Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு புலிகள் தயாராகின்றனர்: யாழ். இராணுவத் தளபதி

Featured Replies

யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

திட்டமிட்ட திசைதிருப்பு பிரச்சாரம்.

நடைபெறும் என எதிர்பார்க்கும் விடயத்தை பாய மிகுதியால் முன்பே கூறி படையினருக்கு பயத்தை உண்டாக்குகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோக்களை மீண்டும் பாருங்கள்................

http://isooryavidz.blogspot.com/2008/05/ta...aration-to.html

http://isooryavidz.blogspot.com/2008/05/ta...ortance-of.html

இனைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஒரு வாரத்துக்கு இங்கு பாதுகாப்பு மேலும் இறுக்கமாகும் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தகவல்

யாழ். குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் இங்கு அடுத்த ஒரு வாரத்துக்குப் பாதுகாப்பு தீவிரமாகவும் இறுக்கமாகவும் இருக்கும்.

இத்தகவலை யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறி நேற்று வெளியிட்டார்.

யாழ். குடாநாட்டின் ஊடகவியலாளர்களுடன் நேற்றுப் பலாலிப் படைத் தளத் தில் தாம் நடத்திய சந்திப்பின்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

எதிர்வரும் 19, 20ஆம் திகதிகளில் யாழ். குடாநாட்டின் தென்கரையோரப் பகுதி ஊடாகத் தாக்குதல் நடத்திக்கொண்டு குடாநாட்டுக்குள் நுழையப் போகின்றோம் என்று யாழ். குடாவில் மீன்பிடித் தொழி லில் ஈடுபடும் மீனவர்களிடம் புலிகள் எச் சரிக்கை விடுத்தனர் என்ற ஒரு செய்தி குடாநாட்டில் பரவியுள்ளது. இந்தப் பின் புலத்தில் குடாநாட்டில் படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைக ளும் தீவிரமடை ந்து வருகின்றன.

இந்நிலையில், யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியைப் பலாலியில் சந்தித்த "உதயன்' பிரதிநிதி யாழ். குடாநாட்டுப் பாதுகாப்பு நிலைமை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் தெரிவித்தவை வருமாறு:

குடாநாட்டுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குடாநாட்டுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு முகாமை அவர்கள் தாக்கியுள்ளார்கள். தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் அதிக ஆயுத உதவி கேட்க போறாங்கள் போல இருக்கு.

புலிகள் பத்து ஆயுதங்களை கைப்பற்ற உடனே தமிழ் ஊடகங்கள் அதை பெரிது படுத்தி ஏதோ பெரிய சினிமாஸ் கோப் திரைப்படமா விமர்சித்து வீர காவியமாய் காட்ட.......

சிங்களம் உடனே பத்தாயிரம் ஆயுதங்களை வாங்கும்........................................................

.

இன்னும் அதிக ஆயுத உதவி கேட்க போறாங்கள் போல இருக்கு.

புலிகள் பத்து ஆயுதங்களை கைப்பற்ற உடனே தமிழ் ஊடகங்கள் அதை பெரிது படுத்தி ஏதோ பெரிய சினிமாஸ் கோப் திரைப்படமா விமர்சித்து வீர காவியமாய் காட்ட.......

சிங்களம் உடனே பத்தாயிரம் ஆயுதங்களை வாங்கும்........................................................

.

அந்த படங்களை யார் வெளிவிட்டது என்ன நோக்கத்துக்காக?

பிறகு ஏன் தமிழ் ஊடகங்களை குறை கூறுவான்?? :icon_idea:

யாழில் புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்- சில நாட்களுக்கு பின் தாக்குதல்: சிங்கள நாளிதழ் தகவல்

சிறிலங்கா இராணுவம் மீது பின்னர் தாக்குதல்களை அதிகரிப்பதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று சிறிலங்கா படைத்தரப்பு கருதுவதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

விடுதலைப் புலிகள் தமது விமானப்படையிடம் உள்ள இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் கரும்புலித் தாக்குதலை அல்லது விமானத் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.

மேலும் பொதுமக்களின் உதவியுடன் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் ஆர்.பி.பி மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனைகள் உட்பட ஆயுதங்களைப் பயன்படுத்தி பலாலி விமானத் தளத்திற்குச் செல்லும் விமானங்கள் மீது தாக்குதல்களை நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்காக யாழ். குடாநாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டை விடுதலைப் புலிகள் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிகிறது.

விடுதலைப் புலிகளிடமுள்ள 16 ஸ்ரிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் நான்கு யாழ்ப்பாணத்திற்கும் ஏனையவை கற்பிட்டிக்கும் மன்னாருக்கும் இடையிலுள்ள விடத்தல் தீவுக்கும் பூநகரிக்கும் இடையே பொருத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பரிவு படைத்தலைமைப் பீடத்திற்குத் தெரிவித்துள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் யாழ். நோக்கிப் பயணமாகும் விமானங்கள் மீது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தி விமானங்களைச் சுட்டுவீழ்த்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான செய்தி:

வடக்கிற்குச் செல்லும் விமானங்களை தரையிறக்கும்போது காங்கேசன்துறை கடற்பரப்பில் தாழ்வாகப் பறக்கையில் அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்கு கடந்த 6 ஆம் நாள் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளைஇ கட்டுவன் கடற்பிரதேசத்தினூடாக இந்தத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்பே விமானங்களை தரையிறக்கும் போது அவற்றின் பாதுகாப்பிற்காக இந்தக் கடற்பிரதேசத்தில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Edited by வினித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.