Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் போனனான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போனனான்.

சாத்திரி ஒரு பேப்பரிற்காக

நவரச உணர்வுகளிலை ஒரு நாலைஞ்சு ரச உணர்வுகளை எனக்குள்ளை ஏற்படுத்தின ஒரு நிகழ்சி அதுக்கு நானும் போனான் அதைப்பற்றித்தான் எழுதவாறன்.கடந்த 26 .சித்திரை சனிக்கிழைமை இலண்டனிலை நடந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்தியிருந்த .ஊடகமும் இலங்கை முரண்பாடும் உண்மை எங்கே..என்கிற தலைப்பிலை நடந்த நிகழ்விற்கு எனக்கும் அழைப்பிதழ் கிடைச்சிருந்தது.இப்ப நாலுபேர் ஒண்டாய் சேந்து கதைக்கிறதையே பலர் மகாநாடு எண்டுதான் விளம்பரப்படுத்தினம் அதாலைதான் நான் இதை மகாநாடு என்று எழுதாமல் நிகழ்வு எண்டு எழுதினனான்.அந்த நிகழ்விற்கு ஊசலாடல்வியலாளனான என்னையும் ஒரு ஊடகவியலாளன் எண்டு மதிச்சு எனக்கு அழைப்பிதழ் அனுப்பிருந்ததை பாத்ததும் எனக்கு மூளை முழங்கால் புரியாத சந்தோசம்.சத்தியமாய் எனக்கு நித்திரையே வரேல்லை இரவிரவா பிரண்டு பிரண்டு படுத்து விடிஞ்சதும் விமான நிலையத்துக்கு எழும்பி ஓடிப்போய் நேரம் இருந்ததாலை அங்கையே கதிரையிலை கொஞ்சநேரம் இருந்தபடி நித்திரையை கொண்டிட்டு ஒருமாதிரி லண்டன் போய் இறங்கி நிகழ்வு நடக்கவிருந்த ..கரோ பகுதியிலை இருந்த வெஸ்ர்மினிஸ்ரர் யுனிவசிற்றி .

விலாசத்தை தேடிப்பிடிச்சு போய்ச் சேந்திட்டன்.இனி நானும் லண்டன் வெஸ்ர்மினிஸ்ரர் யுனிவசிற்றிக்கு போனனான் எண்டு பெருமையடிக்கலாம். ஆனால் அங்கை படிச்சனியா எண்டு யாராவது கேட்டால்தான் வில்லங்கம்.சரி யுனிவசிற்றிக்கை வந்த சந்தோசத்திலை இருக்கேக்குள்ளை அடுத்தடுத்து எனக்கு ஆச்சரியத்துக்கு மேலை ஆச்சரியம். முதலாவது குறிச்ச நேரத்துக்கு மங்கல விளக்கேற்றத்தோடை இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. அடுத்தது அழைப்பு அனுப்பியிருந்த பெரும்பாலான ஆக்களும் குறிச்ச நேரத்துக்கே அங்கை வந்திருந்திச்சினம்.அடுத்த அதிர்ச்சி. தமிழ்ப்பத்திரிகை உலகிலை முடிசூடா மன்னர்கள் மன்னிகள் (பெண்பால் சரியோ தெரியாது) மட்டுமல்ல இந்த நிகழ்வுக்கு மின்னஞ்சல் அழைப்பை மட்டுமே ஏற்று வருவினமா வரமாட்டினமா என்று நான் சந்தேகப்பட்ட பல மகாராசாக்கள் கூட வந்திருந்தவை.வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அதே நேரம் ஈழப்போராட்டம் மற்றது ஈழத்தமிழர் பற்றிய பலவருட அனுபவங்களை கொண்ட இரண்டு இந்திய பத்திரிகையாளர்களான பகவான்சிங் மற்றும் சுந்தரராஜன் முராரி ஆகியோரும் வந்திருந்தனர்.

இவர்களையெல்லாம் ஒரே இடத்திலை ஒன்று கூட்டின சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கு மனம் திறந்து பாராட்டத்தான் வேணும்.இது சர்வதேச பத்திரிகையாளருக்கான ஒரு நிகழ்வு சர்வதேசத்துக்கும் இதுபற்றிய செய்திகள் போய்ச்சேர வேண்டும் என்றதாலை அங்கை கதைச்சவையின்ரை அனைத்து உரைகளும் ஆங்கிலத்திலேயே இடம்பெற்றது.அதாலை எனக்கு விளங்காததுகளை இடைக்கிடை பக்கத்திலை இருந்தவரை சுரண்டி மெதுவாய் கேட்டு தெரிஞ்சுகொண்டன். ஆனால் எனக்கொரு சின்னக்கவலை அதிலை கலந்து கொண்டிருந்த இந்திய பத்திரிகையாளர்கள் தங்களுக்கு பேச ஒதுக்கப்பட்டிருந்த நேரத்துக்குள்ளை இலங்கைப் பிரச்சனை பற்றின தங்கடை அனுபங்களை பகிர்ந்து கொண்ட நேரத்தை குறைச்சு தற்சமயம் இலங்கைப்பிரச்சனை பற்றிய இந்திய ஊடகங்களின் பார்வை.

இனிமேல் காலத்திலை இந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் இந்திய ஊடகவியலாளர்கள் அல்லது இந்தியத் தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து செயற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் அல்லது ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தொடர்புகளைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாய் சொல்லியிருக்கலாம். .உரையாற்றியவர்களில் பி.பி.சி. சிங்களசேவையைச்சேர்ந்த சந்தன பண்டார சிங்கள ஊடகங்களிற்கு எதிரான சிறீலங்கா அரசின் வன்முறைகளை குறிப்பிட்டதுடன் அரசாங்கத்தின் தணிக்கைகளால் சிங்கள மக்களிற்கும் இலங்கையின் உண்மையான நிலைபற்றிய விபரங்கள் போய் சேருவதில்லையென்று தனது கருத்தை சொன்னார் கேள்வி நேரத்திலை இவரை ஒரு ஊடகவியலாளனாய் நினைச்சு கேள்வி கேக்காமல் ஒரு சிங்களவனாகவே நினைச்சு சில தமிழர் தாழிச்சு விட்டிட்டினம்.. அடுத்தாய் கலாநிதி.சேரன் அவர்கள் தமிழ் ஊடகங்களின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி ஊடகவியலில் ஊகங்கள் செய்தியாகக்கூடாது ஆனால் தமிழ் ஊடகங்களில் இது அதிகமாகவே இருக்கிறது என்று அவர் சொன்ன கருத்து சத்தியமாய் உண்மை.

தமிழ் ஊடகங்கள் எப்படி செயற்படவேண்டும் என்று சில ஆலோசனைகளையும் முன் வைத்தார். மற்றையோர்களின் உரைகளும் கொடுக்கப்பட்ட தலைப்பினுள் தற்காலத்திற்கு தேவையானதாகவும் இருந்தது. நவரசத்திலை நகைச்சுவை முக்கியமானதல்லோ அது கேள்விநேரத்திலை இருந்தது.கேள்வி நேரம் தொடங்கினதும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எண்டதற்காக ஒருவர் ஒரு கேள்வி மட்டுமே கேக்கலாம் என்கிற அறிவிப்போடை கேள்விநேரம் ஆரம்பமானது. அங்கை வந்திருந்த பலர் உண்மையாக தங்களுக்கு சில விசயங்களை தெரிஞ்சு கொள்ளுறதுக்காக கேள்வி கேட்டமாதிரி தெரியேல்லை தங்கடை வித்தகத்தை காட்டி பதில் சொல்லுறவரை எப்பிடியாவது மடக்கவேணும் எண்டுநினைச்சு கேள்வி கேட்ட மாதிரித்தான் இருந்தது. சிலர் கேள்வி கேக்கஎண்டு எழும்பி தாங்கள் ஒரு விரிவுரை நடத்திச்சினம்.சிலர் கேள்வியை கேட்டு தாங்களே பதிலையும் சொல்லிச்சினம். அதைவிட சிலர் ஒரு கேள்வி முடிஞ்சதும் இன்னொரு கேள்வி பிளீஸ் பிளீஸ் எண்டு ஜஸ்பழத்துக்கு கெஞ்சிற குழந்தையள் மாதிரி கெஞ்சிக்கொண்டு நிண்டிச்சினம்.இதுகளைப்பாத்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சாத்திரியார்?படங்களை பாக்க பிறந்தாள் கொண்டாட்ட படங்கள் மாதிரி கிடக்கு :lol: அதுசரி வத்தகைப்பழமும் தந்தவையோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: குமாரசாமியார் அது மத்தியானம் சாப்பாட்டு நேரம் எடுத்தபடங்கள். நிகழ்ச்சி மண்டபத்திலை எடுத்த படங்களும் இருக்கே அதுகளை பாருங்கோவன் அதை விட்டிட்டு :wub:

Edited by sathiri

சாத்திரி வேனாம் சும்மா தூங்கிட்டு இருக்கிற சிங்கங்களை தட்டி எழுப்ப வேண்டாம்.... கீ கீ ..கீ

***

எங்கேயோ பார்த்த மயக்கம் :D

தெரிந்த முகங்கள் சில இருக்கின்றன. ஆனால் படங்களைப்

பார்க்கும்போது, வரட்சி தான் தெரிகிறது :lol:

Edited by வலைஞன்
படம் நீக்கப்பட்டுள்ளது.

முதலில் இவர்கள் தமிழை ஒழுங்காக எழுதப் பழகட்டும். :lol:

"சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்" இது சரியானதா???

International Association of Tamil Journalists என்பது தமிழில் "சர்வதேசத் தமிழ்ச் செய்தியாளர்கள் ஒன்றியம்" என்று வந்திருக்க வேண்டும்.

இதுபற்றிச் சென்ற வருடம் ஒன்றியத் தலைவருக்கு தொலைபேசியில் சொல்லியிருந்தேன். அவவும் அப்படியா வந்திருக்க வேண்டுமெனக் கேட்டதோடு சரி. :lol:

:D தமிழே சரியாகத் தெரியாதவர்களெல்லாம் எப்படித் தமிழ் ஊடகவியலாளர்கள் ???? :lol:

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.