப் பதவிகளையும் ஒரே நாளில் துறந்து, கதர் வேட்டி சட்டை, கதர் குல்லா, தோளில் பை எனச் சாதாரணத் தொண்டனாக மாறி ஈரோட்டையே அதிசயிக்கவைத்தார்.

மனைவி நாகம்மையை அழைத்தார்.

வீட்டில், பெட்டியில் அடுக்கடுக்காக இருந்த பட்டுப் புடவைகள், வேட்டி சட்டைகள் அனைத்தையும் சேகரிக்கச் சொன்னார். அப்போது நாடகத்துக்காக ஈரோட்டில் முகாம் போட்டு இருந்த அவ்வை சண்முகம், டி.கே.பகவதி, ஆகியோரை வரவழைத்து, ''இனி இந்தத் துணிகள் உங்களது நாடகத்துக்குப் பயன்படட்டும்'' எனத் துணிகள் அனைத்தையும் கொடுத்ததோடு, ''இனி, இந்த வீட்டில் கதராடை மட்டும்தான் உடுத்த வேண்டும்'' என உத்தரவிட்டார். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின் ஒட்டுமொத்த குடும்பமும் ராமசாமியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு கதராடைக்கு மாறியது.

ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், எத்தனை தடை வந்தாலும் அதன் இறுதி எல்லை வரை தொட்டுப் பார்த்துவிடும் சுபாவமும், அதன் பொருட்டு எதனையும் இழக்கும் துணிச்சலும் இயல்பாகக்கொண்டு இருந்த ராமசாமியாரின் மூர்க்கத்தைக் கண்டு காங்கிரஸார் மலைத்து நின்றனர். ஒரு தோளில் ராட்டையும் மற்றொரு தோளில் கதர் துணி மூட்டையுமாக வீதியில் இறங்கி, ஊர் ஊராகக் கதர் வியாபாரம் செய்ய அவர் புறப்பட்டபோது, அதுவரை அவரைச் சுற்றி வந்து வயிறு வளர்த்த கும்பல்கள் அதிர்ந்தன. 'உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கும்போது, இந்த மனிதனுக்கு இது என்ன வேண்டாத வேலை?' எனப் புலம்பினர். நட்பும் உறவும் எச்சரித்தன. ஆனால், ராமசாமியார் அந்தக் கூச்சல்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் அழைத்துக்கொண்டு கதர் பிரசாரத்தில் அவர் ஈடுபட்ட தீவிரத்தைக் கண்டு ராஜாஜியே ஆடிப் போனார்.

பொதுக் கூட்டங்களில் ராமசாமியாரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல்கள் கேட்டன. இதுநாள் வரை தொண்டைத் தண்ணி வறள தாங்கள் மணிக்கணக்கில் மைக்கில் பேசியும் மசியாத கூட்டம், ராமசாமியாரின் பேச்சில் மகுடிப் பாம்பாய் மயங்கி, கதர் சட்டைக்கு மாறுவது கண்டு ஆச்சர்யப்பட்டனர். இத்தனைக்கும் அவரது பேச்சில் மணிப்பிரவாள மொழி நடை கிடையாது. சாக்ரடீஸ், பிளாட்டோ என மிரளவைக்கும் பிரமாண்டங்கள் துளியும் இல்லை. ஆனால், 'உண்மை' இருந்தது. அந்த ஒன்றுதான் பாமரர்களையும் அவரை நோக்கிச் சுண்டி இழுத்தது. தீண்டாமை, மதுவிலக்கு, கதர் என எதைப் பற்றி அவர் பேசினாலும் பேச்சில் நெருப்புத் துண்டங்கள் தெறித்து விழுந்தன. கேட்போரின் மடமையை அவை அடித்து நொறுக்கி அறிவின் பெரு வெளிச்சத்தையும் தேசப் பற்றையும் ஊட்டி வளர்த்தன. ராமசாமியாரின் இந்த அபாரப் பேச்சுத் திறமையால் தமிழ்நாட்டில் ஆமையாக இருந்த காங்கிரஸ், சிங்கமாக வீறுகொண்டு எழுந்தது. எங்கு கூட்டம் நடத்தினாலும் 'முதலில் ராமசாமியாரைக் கூப்பிடுங்கள். அவர் பேரைச் சொன்னால்தான் கூட்டமே கூடுகிறது' எனுமளவுக்கு அவரது புகழ் தமிழ்நாடு முழுக்கப் பரவியது. ராமசாமியாரின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில் அவருக்குப் பின்னிருந்து ராஜாஜி முழு முனைப்பாகச் செயல்பட்டார். அதற்குக் காரணமும் இருந்தது.

அப்போதைய அரசியல் சூழலில் தன் முக்கிய எதிரிகளான அன்னிபெசன்ட், தீரர் சத்தியமூர்த்தி, ஆகியோரை வீழ்த்த முடியாமல் ராஜாஜி திணறிக்கொண்டு இருந்தார். இந்தச் சூழலில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ராமசாமியாரின் வளர்ச்சி அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இதன் விளைவாகத்தான் திருச்செங்கோட்டில் தன்னால் துவக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை ராமசாமியாரின் கைகளால் திறக்கச் செய்தார். தன் அழைப்பின் பேரில் திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு காந்தி வருகை தந்தபோது, அப்படியே ஈரோட்டில் ராமசாமியாரின் வீட்டுக்கும் அவரை அழைத்துச் சென்றார் ராஜாஜி. அங்கே கள்ளுக் கடை மறியல் குறித்த உரையாடலின்போது ராமசாமியாரிடம் காணப்பட்ட செயல் தீவிரம் காந்தியை ஆச்சர்யப்படுத்தியது. தனது குடும்பத்துப் பெண்களை வீட்டில் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு பெரும்பாலான தலைவர்கள் மேடைகளில் வீராவேசம் முழங்கி வந்த காலத்தில், தனது மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் களத்தில் இறக்கிப் போராடவைத்த ராமசாமியாரின் துணிச்சல் காந்தியை மலைக்க வைத்தது.

1921 நவம்பரில் கள்ளுக்கடை மறியல் ஈரோட்டில் பொறி பறந்தது. எதைச் செய்தாலும் முதலில் அதைத் தன்னிடத்திலிருந்து துவங்கும் அருங்குணத்தைப் பெற்றிருந்த ராமசாமியார் சேலம் தாதம் பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துவிட்டு போராட்டக் களத்தில் குதிக்க, ஆங்கில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

ராமசாமியார் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாத சிறைத் தண்டனை. போராட்டம் நின்றுவிட்டது என்ற நினைப்பில் இருந்த போலீஸாருக்கு நாகம்மை, கண்ணம்மாள் என இரண்டு வீர மங்கைகள் இன்னும் களத்திலிருப்பது தெரியாது. அவர்களுக்குப் பின்னால் பெண்கள் அணி அணியாக வீதியில் இறங்கினர். கிட்டத் தட்ட 10,000க்கும் அதிகமானோர் தடையை மீறி தெருவில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

'நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது' என ஈரோட்டிலிருந்து சென்னைக்குத் தந்தி பறந்தது. அதைக் கண்டு பயந்த அரசு உடனடியாக 144 தடை உத்தரவை நீக்கியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கள்ளுக் கடை மறியலைக் கைவிடும்படி ஆங்கில அரசாங்கம் ,காந்தியிடம் கோரிக்கை வைத்தது. 'அது என்னிடத்தில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும்!' என்று காந்தி கூறுமளவுக்கு, நாகம்மை கண்ணம்மாள் இருவரின் போராட்டம் சரித்திரத்தில் இடம் பிடித்தது.

இந்த நேரத்தில் காங்கிரசுக்குள் சாதித் துவேஷங்கள் தீவிரமாக இருந்தன. ஒருபக்கம் மேடையில் தீண்டாமைக்கு எதிராக ஆவேச கோஷங்கள். மறுபக்கம் மாநாடுகளில் பிராமணர்களுக்கெனத் தனிப் பந்தி. உள்ளம் குமுறும் இந்த நடவடிக்கைகள் காரணமாக பலர் புழுங்கித் தவித்தனர். இந்த சமயத்தில்தான் ராமசாமியார் எதிர்பார்த்த திருப்பூர் மாநாடு வந்தது. மாநாட்டில் தனக்கு முன்பு வாக்கு கொடுத்தது போல, பிராமணர் அல்லாதவருக்கு 50 சதவிகிதம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ராஜாஜி முன்மொழிந்து செயலாக்கிவிடுவார் என ராம சாமியார் நம்பினார்.

ஆனால், சரித்திரச் சக்கரம்?

-சரித்திரம் தொடரும்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவுடைமை என்பதன் தத்துவமே, மனிதன்

கவலையற்று வாழ்வதுதான். சொந்த உடைமை என்பது

கவலை சூழ்ந்த வாழ்வேயாகும்!

-பெரியார்

p97.jpg

1922, திருப்பூர் மாநாடு... காங்கிரஸின் சமீபத்திய எழுச்சி காரணமாக கடந்த மாநாடுகளைக் காட்டிலும் இம்முறை கூட்டம் களைகட்டியிருந்தது. மாநாட்டில் வெடிக்கப்போகும் பிரச்னை குறித்து தொண்டர்களிடம் பதற்ற மும் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது.

ராமசாமியார் வகுப்புவாரி தீர்மானத்தை முன்மொழிந்த போது, கூட்டத்தில் பெரும்பான்மையினராக இருந்த பிராமண சமூகத்தினர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கடும் ஆட்சேபக் குரலெழுப்பி, அவரைப் பேசவிடாமல் தடுத்தனர். ராஜாஜியும், 'இம்முறை எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த மாநாட்டில் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கைவிரித்துவிட, ராமசாமியாரின் உள்ளத்து உணர்வுகள் கொதிநிலையின் உச்சத்தை அடைந்தன. 'இப்போது கோபப்பட்டு ஏதேனும் முடிவெடுத்தால், தொண்டர்கள் மத்தியில் தேவை இல்லாமல் கலவரம் ஏற்பட்டுவிடும்' என சேலம் விஜயராகவாச்சாரி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவரது இதயமோ குமுறிக்கொண்டு இருந்தது. அவரது முறை வந்தபோது, மேடையில் ஏறினார்.

எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறும் நெருப்புத் துண்டங்களாக வார்த்தைகள் தெறித்தன. மாநாட்டுப் பந்தலில் பெரும் சூறாவளி நுழைந்தது போல், அவரது உணர்ச்சி மிக்க உரை கூட்டத்தை அதிரவைத்தது. 'இந்தச் சாதி ஒழிய வேணுமானால், முதலில் சாதியத்தை இறுக்கப் பற்றிக்கொண்டு இருக்கும் வருணாசிரம தர்மத்தின் இரண்டு முக்கிய தூண்களான ராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் இரண்டையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் உருப்படும்!' என ஆவேசத்துடன் தன் எதிர்ப்பை எதிரிகளுக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினார்.

காங்கிரஸைவிட்டு அப்போதே வெளியேற அவரது மனம் துடித்தாலும், மகாத்மா காந்தியும் அவரது கொள்கைகளும் அவரைக் கட்டிப்போட்டன. இனி, தேச விடுதலையைக் காட்டிலும் சாதிய விடுதலையில்தான் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டார் அதற்கேற்றாற்போல், மதுரையில் சுற்றுப் பயணம் செய்துகொண்டு இருந்தபோது ஒரு கடிதம் வந்தது. அடுத்த நொடியே தன் வயிற்றுவலி யைக்கூடப் பொருட்படுத்தாமல், திட்டமிட்டு இருந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டுக் கேரளாவுக்குப் புறப்பட்டார்.

வைக்கம்... கேரளத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அழகிய நகரம். ஆனால், அங்கிருந்த உயர்சாதி மனிதர்களின் மனங்களிலோ அழுக்கு நிறைந்திருந்தது. அவர்கள், குறிப்பிட்ட கோயில் வீதிகளில் நடந்து செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட் டத்தில் இறங்க, சமஸ்தானத்துக் காவலர்கள் அவர்களைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சமயத்தில்தான் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் போன்றோர் ராமசாமியாருக்குத் தகவல் கொடுக்க, வரலாறு வைக்கம் நகரத்தை நோக்கி மையம்கொண்டது. ராமசாமியாருடன் அவரின் மனைவி நாகம்மை, தங்கை கண்ணம்மாள், கோவை அய்யா முத்து, மாயூரம் ராமநாதன் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தனர்.

திருவிதாங்கூர் ராஜாவுக்கு பெரும் தலைவலி! ஈரோட்டுக்குச் சென்றபோதெல்லாம் தனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கும் ராமசாமியை உபசரிக்க அரண்மனையிலிருந்து ஆட்களை அனுப்பினார். ''நான் விருந்தாளி இல்லை, போராளி! என் மேல் மதிப்பிருந்தால் தடையை விலக் கித் தீண்டாமைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால், என் னைச் சிறையில் அடையுங்கள்'' என்றார் ராமசாமியார். காவலர்கள் அவரைச் சிறைப்பிடித்தனர். ஆறு மாதத் தண்டனையாக திருவனந் தபுரம் அருவிகுத்திச் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், மன்னர் நினைத்தது போல் போராட்டம் ஓயவில்லை. நாகம்மையும் கண்ணம்மாளும் திருவிதாங்கூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். மக்களின் எழுச்சி, மன்னரை அசைத்தது.

இந்தச் சூழலில் வேடிக்கையான ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. அருவி குத்திச் சிறையில் சில நம்பூதிரி களால் 'சத்ரு சம்ஹார யாகம்' என்ற யாகம் நடத்தப்பட்டது. அவர்களது எதிரியான பெரியா ரைத் தீர்த்துக்கட்டுவதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். ஆனால், மறுநாள் சிறைக்கு வந்த செய்தியோ தலைகீழாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் திருநாடு அடைந்துவிட்டார் என்பதுதான் அந்தச் செய்தி! மன்னர் மரணம்அடைந்ததை மரியாதையாக அப்படிக் குறிப்பிடுவது வழக்கம். இந்தச் செய்தி, நம்பூதிரிகளின் வயிற்றைப் புரட்டியது. மன்னரின் மரணம் காரணமாக, சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட, ராமசாமியாரும் சகாக்களும் கூட விடுதலையாகினர். ராணி ஒரு வழியாகத் தடையை விலக்கிக் கொள்ள முடிவெடுத்தார். எனினும், ராமசாமியாருக்குக் கடிதம் எழுதப் பிடிக்காமல் காந்திக்கு எழுதினார். காந்தி நேரடியாகப் புறப்பட்டு வைக்கம் வந்து ராணியுடனும் ராமசாமியாருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது.

ஆனால், வட நாட்டுப் பத்திரிகை ஒன்றில் இந்த வைக்கம் போராட்டம் குறித்து மகாத்மா காந்தி எழுதிய எந்தக் குறிப்பிலும் ராமசாமியாரின் பெயர் இடம்பெறவில்லை. தன் இதயத் தில் வைத்து வணங்கிய தலைவ ரான காந்தியா இப்படிச் செய்தது என்று ராமசாமியாருக்கு வேதனை. ஆனால், திரு.வி.கவின் வழியாக வரலாறு அவருக்கு 'வைக்கம் வீரர்' என்ற மகத்தான பெயரைச் சூட்டி மகிழ்ந்தது. .

காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் வைத்த நம்பிக்கைகளை இழக்க ராமசாமியார் தயாராக இல்லை. இருந்தாலும் அன்று காங்கிரஸில் பெரும் தலைவர்களாகக் கருதப்பட்ட பலரும் தீண்டாமையைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒரு சம்பவம் ராமசாமியாரின் நெஞ்சில் நெருஞ்சியாகத் துளைத்தது. 1923ல் ராமசாமியார், காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். திண்டுக் கல்லில் பிரசாரத்துக்காகச் சென்ற போது ஒரு பிராமணத் தலைவரின் வீட்டில் உணவுக்கு ஏற்பாடாகிஇருந்தது. தொண்டர்களுக்கு வெளியில் பந்தி நடக்க, தலைவ ரானபடியால் ராமசாமியாருக்குத் தனியாக நடையில் இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவுக்கும் அதே வீடு, அதே இடம். காலையில் அவர் சாப்பிட்ட அந்த இலை எடுக்கப்படாமல் அங்கேயே கிடக்க, புதிய இலை போட்டு மீண்டும் உணவு பரிமாறப்பட்டது. 'சேர்த்து எடுத்துவிடுகிறோம்' எனச் சமாளித்தார்கள். இரவும் அதே வீடு, அதே இடம். இப் போதும் மதியம் சாப் பிட்ட இலை எடுக்கப் படாமல் அங்கேயே ஈ மொய்த்தபடி சுருங்கிக்கிடக்க, ராமசாமியாரின் மனம் அவமானத்தால் துவண்டது. உச்சகட்டமாக வந்தது சேரன் மாதேவி குருகுலப் பிரச்னை.

அக்காலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நிதியில் இந்தியா முழுக்க குருகுலங்கள் நடத்தப்பட்டு வந்தன. தீண்டாமைக்கு எதிராக ஊர் உலகத்துக்கு எல்லாம் பிரசாரம் செய்துவந்த காங்கிரஸ் நடத்தி வந்த குருகுலங்களிலேயே, பிராமணர்களுக்கெனத் தனியாக உணவு, குடிநீர் போன்றவை கடைப் பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று சேரன்மாதேவி குருகுலம். அதை நடத்தி வந்தவர் வ.வே.சு. ஐயர்.

குருகுலத்தில் பிராமணர்களுக்கென வைக்கப்பட்ட குடிநீர்ப் பானையில் ஒரு சிறுவன் நீர் அருந்த, இதர பிராமணச் சிறுவர்களும் ஊழியர்களும் அவனை அடித்துவிட்டனர். அடிபட்ட சிறுவன், பின்னாளில் தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஓமந் தூர் ராமசாமி ரெட்டியாரின் மகன். ஓமந்தூரார் இந்தப் பிரச் னையை ராமசாமியாரிடத்தில் கொண்டுசெல்ல, அதுநாள் வரை தன் உள்ளத்துள் ஊறிக்கொண்டு இருந்த பிரச்னைகளை எல்லாம் ஒன்று திரட்டி, இதற்கு முடிவு கட்டியே தீருவதெனக் களத்தில் இறங்கினார்.

திரு.வி.க., டாக்டர் நாயுடு, எஸ்.ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை என அனைவரும் ஒன்று திரண்டு, காந்தியிடம் பிரச்னை யைக் கொண்டுசென்றனர். குரு குலங்களில் சம பந்தி உணவுதான் தரப்பட வேண்டும் என உத்தரவிட் டார் காந்தி. ஆனால், வ.வே.சு. ஐயர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கு இதர பிராமணர்களி டமிருந்தும் ஆதரவு பெருக, தான் மிகவும் நம்பிய பல பிராமணர்களின் சுயரூபம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதை அறிந்து ராமசாமியார் அதிர்ச்சியடைந் தார். இத்தனை நாள் இந்தக் கட்சிக்காக தான் உழைத்த உழைப் பெல்லாம் வீண்தானோ எனும் ஐயம் அவர் உள்ளத்தை ஊட றுத்தது.

இதனிடையேதான், 1925ல் தமிழர் வாழ்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாநாடு வந்தது. வகுப்புவாரி தீர்மானத்தை முன்வைத்து ராமசாமியார் பேசத் துவங்க, அதற்குப் பொதுக்குழுவில் பிராமணர்கள் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்தனர். வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவந்தால் ஒட்டுமொத்தமாக காங்கிரஸை விட்டு வெளியேறுவோம் எனும் கடும் அஸ்திரத்தை அவர்கள் கையில் வைத்திருந்தனர். இதனால் பயந்த திரு.வி.க., ராமசாமியாரின் கோரிக்கையை நிராகரித்தார்.

சக மனிதருக்கு எதிராகச் சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் காலம்காலமாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கு முடிவுரை எழுத இதுவே சரியான தருணம் என ராமசாமியார் ஒரு சிங்கம் போல் எழுந்தார். மேடையில் இருந்த தலைவரைப் பார்த்து மூன்று முறை தன் கைத் தடியால் தரையை ஓங்கி ஆவேசத்துடன் தட்டினார். தமிழகமே அதிர்ந்தது. தமிழர்களின் அடிவானத்தி லிருந்து சூரியன் எழுந்தது!

நன்றி : விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.