Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!

Featured Replies

ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது.

வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் சேலையை மறைத்து அவர்களை ஆடையில்லாமல் அலையவிட்ட கிருஷ்ணனை ஈவ்டீஸிங் கேஸில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமா? ஆற்றுக்குள் அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்த பாம்பை கொன்ற கிருஷ்ணன் மிருகவதை சட்டத்தின் படி குற்றவாளிதானே?

போர் செய்துகொண்டிருந்தபோது வாலியை மறைந்திருந்து பேடித்தனமாக கொலைசெய்த ராமனை தூக்கில் போட்டிருக்க வேண்டாமா? இராவணனிடமிருந்து மீண்டு வந்த சீதையை சிதையிறங்க சொன்ன ராமனை பெண்கள் சிறப்பு காவல்நிலையத்தில் புகார் செய்து முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேண்டாமா?

உலகை சுற்றிவரும் போட்டியென்று அறிவித்துவிட்டு உலகை சுற்றிவந்த முருகனுக்கு பரிசு தராமல், சிவன் பார்வதியை சுற்றிவந்து குறுக்குவழியில் விநாயகன் பரிசினை தட்டிச் சென்றது ஊழலல்லவா? அந்த ஊழலுக்கு துணைபோன நீதிபதியல்லவா சிவன்?

அகலிகை மீது மோகம் கொண்டு அவரது கணவர் போல வேடம்புரிந்து அகலிகையை கற்பழித்த தேவேந்திரனை பாலியல் வல்லுறவு குற்றத்தில் உள்ளே தள்ளி காயடித்திருக்க வேண்டாம்? ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சூப்பர் பிகர்களை தன் அவையில் வைத்திருந்த இந்திரன் கன்னட பிரசாத்துக்கு ஒப்பானவனா இல்லையா?

திருவிளையாடல் என்று கூறி பலவேடங்கள் போட்டு பூமிக்கு வந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த சிவனை மோசடி வழக்கில் கைது செய்திருக்க வேண்டாம்? பொருட்குற்றம் கண்டறிந்த நக்கீரனை கொலைசெய்த கொலைகாரனல்லவா சிவன்?

தவம் கிடந்த விசுவாமித்திரனை உறவுக்கு அழைத்த மேனகை மீது விபச்சார வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறாக இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் குற்றங்களும், ஊழலும், விபச்சாரமும், பாலியல் வல்லுறவும், கொலையும், கொள்ளையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்தும், கேட்டும் வளரும் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்? கடவுளர்களே செய்திருக்கிறார்கள், நாங்கள் செய்வதற்கு என்ன? என்ற மனோபாவம் தானே மக்கள் மத்தியில் இருக்கும்? புராணங்களிலும், இதிகாசங்களிலும் இவ்வாறெல்லாம் இருப்பதால் அவை பெரிய குற்றமல்ல என்று அம்மதம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இயல்பிலேயே ஊறிவிடுகிறது.

தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரே, கடவுளர்களின் திருவிளையாடல்கள் அடிப்படையில் தான் நம் இந்து மதக்காவலர் காம்கேடியான் பள்ளியறை யாகம் நடத்தினாரா?

பார்ப்பனர்கள் கொலை செய்தால் மொட்டை அடித்தால் போதும் என்ற மனுசாஸ்திரபடி கொலை செய்துவிட்டு ஒய்யாரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறாரா?

ஒன்றும் புரியவில்லை மகாபிரபு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரே, கடவுளர்களின் திருவிளையாடல்கள் அடிப்படையில் தான் நம் இந்து மதக்காவலர் காம்கேடியான் பள்ளியறை யாகம் நடத்தினாரா?

பார்ப்பனர்கள் கொலை செய்தால் மொட்டை அடித்தால் போதும் என்ற மனுசாஸ்திரபடி கொலை செய்துவிட்டு ஒய்யாரமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறாரா?

ஒன்றும் புரியவில்லை மகாபிரபு :D

ஆஹா கூட்டம் சேர்ந்துட்டாங்கப்பா.......

ஆனாலும் இலக்கி உலுக்குவின் எழுத்துக்கள் ரசிக்க வைக்கின்றன......நல்லதொரு நகைச்சுவை கதை.

மிகவும் ரசித்தது.....

அவரின் கிளிஞ்சிது போ என்னை கவர்ந்த மற்றுமொரு கதை.....

http://madippakkam.blogspot.com/2008/05/blog-post_07.html

கடவுள்்களை அப்புறம் பார்ப்போம்்.. ஆளாளுக்குகு தத்துவம் என்றும் அறிவுரை என்றும் சொல்கிற மனுசங்கள பாருங்க.. கண்ணதாசன்ல இருந்து நம்ப கலைஞர் வரை பாருங்க.. ஆளாளுக்கு எத்தனை மனைவியரை வைச்சுக் கொண்டு.. தமிழ் பண்பாட்டைப்்பற்றி பேசுறாங்க.. மனுனுசனே இப்்படீன்னா கடவுள் எம்மாத்திரம்..?!! :lol::wub:

  • தொடங்கியவர்

மனுனுசனே இப்்படீன்னா கடவுள் எம்மாத்திரம்..?!! :):lol:

சோழியன் அவர்களே!

உங்கள் கருத்து கோக்குமாக்காக இருக்கிறதே?

கடவுளே இப்படியென்றால் மனிதன் எம்மாத்திரம் என்று சொல்லுவது தான் உலக வழக்கு. நீங்கள் மாற்றி சிந்திக்கிறீர்களே? :lol::):wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புராணக்கதை என்றாலே அது ஓர் கட்டுக்கதை என்றுதான் கூறுவார்கள். அவையெல்லாம் மக்களை நல்வழிப்படுத்தவே எழுதப்பட்டன. சில மிகைப்படுத்தியும், நம்பமுடியாத முறையிலும் எழுதப்பட்டுவிட்டன. இந்துமதத்தில் இருக்கும் குறைகளை நீங்கள் நகைச்சுவையாகவோ, மற்றவர் ரசிக்கும்படியாகவோ எப்படியும் எழுதலாம். ஆனால் மற்றைய மதங்களில் இருக்கும் சில குறைகளைக் எடுத்துக்கூறினால் கொலை விழுந்தாலும் விழும்.

ஒரு வித்தியாசம்: அப்போது இந்துமதத்தில் கடவுள் கொலை செய்தார், கொள்ளையடித்தார், ஏமாற்றினார் என்று கூறினார்கள். இவை புராணக்கதைகள். ஆனால் தற்போது மதங்களின் பெயரால் மனிதரே இவையெல்லவற்றையும் செய்கிறார்கள். எடுத்துக் கூறினால் தண்டனையும் கிடைக்கும். கவனம்!!!

  • தொடங்கியவர்

செல்வமுத்து அவர்களே!

இந்துமதத்தின் இதிகாசங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று பொட்டென்று உண்மையை போட்டு உடைத்ததற்கு நன்றி. இந்துமதம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் இந்துமதத்தை தான் நாத்திகர்கள் எதிர்த்து கருத்து சொல்லமுடியும். கிறிஸ்தவம் மதம், முஸ்லிம் மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் வசிக்கும் நாத்திகர்கள் அந்தந்த மதங்களைப் பற்றி பேசுவார்கள்.

quote name='லக்கிலுக்' date='May 15 2008, 08:28 AM' post='410326']

செல்வமுத்து அவர்களே!

இந்துமதத்தின் இதிகாசங்கள் அனைத்தும் கட்டுக்கதை என்று பொட்டென்று உண்மையை போட்டு உடைத்ததற்கு நன்றி. இந்துமதம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியில் இந்துமதத்தை தான் நாத்திகர்கள் எதிர்த்து கருத்து சொல்லமுடியும். கிறிஸ்தவம் மதம், முஸ்லிம் மதம் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் வசிக்கும் நாத்திகர்கள் அந்தந்த மதங்களைப் பற்றி பேசுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.