Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மடு தேவாலத்தை மையமாகக் கொண்டு தனியான மத வலயமொன்றை உருவாக்க முயற்சி - ஜாதிக ஹெல உறுமய

Featured Replies

மடு தேவாலயத்தை மையமாகக் கொண்டு சுயாதீனமான மதவலயமொன்றை அமைக்க மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் எத்தனிப்பதாக ஜாதிக ஹெல உறுமக குற்றஞ்சாட்டியுள்ளது.

திருச்சொரூபம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இராணுவப்படையினர் மடு தேவாலப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ளதாகவும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட படையினருக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மடு தேவாலயப் பிரதேசத்தை சமாதான வலயமாக பிரகடனப்படுத்தல், மடு தேவாலயத்திலிருந்து 2 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொள்வதாக இராணுவப்படையினரும், விடுதலைப் புலிகளும் எழுத்துமூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும் மற்றும் மடு முகாமில் தஞ்சமடைந்திருந்த தமிழ் அகதிகளுக்கு மீண்டும் அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அரசாங்கப் படையினர் மடு தேவாலயப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ளனர். இதனால் புறம்பாக அந்தப் பிரதேசம் சமாதான வலயமாக அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்த கோரிக்கையின் மூலம் தனியான சுயாதீன மதப் பிரதேசமொன்றை மன்னார் ஆயர் கோரியுள்ளார் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரபாகரனுக்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு நிகாரானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் தேவாயலப் பிரதேசம் அரசாங்கக் கட்டுப்பாடற்ற சுயாதீன வலயமாக அறிவிக்கப்பட்டால் அதுவொரு தனியான அலகாக அமைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக அரசாங்கத்திற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லாமல் போய்விடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகளையும், அரசாங்கப் படைத்தரப்பை ஒரே மாதிரி கருத முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசின் இராணுவப்படையினரை மடு தேவாயலப் பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு மன்னார் ஆயர் விடுத்துள்ள கோரிக்கை நியாயமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அகதிகளுக்கு மடு தேவாலயப் பிரதேசத்தில் அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அடைக்கலம் பெறுவோரின் ஆள் அடையாளம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தீவிரவாதத்திற்கு துணை போகும் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு பக்கச்சார்பான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் அடிபணியக் கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜாதிக ஹெல உறுமய அசராங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிக்குகளும் ஒரு நாலைந்தாக பிரிந்தால் தான் வாயடங்கும்.

என்றுதணியும் இந்த பிக்குகள் தாகம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.