Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை நிராகரிக்குமாறு மூன்று கண்டங்களிலிருந்து அழைப்பு.

Featured Replies

ஐ.நா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்படுவதை நிராகரிக்குமாறு மூன்று கண்டங்களைச் சோந்த நோபல் பரிசு பெற்ற பிரமுகர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக, வினைத்திறன் வாய்ந்த மனித உரிமைகள் பேரவைக்கான அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் கூட்டணி நேற்று முன்தினம் திங்கள் அன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டு, ஆர்ஜன்ரீனாவின் அடொல்போ பெரஸ் எஸ் கியூவல், அமெரிக்காவின் ஜிம்மி காட்டர் ஆகிய நோபல் பரிசுகளை வென்றேடுத்த மூன்று பிரபல்யமானவர்களே இலங்கையின் மனித உரிமை மீறல் பதிவுகளின் அடிப்படையில் பேரவையின் உறுப்பினாராக இலங்கை தெரிவு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவைக்கான உறுப்பினர் தேர்தல் இன்று புதன்கிழமை நியூயோர்கில் இடம் பெறுகின்றது.

மனித உரிமைகள் தொடர்பான உயர்ந்த தரத்தினை கடைப்பிடித்து, பேரவைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் 'த கார்டியன்' பத்திரிகையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தென்னாபிரிக்கா பேராயர் டெஸ்மண்ட டூட்டு தெரிவித்திருந்த விமர்சனம் வெளியாகியிருந்தது.

இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்படும் கிரமமான மனித உரிமை மீறால்கள் மிகவும் பாரதூரமானவையெனவும் பரந்தளவில் சித்திரவதைகளும் நீதி விசாரணைக்கு புறம்பான படுகொலைகளும் இடம் பெற்றிருப்பதாகவும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசே பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்த டெஸ்மன் டூட்டு, மனித உரிமை பேரவை உறுப்பினராக இலங்கை தேர்ந்தெடுக்கபடும் முயற்சியிலிருந்து தோல்வி காண்பதை உறுதிப்படுத்துமாறும் கோரியிருந்தார்.

இதே வேளை, ஆர்ஜன்டினாவின் நோபல் பரிசு பெற்ற அடொல் போபெரஸ் எஸ் கியூவெல் 'பியூனோஸ் எயார்ஸ்' பத்திரிகையில் எழுதியிருக்கும் விமர்சனக் கட்டுரையில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், கடத்தல்கள், காணமால் போதல், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் என்பன 1970-1980 காலப் பகுதியில் பல்வேறு லத்தின் அமெரிக்க அரசுகள் தமது சொந்தப் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொண்ட முறைகேடான யுத்தத்தைப் போன்றதொன்று என்று ஒப்பிட்டுக் குறிப்பிட்டிருப்பதுடன், இலங்கை மக்களுக்கு இலத்தின் அமெரிக்க அரசுகளால் மேற்கொள்ளப்படக்கூடிய அளப்பரிய சேவையாக அமைவது மனித உரிமைப் பேரவையில் இலங்கை உறுப்பினராவதை நிராகரிப்பதேயாகுமென குறிப்பிட்டிருக்கிறார்.

நோபல் பரிசு பெற்றவரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுமான ஜிம்மி கார்டரும், இலங்கையை மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக மீண்டும் தெரிவு செய்ய வேண்டமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

மனித உரிமைகள் பேரவை 2006 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து இலங்கை மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள மோசமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அகிம்சை, சனநாயகம் என்று பேசும் இந்தியா இலங்கைக்கு உதவி செய்யுமே.....

ஆனால் அகிம்சை, சனநாயகம் என்று பேசும் இந்தியா இலங்கைக்கு உதவி செய்யுமே.....

India backs Lanka in UN human rights review

May 21 (DN) India fully backed Sri Lanka in the just-concluded UN human rights review in Geneva, enabling its neighbour to get a “balanced” appraisal from the world body on Tuesday. The appraisal has raised hopes in Sri Lanka that it will be re-elected to the UN Human Rights Council by the General Assembly in New York today

  • கருத்துக்கள உறவுகள்
:( கசாப்புக் கடைக்காரனிடம் போய் அகிம்சை பற்றிப் பாடமெடுப்பதும் ஒன்றுதான், இந்தியாவிடம் நீதியை எதிர்பார்ப்பதும் ஒன்றுதான். ரெண்டுமே நடவாத விடயங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.