Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் அது வரலாற்றுத் தவறு -பிள்ளையான்

Featured Replies

தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எனக்கு கிடைக்காவிட்டால் அது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் இழைக்கப்படும் பாரிய தவறாக அமையும் என த.ம.வி.பு. அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளனாh.

முதலமைச்சர் பதவி எமக்குரியது இதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. எமது உரிமை மறுக்கப்பட்டால் நாம் ஜனநாயக ரீதியிலனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவோம். என இணையதளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர் மேலும் :

விடுதலைப் புலிகளை முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தோற்கடிக்க உதவியமைக்காக கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த சனத்தொகையில் 48 வீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஜனநாயக ரீதியாக இந்த நிலைக்கு வளர்வதற்கு உதவிய கிழக்கு மாகாண மக்களுக்கு சிரம் தாழ்த்துகின்றேன். மாகாணசபையைக் கைப்பற்றயுள்ளதான் மூலம் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளை எம்மால் பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை இன் மக்கள் தமிழர்கள். மேலும், தமிழர் ஒருவரே முதலமைச்சராக வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இது குறித்து வேறு பேச்சிற்கே இடமில்லை.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த 3 லட்சத்து 8 ஆயிரத்து 880 வாக்குகளில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வாக்குகனள் த.ம.வி.பு அமைப்புக்கே கிடைத்தது.

இதன் காரணமாக முதலமைச்சர் பதவிக்கு த.ம.வி. அமைப்பின் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்து ஐ.ம.சு.முன்னணி பரிசீலிக்க வேண்டும்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் எனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென நான் தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை. தமிழச் சமூகத்ததைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைக்கா விட்டால் மாகாணத்தின் வரலாற்றில் இழைக்கப்பட்ட பெரும் தவறாக இது பதியப்படும்.

மஹிந்த தலைமையிலான அரசுக்கு எமது ஆதரவுள்ளதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தவே நாங்கள் அரசு கூடுட்டணியில் இணைந்தோம். மேலும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதும் எனது நோக்கம்.

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் என்பதை நாங்கள் வெளிபபடுத்தியுள்ளளோம். மேலும் தமிழ் தேசிய வாதம் என்ற மாயையையும் தகர்ததெறிந்துள்ளோம்.

முஸ்லிம்களை எடுத்துப் பார்த்தால் கிழக்கு மாகாணததைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்று உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை வகிக்கின்றனர். மாகாணத்தின் முஸ்லிம் மக்கள் தமக்குத் தேவையான ஆதரவையும், உதவியையும் அவர்கள் மூலம் பெறலாம்.

மாறாக கிழக்குத் தமிழர்களின் நிலைமையை பாருங்கள். ஒரு அமைச்சர் கூட அவர்களுக்கு இல்லை.

எமது உரிமைகள் வழங்கப்படா விட்டால் நாங்கள் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அது பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். என்றார் அவர்.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைகள் வழங்கப்படா விட்டால் நாங்கள் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அது பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். என்றார் பிள்ளையான்.

உங்களுடைய பாரிய விளைவுகளையும் பார்க்கத்தானே போகின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னைய முதலமைச்சர் பெருமாள்சாமி துண்டக்காணம் துணியக் காணம் என்று ஓடின வரலாறு பலரும் மறக்கவில்லை. இந்த பதவிகளை எடுத்து வராலற்றுத் தவறு செய்யப்போவது யாரென்று விரைவில் தெரியவரும்.

வரலாற்றை யார் இழுக்கிரது என விவச்தையே இல்லையப்பா

பிள்ளையானை பெற்றதே பிள்ளையானின் பெற்றோர் செய்த வரலாற்று பிழை

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
:D இந்தத் துரோகி சொல்லும் " பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, தேசிய ஐக்கியத்தை நிலைநாட்டியுள்ளோம், தமிழர் தாயகத்தை தகர்த்தெறிந்துளோம்" போன்ற வீரவசனங்களைக் கேட்கும்போது இவருக்கு வாக்களித்தவர்கள் என்ன நினைத்துக்கொள்வார்கள் ? தாம் நினைத்தது நடக்குதென்றா அல்லது, அட, இப்படி செய்து விட்டாரே ? என்றா ???

Edited by இணையவன்

விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் என்பதை நாங்கள் வெளிபபடுத்தியுள்ளளோம். மேலும் தமிழ் தேசிய வாதம் என்ற மாயையையும் தகர்ததெறிந்துள்ளோம்.

இந்தத்துரோகியெல்லாம் ஜனநாயகம் பேசுது உந்த *** எங்க தெரியும் தமிழ்த்தேசியமும் அதை வழிநடத்தும் எங்கள்

தலைவர் பற்றியும் ...... நக்குகிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன? என்பது போல்தான் ...............

உந்தக்குரைப்பெல்லாம் மல்லுவேட்டி மாமாவுக்கும் அது வீசும் எலும்புக்கும் தான் அத்துடன் எங்கள் தேசியம் தன் மௌனம்

கலைக்கும் வரைக்கும் தான் உந்த ஆட்டமெல்லாம்...........

முதல் கிழக்கின் உதயம் இன்றைக்கோ நாளைக்கோ என்று பெரிய பிரித்தானியாவின் சிறையில் கிடந்து உழலுது பார்ப்போம்

இதுக்கு என்ன நடக்குது என்று...........

கொள்கையுள்ளவர்களுக்கு வரலாறு எப்பொழுதும் தலை வணங்கும் ஆனால் துரோகிகளுக்கும் அதன் வழி நடப்பவர்களுக்கும்

அதே வரலாறும் அந்த வரலாறை எழுதப்போகும் எங்கள் மக்களும், எங்கள் வீரமறவர்களும் புரியவைப்பார்கள்.

Edited by இணையவன்
*** நீக்கப்படுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ...(அந்த சொல்லை நீங்களே நிரப்பி வாசியுங்கள்) வரலாறு என்று ஒரு சொல் இருப்பது தெரிந்திருக்கின்றது.

ஈழத்தில் மணலாறு என்று ஒரு இடம் இருப்பதும் விரைவிலே தெரியவரும்.

வரலாறுகளில் பல தவறுகள் உண்டு. அதில் பிள்ளையானும் ஒரு வரலாற்றுத் தவறுதான். தவறுகள் நீக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.