Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் புது தூதர்?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் புது தூதர்?!

நார்வே பயணத்துக்குப் பிறகு வைகோ, விடுதலைப்புலிகளின் அறிவிக்கப் படாத சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக மாறி விட்டார். இன்றைய தேதியில் சர்வதேச நாடுகள் புலிகள் விஷயத்தில் முக்கிய முடிவு களை மேற்கொள்வதற்கு முன்பு வைகோவை கலந்து பேசத் தவறுவதில்லை என்ற பேச்சு இந்தியாவெங்கும் எழத் தொடங்கி விட்டது.

p26nw0.jpg

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வைகோ, புலிகளின் நியாயங்களை எடுத்து வைத்தபோது, 'ஆன்டன் பாலசிங்கம் செய்யவேண்டிய பணியை, உரைவீச்சில் அவரையும் மிஞ்சி செய்து முடித்துவிட்டார் வைகோ' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பிரிட்டிஷ்

ஹை கமிஷனில் அரசியல் துறை தலைவர்களாக இருக்கும் நைஜல் கேஸி மற்றும் விக்டோரியா வொயிட் ஃபோர்ட் ஆகியோர் சென்னை வந்து சில நாட்கள் தங்கி இலங்கைப் பிரச்னை, புலிகளின் தற்போதைய நிலை, தெற்காசி யாவில் இலங்கைப் பிரச்னை எப்படி பார்க்கப்படுகிறது போன்ற விஷயங்கள் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைகோவுடன் சில மணிநேரம் புலிகள் விஷயத்தைப் பற்றி அவர்கள் விவாதித்திருக்கிறார்கள். இந்த சந்திப்புக்குப் பிறகு இலங்கைப் பிரச்னை தொடர்பாக நைஜலும், விக்டோரியாவும் தங்கள் நாட்டு அரசாங்கத்துக்குக் கொடுப்பதற்காக ரிப்போர்ட் தயாரிக்கும் பணியில் மும்முரமாகி இருக்கிறார்கள்.

இங்கிலாந்துப் பிரதிநிதிகளிடம் வைகோ பேசும்போது, 'இலங்கையை உங்கள் நாட்டவர்கள் ஆட்சி செய்தவரையில் கட்டுண்டு கிடந்த சிங்களவர்கள், நீங்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறியதும் தமிழர்களை அடிமைப்படுத்தி அவர்களுடைய உரிமையைப் பறிக்கத் துவங்கினார்கள். இன்று வரையில் அதுதான் நடக்கிறது. தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையை சர்வதேச சமூகத்துக்கு நீங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டினாலே, அது தமிழர்களுக்கு நீங்கள் செய்யும் ஜீவாதார உதவி'' என்று சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இலங்கைப் பிரச்னை தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றையும் வைகோ எழுதியிருக்கிறார். அதில் இலங்கை அரசைப் பற்றி காட்டமான வார்த்தைகளை வைகோ பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள், ம.தி.மு.க-வின் முக்கிய தலைவர்கள். கடித விவரம் குறித்து வைகோவிடமே கேட்டோம்-

''மன வேதனையின் உச்சத்தில் எழுதப்பட்ட கடிதம் அது. இலங்கை அரசுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டே, கோடிக்கணக்கில் பொருளா தார உதவிகளை வழங்கி வருகிறது இந்தியா. இலங்கை விவகாரம் தொடர்பாக பலமுறை பிரதமரை சந்தித்தபோது, 'இலங்கைக்கு எந்தவிதமான உதவியையோ, ஆயுதங்களையோ இந்தியா வழங்காது' என்று வாக்குறுதி கொடுத்தார். இதை நினைவூட்டித்தான் என் கடிதமே ஆரம்பிக்கிறது. குறைந்த அளவில் முன்னேறிய நாடுகளுக்கு இந்திய அரசு குறைந்த அளவு வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து வருகிறது. ஆனால், இந்தியா வெளியிட்டுள்ள குறைந்த அளவில் முன்னேறிய நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை. அப்படியிருக்கும்போது, இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக நானூறு கோடி ரூபாயை வழங்க இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதுதவிர, இலங்கையின் ரயில்வே மற்றும் உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்த மேலும் நானூறு கோடி ரூபாயை ஒதுக்கவும் உத்தேசித்திருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகாரத்துறையின் முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவு இந்த விவகாரத்தைக் கையாள்கிறது.

இதையெல்லாம் சேகரித்த ஓர் ஆங்கில பத்திரிகை, சில நாட்களுக்கு முன்பு இதை செய்தியாக வெளியிட்டிருந்தது. அதைப் படித்த நான் பதறவில்லை. காரணம், இதுபோல் எதுவும் நடக்காது என்று என்னிடம் பிரதமர் கொடுத்திருந்த வாக்குறுதிதான். ஆனால் விசாரித்தபோது, அந்த நாளிதழ் வெளியிட்ட செய்தி உண்மை என்று தெரியவந்ததும் நடுங்கிப் போனேன். இந்தத் தகவல்களை என் கடிதத்தில் அப்படியே குறிப்பிட்டிருந்தேன். கூடவே, இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களோடு கடிதத்தில் கூறியிருந்தேன்.

ஐ.நா. சபை கொழும்புவில் அலுவலகம் அமைக்க முன்வந்தபோது, அதை அனுமதிக்க மறுத்தது இலங்கை அரசு. மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் லூயிஸ் ஆர்பர் இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அனுமதி அளிக் காமல், இலங்கை அரசு முரண்டு பிடித்தது. அந்த அரசின் இனப்படுகொலைகளுக்கு இதெல்லாம் சான்று என உலக நாடுகள் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டன, இந்தி யாவைத் தவிர! மத்திய வெளிவிவகாரத் துறை, 'சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு களின் தலையீட்டைத் தவிர்க்கின்ற வகையில் இந்தியா, இலங்கையுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது' என்று ஒரு காரணத்தைச் சொல்கிறது. இது நியாயமில்லாத காரணம். தமிழ் இனத்தை அழிக்க இலங்கை அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களுக்குத் துணைபோகிற ஒரு அமைப்பாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. நேருவும், இந்திரா அம்மை யாரும் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசையும் அதை வழிநடத்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும் எந்த ஒரு தமிழனும் மன்னிக்க மாட்டான் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்'' என்று சீறி முடித்தார் வைகோ.

http://www.vikatan.com/jv/2008/may/14052008/jv0202.asp

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ உத்தியோக பூர்வமான தூதராக்கப்பட்டு அப்பணியை அவரும் மகிழுவுடன் ஏற்றுக் கொள்வாரானால் அது எமக்குக் கிடைக்கும் பெரிய ராஜதந்திர வெற்றி. ஆனால் தமிழக அரசியல் அவரது பணிக்குத் தேவையற்ற குறுக்கீடுகளை ஏற்படுத்தினால், குறிப்பாக திமுக போன்ற பெரிய கட்சிகளிடம் உள்ள எமக்கான தார்மீக அல்லது மறைமுக ஆதரவு சிதைந்து போனால் பெரிய பிரச்சனையாகிவிடும். இந்த விடயத்தை வைகோவும் ஈழப்போராளிகளும் நல்லமுறையில் கையாண்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவோடு அதன் ஏகப்பிரதிநிதியாக வைகோ எமக்கான தூதர் பணியில் நியமிக்கப்படவேண்டும். அதுவே நல்ல பலனளிக்கும்

கு.... நரிகளிடம் எமக்கான தார்மீக ஆதரவை எதிர்பார்ப்பது. எமது முட்டாள்த்தனம்

Edited by Subiththiran

கு.... நரிகளிடம் எமக்கான தார்மீக ஆதரவை எதிர்பார்ப்பது. எமது முட்டாள்த்தனம்

ஏன் நீங்கள் எல்லாம் பெரிய திறம் தானே. வெளிநாட்டில யாரும் பிடிபடட்டு அடைக்கட்டு, நீங்க மாத்திரம் கவனமாக இருங்கோ.

ஏன் இலண்டன் காவல்துறை சாந்தனை கைது செய்கிற போது ஒரு வரும் ஒரு அமைப்புக்களும் கண்டன குரல்கள் கொடுக்கவில்லை.

சாந்தன் பாலா அண்ணா இருக்கும் போதே அமைப்போடு செயற்பட்டவர், விடுதலைப்புலிகள் மேல் தடை வந்த பின் இங்கு ஒரூவரும் விடுதலைபுலிகள் சார்பாக இயங்கியதில்லை. சாந்தன் சொன்னாரா நான் தான் இப்பவும் அமைப்பின் செயற்பாட்டாளர் என்று.

இதெல்லாம் சிங்கள தூதரகம் சொல்கிற சிலவேலைகளை பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிரட்டனில் இருக்கும் தமிழரை போராட்டத்தை விட்டு அந்நியப்படுத்த பிரிட்டிஸ் அரசாங்கம் சிறிலங்கன் அரசோடு சேர்ந்து செய்யும் சில வேலைகள்.

இதை ஏன் தமிழர் அமைப்புக்கள் எதிர்க்க முன் வரவில்லை.?

எல்லாரும் சுயநலம் யார் எக்கேடு கெட்டால் என்ன தான் தப்பினால் போதும் என்ற சுய மனநிலை.

பிறகு இவர் குள்ளநரி என்று தமிழகத்தை சொல்கிறார்.

ஏன் நீங்கள் எல்லாம் பெரிய திறம் தானே. வெளிநாட்டில யாரும் பிடிபடட்டு அடைக்கட்டு, நீங்க மாத்திரம் கவனமாக இருங்கோ.

ஏன் இலண்டன் காவல்துறை சாந்தனை கைது செய்கிற போது ஒரு வரும் ஒரு அமைப்புக்களும் கண்டன குரல்கள் கொடுக்கவில்லை.

சாந்தன் பாலா அண்ணா இருக்கும் போதே அமைப்போடு செயற்பட்டவர், விடுதலைப்புலிகள் மேல் தடை வந்த பின் இங்கு ஒரூவரும் விடுதலைபுலிகள் சார்பாக இயங்கியதில்லை. சாந்தன் சொன்னாரா நான் தான் இப்பவும் அமைப்பின் செயற்பாட்டாளர் என்று.

இதெல்லாம் சிங்கள தூதரகம் சொல்கிற சிலவேலைகளை பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிரட்டனில் இருக்கும் தமிழரை போராட்டத்தை விட்டு அந்நியப்படுத்த பிரிட்டிஸ் அரசாங்கம் சிறிலங்கன் அரசோடு சேர்ந்து செய்யும் சில வேலைகள்.

இதை ஏன் தமிழர் அமைப்புக்கள் எதிர்க்க முன் வரவில்லை.?

எல்லாரும் சுயநலம் யார் எக்கேடு கெட்டால் என்ன தான் தப்பினால் போதும் என்ற சுய மனநிலை.

பிறகு இவர் குள்ளநரி என்று தமிழகத்தை சொல்கிறார்.

நீங்க வந்து கதையை மாத்தாதீர்கள்.

எனது கருத்து தழிழக மக்களை குறிப்பிடவில்லை. நீங்கள் தான் அவர்களை குறிப்பிடுகிறீர்கள்.

நான் குறிப்பிட்டது விடுதலைப்போராட்ட ஆரம்ப காலத்திலிருந்தும் தமிழர் விடயத்தில் தனது நரித்தனங்களை காட்டியவரைப்பற்றியது தான். அண்மையிலும் அமைச்சரவையில் இந்திய அரசின் முந்திய சதிகளை மறைக்கும்விதமாக தனது வாய்வன்மையை காட்டியிருந்தார். ஒருபோதுமில்லாத அளவு தி.மு.க ஆதரவுடன் மத்தியில் ஆட்ச்சியிருக்கிறது. இவர்கள் நினைத்தால் இலங்கைக்கான ஆயுதஉதவியை தடுக்கமுடியும்.

ஆனால் மாதாமாதம் படி அளந்து கொண்டிருக்கிறார்கள். இவருக்கு தெரியாம ஒன்றும் நடக்கேல்ல.

இது இவ்வளவும் நடந்து கொண்டிருக்க ....

எமது ஆய்வாளர்களும் வாராவாரம் கலைஞர் தனது கடமையைச்செய்யவேணும் கட்டுரை எழுதி குவித்துக்கொண்டிருக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

நேசன், சுபித்திரன் !

நாம் தமிழ்நாட்டுத் தலைவர்களைக் குறை கூற முடியாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர்களும் தமது அரசியல் லாபத்துக்காக ஒருகாலத்தில் ஈழப்பிரச்சனையை ஆதரித்தும், இன்னொரு காலத்தில் அதை எதிர்த்தும் தடம் மாறி வருவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அதுபோலத்தான் எம்மிலும் பலர் சந்தர்ப்பவசத்தாலும், இன்னோரென்ன லாபங்களுக்காகவும் தேசியத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பேசி வருவதும்.

ஆனால் போராட்டம் என்பது இவ்விரு சாராரிலும் தங்கியிருக்காது தன்பாட்டில் நிலையான வேகத்தில் சரியான வழிநடத்தலின் கீழ் சென்று கொண்டிருக்கும். இவ்வாறான சந்தர்ப்பவாதிகளின் ஆதரவால் போராட்டம் விரைவு பெறப்போவதுமில்லை, அல்லது இவர்கள் எதிர்ப்பதால் அதன் வீறு குறைந்துவிடப்போவதுமில்லை. போராட்டத்தையும், தமிழ்த் தேசியத்தையும் பொறுத்தவரை இவர்கள் செல்லாக்காசுகள்.

நீங்கள் இருவரும் குழம்ப வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.