Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை தாக்க தயார் நிலையில் சீன ஏவுகணைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெய்ஜிங், மே.18-

இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனா அச்சுறுத்தல்

இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே ஆக்கிரமித்த இந்திய பகுதிகளையும் விட்டுத்தர மறுக்கிறது. மேலும், இந்தியாவுக்கு தொல்லை தரும் நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.

சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் ஹைனன் தீவில் கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

செயற்கைகோள் படங்கள்

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 58 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு எடுத்த செயற்கைக்கோள் படங்களில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, அரசு சார்பற்ற அமைப்பாகும். உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்த படங்களை நன்றாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, இந்த ஏவுதளங்கள், இந்தியாவின் வடமாநிலங்களையும், ரஷியாவின் தென்பகுதியையும் குறிவைத்து காணப்படுவதாக தெரிவித்தனர்.

அணுகுண்டு தாக்குதல்

இந்த ஏவுதளங்களில் இருந்து டிஎப்-21 ரக ஏவுகணைகள் பறக்க தயார் நிலையில் உள்ளன. இவை டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்கள் வரை வந்து தாக்கும் சக்தி படைத்தவை என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஆகும். இவற்றில் அணுகுண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்.

இந்த ஏவுகணைகளால் ரஷியாவின் தென்பகுதியையும் தாக்க முடியும். ஆனால் ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.

http://www.dailythanthi.com/CatHome.asp?NewsCategoryID=1

இந்தியாவை அமெரிக்காவுடன் நெருங்க செய்ய வைக்க நல்ல செய்திதான். இந்திய மக்களின் எதிர்ப்பை சமாளிக்க நல்ல கதை.

குறி வைத்து தாக்குவதற்க்கு அது என்ன ஈட்டியா'ய்யா? :D

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இந்தியாவை நோக்கி தனது ஏவுகணைகளைத் திருப்பியிருக்க, இந்தியா மட்டும் காதில பூ வைச்சுக்கொண்டு இருக்குதோ ? யாரைப் பேய்க்காட்டுறாங்கள்?

ஒரு சுவாரஸ்யமான கதை..................

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு இந்திய நண்பருடன்( மும்பாயைச் சேர்ந்தவர்) இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிக் கதைக்கு வாய்ப்பொன்று கிடைத்தது. ஈழப் பிரச்சனையில் இந்திரா காந்தி முதல் இன்றுள்ள மன்மோகன் சிங் வரை அனைவரும் செய்த செய்துவருகின்ற திருகுதாலங்களை நான் சொல்லிக்கொண்டு வந்தேன். அவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர், இறுதியில் எல்லாக் கதைக்கும் ரெண்டு பக்கம் இருப்பதாகக் கூறி தனது பேச்சை ஆரம்பித்தார்.

இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் எப்போதுமே இந்தியாவை எதிரியாகப் பார்ப்பதுடன் அதனை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினார். அருணாச்சலப் பிரதேசம் இன்றும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்த் தான் இருப்பதாகவும், சீனா அதைக் கைப்பற்றியதாகக் கூறுவது பொய் என்றும், உண்மையில் இந்தியாவின் பகுதியாக இருந்த திபெத்தைத் தான் சீனா அன்று கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.மேலும் பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்கும் முகமாக இந்தியா தனது படைகளை பாக்கிஸ்த்தான் - இந்திய எல்லைக்கோட்டுக்கு அண்மையாக நகர்த்தியிருந்ததாகவும், அவ்வாறு போர் மூளும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள கேந்திர முக்கையத்துவம் வாய்ந்த நிலைகளையும், பொருளாதார மைய்யங்களையும் அழிக்குமாறு சீனா பாக்கிஸ்த்தானுக்கு 40 கப்பல்களில் ஏவுகணைகள், மற்றும் அழிவு ஆயுதங்களை அன்பளிப்பாகக் கொடுத்திருந்ததாகவும் கூறினார்.

மேலும் பங்களாதேஷ் இன்று தனது நாட்டில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்துவருவதாகவும், தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அங்கு மிகவும் தீவிரமாக இயங்கி வருவதாகவும் கூறினார். இவ்வாறு ப்யிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்திய எல்லைக்கோடினூடாக ஊடுருவி இந்தியாவினுள் நாசகார செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறவும் தவறவில்லை.

இவ்வாறே சீன ஆதரவு பெற்ற நேபாளிய மாவோவிஸ்டு போராளிகள் தமது நாட்டில் சீன உளவாளிகளை அனுமதிப்பதன் மூலம், இந்தியா மீது சீனா அழுத்தத்தைப் பிரயோகிக்கும் முகமாக செயற்படுவதாகவும், சகல விதத்திலும் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் இந்தியாவின் எல்லையில் சீனா தனது ரகசிய தளங்களை அமைக்க உதவுவதாகவும் கூறினார்.

இவ்வளவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நான் அவரிடம், " இவ்வாறு இந்தியாவுக்கெதிராக எல்லா அயல் நாடுகளும் சதி செய்யும்போது, இந்தியா என்ன செய்துகொண்டிருந்தது ?" என்று கேட்டேன். அதற்கு அவர், " இந்திய அரசியல் வாதிகள் தமது கதிரையைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறார்கள், இந்தியாவின் பாதுகாப்புப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. முழு அகிம்ஸா நாடான இந்தியாவை அயல் நாடுகள் சேர்ந்து பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் அழிக்கப் பார்ப்பதாகவும், முழு அகிம்ஸா நாடான இந்தியா இவற்றுக்கெதிராக எதுவுமே செய்வதில்லை" என்றும் அப்பாவியாகக் கூறினார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்று இலங்கையில் நடக்கும் இன அழிப்பு யுத்தத்திற்கு முண்டு கொடுப்பது யார் ? பாக்கிஸ்த்தானை ரெண்டாக உடைத்தது யார்? இன்றும் பாக்கிஸ்த்தானில் கராச்சியிலும், பன்சாப்பிலும் வெடிக்கும் குண்டுகளின் சுத்திரதாரிகள் யார் ?நேபாளத்தில் மன்னராட்சிக்கு முண்டுகொடுத்து இதுவரை காலமும் அந்நாட்டு மக்களை அடிமைச் சீவியத்தினுள் வைத்திருக்க துணை போனது யார் ? மாலைதீவில் 1989 இல் சதிப்புரட்சி மேற்கொண்டு ,பின் அது தோல்வியடையும் தறுவாயில் கதையைப் புரட்டிப் போட்டு தப்பிக்க முனைந்தது யார் ?......எல்லாம் அந்த அப்பாவி அகிம்ஸா இந்தியாதானே ?

சினிமாவில் நடப்பதைப் பார்த்து உண்மை என்று நம்பும் சமுதாயம் தானே ? அதுதான் அவர்களுக்கு இந்தியா அகிம்ஸா நாடு போலத் தெரிகிறது !!!! விஜயகாந் படங்கள் இதுக்கு நல்ல உதாரணம் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இரட்டை அணுகுமுறைகளால் தான் அவர்களை சூழ எதிரிகளாக உள்ளனர்.

இந்தியாவு க்கு ஏன் அணுகுண்டு ? அவர்கள் எயிட்ஸாலேயும் பொறாமையாலும் இறந்து விடுவார்கள் இப்ப ஈழத்தில எங்களுக்குள்ள இருக்கிற ஒற்றுமை போல ??????

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
:lol::D:lol:
இந்தியாவு க்கு ஏன் அணுகுண்டு ? அவர்கள் எயிட்ஸாலேயும் பொறாமையாலும் இறந்து விடுவார்கள் இப்ப ஈழத்தில எங்களுக்குள்ள இருக்கிற ஒற்றுமை போல ??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.